Monthly Archives: ஜூன் 2008

அறிஞர் அண்ணாவும் இஸ்லாமும்: ஓமன் நாட்டு அரசருக்கு முகமது அனுப்பிய அமைதி கடிதம்


அறிஞர் அண்ணாவும் இஸ்லாமும்: ஓமன் நாட்டு அரசருக்கு முகமது அனுப்பிய அமைதி கடிதம்
அறிஞர் அண்ணாவும் இஸ்லாமும்: ஓமன் நாட்டு அரசருக்கு முகமது அனுப்பிய அமைதி கடிதம்
இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்று அறிஞர் அண்ணா சொன்னதாக ஒரு கட்டுரையை படித்தேன், அதை அப்படியே கீழே தருகிறேன். பிறகு இக்கட்டுரையின் கீழே “ஓமன் நாட்டு அரசருக்கு முகமது அனுப்பிய கடிதம் தரப்பட்டுள்ளது”, அதையும் படியுங்கள். இதை படிக்கின்ற உங்கள் கையிலேயே முடிவை விட்டுவிடுகின்றேன்.
வாளால் வளர்ந்ததா இஸ்லாம்? அறிஞர் அண்ணா
பலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலைநீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்கருத்துக்களையும் உணரவேண்டும்.சிலர் பலாப்பழத்தின் முன்தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள்.
அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம். ஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான் இஸ்லாம்.இஸ்லாம் எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்திருக்கிறது. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துக்களிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்.பிற மதங்களிலே அற்புதங்கள் அதிகம்; அடிப்படை உண்மைகள் குறைவு. இஸ்லாத்திலே அடிப்படை உண்மைகள் அதிகம் அற்புதங்கள் குறைவாகவேயுள்ளன. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது; இஸ்லாத்தை பரப்ப வாள் பயன்பட்டதில்லை. ஆனால் சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு.இந்தியாவில் முகலாயர் ஆட்சியும் மற்ற முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியும் இருந்தபோது முஸ்லிம்கள் ஒரு கோடிபேர் கூட இருக்கவில்லை. அந்த அரசுகளெல்லாம் மறைந்த பிறகே பத்து கோடி மக்களாகப் பெருகினார்கள்.”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ன நன்னெறி பரவியிருந்த நாட்டிலே இடையிலே அக்கருத்துக்களெல்லாம் மறந்திருந்த நிலையில் இஸ்லாம் அக்கருத்துக்களையே வலியுறுத்தவும், 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இஸ்லாம் பரவிற்று.தொட்டிலிலே படுத்துறங்கும் குழந்தையைத் தட்டி எழுப்பிய உடனே தாயை எப்படி கட்டியணைத்துக் கொள்கிறதோ அவ்வாறே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன.
Source: http://adirai-iic.blogspot.com/2008/06/blog-post_21.html
———————————————————————-
ஓமன் நாட்டு அரசனுக்கு முகமது அனுப்பிய கடிதம்
முகமது ஓமன் நாட்டு அரசன் “ஜாஃபர்” மற்றும் அவர் சகோதரன் “அப்து அல் ஜலாந்தி” என்பவருக்கும் ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தை முகமதுவின் தூதுவர் “Amr bin al-‘As al-Sahmi and Abu Zaid al-Ansari” கொண்டுச் சென்றார்.
இன்று இஸ்லாமியர்கள் மேடைகளில், வெப்தளங்களில், மற்றும் தொலைக்காட்சி மற்றும் இதர சாதனங்கள் மூலமாக இஸ்லாமை பரப்பிக்கொண்டு வருகின்றனர். அவர்கள் இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும், இன்னும் இதர மக்களையும் இஸ்லாம் பக்கம் ஈர்க்க முன்வைக்கும் வாதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. இஸ்லாம என்றால் அமைதி என்று பொருள்:2. இஸ்லாமில் கட்டாயமில்லை:3. இஸ்லாம் வாள் மூலம் பரப்பப்பட்டது என்று சொல்லும் செய்தி பொய்யானது.4. நபி (முகமது) அவர்கள் செய்த போர்கள் அனைத்தும், தற்காப்புக்காக செய்தவை. தாமாக அவர் என்றுமே சண்டையிட்டது இல்லை.5. ஜிஹாத் என்றால், தற்காப்புக்காக நமக்கு ஆபத்து வரும் போது செய்யும் சண்டையே தவிர, நாமாக சண்டையிடுவது இல்லை.6. முகமது அவர்கள் யாரிடமும் வீணாக சண்டையிட்டது இல்லை. அவரைப்போல நல்லவர் உலகில் வேறு யாருமில்லை. இப்படி பல செய்திகளை இஸ்லாமியர்கள், முன்வைப்பார்கள்.
ஆனால், ஓமன் நாட்டு அரசருக்கு முகமது என்ன எழுதினார் என்று பாருங்கள்.
ஓமன் நாட்டு அரசருக்கு முகமது எழுதின கடிதம்
“Peace be upon the one who follows the right path! I call you to Islam. Accept my call, and you shall be unharmed. I am God’s Messenger to mankind, and the word shall be carried out upon the miscreants. If, therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if you refuse to accept Islam, your power shall vanish, my horses shall camp on the expanse of your territory and my prophecy shall prevail in your kingdom.”
ஓமன் நாட்டு அரசருக்கு முகமது எழுதின கடிதம் – தமிழாக்கம்
நேர்வழியில் நடப்பவன் மீது சாந்தி உண்டாகட்டும்! இஸ்லாமிற்கு நான் உங்களை அழைக்கிறேன். என் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் சேதமாகாமல் இருப்பீர்கள். நான் மனித இனத்திற்காக வந்த இறைவனின் தூதுவன்(தீர்க்கதரிசி) ஆவேன், தீமை செய்பவர்கள் மீது இறைவனின் வார்த்தையை காட்டுவதற்காக வந்தேன். எனவே, நீங்கள் இஸ்லாமை அங்கீகரித்தால், என் வலிமையை(POWER) உனக்குத் தருவேன். ஆனால், நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்தால், உன் வலிமை(POWER) அழிக்கப்படும். என் குதிரைகள் உன் நாட்டின் நிலத்தில் பாளயமிறங்கும், என் தீர்க்கதரிசனம் உன் நாட்டின் மீது வெற்றிக்கொள்ளும்.

Photograph of the Arabic original and the English text as it is on display at Sohar Fort, Sultanate of Oman

சமத்துவம், சகோரத்துவம் பேசும் இஸ்லாமிய நண்பர்களே,கீழ்கண்ட கேள்விகள் உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்:
1. இக்கடிதம் யார், யாருக்கு எழுதியது?2. இக்கடிதம் எழுதுவதற்கு முன்பாக முகமதுவிற்கு “இந்த நாட்டு அரசனால் ஆபத்து ஏதாவது இருந்ததா?”3. இக்கடிதத்தில் முகமது மிகவும் நிதானமாக பேசுவதைக்கண்டீர்களா?4. அதே நிதானத்தோடு அந்த நாடு அழிக்கப்படும் என்று சொல்வதை கவனித்தீர்களா?5. இதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் என்ன பதில் சொல்வார்கள்?6. தன் நாட்டில் இருந்துக்கொண்டு, முகமதுவிற்கு எந்த பயமுறுத்தலோ அச்சுருத்தலோ செய்யாமல் இருக்கின்ற அரசனுக்கு, இஸ்லாம், அல்லா, முகமது விடுக்கும் “அழைப்பு” எப்படி இருக்கிறது என்றுப் பார்த்தீர்களா?7. முகமது இஸ்லாமின் நன்னடத்தையைக் காட்டி அந்த அரசனை இஸ்லாமிற்கு அழைக்கிறாரா? அல்லது அழித்துவிடுவேன் என்று பயமுறுத்தி அழைகிறாரா?9. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிக படைபலம் உள்ள அரசனாக இருந்தால், முகமதுவோடு சண்டையிட்டுயிருப்பான், குறைந்த படைபலம் உள்ளவனாக இருந்தால், “இஸ்லாமை ஏற்றுக்கொண்டு” முகமதுவின் “ஜகாத்” கொடுத்துக்கொண்டு இருந்திருப்பான்.10. கொன்றுவிடுவேன் என்று பயமுறுத்தி கொண்டுவரும் “பக்தி”, “நமாஜ்” அல்லது “தொழுகை” உண்மையானதாக இருக்குமா? இதைத் தான் உண்மை தெய்வம் எதிர்பார்க்குமா?11. இஸ்லாமில் கட்டாயமில்ல, இஸ்லாம் அமைதியான மதம், இஸ்லாம் கத்திமுனையில் பரப்பப்பட்டது இல்லை என்று சொல்லிக்கொள்கிறீர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் ?12. இது தான் இஸ்லாம் காட்டும், முகமது காட்டும் வழியா?கீழ் கண்ட வசங்களை சொன்னது யார் என்றுத் தெரியுமா உங்களுக்கு?
மத்தேயு 10:14
எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.
லூக்கா 9:5
உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்றார்.
அப்போஸ்தல நடபடிகள் 13:51
இவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்துக்குப் போனார்கள்.இயேசு தன் செய்திகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் ஊரை விட்டு வரும் போது, காலில் படிந்த துசியைக்கூட உதறிவிட்டு வரும்படிச் சொன்னார், அவர்களை சபிக்கவேண்டாமென்றுச் சொன்னார். சீடர்களும் அப்படியே செய்தார்கள். ஆனால், முகமதுவோ தன் செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லையானால், போர் செய்வேன், நாட்டை பிடிப்பேன், உன் வலிமையை அற்றுப்போகப்பண்ணுவேன் என்றுச் சொல்கிறார்.இயேசு அஹிம்சை மூலமாக தன் செய்தியை தெரிவித்தார். முகமதுவோ “ஹிம்சை” மூலகாம தன் செய்தியைச் சொன்னார். ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் பிள்ளைகள் வேண்டுமானால், வெவ்வேறு குணங்களை கொண்டிருக்கலாம், ஆனால், ஒரு இறைவன் அனுப்பியவர்கள் வெவ்வேறு கோட்பாடுகள் கொண்டு தன் செய்திகளைச் சொல்லமாட்டார்கள்.இதில் யாராவது ஒருவர் தான் உண்மையாக இருக்கமுடியும்? இயேசு அல்லது முகமது ? முகமது சொன்னதை பின்பற்றிக்கொண்டு, இயேசுவைக் கூட அதே இறைவன் தான் அனுப்பினான் என்றுச் சொல்வது அறிவுடமையாகுமா? சிந்தியுங்கள்.எனவே, கிறிஸ்துவின் பாதையில், அமைதியின் பாதையில், உண்மையின் பாதையில் வரும் படி நான் உங்களை அழைக்கிறேன். இன்று நீங்கள் எடுக்கும் முடிவு, உங்கள் வாழ்வில் ஒரு வித்தியாசத்தைக் கொண்டுவரும், நிம்மதியைக்கொண்டுவரும். இயேசுவை உங்கள் உள்ளத்தில் வரும் படி அழையுங்கள், அது போதும். உங்கள் மீது சாந்தி, சமாதானம் உண்டாகட்டும்.1) Image Source: http://www.answering-islam.de/Main/Muhammad/oman.gif
2) Image Source: http://www.answering-islam.de/Main/Muhammad/oman_e.gif
Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Mohammad/LetterToOman.html
http://isakoran.blogspot.com/2008/06/blog-post.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, அல்லாஹ், இஸ்லாம், குரான், முகமது

இயேசு உயிர்த்திருக்க வாய்ப்பே இல்லை என “The Lost Tomb of Jesus”

இயேசு உயிர்த்திருக்க வாய்ப்பே இல்லை என “The Lost Tomb of Jesus”

 

http://thamilislam.blogspot.com/

 

இயேசு உயிர்த்திருக்க வாய்ப்பே இல்லை என “The Lost Tomb of Jesus” எனும் தனது டாக்குமெண்டரியில் சிம்கா ஜாக்கோபோவிசி என்பவர் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமன்றி ………

தன்னுடைய ஆவணப் படத்தில் அவர் இயேசுவின் கல்லறையைக் கண்டதாகவும் அதில் “யேசேப்பின் மகனாகிய இயேசு” என எழுதப்ட்டிருந்ததாகவும், அது எருசலேமிற்கு அருகில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அது மட்டுமன்றி இயேசுவின் D.N.A கூட தனக்குத் தெரியும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் ஆய்வாளர்கள் இதை முழுமையாக மறுதலிக்க, சிலர் உண்மையாய் இருக்கக் கூடும் என விவாதிக்கின்றனர்.

இயேசு என்பதும் யோசேப்பு என்பதும் தெருவுக்குப் பத்து எனுமளவுக்கு அக்காலத்தில் மிக மிக அதிகம் புழங்கியவை என ஒரு சாரார் ஆதாரங்களோடு வாதிட, யோசேப்பின் மகனான இயேசு என்பது இயேசுவைக் குறிக்கலாம் என சிலர் வாதிடுகின்றனர்.

எப்படியோ, இயேசுவின் டி.என்.ஏ வை நிரூபிக்க அவர்கள் விண்ணகம் சென்று இயேசுவிடம் விண்ணப்பிக்க வேண்டி வரலாம்.

அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இத்தகைய ஆராய்ச்சிகள் எதை வலியுறுத்துகின்றன ?

“உயிர்த்தவரை ஏன் இறந்தவர்களிடையே தேடுகிறீர்கள் ?” என்றார் உயிர்த்த இயேசு. ஆனால் இன்றைய ஆராய்ச்சியாளர்கள் தினம் ஒரு தகவலை அள்ளி விட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

இவர்கள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் ஒவ்வொன்றும் காலப்போக்கில் இல்லை என்றாகிக் கொண்டே வருவதே இத்தகைய ஆராய்ச்சிகள் எத்தனை வலிமையானவை என்பதன் சான்றுகள். உதாரணம் ஆதாமின் பல் !

இயேசு உயிர்த்துவிட்டார் என்பது கிறிஸ்தவத்தின் அடிப்படை.

இயேசு உயிர்த்துவிட்டார் என்பதற்கு அவருடைய அப்போஸ்தலர்களின் வாழ்க்கையை விட ஆழமான ஆதாரம் நமக்குத் தேவையில்லை.

இயேசு இறந்தவுடன் பயந்து போய் அறைகளின் தாழிட்டுக் கொண்ட சீடர்கள், இயேசு உயிர்க்காமல் இருந்திருந்தால் தங்கள் பழைய தொழிலுக்கே திரும்பிப் போயிருப்பார்கள்.

உண்மையைச் சொல்லப்போனால், அவர்களில் சிலர் மீன் பிடிக்கவும் சென்று விட்டனர். இயேசு அவர்களுக்கும் காட்சி கொடுத்தார். அதன் பின்னர் தான் அவர்கள் இறை பணிக்குத் திரும்பினார்கள்.!!!

இயேசுவின் சீடர்களின் வாழ்க்கையைப் பார்த்தால் அதைப் போன்ற கோரமான, கொடூரமான, மரணத்தை வரலாற்றில் யாரும் பெற்றிருக்க வாய்ப்பே இல்லை என்பது புலனாகும்.

ஒரு உதாரணம், ஒருவர் உயிரோடு தோல் உரிக்கப்பட்டு, சிலுவையில் தலைகீழாய் அறையப்பட்டு கொல்லப்பட்டார்.

இயேசுவின் அப்போஸ்தலர்கள் அனைவருக்குமே அந்தந்த காலகட்டத்தைச் சேர்ந்த எதிரிகள் ஒரு கடைசி வாய்ப்பை வழங்கினர். இயேசுவை மறுதலித்துவிட்டு உயிர் பிழைத்துப் போ ! என்பதே அது. அதை அனைவரும் நிராகரித்தனர். இயேசுவின் உயிர்ப்பின் அனுபவம் கிடைக்காமல் இருந்திருந்தால் ஏன் அவர்கள் இயேசுவை மறுதலிக்க மறுக்க வேண்டும் ? இத்தனைக்கும் இயேசு பிடிபட்டபோது பின்னங்கால் பிடறியில் பட ஓடியவர்கள் அவர்கள் !!!

இயேசுவின் அப்போஸ்தலர் பணியில் தேர்வு செய்யும் ஊழியர்கள் இயேசுவின் உயிர்ப்பைப் பார்த்தவர்களாகவே இருப்பதை பல இடங்களில் காண முடிகிறது. சுமார் இரண்டாயிரம் பேர் இயேசு உயிர்த்ததைப் பார்த்ததாக விவிலிய அறிஞர்கள் கூறுகின்றனர்.

இயேசுவின் வாழ்க்கை மனுக்குலத்தின் மீது அழுத்தமாய் எழுதப்பட்ட ஒரு காவியம் போல, அதன் ஒவ்வோர் பக்கத்திலும் வாழ்வின் பாதைகள் புனிதத்துவமாய் செதுக்கப்பட்டுள்ளன. ]

 
 

 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

ஆணாக மாறியது அபூர்வ பெண் பறவை

http://epaper.dinamalar.com/Web/Article/2008/06/24/002/24_06_2008_002_006.jpg

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

நிலையில்லாத வாழ்வில் நிலையான அடைக்கலம்

 http://thamilislam.blogspot.com/2008/06/blog-post_24.html

 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம்

சீனாவின் அல்பத்தனம்

http://thamilislam.blogspot.com/

சீனாவின் அல்பத்தனம்

http://epaper.dinamalar.com/Web/Article/2008/06/23/008/23_06_2008_008_003.jpg

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்து

இந்து தற்கொலை படை பிரிவு

http://thamilislam.blogspot.com/

இந்து தற்கொலை படை பிரிவு

http://epaper.dinamalar.com/Web/Article/2008/06/23/006/23_06_2008_006_001.jpg

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்து

இப்போது குரானில் கலப்படம் இல்லை – நான் நீக்கிவிட்டேன் ஜைனுலாபிதீன் அறிக்கை

 

 

Source : http://thamilislam.blogspot.com/

இப்போது குரானில் கலப்படம் இல்லை – நான் நீக்கிவிட்டேன் ஜைனுலாபிதீன் அறிக்கை

இஸ்லாமியர்கள் இதுநாள் வரை குரானில் எந்த கலப்படமும் இல்லை.குரான் முழுமையாக பாதுகாக்கப்பட்டது.அதை அல்லாவே பாதுகாத்தான் என்றெல்லாம் எல்லாருடைய காதிலும் பூ சுற்றி வந்ததை நாம் அறிவோம்.

தற்பொழுது இந்த புளுக்குக்கு முடிவு வந்து விட்டது.ஆம் தமிழ் நாட்டின் இஸ்லாமிய அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ஏகத்துவம் என்ற பத்திரிக்கையில் ஏப்பரல் மாதம் எழுதியுள்ள கட்டுரையில் குரானில் கலப்படம் இருந்ததாகவும்.அதை நீக்க இவருக்கு அல்லா அருள் புரிந்ததாகவும் சொல்லியுள்ளார்.இது எதோ தமிழ் நாட்டில் மட்டும் உருவான கலப்படம் அல்ல இஸ்லாம் உருவான சவுதி அரேபியாவிலேயே இந்த குரான் கலப்படம் இருந்ததாக அவர் சொல்கிறார்.

ஏகத்துவம் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையின் பகுதி கீழே

கலப்படமின்மை

வணக்கங்களில் பித்அத் கூடாது என்று தத்துவார்த்தமாகச் சொன்ன போது, மக்கள் மிகக் கடுமையாக அதை எதிர்த்தனர். இன்று அதே மக்கள் செயல்பாட்டு அடிப்படையில் பார்க்கும் போது அதை எற்றுச் செயல்படவும் அரம்பிக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

இவ்வாறு வணக்கங்களில் கலந்து விட்ட கலப்படங்களைக் களைந்து விட்டோம். அனால் குர்அனில்
உள்ள கலப்படங்களை நாம் இதுவரைக் களையவில்லை. குர்அனில் கலப்படமா? என்று கொதிப்புடனும், ஆச்சரியத்துடனும் நீங்கள் இங்கு கேள்வி எழுப்பலாம். அதற்கான விடை கீழே இடம் பெற்றுள்ளது. தமிழகம் மட்டுமல்ல! சவூதியின் வெளியீடுகளில் கூட இந்தச் சேர்மானங்கள் இடம் பெறத் தவறவில்லை.

இந்தச் சேர்மானங்களைக் களைவதற்கு அல்லாஹ் ஒர் அரிய வாய்ப்பை வழங்கினான். அது தான் இந்தத் தமிழாக்கமாகும்.

1. மன்ஜில்

2. ருகூவுக்கள்

3. ஸஜ்தா அடையாளங்கள்

4. நிறுத்தல் குறியீடுகள்.

5. வேண்டாத அய்வுகள்

6. மக்கீ, மதனீ

7. குர்அனை முடிக்கும் துஆ

மேற்கண்ட இந்தச் சேர்மானங்களை நீக்கி வெளியிட்டிருப்பதன் மூலம் ஆந்த தர்ஜுமா தனிச் சிறப்பைப் பெறுகின்றது. அல்லாஹ்வைப் பயந்து, உலகத்தில் யாருக்கும் பயப்படாமல் ஒரு தூய வடிவைக் கையாண்டதற்காக இது கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

குர்அன் மொழியாக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றியதுடன் மட்டுமின்றி, குர்அனில் இருந்த இந்தக் கலப்படங்களை மக்களிடம் அடையாளம் காட்டி, அப்புறப்படுத்தியதும் தவ்ஹீது ஜமாஅத் செய்த சாதனைகளில் ஒன்று என்றால் மிகையாகாது.

ஏகத்துவம் ,ஏப்ரல் 2008:http://www.onlinepj.com/

இந்த கட்டுரையை படித்த உங்களுக்கு கண்டிப்பாக இவகளின் போலி முகங்கள் வெளிப்பட்டிருகும்.

இந்த நிலையில் தமிழ் உலக மக்கள் இந்த போலியான இஸ்லாமிய பிரச்சாரங்களை உதறித்தள்ளுவது மட்டும் அல்ல அவர்களின் பொய்யும், புணை சுருட்டுமான எழுத்துக்களை எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டிக்கொள்ளுகிறோம்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

தசாவதாரத்தின் அந்தரங்க லீலைகள்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்து

கிறிஸ்தவ போதகராக மாறின முஸ்லீம்

கிறிஸ்தவ போதகரான எஸ். பயாசுதீன்

http://thamilislam.blogspot.com/2008/06/blog-post_18.html

எஸ். பயாசுதீன்(மொழிபெயர்ப்பு முழுமை அல்ல)

என் பெயர் பயாசுதீன் நான் ஒரு கட்டுக் கோப்பான முஸ்லீம் குடும்பத்தில், தமிழ் நாட்டில் பிறந்தேன். இஸ்லாமின் எல்லா மதச்சடங்குகளும் எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. நான் ஆறு வயதாக இருந்தபோது என் தகப்பனார் எம். சர்தார் ஹூசைன் காலமானார். இதன் பிறகு நாங்கள் வேறு நகரத்துக்கு சென்று குடியேறினோம். முழுக்குடும்பத்தையும் என் தாயார் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது.புதிய இடத்தில் குடியேறின கொஞ்ச நாட்களிலேயே மக்களின் பல்வேறு நிறங்களை கண்டுகொண்டோம். குறிப்பாக எங்கள் உறவினர்கள் உலகத்தில் பணத்துக்கு என்ன மதிப்பு இருக்கிறது அதன்பின் ஓடுகிற மக்கள் எப்படி என்றெல்லாம் கற்றுக் கொடுத்தார்கள். எல்லாரும் எங்களை விட்டு கடந்து போனபோதும் நாங்கள் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை வாழவேண்டும் என்பதில் குறியாக இருந்தோம். ஆனால் அதுவும் எங்களுக்கு மிகவும் கடினமாயிருந்தது. ஏனென்றால் என் தாயார் செய்வினையால் மனரீதியாகவும் , உடல்ரீதியாகவும் மிகவும் பாதிப்புக்குள்ளானார். பின்னர் கொஞ்ச நாட்களில் என்னுடைய சகோதரியையும் பாதித்தது. இந்த நாட்களில் எங்களுக்கு உலகத்தின் ஆவி அல்லது செய்வினைப் பற்றித் தெரியாது எனவே நாங்கள் பெரும் பணத்தை ஆஸ்பத்திரிகளுக்கும், கோவில்களுக்கும் மந்திரவாதிகளுக்கும் செலவழித்தோம் ஆனால் ஒரு பயனும் இல்லை.

எங்கள் முழுக்குடும்பமும் மிகுந்த குழப்பத்திற்குள் தவித்தது பல நேரங்களில் குடும்பமாக தற்கொலை செய்ய முயற்சி செய்தோம். அதிர்ஷ்டவசமாக அப்படிநடக்கவில்லை. இதை நான் உங்களுக்கு எழுதும்போதே என் வாழ்க்கையில் இருந்த வெறுமையையும்,நம்பிக்கையற்ற சூழ்நிலைகள் மற்றும் என் மேல் இருந்த அன்பு இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் அற்புதம் செய்யும் கரத்தையும் நினைவு கூறுகிறேன். அந்த நாட்கள் பெரும் துயரத்தின் காரிருளினால் மூடப்பட்ட கொடிய நாட்களாய் கடந்தது. அதைப்பற்றி சொல்லவேண்டுமென்றால் நாங்கள் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தோம் ஆனால் வாழ்க்கையற்றவர்களாய். 1993 ம் வருடம் என் தாயுடைய நிலைமை மிகவும் மோசமானது இதுதான் பில்லிசூனியத்தின் உச்சக் கூட்டம் என்று அறிந்து கொண்டோம். முழுவதும் உதவியற்ற நம்பிக்கையற்ற நிலையில் இருந்தபோதும் எங்களுக்கு உதவிசெய்யும்படி இயேசுவின் கரம் இருந்ததை பார்க்க முடிந்தது. கிறிஸ்தவ சபைக்கு போக ஆரம்பித்திருந்த பாண்டி என்ற சகோதரன் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்கள் மற்றும் சந்தோஷம், உள்ளத்தில் உள்ள சமாதானம் பற்றியும் எங்களோடு பகிர்ந்துகொண்டார். ஒரு நாள் எங்களையும் சபைக்கு அழைத்தார். நாங்கள் ஒரு ஞாயிற்றுக் கிழமை சபைக்கு போனோம் . அந்த உயிர்த்தெழுந்த கிறிஸ்து உலகத்தை விடுதலையாக்கினது போல எங்களையும் எல்லா செய்வினை கட்டுகளிலிருந்தும் விடுதலையாக்கினார். தேவ ஊழியனுடைய ஜெபத்தின் மூலம் இயேசு கிறிஸ்து எங்களுடைய எல்லாக் கட்டுகளையும் உடைத்துப் போட்டார், எங்களுடைய சொந்தக் கண்களினால் கண்டு உயிர்த்தெழுந்த அவருடைய உன்னத வல்லமையை உணர்ந்தோம்.

நான் தேவனுடைய வல்லமையை பார்த்தபோது ஆச்சரியப்பட்டேன் ஏனென்றால் இதுதான் முதல்முறையாக எல்லா ஆவிகளும் தேவனுடைய வல்லமைக்கு முன்பாக அடிபணிபவதை நான் பார்க்கிறேன். அந்த நபர் செய்வினையை முறிப்பதற்கு எதையும் உபயோகப்படுத்தவில்லை வெறும் வார்த்தைகள் அடங்கிய ஜெபம் மாத்திரம்தான் செய்தார். ஆனால் அந்த வார்த்தைகளில் அத்தனை வல்லமையிருந்தது. அப்போதும் நான் இயேசுவை முழுவதும் ஏற்றுக் கொள்ளவில்லை அவருக்கு ஆவிகளின் மீது அதிகாரம் உள்ளது என்று மட்டும் தான் நம்பினேன். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சபைக்குத் தொடர்ந்து போக ஆரம்பித்தப் பிறகு. தேவன் என்னோடு பேச ஆரம்பித்தார். என்னுடைய பாவங்களை மன்னித்து என்னைத் தேவனோடு இணைக்க கூடிய இயேசுவை என் வாழ்க்கையி;ல் ஏற்றுக்கொண்டேன். மரிக்கும் ஆத்துமாக்களைக் குறித்த பாரம் எனக்குள் உண்டானது தேவ அழைப்பை உணர்ந்து என்னை ஒப்புக்கொடுத்தேன். இறையியல் கல்வியை முடித்துவிட்டு இப்போது ஒரு சிறிய கிராமத்தில் பாஸ்டராக உள்ளேன். எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.

S.FAYAZUDDIN

I , S.FAYAZUDDIN born and brought up in a orthodoxy Islamic family in tamil nadu of India. I was taught by all Islamic rituals and ceremonials. My father M.Sardar Hussain passed this world when I was six years old. After his departure our family moved other city and settled there. The whole family was ran after by my mother. As we settled life in this city, soon we came to know about the different colors of the people. Especially about our relatives who taught us to know about the importance of money in this world and the people who are behind it. Even though everyone left us to be alone. We aimed to live a happy and peaceful life as of a human do think. But that too became very hard for us to have. Because my mother was badly affected by the witchcraft which made her physically and mentally so weak. Later it sometimes also affected my sister. During this days, we does not know about the spirit world or Witchcraft. So we spend all our money for hospitals and for many sorcerers, magicians and also for temples. But all left us in vain.

Our family was on so dilemma that we went to suicide as a whole family for many times. But unfortunately it did not happened. When I am writing this I do remember the emptiness in everything and the hopeless condition we had and above all the wonder working hand of loving Savior Jesus Christ. That days went on with tragic sorrows and a gloomy dark covered all over. I would say on those days even though we had our lives in this world but we were life-less. My mother become so severe sick in the year 1993 which was the final move of the witchcraft that we understood. As we were in the hopeless and helpless condition from this world and worldly power. We were able to see the helping hand of Jesus which was above us, since our being in this world. Yes, as we looking our final chapter of the life a Christian brother named Pandi who had started to go to church, shared about his joy and peace in Christ and

called us to come to church. As we want to see the life. We want to the near by church for a Sunday service. Yes we went near to God who called us. On that Sunday, as Christ resurrected and set free the world, we were also set free from the bondage of the witchcraft. By the prayer of servant of God, Jesus Christ broke all our chains and with our own eyes, we can able to see and feel the magnificent power of resurrected Christ.

As I saw the power of Christ. I was amazed. Because it was for the first time, I have seen that a spirit is subjecting to the high power of God. And also it was for the first time in my whole life I saw that a person is not using anything to remove the witchcraft only a prayer, (the mere words) in which there is power. But still on that time I did not accept Jesus Christ as My personal Savior. Because I accepted Jesus Christ only as God of Power to whom all things are subjected. Later as I began to go to church God’s word spoke to me. Yes, I began to look for savior who could wash away my sin, who could make me to have fellowship with God. When I accepted Jesus Christ as My Savior, my inner – being totally become to change and the burden of dying Souls came to me. On a particular Sunday service, I heard the call of God to me for his ministry. By the Grace of God I dedicated to His ministry and able to finish my theological studies and to be in His ministry. I have been pastoring a small village church and reaching Non-Christian Society. I request you pray for the church Ministry and my marriage which will be hell on 09-09-2005 at tamil nadu. All glory be to God

http://unmaiadiyann.blogspot.com/search?q=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, அல்லாஹ், இஸ்லாம், குரான், முகமது

தமிழன் கொல்லப்பட்ட நாள் தான் தீபாவளி

தமிழன் கொல்லப்பட்ட நாள் தான் தீபாவளி-கருணாநிதி

கடலூர்: தீபாவளி தமிழன் கொல்லப்பட்ட நாள். அந்த நாளை மறந்து விட்டு, தமிழை ஏற்றி வைக்கும் நாளான பொங்கலை கொண்டாடுங்கள் என முதல்வர் கருணாநிதி கூறினார்.

கடலூரில் நடந்த திமுக மகளிரணி மாநாட்டில் அவர் பேசுகையில்,

தை மாதம் வரப் போகும் பொங்கலை எப்படி கொண்டாடப் போகிறோம். மகர சங்கராந்தி என்றா?. சங்கராந்தி தேவி 25 கைகளோடும், 45 கால்களோடும், கோரப் பற்களோடு வருவார் என்று பஞ்சாங்கத்திலே போடுவார்களே அந்தப் படத்தைக்காட்டி, இவர்தான் மகர சங்கராந்தி, இவரை வணங்குவோம் என்று நாமும் வணங்கி, நம்முடைய வீட்டிலே இருக்கின்ற குழந்தைகளையும் வணங்கச் சொல்லப் போகிறோமா?.

அப்படி என்றால் அது பொங்கல் அல்ல, தமிழனுடைய விழா அல்ல. ஆரியனுடைய மகர சங்கராந்தி. எப்படி வந்தது மகர சங்கராந்தி?.

நம்முடைய ஆண்டுக் கணக்கு என்ன?. வெள்ளைக்காரனுக்கு இருக்கிறது ஆண்டுக் கணக்கு, ஜெர்மனிக்கு, பிரெஞ்சுக்கு, தெலுங்குக்கு, கேரளாவுக்கு ஆண்டுக் கணக்கு இருக்கிறது.

தமிழா உனக்கு ஆண்டுக் கணக்கே இல்லை என்றால் இதை விட கேவலம் இருக்க முடியுமா?. எப்படி பிறந்து நமக்கு ஆண்டு?. மகா விஷ்ணுவுக்கும் நாரதருக்கும் பிறந்த 60 பிள்ளைகள் அல்லவா நமக்கு ஆண்டாக கூறப்பட்டுள்ளது.

சேரன் செங்குட்டுவன் பரம்பரையில் வந்த தமிழன் நீதி கேட்ட கண்ணகியினுடைய சாபத்திற்கு அடிபணிந்த உயிர் துறந்த தமிழன் நெடுஞ்செழிய பாண்டியனுடைய பரம்பரையில் வந்த தமிழன் இன்றைக்கும் இன்னும் அந்த வருடப் பிறப்பை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய ஆண்டு தை முதல் நாள்தான். வள்ளுவன் பிறந்த ஆண்டு தமிழன் ஆண்டு கணக்காக குறிப்பிட்டார்கள். பெண்களான நீங்கள் இந்த செய்தியை எல்லோருக்கும் சொல்லி, வருகிற பொங்கல் திருநாளை தமிழன் திருநாளாக, திராவிட திருநாளாக கொண்டாடுங்கள்.

எப்படி தீபாவளிக்கு புது ஆடை உடுத்திக் கொண்டாடுகிறீர்களோ அது தமிழன் கொல்லப்பட்ட நாள். அந்த நாளை மறந்து விட்டு, இந்த நாள் தமிழை ஏற்றி வைக்கும் நாள். தமிழனுக்குப் பெருமை சேர்க்கும் நாள். அந்த சுயமரியாதை உணர்வோடு தன்மான உணர்வோடு பொங்கலைக் கொண்டாட புறப்படுங்கள் என்றார் கருணாநிதி.

http://www.aol.in/tamil/news/2008/06/16/tn-celebrate-pongal-not-deepavali-karunanidhi.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்து