அமெரிக்காவில் இணைய பாவனையின் விநியோகத்தை கட்டுப்படுத்துவது யார் என்பது குறித்து தேசிய மட்டத்திலான விவாதம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது. இன்னும் 10 வருடங்களில் அனைத்து அமெரிக்கர்களுக்கும் அதிவேக இணைய இணைப்புக்களை வழங்கும் திட்டம் ஒன்றை அதிபர் ஒபாமாவின் நிர்வாகம் கொண்டிருக்கிறது. அத்துடன், அனைத்து இணைய தளங்களையும் சமமாக அணுகும் வாய்ப்பு அனைவருக்கும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், யார் எதனைப் பார்ப்பது என்பதை கேபிள் இணைப்புக்களை வங்கும் நிறுவனங்கள் அல்லது வயர்லெஸ் நிறுவனங்கள் நிர்ணயிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் அது விரும்புகிறது.
இணையங்கள் வகைப்படுத்தப்படும் முறையில் மாற்றத்தைக் கொண்டுவராவிட்டால், ”என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது” என்பதை இணைய விநியோக நிறுவனங்களுக்கு உத்தரவிடுவதற்கு அரசாங்கத்துக்கு அதிகாரம் கிடையாதுபோகும். டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளின் உரிமைகளுக்கான நிறுவனமான ‘பப்ளிக் நொலேட்ஜ்” ,அரசாங்கம் இணையத்தை தனது கட்டுப்பாட்டிலே எடுப்பதற்கு ஆதரவு வழங்குகிறது. இணையத்தை அணுகுவதற்கான அனுமதி குறித்த முடிவுகள் வணிக நிறுவனங்களிடம் போய்விடக்கூடாது என்கிறார் ”பப்ளிக்நொலேட்ஜ்” நிறுவனதத்தின் சட்ட இயக்குனரான ஹரோல்ட் ஃபெல்ட். ஆனால், சி ரி ஐ ஏ எனப்படுகின்ற அமெரிக்க வயர்லெஸ் அசோசியேசனைச் சேர்ந்த ஸ்டீவ் லார்ஜண்ட் அவர்கள், அரசாங்க தலையீடு ”முதலீட்டையும், துறைசார் புதிய கண்டுபிடிப்புக்களையும்” பாதிக்கும் என்று கூறுகிறார். அரசாங்கத்தின் ஒழுங்குபடுத்தும் திட்டம் குறித்த மறு ஆய்வு சட்டச் சவால்களால் சிக்கலுக்குள்ளாகும் போல் தெரிகிறது. நீதிமன்றமும், அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்றமுந்தான் அமெரிக்க இணைய விநியோகத் துறையை யார் கட்டுப்படுத்துவது என்பதை முடிவு சேய்ய வேண்டிவரும். source:BBC |
இணையத்தை கட்டுப்படுத்துவது யார்?
Filed under Uncategorized