Monthly Archives: ஒக்ரோபர் 2011

ஆபாசப் படங்களைக் மற்றவர்களுக்கு காட்டு வதே குற்றம்

!

இலங்கையில் ஆபாசப் படங்களைக் மற்றவர்களுக்கு காட்டுவதே குற்றம்

ஆபாச பிரசுரங்களை விநியோகித்தல், பார்வையிடுதல், வெளியிடுதல், பிரசுரித்தல், வைத்திருத்தல், காண்பித்தல் போன்வற்றை தடுப்பதற்காக கடுமையான சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. குறிப்பாக சிறுவர், சிறுமியரை மையப்படுத்தி பாலியல் ரீதியான ஆபாச வெளியீடுகளுக்கு மிக கடுமையான தண்டனை வழங்கும் விதத்தில் புதிய சட்டம் அமுலுக்கு வரவுள்ளது. நீதியமைச்சு இது தொடர்பான சட்டத்தை தயாரித்து வருவதாக நீதி அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் தெரிவித்தார். சிறுவர்களை, சிறுமியர்களை மையப்படுத்திய ஆபாச பிரசுரங்களை, வீடியோக்களை, புகைப்படங்களை இறக்குமதி செய்தல், தயாரித்தல், அருகில் வைத்திருத்தல், பிரசுரித்தல், மற்றவருக்கு காண்பித்தல், மற்றவருக்கு அனுப்புதல், செலியூலர் தொலைபேசியூடாக மற்றவருக்கு அனுப்புதல், காண்பித்தல், கணனியில் ஆவணப்படுத்துதல், மற்றவருக்கு இணைய வழியாக அனுப்புதல், காண்பித்தல், போன்றன குற்றச் செயல்களாக கருதப்படுகிறது.

இக்குற்றச் செயல்களுக்கு உள்ளான ஒருவருக்கு இரண்டு வருடத்துக்கு குறையாத 10 வருடத்துக்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது இரண்டு லட்சம் ரூபா தண்டப்பணமும் அல்லது இவை இரண்டுக்கும் உள்ளாக்கப்படுவார். இரண்டாவது தடவையாக இவர் குற்றவாளியாக காணப்பட்டால் 5 இலட்சத்துக்கு குறையாத தண்டப்பணம் அல்லது 20 வருடத்துக்கு குறையாத சிறத்தண்டனை அல்லது இவை இரண்டுக்கும் உள்ளாக்கப்படுவார். தேவேளை கணனிகளுக்கான சேவை வழங்குநர்கள் தாம் வழங்கும் சேவையினூடாக ஆபாச படங்கள், வீடியோக்கள் பார்க்க முடியாது என்ற உத்தரவாதத்தையும் வழங்க வேண்டும்.

அவ்வாறு சேவை வழங்குநர்கள் மூலம் ஆபாச படங்கள், வீடியோக்கள் பார்த்ததாக அல்லது வைத்திருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டால் மூன்று இலட்சம் ரூபாவுக்கு குறையாத 5 இலட்சம் ரூபாவுக்கு மேற்படாத தண்டப்பணத்தை செலுத்த வேண்டியவராக இருப்பார். இச்சட்டம் விரைவில் அமுலுக்குக் கொண்டுவரப்படவுள்ளதுடன் நீதியமைச்சு இச்சட்டத்தை சட்டவரைஞர் திணைக்களத்திடம் கையளிக்கவுள்ளது. நவீன தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்ததன் பின்னர் கணனிகள், இணையங்கள், செலியூலர் தொலைபேசிகள் ஊடாக ஆபாச படங்கள், வீடியோக்கள் அதிகரித்துள்ள மையை கட்டுப்படுத்தும் நோக்குடன் இப்புதிய கடுமையான சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்படுகிறது.

source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண ்டா?

பழமைவாய்ந்த "குர்‍ஆனின் முழு கையெழுத்து" பிரதி ஹிஜ்ரி 200 அல்லது கி.பி. 800 க்கு சம்மந்தப்பட்டது

Koran: Earliest complete manuscript 200 AH or 800AD!

பீஜே அவர்கள் தம்முடைய குர்‍ஆன் தமிழாக்கத்தில் "பிரதிகள் எடுத்தல்" என்ற தலைப்பின் கீழ், பக்கம் 48ல் இரண்டு மூல குர்‍ஆன் பற்றிய விவரங்களைத் தருகிறார்.

பீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48 :

உஸ்மான் (ரலி) அவர்களின் இந்த மூலப் பிரதியின் அடிப்படையில் தான் உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக குர்‍ஆன் அச்சடிக்கப்பட்டும், எழுதப்பட்டும், பரப்பப்பட்டும், வினியோகிக்கப்பட்டும் வருகின்றது.

உஸ்மான் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று துருக்கி நாட்டின் "இஸ்தான்புல்" நகரத்தில் உள்ள அருங்காட்சி யகத்திலும், இன்னொன்று ரஷியாவின் "தாஷ்கண்ட் " நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் பரப்பிய அந்தப் பிரதிகள் தான் இன்று உலகத்தில் உள்ள குர்‍ஆன் பிரதிகள் அனைத்திற்கும் மூலம் எனலாம். (பீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48)

பீஜே அவர்கள் கூறியது உண்மையா?

அன்று உஸ்மான் அவர்கள் எடுத்த பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் நம்மிடம் உள்ளதா?

அல்லது ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிரதிகள் நம்மிடம் உள்ளதா?

முஹம்மது மரித்த 18 அல்லது 19 ஆண்டுகளில் உஸ்மான் மூலமாக தொகுக்கப்பட்ட பிரதிகள் தான் நம்மிடமுள்ளதா?

அல்லது முஹம்மது மரித்துவிட்ட பிறகு நூறு ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட பிரதிகள் நம்மிடமுள்ளதா?

இவைகளை அறிய இந்த கட்டுரையை படியுங்கள், மற்றும் பீஜே போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் புனையும் பொய்களை அறிந்துக்கொள்ளுங்கள்.

1 பின்னூட்டம்

Filed under Uncategorized

குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப ்பட்டுள்ளதா? ஸுயூதியும் தொலைந்த குர்‍ஆன் வச னங்களும் பாகம் 3

(தொலைந்த 157 குர்ஆன் வசனங்கள்)

முன்னுரை: இஸ்லாமிய அறிஞர்கள் குர்‍ஆனை பற்றி புகழ்ந்து கூறவேண்டுமென்றுச் சொல்லியும், தங்கள் பிழைப்பு இதனால் நடக்கவேண்டுமென்றுச் சொல்லியும், சாதாரண சராசரி இஸ்லாமியர்களை ஏமாற்றிவருகிறார்கள். குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து மாறாமல் அன்றிலிருந்து இன்றுவரை அப்படியே உள்ளது என்றும், உலகிலேயே மாற்றமடையாத ஒரே வேதம் குர்‍ஆன் என்றும், பொய்களை டன் கணக்கில் சொல்லிவருகிறார்கள். ஆனால், உண்மையில் குர்‍ஆனிலிருந்து அனேக வசனங்கள் நீக்கப்பட்டுள்ளன, சில அத்தியாயங்கள் இன்றைய குர்‍ஆனில் காணப்படுவதில்லை. இந்த உண்மைகளை ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்கள், முஹம்மதுவின் தோழர்கள் மூலமாக கிடைத்துள்ளது. இவைகளை இஸ்லாமிய அறிஞர்கள் சராசரி மக்களிடம் மறைக்கின்றனர். இந்த உண்மைகளை எல்லாரும் அறிய வேண்மென்பதற்காக, கீழ்கண்ட இரண்டு பாகங்கள் வெளியிடப்பட்டுள்ளன, இப்போது மூன்றாவது பாகத்தைக் காண்போம்.

பீஜேவிற்கு கேள்வி: குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா?

1) ஸுயூதியும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் – பாகம் 1

2) வீட்டு மிருகமும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் – பாகம் 2

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப ்பட்டுள்ளதா? வீட்டு மிருகமும் குர்‍ஆனின் தொ லைந்த வசனங்களும் – பாகம் 2

(குர்ஆன் வசனத்தை தின்றுவிட்ட வீட்டு மிருகம்)

இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவதுபோல, குர்‍ஆன் வசனத்திற்கு வசனம், எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டவில்லை. அனேக வசனங்கள் தொலைந்துவிட்டன. தொலைந்த வசனங்கள் எவ்வளவு இருக்கும்? ஒரு வசனமா? ஐந்து வசனங்களா? பத்து வசனங்களா? அல்லது நூற்றுக்கும் அதிகமான வசனங்களா? உமர், ஆயிஷா மற்றும் உபை போன்றவர்களின் சாட்சி என்ன என்பதை நீங்களே படியுங்களேன். இதனை அறிந்துக்கொள்ள இஸ்லாமிய நூல்களிலிருந்து சில குறிப்புக்களை காண்போம்.

பாகம் 1ஐ படிக்கவும்: ஸுயூதியும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் – பாகம் 1

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப ்பட்டுள்ளதா? ஸுயூதியும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் – பாகம் 1

இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவதுபோல, குர்‍ஆன் வசனத்திற்கு வசனம், எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டவில்லை. அனேக வசனங்கள் தொலைந்துவிட்டன. தொலைந்த வசனங்கள் எவ்வளவு இருக்கும்? ஒரு வசனமா? ஐந்து வசனங்களா? பத்து வசனங்களா? அல்லது நூற்றுக்கும் அதிகமான வசனங்களா? உமர், ஆயிஷா மற்றும் உபை போன்றவர்களின் சாட்சி என்ன என்பதை நீங்களே படியுங்களேன். இதனை அறிந்துக்கொள்ள இஸ்லாமிய நூல்களிலிருந்து சில குறிப்புக்களை காண்போம்.

இப்னு உமர் அல் கத்தாப்:

குர்‍ஆன் முழுமையானதல்ல, குர்‍ஆனிலிருந்து அனேக வசனங்கள் தொலைந்துவிட்டன என்று இப்னு உமர் அல் கத்தாப் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்.

"என்னிடம் முழு குர்‍ஆனும் உள்ளது என்று உங்களில் யாரும் சொல்லக்கூடாது, தன்னுடமுள்ள குர்‍ஆன் முழுமையானது என்று அவனுக்கு எப்படித் தெரியும்?குர்‍ஆனின் பெரும் பகுதி தொலைந்துவிட்டது , ஆகையால் "குர்‍ஆனில் எவைகள் மீதமிருக்கிறதோ அவைகள் என்னிடமுள்ளன" என்று கூறுங்கள். (ஸுயூதி, இத்கான், பாகம் 3, பக்கம் 72)

"Let no one of you say that he has acquired the entire Qur’an for how does he know that it is all? Much of the Qur’an has been lost , thus let him say, ‘I have acquired of it what is available" (Suyuti: Itqan, part 3, page 72).

இப்னு உமர் கூறியதற்கு ஆதரவாக ஆயிஷா அவர்கள் (பக்கம் 72) கீழ்கண்ட விவரத்தை கூறுகிறார்கள்:

"இறைத்தூதர் வாழ்ந்த காலத்தில், " கூட்டங்கள் (Parties)" என்ற ஸூராவை ஓதும் போது இருநூறு வசனங்கள் இருந்தன . குர்‍ஆனின் பிரதிகளை உஸ்மான் உருவாக்கிய பிறகு, குர்‍ஆனில் இப்போதுள்ள வசனங்கள் மட்டுமே மீதமாக உள்ளது (73 வசனங்கள்)"

"During the time of the prophet, the chapter of the Parties used to be two hundred verses when read. When Uthman edited the copies of the Qur’an, only the current (verses) were recorded" (73 verses).

முஹம்மதுவின் தோழர்களில் சிறந்தவரான உபை இப்னு கஅப் என்பவரும், ஆயிஷா அவர்கள் கூறியது போலவே கூறியுள்ளார்.

ஸுயூதி, இத்கான், பாகம் 3, பக்கம் 72:

"ஒரு முஸ்லிமிடம் இந்த சிறப்புமிக்க தோழர் இவ்விதமாக கேட்டார், ‘ கூட்டங்கள் (Parties) என்ற அத்தியாயத்தில் எத்தனை வசனங்கள் இருக்கின்றன‌?’. இதற்கு அந்த முஸ்லிம் ’72 அல்லது 73 வசனங்கள்’ என்று பதில் அளித்தார். உபை அவரிடம் இவ்விதமாக சொன்னார், ‘அல் பகரா ஸூராவில் இருந்த வசனங்களுக்கு சமமான வசனங்கள் (கிட்டத்தட்ட 286 வசனங்கள்) இந்த ‘கூட்டங்கள் (Parties)’ அத்தியாயத்திலும் இருந்தன , அதில் கல்லெரிந்து கொல்லுதல் வசனமும் இருந்தது. அந்த மனிதர் உபையிடம் ‘அந்த கல்லெரிந்து கொல்லுதல் வசனம் என்ன?’ என்று கேட்டார். உபை அவரிடம், ‘அதாவது வயது சென்ற ஒரு ஆணோ அல்லது பெண்ணோ விபச்சாரம் செய்தால், அவர்கள் மரிக்கும் வரை கல்லெரிந்து கொல்லவேண்டும்’ என்பது தான் அந்த வசனம் என்று பதில் அளித்தார்.

"This famous companion asked one of the Muslims, ‘How many verses in the chapter of the Parties?’ He said, ‘Seventy-two or seventy-three verses.’ He (Ubay) told him, ‘It used to be almost equal to the chapter of the Cow (about 286 verses) and included the verse of the stoning .’ The man asked, ‘What is the verse of the stoning?’ He said, ‘If an old man or woman committed adultery, stone them to death."’

நபித்தோழருக்கும், ஒரு முஸ்லிமுக்கும் இடையே நடந்த மேலே கூறிய உரையாடலை அப்படியே பதிவு செய்து, இப்னு ஹஜம் என்ற இஸ்லாமிய அறிஞர், கீழ்கண்டவாறு கூறுகிறார் (தொகுப்பு 8, பாக‌ம் 11, ப‌க்க‌ங்க‌ள் 234 ம‌ற்றும் 235):

"அலி இப்னு அபூ தாலிப்பின் கூற்றின் ப‌டி, இந்த‌ ஹ‌தீஸ் ச‌ரியான‌ ஹ‌தீஸாகும் (ந‌ம்பிக்கையான‌ ச‌ங்கிலித் தொட‌ர் உடைய‌ ஹ‌தீஸாகும்) (The Sweetest [Al Mohalla] Vol. 8.).

"’Ali Ibn Abi Talib said this has a reliable chain of authority (The Sweetest [Al Mohalla] vol. 8.)."

இதனை "al-Kash-Shaf" என்ற தம்முடைய புத்தகத்தில் ஜமக் ஷாரி (Zamakh-Shari) என்பவரும் குறிப்பிட்டுள்ளார் (பாகம் 3, பக்கம் 518).

முஹம்மதுவின் ஹதீஸ்களையும், சரிதையையும், குர்‍ஆனின் விரிவுரைகளையும் உலகிற்கு காட்டிய இந்த இஸ்லாமிய தூண்களாகிய அவரது தோழர்கள் மற்றும் நம்பிக்கைக்குரியவர்களின் மேற்கண்ட கூற்றுகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. இவர்களில் சிலர் "இப்னு உமர், ஆயிஷா, உபை இப்னு கஅப், மற்றும் அலி இப்னு அபூ தாலிப்" என்பவர்கள் ஆவார்கள்.

இப்னு உமரின் கூற்றுப்படி, குர்‍ஆனின் பெரும்பகுதி தொலைந்துவிட்டது.

ஆயிஷா மற்றும் உபை இப்னு கஅப் என்பவர்களின் கூற்றுப்படி, கு‍ர்‍ஆனின் "கூட்டங்கள் (Parties)" அத்தியாயத்திலிருந்து பெரும்பகுதியான தொலைந்துவிட்டது,

இதையே அலி கூட உறுதிப்படுத்துகிறார். இந்த நிகழ்ச்சிப் பற்றி ஸுயூதி தன் "இத்கான்" என்ற புத்தகத்தில் கீழ்கண்டவாறு பதிவு செய்கிறார் (பாகம் 1, பக்கம் 168):

குர்‍ஆன் தொகுக்கப்பட்டுக் கொண்டு இருந்த காலக் கட்டத்தில், மக்கள் ஸைத் இப்னு தாபித் என்பவரிடம் (தாங்கள் மனப்பாடம் செய்து வைத்திருந்த குர்‍ஆன் வசனங்களோடு)வருவார்கள். இரண்டு அத்தாட்சிகள் இருந்தால் மட்டுமே ஏற்பேன் இல்லையேல் அவைகளை குர்‍ஆனில் சேர்க்கமாட்டேன் என்றுச் சொல்லி அவர் மறுத்துவிடுவார். "அல் தவ்பா" என்ற அத்தியாயத்தின் கடைசி வசனம் "குஜைமா இப்னு தாபித்" என்பவரிடம் மட்டுமே இருந்தது. ‘இந்த வசனம் இவரிடம் மட்டுமே இருந்தாலும், அதனை பதிவு செய்யுங்கள், ஏனென்றால், குஜைமாவின் சாட்சி இரண்டு சாட்சிகளுக்கு சமம் என்று இறைத்தூதர் கூறியிருக்கிறார்’ என்று ஸைத் கூறினார். உமரும் "கல்லெரிதல்" வசனத்தை கொண்டு வந்தார், இருந்தாலும், அவர் கொண்டு வந்த‌ வசனம் குர்‍ஆனில் பதிவு செய்யப்படவில்லை, ஏனென்றால், இவ்வசனத்திற்கு உமர் மட்டுமே சாட்சியாக இருந்தார்".

"During the collection of the Qur’an, people used to come to Zayd Ibn Thabit (with the verses they memorized). He shunned recording any verse unless two witnesses attested to it. The last verse of chapter of Repentance was found only with Khuzayma Ibn Thabit. Zayd said, ‘Record it because the apostle of God made the testimony of Khuzayma equal to the testimony of two men.’ ‘Umar came with the verse of the stoning but it was not recorded because he was the only witness to it."

மேற்கண்டவைகளை ஒருவர் படித்தால் அவர் ஆச்சரியத்தோடு கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுவார்:

"உமருடைய சாட்சி உண்மையான சாட்சி தான் என்றுச் சொல்ல இன்னொரு சாட்சி அவசியமா?"

"அல்லாஹ்விற்கும், அவனது குர்‍ஆனுக்கும் எதிராக உமர் பொய்யை கூறுவாரா?".

அதன் பிறகு உமர் இவ்விதமாக கூறினார், ‘உமர் அல்லாஹ்வின் புத்தகத்தில் சேர்த்துவிட்டார் என்று என் மீது குற்றம் சொல்லாமல் இருப்பார்களானால், நான் அந்த கல்லெரிதல் வ்சனத்தை குர்‍ஆனோடு சேர்த்து இருந்திருப்பேன்".(இத்கான், பாகம் 3, பக்கம் 75). மேலும் "Skiek Kishk" என்பவரின் புத்தகத்திலும் இதனை காணலாம்.

ஆயிஷா அவர்களின் இன்னொரு அறிக்கை:

"இறக்கப்பட்ட வசனங்களில் "பத்து முறை மார்பக பால் கொடுத்தல்" வசனத்தை "ஐந்து முறை மார்பக பால் கொடுத்தல்" வசனம் இரத்து செய்துவிட்டது.இறைத்தூதர் மரித்துவிட்ட பிறகும் இந்த வசனம் குர்‍ஆனின் வசனமாக வாசிக்கப்பட்டுக்கொண்டு இருந்தது. இதனை அபூ பக்கர் மற்றும் உமர் மூலமாக அறிவிக்கப்பட்டது (பார்க்க ஸுயூதி, இத்கான் பாகம் 3 பக்கங்கள் 62 மற்றும் 63)

"Among the (verses) which were sent down, (the verse) of the ten breast feedings was abrogated by (a verse which calls for five breast feedings. The apostle of God died and this verse was still read as part of the Qur’an. This was related by Abu Bakr and ‘Umar" (refer to Suyuti’s qan, part 3, pages 62 and 63).

ஆங்கில மூலம்: Chapter Twelve – The Perversion of Qur’an and the Loss of Many Parts of It.

source:isakoran.blogspot

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

உலகம் முழுவதும் பேசப்படும் 17 வயது தமிழ்ச ் சிறுவன்: கான்சரை குணப்படுத்துவானா ?

கனடாவில் வசிக்கும் வெறும் 17 வயதாகும் தமிழ் சிறுவன் ஒருவன் இன்று உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகிறார். அபிக்குமரன் அன்று அழைக்கப்படும் இச் சிறுவன் 17 வயதில் டாக்டர் பட்டத்தைப் பெற்றது மட்டுமல்லாது கான்சரை குணப்படுத்த ஒரு பொறிமுறையைக் கண்டறிந்துள்ளார். அதனை அவர் கனடாவில் உள்ள கான்சர் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பிவைக்க அங்கே பணி புரியும் மூத்த ஆராட்சியாளர் ஒருவர் தலையில் கைவைக்கும் அளவு அந்தப் பொறிமுறை அமைந்திருந்தது. சொல்லிப் புரியவைக்க முடியாத அந்தப் பொறிமுறையை விரிவாகப் பார்த்தால் அதன் மூலம் கான்சர் செல்களை அழித்து அந் நோயை முற்றாக குணப்படுத்த அது ஏதுவாக அமையும் என்பதனை அறிந்த மூத்த ஆய்வாளர் அபிக்குமரனை அழைத்து தனது ஆய்வகத்தில் வேலைசெய்ய அனுமதித்துள்ளார்.

இன்று கனடா முழுவதும் பேசப்படும் 17 வயது நிரம்பிய தமிழர் யார் என்று கேட்டால் இந்த அபிக்குமரன் தான். அவர் வளர்ந்துவரும் நிலையில் இன்னும் சில காலத்தில் அவர் உருவாக்கியுள்ள பொறிமுறையைக் கையாண்டால் கான்சரை முற்றாக அழிக்க முடியும் என மூத்த ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கான்சர் என்னும் உயிர் கொல்லி நோயை அழிக்கப் பிறந்த ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அபிக்குமரன் உள்ளார் என அவரை பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளனர் பல மூத்த ஆய்வாளர்கள். அச் சிறுவனிடம் புதைந்து கிடக்கும் அறிவும் ஆற்றலும் தம்மை பிரமிக்கவைப்பதாகவும் 30 ஆண்டுகளாக தாம் செய்திராத ஆராட்சிகளை அச் சிறுவன் வித்தியாசமாகவும் வேறு கோணத்திலும் சிந்தித்துச் செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.

அபிக்குமரனால் தமிழ் இனத்துக்கே பெருமை என்றால் அது மிகையாகாது.

source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பிரான்ஸில் முகத்திரைக்கு அபராதம்

நிகாப் என்னும் முழு முகத்திரை அணிந்த ஒரு பெண்

நிகாப் என்னும் முழு முகத்திரை அணிந்த ஒரு பெண்

பிரான்ஸில் முழுமையான முகத்திரை அணியக்கூடாது என்ற புதிய சட்டம் வந்த பின்னரும் அதனை தொடர்ந்து அணிந்த இரு பெண்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று அபராதம் விதித்துள்ளது.

முழுமையான முகத்திரைகளை அணியக்கூடாது என்ற தடை கடந்த ஏப்ரல் மாதத்தில் வந்த பின்னர் அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுவது இதுதான் முதல் தடவையாகும்.

விவாகரத்துப் பெற்றுக்கொண்டு தனியாக குழந்தையுடன் வசிக்கும் ஹைண்ட் அஹமாஸ் என்பவருக்கும், நஜத் நைட் அலி என்னும் மூன்று குழந்தைகளின் தாய்க்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், முகத்திரையை அணிவதற்கான தமது உரிமை ஐரோப்பிய சட்டங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக இவர்கள் இருவரும் மேல்முறையீடு செய்யவுள்ளார்கள்.

முகத்திரையை நீக்க மறுத்த காரணத்துக்காக ஹைண்ட் அஹமாஸ் மற்றும் நஜத் அலி ஆகிய இருவருக்கும் இன்று முறையே 120 மற்றும் 80 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்கான மேல்முறையீட்டு நடவடிக்கைகளுக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதுடன், ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகளுக்கான நீதிமன்றத்திலேயே இறுதி முடிவும் எடுக்கப்படும்.

முழுமையான முதத்திரையை அணிவது என்ற தனது முடிவு சுயமானது என்று கூறுகின்ற ஹைண்ட் அஹமாஸ் அவர்கள், முகத்திரைக்கான தடை கடந்த ஏப்ரலில் அமலுக்கு வந்த பின்னர், தனக்கு வங்கிகள், கடைகள் அல்லது பஸ்கள் என அனைத்து பொது இடங்களிலும் தடை விதிக்கப்பட்டதாகவும், குறைந்த பட்சம் ஒரு தடவைக்கு மேல் வார்த்தைகளாலும், உடல் ரீதியாகவும் தான் தாக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.

இஸ்லாமிய விதிகளின் படி முழுமையான முகத்திரை கட்டாயமானதல்ல என்பதுடன், இது குறித்த விவாதம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்துக்கிடையிலேயே மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.

இந்தத் தடை குறித்து பெரும் சர்ச்சை நிலவுகின்ற போதிலும், நூற்றுக்கும் குறைவான முகத்திரை அணிந்த பெண்களே இதற்காக வீதிகளில் தடுக்கப்பட்டதுடன், பத்துக்கும் குறைவான பெண்களே நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பெல்ஜியம், இத்தாலி, டென்மார்க், ஆஸ்திரியா, நெதர்லாந்து மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய இடங்களிலும் ஒன்றில் இதே போன்ற தடை ஏற்கனவே கொண்டு வரப்பட்டு விட்டது அல்லது கொண்டுவரப்படுகின்றது.

இன்றைய இந்த தீர்ப்பு இந்த அனைத்து நாடுகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும்.

source:BBC

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

ஒரு தமிழ் முஸ்லிம் நண்பரின் நாத்திக பயணம ்

ஆரம்பத்தை நோக்கி -தொடர் 1

ஆரம்பத்தை நோக்கி -தொடர் 2

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 3

ஆரம்பத்தை நோக்கி — தொடர் 4

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 5

ஆரம்பத்தை நோக்கி -தொடர் 6

ஆரம்பத்தை நோக்கி -தொடர் 7

ஆரம்பத்தை நோக்கி -தொடர் 8

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 9

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 10

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 11

ஆரம்பத்தை நோக்கி – தொடர் 12

ஆரம்பத்தை நோக்கி -தொடர் 13

source:

http://paraiyoasai.wordpress.com

source:

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

தயாநிதிக்கு ஆதரவாக ஆவணங்கள் அழிப்பு : அதி ர்ச்சி தகவல்

Tamil_News_large_335376.jpg

சென்னை: தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பெற்ற குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் தயாநிதிக்கு ஆதரவாக, ஆவணங்களை அழிக்கும் முயற்சி நடந்துவரும் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100க்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள், சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளர் சுப்ரமணியன் அறையை நேற்று முற்றுகையிட்டனர். முன்னாள் அமைச்சர் தயாநிதி மீது, சென்னை தொலைபேசியின், 323 இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. தயாநிதி வீட்டில் இருந்து, சன், "டிவி’ அலுவலகத்திற்கு, "ஆப்டிகல் பைபர் கேபிள்’ இணைப்பு மூலம், அதிநவீன தொடர்பு, முறைகேடாக வழங்கப்பட்டிருந்தது. கடந்த 10ம் தேதி, தயாநிதி வீட்டில் ரெய்டும் நடந்தது. இந்த இணைப்புகளை வழங்கியபோது, வேலுச்சாமி என்பவர், சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளராக இருந்தார். இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். இவரிடம், பி.எஸ்.என்.எல்., நிர்வாகம், இணைப்பு குறித்து விசாரணை நடத்தியது. விசாரணையில் அவர் தெரிவித்த தகவல்களை, சி.பி.ஐ., ரெய்டு நடத்தியபோது, சென்னை தொலைபேசி அதிகாரிகள், சி.பி.ஐ., அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதுதொடர்பான ஆவணங்களையும் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், ரெய்டு நடந்த பின், தயாநிதிக்கு ஆதரவாக, வேலுச்சாமி இந்த இணைப்பு குறித்த தகவல்களை சென்னை தொலைபேசி அலுவலகத்திற்கே சென்று, அழிக்கவும், திருத்தவும் முயற்சி எடுத்ததாக தெரிகிறது. இதற்கு, சென்னை தொலைபேசி அலுவலகத்தில் சில முக்கிய அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆவணங்களை அழிக்கும் முயற்சிக்கு, தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. "ஆவணங்களை திருத்தும் முயற்சிக்கு, சென்னை தொலைபேசி அதிகாரிகள் துணை போகக் கூடாது’ என்பதை வலியுறுத்தி, அச்சம்மேளனத்தைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள், தலைமை பொதுமேலாளர் அறையை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்று காலை முதல் நடந்த, இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் தலைமை பொதுமேலாளர் வேலுச்சாமி மற்றும் தயாநிதியின் நடவடிக்கையை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து, தேசிய தொலைத்தொடர்பு சம்மேளனத்தின் இணை பொதுச் செயலர் மதிவாணன் கூறும்போது, "முன்னாள் அமைச்சர் தயாநிதி மீது, சென்னை தொலைபேசியின் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் தலைமை பொது மேலாளர் வேலுச்சாமி, ஆவணங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது. ஓய்வு பெற்ற பின், அலுவலகத்திற்குள் முறைகேடாக நுழைவது மற்றும் ஆவணங்களை அழிப்பதை, சென்னை தொலைபேசி அதிகாரிகள் அனுமதிக்கக்கூடாது’ என்றார்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கழுத்தில் கட்டி கடாபியை இழுத்துவரும் கா ட்சிகள் அம்பலம் ! :

gad11111112222.jpg

லிபிய அதிபர் கடாபியை புரட்சிப்படையினர் கழுத்தில் கட்டி இழுத்துவரும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அவர் தங்கிருந்த நகருக்குள் இன்று காலை திடீரென நுழைந்த புரட்சிப்படையினர் அவர் இருக்கும் இடத்தை நோக்கி பாரிய தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். இதனை அடுத்து அங்கிருந்து வெளியே புறப்படவிருந்த வாகனங்களைக் குறிவைத்து துல்லியமான தாக்குதலை நேட்டோப் படையினர் மேற்கொண்டுள்ளனர். இத் தாக்குதலில் ஆளில்லா வேவு விமானங்கள் மற்றும் செய்மதிகளின் உதவியும் பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாக சண்டை நடந்த இடத்தில் இருந்து அவரால் தப்பிச் செல்ல முடியவில்லை. இதேவேளை நேட்டோப் படைகளின் தாக்குதலில் அவர் ஏற்கனவே காயமடைந்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து அவர் மறைந்திருந்த இடத்தில் புகுந்த புரட்சிப் படையினர் அவர் இருப்பிடத்தை நோக்கிச் சுட்டவாறு முன்னேறியுள்ளனர். இறுதியில் காயமடைந்த கடாபியை புரட்சிப் படையைச் சேர்ந்த ஒருவர் தலையில் சுட்டுள்ளார். அவர் உடலத்தை கட்டி இழுத்து வெளியே வந்து மோபைல் போனில் சிலர் படம் எடுத்துள்ளனர். அந்தக் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. அவர் ஒரு குற்றமிழைத்தவராக இருந்தால் கூட அவரை நீதி மன்றத்தில் நிறுத்தி அதற்கான தண்டனையைப் பெற்றுக்கொடுத்திருக்க முடியும். ஆனால் காட்டு மிராண்டித்தனமாக இவ்வாறு அவரைக் கொலைசெய்தால் அவருக்கும் புரட்சிப்படைகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ?

கடாபி கொல்லப்படவேண்டும் என்பதும் புரட்சிப்படையின் விருப்பமாக இருக்கிறதோ இல்லையோ அமெரிக்காவின் நீண்ட நாள் விருப்பமாக இருந்திருக்கிறது. மேற்குலகிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கடாபியை ஒழித்துக்கட்டிய சந்தோஷத்தில் அமெரிக்கா மிதக்கிறது. ஆனால் இனித்தான் அந் நாட்டில் பாரிய பின் விளைவுகள் ஏற்படவிருக்கிறது என்பதனை எவரும் உணர்ந்த பாடாக இல்லை. பிரான்ஸ் நாடு மட்டும் சுமார் 20,000 வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளை புரட்சிப்படைகளுக்கு வழங்கியுள்ளது. இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் அதில் ஒன்றைக்கூட அவர்கள் பாவிக்கவில்லை. ஒன்றில் விலைமட்டும் பல ஆயிரம் டாலர்களைத் தாண்டும். அவற்றை புரட்சிப் படைகளில் உள்ளவர்கள் சிலர் விற்றும் வருகின்றனர். இவை அல்கைடா மற்றும் தலபான் தீவிரவாதிகள் கைகளில் சென்று கிடைக்கவிருக்கிறது என்பதனையும் எவரும் மறுக்க முடியாது.

கடாபியின் படைகளை எதிர்த்துப் போராடவேண்டும் என்பதற்காக மேற்குலகம் பல நவீன ரக ஆயுதங்களை புரட்சிப் படையினருக்கு வழங்கியது. ஆனால் அவை அனைத்தும் தற்போது எங்கே என்ற கேள்விகள் எழுந்துள்ளது. கடாபியின் மறைவிற்குப் பின்னர் நடக்க விருக்கும் பாரிய அழிவை மக்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். கடாபி கொல்லப்பட்டது சரி என்றும் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தினால் கூட அவருக்கு தூக்குத் தண்டனை தான் கிடைத்திருக்கும் என மேற்குலகின் ஊதுகுழலான சர்வதேச தொலைக்காட்சிகள் தெரிவித்துவருகின்றன. அனால் இதே மேற்குலகம் தான் , தாம் பாரிய ஜனநாயக நாடு என்று தம்மைத் தாம்மே சொல்லியும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னைய செய்தி (இணைப்பு 1,2)

நீண்ட நாள் போருக்கு பின் லிபியாவில் உள்ள "சிர்டேவில்" நடந்த துப்பாக்கிச் சண்டையில் கடாபி சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடாபி 1969ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 42 ஆண்டுகளாக லிபியாவில் சர்வாதிகார ஆட்சி புரிந்துள்ளார். சமீபத்தில் இவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. அமெரிக்கா, சில ஐரோப்பிய நாடுகளின் மறைமுக ஆதரவோடு நடந்த இந்தப் புரட்சிப் படையினர் பல நகர்களைப் பிடித்தனர். தற்போது இறுதியாக அவர் தங்கியிருந்த நகர் புரட்சிப்படைகளால் இன்று முற்றுகைக்கு உள்ளாகியது. இருப்பினும் அவர் துப்பாக்கிச் சூடு காயங்களுடன் காணப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புரட்சிப் படையினர் அவரை உயிருடன் பிடித்து பின்னர் சுட்டுக்கொண்றதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. பி.பி.சி அல்ஜசீரா போன்ற சர்வதேச தொலைக்காட்சிகள் இவர் இறந்ததை தெரிவிக்க இழுத்தடிக்கின்ற நிலையில் சிரியா மற்றும் அரபு நாடுகளில் இருந்து வெளியாகும் தகவல்கள் அடிப்படியில் அவர் கொல்லப்பட்டார் என்பது உறுதியாகிறது. இதேவேளை புரட்சிப் படையினருக்கு ஆதரவாக நேட்டோப் படையினர் வான் தாக்குதலை நடத்தியதோடு ஏவுகணைத் தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized