Monthly Archives: செப்ரெம்பர் 2009

என் வயது 3 கோடி நிமிடங்கள்

நீங்கள் பிறந்து எத்தனை வருஷம்? உங்கள் வயசு என்ன என்று கேட்டால் நீங்கள் உடனே சொல்லி விடுவீர்கள். நீங்கள் பிறந்து எத்தனை வாரங்கள், எத்தனை நாட்கள், எத்தனை நிமிடங்கள் எத்தனை விநாடிகள் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? சற்று முழிப்பீர்கள். இத எப்படி கணக்கு பண்ணுவது என்று திகைக்கலாம்.

சரி, சென்னை யிலிருந்து மதுரை அல்லது கோயம்புத்தூர் எவ்வளவு தூரம் என்று கேட்டால் இத்தனை கிலோ மீட்டர் என்று சொல்லிவிடலாம். எத்தனை மைல் என்று கேட்டால் சற்று வயதானவர்கள் தங்களின் பழைய கால நினைவிலிருந்து சொல்லலாம்; எத்தனை கடல்மைல் என்று கேட்டால் எப்படி மாற்றிச் சொல்வது?
நீங்கள் பத்து வயசை எப்போது அடைந்தீர்கள் என்று கேட்டால் சொல்லலாம். எப்போது 25 ஆயிரம் நாளைக் கடந்தீர்கள் என்று கேட்டால் எப்படிச் சொல்வது? உங்கள் வயது எப்போது 2000 வாரங்களை அடைந்தது என்று எப்படிக் கணக்கிடுவது?

மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டுமின்றி இன்னும் பல இதைப் போன்ற கணக்குகளுக்கு விநாடிகளில் விடை தரும் இணைய தளம் ஒன்று உள்ளது. இதனைப் பார்த்து பலவகைகளில் நான் அதிசயித்துப் போனேன். இந்த தளத்தின் முகவரி http://www.timeanddate.com. இது குறித்த முழு தகவல்களையும் இங்கு காணலாம்.

நேரம் மற்றும் காலம் இவற்றின் முழு பரிமாணங்களைப் பலவகைகளில் அறிய இது உதவுகிறது. உலகின் எந்த இடத்திலிருந்தும் நேரத்தைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் காலத்தைக் கணக்கிடலாம். இதன் முகப்பு பக்கம் சென்றவுடன் உள்ள பிரிவுகள் நம்மை மலைக்கச் செய்யவில்லை. ஆனால் ஒவ்வொன்றிலும் நுழைந்து கணக்கீடுகளைப் பெறுகையில் இதன் வேகமும் துல்லியமும் நம்மை அதிசயப்பட வைக்கின்றன.

முதல் பிரிவில் உலகக் கடிகாரம் பல்வேறு மண்டல நேரப்படி காட்டப்படுகின்றன. நகரத்தின் பெயரை டைப் செய்து தேடச் சொன்னால், அது உலகின் எந்த நேர மண்டலத்தில், தற்போது எந்த நேரத்தில் உள்ளது என்று காட்டுகிறது.
இந்த மண்டல நேர அட்டவணையைக் கொண்டு ஒருவரைச் சந்திக்கும் நேரத்தினை வரையறை செய்திடலாம்.

சூரியன் மற்றும் நிலவு தோன்றும் காலத்தை ஒவ்வொரு நாடு வாக்கில் கணக்கிடுகிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உலகம் அல்லது நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஊர் உலகத்தின் மற்ற ஊர்களுடன் ஒப்பிடுகையில் பகலா, இரவா, அந்திப் பொழுதா என்று உலகப் படம் போட்டுக் காட்டுகிறது. சூரிய, சந்திர கிரகணங்கள் எங்கு, எப்போது, எப்படித் தோன்றும் என்று விளக்கங்களுடன் காட்டப்படுகிறது.

பன்னாடுகளுக்கும் டயல் செய்திட ஐ.எஸ்.டி.டி. கோட் எண்கள் பட்டியல் கிடைக்கிறது. ஒரு ஊருக்கும் இன்னொரு ஊருக்கும் உள்ள தூரம் என்ன என்று காட்டுகிறது. சென்னைக்கும் மதுரைக்கும் 424 கிமீ, 263 மைல், 229 கடல் மைல் எனத் தருவதுடன், உலக வரைபடத்தில் இரண்டு நகரங்களின் இடத்தையும் குறித்து அந்த நேரத்தில் அங்கு பகலா இரவா என்றும் காட்டுகிறது. சென்னை மீனம்பாக்கத்தில் பதிவான வெப்ப நிலை, அடுத்த 48 மணி நேரத்திற்கு மட்டுமின்றி அடுத்த வாரம் முழுவதும் வானிலை எப்படி இருக்கும் எனத் துல்லிதமாகக் காட்டுகிறது. சூரிய உதயம் வட கிழக்கில் 79 டிகிரி சாய்வாக காலை 5.57க்கு இருக்கும் என்று கணக்கிட்டுச் சொல்கிறது. இந்த தகவல்கள் அனைத்தும் நாசாவின் சாட்டலைட்டிலிருந்து பெறப்பட்டு தரப்படுகின்றன.

சென்னையிலிருந்து மதுரை மட்டுமல்ல, உலகின் எந்த நகரத்திற்குமான தூரத்தைப் பெறலாம். உங்கள் கம்ப்யூட்டர் மற்றும் பிளாக்குகளில் பதிந்து வைக்க டிஜிட்டல் கடிகாரத்திற்கான பைலை டவுண்லோட் செய்து இணைக்கலாம்.
எந்த ஆண்டின் எந்த மாதத்திற்குமான காலண்டரை அந்த ஊருக்கேற்ப பெறலாம்.

பிறந்த நாளைக் கொண்டு உங்களின் வயதினைப் பெறும் வசதிதான் நம்மை அசத்துகிறது. அடுத்த ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட நாளுக்கு இன்னும் எத்தனை நாள், மாதம், வாரம், மணி எனவும் கணக்கிட்டுச் சொல்கிறது. மேலே சொன்ன தகவல்களுடன் இன்னும் பல தகவல்களை இந்த தளம் சென்று பார்க்கலாம். தங்கள் அலுவல்களைத் திட்டமிடுபவர்கள் மிகச் சிறப்பாகவும் துல்லியமாகவும் திட்டமிட இந்த தளத்தை அருமையாகப் பயன்படுத்தலாம்
source:dinamalar


www.thamilislam.co.cc

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இறப்பு சான்றிதழ் தர இலங்கை தயக்கம்: விடுதலைப்புலிகள் தளபதி பொட்டு அம்மான், சூசை உயிரோடு இருப்பதாக தகவல்;

கொழும்பு, செப். 7-

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் உளவுப்படை தலைவர் பொட்டு அம்மான், கடற்புலிகள் தலைவர் சூசை ஆகியோரையும் கொன்று விட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது.

இதில் பிரபாகரன் உடலை காட்டினார்கள். பொட்டு அம்மான், சூசை உடலை காட்டவில்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பிரபாகரன், பொட்டு அம்மான், ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இருந்தனர்.

எனவே அவர்கள் இறப்பு சான்றிதழை தருமாறு இந்தியா இலங்கையிடம் கேட்டது. ஆனால் இதுவரை இறப்பு சான்றிதழை வழங்கவில்லை.

இலங்கை அரசின் அட்டர்னி ஜெனரல் துறை தான் இந்த சான்றிதழை வழங்க வேண்டும். ஆனால் அந்த துறை சான்றிதழை கொடுக்க மறுத்து வருகிறது.

ஏன் என்றால் பிரபாகரன் உடலை மட்டும்தான் இலங்கை அரசு மீட்டு உள்ளது. பொட்டு அம்மான் உடலை காட்டவில்லை. எனவே பொட்டு அம்மான் உயிரோடு இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

மே 17-ந்தேதி இறுதி சண்டை நடந்த போது பொட்டு அம்மானும், சூசையும் நந்தி கடல் வழியாக, தப்பி விட்டதாகவும், அவர்கள் உயிரோடு இருப்பதாகவும் இலங்கை அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவேதான் அட்டர்னி ஜெனரல் துறை இறப்பு சான்றிதழை வழங்க மறுத்து வருகிறது. இறப்பு சான்றிதழை வழங்கிய பிறகு பொட்டு அம்மான் உயிரோடு வந்து விட்டால் அது சட்ட சிக்கலை ஏற்படுத்துவதுடன் இலங்கைக்கு அவமான மாகவும் அமைந்து விடும் எனவே தான் தயக்கம் காட்டி வருகின்றனர்

1 பின்னூட்டம்

Filed under Uncategorized

தமிழீழப் பிரச்சனையில் இலங்கைக்கு முதல் அ டி

ஜி.எஸ்.பி வணிக சலுகையை இலங்கை இழக்கவுள்ளது

இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்காக ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் வரிச் சலுகையை இலங்கை இழக்கவுள்ளது.

இலங்கையில் ஏற்றுமதிகளில் மிக முக்கியமானது ஆடை ஏற்றுமதியாகும். இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வரிச்சலுகை அளித்து வருகிறது. ஆனால் இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்த ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை அடுத்து இச்சலுகையை ஐ.ஒ நிறுத்த முடிவு செய்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி மற்றும் சர்வதேச வணிக அமைச்சு, செயலாளர் ரனுக்கே கூறியுள்ளார்.

இந்த அறிக்கை ஒரு வாரத்துக்கு முன்னரே கிடைத்ததாகவும், அதில் கடந்த 25 வருட போரில் இலங்கையரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் சித்திரவதைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த அறிக்கை மிக மோசமாக உள்ளதாகவும் ஜி.எஸ்.பி வரி இனி கிடைக்காது எனவும் அவர் மேலும் கூறினார்.

ஆனால் இந்த அறிக்கை பற்றிய கருத்துக்களை வெளியிட இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் பெர்னாட் சவகே மறுத்து விட்டார். இது ஆரம்ப கட்ட அறிக்கை என்றும், இது இலங்கை அரசுக்கு அனுப்பப்பட்டு அவர்களின் மறுமொழிகளையும் சேர்த்து இறுதி அறிக்கை விரைவில் வெளிவிடப்படும் என்று சவகே கூறினார்.

இவ்வாறு வரி சலுகை இழக்கப்படுமிடத்து வருடத்துக்கு 150 மில்லியன் டொலர்கள் இலங்கை அரசுக்கு நட்டமேற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதி அறிக்கை ஒக்ரோபர் மாதத்தில் வெளிவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த முடிவென்றாலும் அது மேல் முறையீடு செய்யப்ப்ட முடியாதது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்:அதிர்வு

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized