Monthly Archives: ஓகஸ்ட் 2008
ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து,கர்நாடகத்தில் கிறிஸ்தவ பள்ளிக்கூடம், கல்லூரிகள் இன்று மூடப்படுகிறது
ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து
கர்நாடகத்தில் கிறிஸ்தவ பள்ளிக்கூடம், கல்லூரிகள் இன்று மூடப்படுகிறது
பெங்களூர் பேராயர் பெர்னார்டு மோரஸ் பேட்டி
பெங்களூர், ஆக.29-
ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து கர்நாடகத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) மூடப்படும் என்று பெங்களூர் கிறிஸ்தவ பேராயர் பெர்னார்டு மோரஸ் தெரிவித்தார்.
கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்
பெங்களூர் கிறிஸ்தவ பேராயரும், கர்நாடக கத்தோலிக்க பிஷப்புகள் கவுன்சிலின் தலைவருமான பெர்னால்டு மோரஸ் நேற்று பெங்களூர் பிஷப் இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கிறிஸ்தவ மதம் அமைதி, அன்பை விரும்பும் மதமாகும். மக்கள் நிம்மதியாக வாழ கல்வி போன்ற பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இந்த நிலையில், ஒரிசாவில், நடந்த வன்முறையில், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் கிறிஸ்தவர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். தேவாலயங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள் நடத்தும் ஆதரவற்றோர் விடுதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. கிறிஸ்தவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு உள்ளன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் கிறிஸ்தவர்களின் மனதை மிகவும் புண்படுத்தி உள்ளது.
இன்று மூடப்படுகிறது
ஒரிசாவில், லட்சுமணானந்தா சரசுவதி சுவாமிகள் மற்றும் அவரது 5 சீடர்கள் கொல்லப்பட்ட பழியை கிறிஸ்தவர்கள் மீது சுமத்தி உள்ளனர்.
மக்களிடையே அன்பை போதிக்கும் கிறிஸ்தவர்கள் மீது சுமத்தப்படும் இந்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. வேண்டுமென்றே இந்த பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு, கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது சரியல்ல.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கத்தோலிக்க கிறிஸ்தவ சமுதாயம் நடத்தும் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் மூடப்படுகின்றன. இதேபோல கர்நாடகத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் இன்று மூடப்பட்டு, அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோம்.
உண்ணாவிரதம்
மேலும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கிறிஸ்தவர்கள் அனைவரும் உண்ணாவிரதம் மற்றும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது ஏவிவிடப்பட்டுள்ள வன்முறையை, அந்த மாநில அரசும், மத்திய அரசும் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கிறிஸ்தவ சமுதாயத்துக்கு இந்தியாவில் பாதுகாப்பு உள்ளது என்பதை அரசு நிரூபிக்க வேண்டும். தாக்குதலுக்கு ஆளான கிறிஸ்தவ குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு பேராயர் பெர்னால்டு மோரஸ் கூறினார்.
கண்டிக்கத்தக்கது
பேட்டியின் போது உடன் இருந்த கர்நாடக கத்தோலிக்க பிஷப்புகள் கவுன்சில் செயலாளர் ஜெயநாதன் கூறும்போது, கர்நாடகத்தில் கிறிஸ்தவர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. கிறிஸ்தவ மதம் உள்ளூர் கலாசாரத்தை, சீரழிப்பதாக கூறுவது தவறு என்றார்.
பேட்டியின் போது, பெங்களூர் மறை மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி அடால்ப் வாஷிங்டன், நிதி அதிகாரி பிரான்சிஸ், செயலாளர் வேதகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆதரவு
Filed under Uncategorized
ஒரு குர்ஆனா அல்லது பல குர்ஆன்களா?! – Quran or Qurans?!
Quran or Qurans?!
இக்கட்டுரையை அரபியில் படிக்க: النسخة العربية
The reading ways of Quran dictionary: (moa’agim alqera’at alqura’nia):
இது ஒரு அரபி மொழியில் எழுதப்பட்ட புத்தகம் மற்றும் இதனை இஸ்லாமிய அறிஞர்கள் எழுதினார்கள். குவைத் பல்கலைக்கழகம்(Kuwait University) இதனை 8 பாகங்களாக வெளியிட்டது. இதன் முதல் பதிப்பு 1982ம் ஆண்டு (அரபியில்) வெளியிடப்பட்டது, இதன் ஆசிரியர்கள்:
டாக்டர். அப்துல் அல் சலாம் மக்ரெம் (Dr. Abdal’al Salem Makrem)
டாக்டர். அஹமத் மொக்தார் ஒமர் (Dr. Ahmed Mokhtar Omar)இவர்கள் இருவரும் குவைத் பல்கலைக் கழகத்தில் அரபி மொழி பேராசிரியர்களாக இருக்கிறார்கள்.
புத்தக பதிப்பாளர்: ஜத் அல்சலாசல்-குவைத் (Zat Alsalasel – Kuwait)
1. அலி பின் அபி தலிப் என்பவரின் படி குர்ஆன் (Quran according to Ali bin abi talib)2. இபின் மஸூத் என்பவரின் படி குர்ஆன் (According to Ibn Mass’oud)3. அபி பின் கப் என்பவரின் படி குர்ஆன் (According to Aobi bin ka’ab)
1. நஃபா: கலன் + வர்ஷ் (Nafaa’: Qalon + Warsh)
2. இபின் கதிர்: அல்பிஜி + கோன்பில் (Ibn Kathir: Albizi + Qonbil)
3. அபி அம்ரொ: அல்தோரி + அல்சோசி (Abi amro: Aldori + Alsosi)
4. இபின் அமிர்: இபின் அபன் + இபின் த்வான் (Ibn Amer: Ibn Aban + Ibn Thkwan)
5. அச்செம்: அபோ பைகர் + ஹஃபஸ் (Assemm: Abo Biker + Hafas)
6. அல் கெஸ்ஸய்: அலித் + அல்தோரி (Alkessa’i: Allith + Aldori)
7. ஹம்ஜா: அல்பிஜாஜ் + அபோ ஈஸா அல்சிர்பி (Hamza: Albizaz + Abo Isa Alsirfi)
1. அபோ ஜிபார்: இபின் வர்தன் + இபின் ஜ்மஜ் (Abo Ji’faar: Ibn Wardan + Ibn Jmaz)
2. யாக்கோப்: ரோயிஸ் + ரோஹ் (Yaccob: Rois + Roh)
3. கலிஃப்: அலம்ரோஜி + இத்ரஸ் (Khalif: Almrozi + Iddres)
1. இபின் மொஹிசம்: அல்பிஜி + இபின் ஷின்போஜ் (Ibn Mohisn: Albizi + Ibn Shinboz)2. அல்யாஜிதி: சொலைமான் இபின் அல்ஹகம் + அஹ்மத் பின் ஃபரா (Alyazidi: Soliman Ibn Alhakam + Ahmed Bin Farah)
3. அல்ஹஸன் அல்பஸ்ஸரி: அபோ நயிம் அல்பல்கி + அல்தொரி (Alhassan Albassry: Abo Na’im Albalkhi + Aldori)
4. அலாமஷ்: அமோடோடி + அல்ஷின்ப்ஜி அல்ஷட்டாய் (Ala’mash: Amotodi + Alshinbzi Alshttaoi)
1. எழுத்துக்களில் வித்தியாசம் (spelling)2. தொனியில் வித்தியாசம் (tone – harkat)
3. அரபிக் இலக்கணத்தில் வித்தியாசம் (A’rab – Arabic grammar)
4. ஒரே பொருள் வரும் வெவ்வேறு வார்த்தைகளை பயன்படுத்துதல் (உதாரணத்திற்கு, சண்டை, கொல்) – using a similar word but different (like FIGHT, KILL)
5. வார்த்தைகளின் இடங்களை மாற்றுதல் (changing place of words)
6. வார்த்தைகளை சேர்த்தல் அல்லது எடுத்துவிடுதல்(adding or removing words)
[English translation based on the one done by Rashad Khalifa]
He said, “I am the messenger of your Lord, to GRANT (who does grant?: the angel) you a pure son.” இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: li’ahiba
He said, “I am the messenger of your Lord, to GRANT (who does grant?: Lord) you a pure son.” இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: liyihiba
He said, “I am the messenger of your Lord, HE ORDERED ME TO GRANT YOU a pure son.” இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: amarani ‘n ‘hiba
[English translation based on the one done by Yusuf Ali.]
* ஹஃப் வார்த்தைகளை இப்படியாக படிக்கிறார்:
And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL LET FALL fresh ripe dates upon thee
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: toosaqit
* ஹம்ஜா, அல்மிஷ்:
And shake towards thyself the trunk of the palm-tree: FALL fresh ripe dates upon thee
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tasaaqat
* அஸ்ஸெம், அல்கிஸய், அல்மிஷ்:
And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL fresh ripe dates upon thee.
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yassaqat
* அபோ அம்ரொ, அஸ்ஸெம், நஃபி:
And shake towards thyself the trunk of the palm-tree: WILL FALL fresh ripe dates upon thee
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tassaqat
* அபோ நஹிக், அபோ ஹை:
And shake towards thyself the trunk of the palm-tree: IT FALL fresh ripe dates upon thee
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tosqt
* அலேரப் a book for Alnahas:
And shake towards thyself the trunk of the palm-tree: WE WILL FALL fresh ripe dates upon thee.
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: nosaqit
* மஸ்ரோக்
And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL [someone unknown will let fall] fresh ripe dates upon thee.
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yosaqit
* அபோ ஹையா:
And shake towards thyself the trunk of the palm-tree: IT FALL fresh ripe dates upon thee
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tasqwt
* அபோ ஹையா
And shake towards thyself the trunk of the palm-tree: FALL fresh ripe dates upon thee
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yasqwt
* அபோ ஹையா
And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL one by one] fresh ripe dates upon thee
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tatasaqat
* அபோ அல்ஸ்மல்:
And shake towards thyself the trunk of the palm-tree: FALLING fresh ripe dates upon thee
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yosqt
3. எடுத்துக்காட்டு மூன்று: சூரா மர்யம்: 19:26
[English translation based on the one done by Yusuf Ali.]
* ஜித் பின் அலி:
So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, ‘I have vowed a FAST to (Allah) Most Gracious, and this day will I enter into no talk with any human being’
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: syaman
* அபெத் அல்லா பின் மஸூத், அனிஸ் பின் மலேக்:
So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, “I have vowed a SILENCE to (Allah) Most Gracious, and this day will I enter into not talk with any human being.”
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: samten
* அபோ பின் கப், அனிஸ் பின் மலேக்:
So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, “I have vowed a SILENT FAST to (Allah) Most Gracious, and this day will I enter into not talk with any human being.”
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: swmen samten
* அனிஸ் பின் மலேக்:
So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, “I have vowed a FAST AND SILENCE to (Allah) Most Gracious, and this day will I enter into not talk with any human being.”
இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: swmen wa samten
எனக்கு மெயில் அனுப்பி என்னோடு தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்: khaled@exmuslim.com
ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Quran/Text/var1.html
ஒரிசாவில் சங்பரிவார் நடத்திய வெறிச்செயல்-கிறிஸ்தவ ஆலயங்கள் அனாதை விடுதிகள் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல்
ஒரிசா பந்த்தில் பயங்கர வன்முறை:
2 பேர் எரித்துக் கொலை; பாதிரியாருக்கு பலத்த தீக்காயம்
தேவாலயங்கள், பள்ளிகளுக்கு தீவைப்பு
புவனேஸ்வரம், ஆக. 26-
விசுவ இந்து பரிஷத் தலைவர் கொலையை கண்டித்து, ஒரிசாவில் நடைபெற்ற பந்த்தில் வன்முறை வெடித்தது. 2 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவ பாதிரியார் பலத்த தீக்காயம் அடைந்தார். தேவாலயங்கள் மற்றும் பள்ளிகளுக்கு தீவைக்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவு
ஒரிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் ஜலஸ்பேட்டாவில் உள்ள ஆசிரமத்துக்குள் கடந்த சனிக்கிழமை இரவு, ஆயுதம் தாங்கிய மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் அங்கிருந்த விசுவ இந்து பரிஷத் தலைவர் சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இக்கொலையை கண்டித்து, விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பினர், வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், பதட்டம் மிகுந்த கந்தமால் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர்.
பாதிரியார் காயம்
இந்நிலையில், சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி கொலையை கண்டித்து, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் நேற்று 12 மணி நேர பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு பா.ஜனதாவும் ஆதரவு தெரிவித்தது. இதையொட்டி, ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. பர்கார் மாவட்டத்தில் புட்பாலி என்ற இடத்தில் கிறிஸ்தவ அமைப்பு நடத்தி வரும் அனாதை ஆசிரமத்துக்கு ஒரு மர்ம கும்பல் தீவைத்தது.
இதில் அங்கிருந்த ஒரு பெண், தீயில் கருகி பலியானார். ஒரு கிறிஸ்தவ பாதிரியார் பலத்த தீக்காயம் அடைந்தார். அவர் பர்காரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த 20 குழந்தைகள் உயிர் தப்பின. பலியான பெண்ணைப் பற்றிய அடையாளம் கண்டறியப்படவில்லை. அனாதை ஆசிரமத்தில் இருந்த மரச்சாமான்களையும் கும்பல் அடித்து நொறுக்கியது.
கந்தமால் மாவட்டம் ரூபா கிராமத்தில் ஒரு வீட்டுக்கு தீவைக்கப்பட்டது. இதில் வீட்டில் இருந்த ராசானந்த பிரதான் என்பவர் தீயில் கருகி பலியானார்.
தேவாலயங்களுக்கு தீவைப்பு
இதற்கிடையே, சுட்டுக் கொல்லப்பட்ட சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதியின் உடல், ஜலஸ்பேட்டா ஆசிரம பள்ளியில் இருந்து சாகபடாவில் உள்ள அவரது ஆசிரமத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. முன்னதாக, அவரது உடலுடன் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் நடந்து சென்றனர். அப்போது அவர்களில் பலர் வன்முறையில் ஈடுபட்டனர்.
வழியில் தென்பட்ட தேவாலயங்களுக்கு தீவைத்தனர். கிறிஸ்தவ பள்ளிகளையும், வீடுகளையும், கடைகளையும், போலீஸ் சோதனை சாவடிகளையும் அடித்து நொறுக்கினர். 12 தேவாலயங்களும், 40 வீடுகளும் தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறையை தடுக்க முயன்ற போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.
ஒரிசா ஸ்தம்பித்தது
பந்த்தையொட்டி, தலைநகர் புவனேஸ்வரத்தில் விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பினர், அதிக அளவில் சாலையில் நடமாடினர். கடைகளை வற்புறுத்தி அடைக்க வைத்தனர். முக்கிய சாலைகளில் டயர்களை எரித்து, போக்குவரத்தை தடை செய்தனர். இதனால் பஸ், டாக்சி, ஆட்டோக்கள் ஓடவில்லை. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சைக்கிளில் கூட யாரையும் செல்ல விடவில்லை.
பல இடங்களில் தண்டவாளத்தில் அமர்ந்து ரெயில் போக்குவரத்தை தடை செய்தனர். கல்வி நிறுவனங்களுக்கு மாநில அரசு விடுமுறை அளித்திருந்தது. அரசு அலுவலகங்கள், வங்கிகளில் வருகைப்பதிவேடு குறைவாக இருந்தது. கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.
இதற்கிடையே, விசுவ இந்து பரிஷத் தலைவர் கொலை சம்பவம் தொடர்பாக, ஒரிசா சட்டசபையில் மாநில அரசுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீசு கொடுத்தது. அப்போது ஏற்பட்ட அமளியில் சபை ஒத்தி வைக்கப்பட்டது.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=434412&disdate=8/26/2008&advt=1
Filed under Uncategorized
முஸ்லிம் பெண் கிறிஸ்தவ மதத்துக்கு மாற கோர்ட்டு அனுமதி அளிக்குமா? மலேசியாவில் சர்ச்சை
மலேசியாவைச்சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், கிறிஸ்தவ மதத்துக்கு மாறுவதற்கு அனுமதிகோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அது சர்ச்சையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. மலேசியாவில் முஸ்லிம், கிறிஸ்துவம், இந்து என பல்வேறு மதங்களை பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். அங்கு மெஜாரிட்டியாக இருக்கும் மலாய் இனத்தினர் முஸ்லிம்கள் தான்.
அந்த நாட்டில் மதச்சுதந்திரம் இருந்தபோதிலும் இஸ்லாம் மதத்தில் இருந்து வேறு மதத்துக்கு மாறுவது என்பது சிக்கலானாது. அது இஸ்லாமியக்கோர்ட்டின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. அந்த இஸ்லாமியச்சட்டப்படி, முஸ்லிம் மதத்தை துறப்பது ஜெயில் தண்டனைக்கு உட்பட்டது. வேறு மதத்துக்கு மாறுபவர்கள் புதிய மதத்தின் பெயரை பதிவு செய்ய முடியாது. முஸ்லிம் அல்லாதவரை சட்டப்படி மணக்க முடியாது.
லீனா ஜாய்
இந்த நிலையில் தான் அஸ்லினா ஜெய்லானி என்பவர் மதம் மாறிஇருக்கிறார். இப்போது 42 வயதான இவர் முஸ்லிமாக பிறந்தார். தன் 26-வது வயதில் கிறிஸ்தவராக மதம் மாற தீர்மானித்தார். அவர் தன் பெயரை லீனா ஜாய் என்று மாற்றிக்கொண்டார். 1999-ம் ஆண்டு தேசியப்பதிவுத்துறை அடையாள அட்டையில் அவர் பெயரை லீனா என்று மாற்றிக்கொள்ள அனுமதி அளித்தது. ஆனால் அடையாள அட்டையில் அவரது மதம் என்று இஸ்லாமே குறிப்பிடப்பட்டு இருந்தது.
முஸ்லிம் என்ற அடையாளம் மாற்றப்படாதவரை அவர் முஸ்லிம் அல்லாத ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடியாது. இந்த குழப்பத்துக்கு காரணமாக இருந்த பதிவுத்துறை மீது அவர் வழக்கு தொடர்ந்தார். அது நீடித்துக்கொண்டே போய் அவர் கடைசியில் மதம் மாற அனுமதி கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இந்த வழக்கு விசாரணை முடிந்து விட்டது. கோர்ட்டு எந்த நேரத்திலும் தன் தீர்ப்பை வழங்கலாம்
தலைவலியாக
கோர்ட்டு தீர்ப்பு எப்படி இருந்தாலும் அது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பும் என்று கருதப்படுகிறது. கோர்ட்டு தீர்ப்பு மலேசியா அரசுக்கு பெரிய தலைவலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் அடிப்படையான கேள்வி, இந்த நாட்டில் முஸ்லிம் மதம் மாறமுடியுமா என்பது தான். லீனாவுக்கு இந்த வழக்கில் வெற்றி கிடைத்தால் அது மத அடிப்படைவாதிகளின் கைஅரிப்புக்கு ஆயுதம் கிடைத்த கதை ஆகிவிடும். அரசியல் ரீதியாக அது ஒரு அணுகுண்டாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த வழக்கை டிஸ்மிஸ் செய்யும்படி செல்வாக்கு மிக்க அங்கதன்பெலியா இஸ்லாம் மலேசியா என்ற அமைப்பு கோர்ட்டுக்கு எழுதி உள்ளது.
souce:http://nitharsanam.net/?
http://thamilislam.blogspot.com/2008/08/blog-post_22.html
எரிகிறது ஜம்மு-காஷ்மீர்!——–அமர்நாத் விவகாரத்தின் நிஜப்பின்னணி
source:http://www.kumudam.com
Filed under Uncategorized