Monthly Archives: ஜனவரி 2008

இஸ்லாம் இணணயப் பேரவை பயந்து விட்டதா?

மௌனமாக இருக்கும் இஸ்லாம் இணையப் பேரவை(iiponline)

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

இஸ்லாமிய இணையப் பேரவை

20/01/2008 அன்று கிறிஸ்தவத்தளங்கள்,உண்மைஅடியான் வலைமலர் ஆகியவற்றுக்கு ஒரு நேரடி விவாத அழைப்பிதழை தங்கள் தளத்தில் வெளியிட்டு 25/01/2008 குள் பதில் தரவேண்டும் என்று கூறி இருந்தது(.http://www.iiponline.org)

அதற்கு பதில் அளித்த சகோதரர் உமர் மற்றும் நாமும் நேரடி விவாதத்துக்கு நாங்கள் வரமுடியாது

.உங்களிடம் உண்மை இருந்தால் எழுத்து விவாதத்துக்கு வாருங்கள் என்று பகிரங்க அறிவிப்பை 21/01/2008 அன்று வெளியிட்டோம். ( http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_8588.html )

ஆனால் இன்று

29/01/2008 வரை எந்த விதமான பதிலையும் இஸ்லாம் இணையப் பேரவை தரவில்லை.எழுத்து வடிவ விவாதத்துக்கு வர விருப்பம் இல்லை என்றாவது பதில் அளித்து இருக்கலாம்.ஆனால் அதுவும் இல்லை.

பதில் சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கிறோம்

http://unmaiadiyann.blogspot.com/2008/01/iiponline.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இணையப் பேரவை, இஸ்லாம், கிறிஸ்தவம், குரான், விவாதம்

அல்லாஹ் அருளிய வேதம் முழுமையானதா?

பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?-உமரின் மொழிபெயர்ப்பு கட்டுரை

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

                

அல்லாஹ் அருளிய வேதம் முழுமையானதா? என்ற கேள்விக்கு இந்த கட்டுரையின் ஆசிரியர் சொல்லும் பதில் "இல்லை"  என்பதே.தொடர்ந்து படிப்போமா—-தெய்வமகன்

 

பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?

ஆசிரியர்: சாமுவேல் கிரீன்

COMPARING THE BIBLE AND THE QUR'AN
(How to do it Accurately)

By Samuel Green

தமிழாக்கம்
( ஆங்கிலத்தில் இக்கட்டுரையை படிக்க
இங்கு சொடுக்கவும்)

கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் சில விவரங்களைப் பற்றி விவாதிக்கும் போது, சில நேரங்களில் பைபிளையும் குர்ஆனையும் ஒன்றையொன்று ஒப்பிடுகிறார்கள். அவர்கள் பெரும்பான்மையாக கீழ் கண்ட விதங்களில் (தலைப்புக்களில்) அவைகளை ஒப்பிடுகிறார்கள்.

வேதங்கள் எப்படி பாதுகாக்கப்பட்டது (Preservation of text )

வேதங்களின் அதிகாரபூர்வமான தொகுப்புக்கள் (Formation of canon )

இயேசு, பெண்கள், போர்கள் போன்ற தலைப்புகள் குறித்து வேதங்கள் என்ன போதிக்கின்றன (Teaching about Jesus, women, warfare, etc. )

விஞ்ஞான பிழையின்மை (அ) ஆதாரம் (Scientific accuracy )

முரண்பாடுகள் (Contradictions)

நானும் இப்படிப்பட்ட ஒப்பிட்டு முறையைத் தான் கடந்த காலத்தில் செய்துவந்தேன். உண்மையில் இது ஒரு பிழையுள்ள மற்றும் நம்மை தவறான வழியில் நடத்தக்கூடிய "ஒரு ஒப்பிட்டு முறையாகும்". இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

காரணம் 1: பைபிள் மற்றும் குர்‍ஆன் வசனங்களின் சூழ்நிலை (Reason 1. The Context of the Bible and Qur'an)

குர்ஆன் முகமதுவின் வாழ்க்கையைச் சுற்றியுள்ள விவரங்களையும் மற்றும் வெளிப்பாடுகளையும் சொல்கிறது. முகமது, தன் வாழ்க்கையில் நிகழ்ந்த பல சூழ்நிலைகளுக்கு பதிலாக குர்‍ஆன் வசனங்களைச் சொன்னார் அல்லது அவருக்கு வசனங்கள் வெளிப்பட்டது. ஆனால், அந்த சூழ்நிலைகள் (அ) சந்தர்பங்கள் என்ன? போன்ற விவரங்கள் குர்‍ஆனில் எழுதப்படவில்லை. அதாவது, குர்‍ஆன் தன் சொந்த வசனங்கள் வெளிப்பட்ட சூழ்நிலையையும்(Context), கால வரிசை விவரங்களையும்(Chronology) கொண்டு இருக்கவில்லை. குர்‍ஆனை சரியாக புரிந்துக்கொள்வதற்கு, அதன் வசனங்கள் வெளிப்பட்ட சூழ்நிலையையும்(Context), காலவரிசை விவரங்களையும்(Chronology) தெரிந்துக்கொள்வது மிக மிக அவசியமாக உள்ளது. ஆனால், இந்த சூழ்நிலையையும், காலவரிசை முறையையும் நாம் தெரிந்துக்கொள்ளவேண்டுமானால், குர்‍ஆனுக்கு வெளியே உள்ள "இஸ்லாமிய பாரம்பரிய" நூல்களாகிய "ஹதீஸ்களையும், சீராவையும் (Hadith or Sira literature)" நாம் படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட நூல்கள் நமக்கு குர்‍ஆன் வசனங்கள் வெளிப்பட்ட சூழ்நிலையை சொல்கின்றன. இஸ்லாமிய அறிஞர் Habib Ur Rahman Azami (ஹபீப் உர் ரஹ்மான் அஜாமி) "குர்‍ஆன் ஹதீஸ்கள் மீதும் சீராவின் மீதும் ஆதாரப்பட்டுள்ளது " என்று மிகவும் தெளிவாகச் சொல்லியுள்ளார்.

ஹதீஸ்கள் பயனற்றவை என்றும், அதிகார பூர்வமற்றது என்றும் அவைகளை ஒதுக்கிவிட்டால், குர்‍ஆனில் உள்ள பெரும்பான்மையான வசனங்களின் பொருளும், அவைகளை புரிந்துக்கொள்வதும் முடியாமல் போய்விடும். (Habib Ur Rahman Azami, The Sunnah in Islam, pp. 29-31.)

(I)t is almost impossible to understand or explain the meaning of a large number of Qur'anic verses if the Traditions are rejected as useless and inauthentic. (Habib Ur Rahman Azami, The Sunnah in Islam, pp. 29-31.)

ஆனால், பைபிள் வித்தியாசமானது. பைபிள் தன் வசனங்களை புரிந்துக்கொள்ள தேவையான சூழ்நிலையையும்(Context), காலவரிசை விவரங்களையும்(Chronology) தன்னுள் கொண்டுள்ளது. பைபிளின் வெளிப்பாடுகள் உலகம் உண்டானது எப்படி என்ற விவரங்களோடு ஆரம்பிக்கிறது, அதன் பிறகு நடந்த நிகழ்வுகளை சொல்லிக்கொண்டு வந்து கடைசியில், உயிர்த்தெழுதல் காலத்தைப் பற்றி சொல்லி விட்டு, சரியாக முடிவடைகிறது. பைபிள் பல கட்டளைகளை கொடுக்கும் போது அல்லது நற்செய்தியை அறிவிக்கும் போது, அவ்வசனங்கள் எந்த சூழ்நிலையில்(Context) வெளிப்பட்டது என்ற விவரங்களை மிகவும் தெளிவாகச் சொல்கிறது. ஆகவே, நீங்கள் பைபிளை புரிந்துக்கொள்ள வேண்டுமானால், உங்களுக்கு தேவை பைபிள் மட்டும் தான்.

இறைவனுடைய வார்த்தைகள் எப்படி இருக்கவேண்டுமோ அது போல, பைபிள் தன் சுயதேவையை தானே பூர்த்திசெய்துக்கொள்ளும் தகுதியுடையதாக உள்ளது. எனவே, பைபிளை குர்‍ஆனோடு மட்டும் ஒப்பிட்டு பார்ப்பது பிழையுள்ளதாகும் மற்றும் அது தவறான முடிவுக்கு கொண்டுபோகும். (The Bible is self-sufficient, as the word of God should be. Therefore to compare the Bible to the Qur'an alone is misleading and inaccurate.)

காரணம் 2: பழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் (Practices and Beliefs)

இஸ்லாமின் பெரும்பான்மையான அடிப்படை கோட்பாடுகள், நம்பிக்கைகள் பற்றிய விவரங்கள் குர்ஆனில் இல்லை.

"முகமது சொன்னது, செய்தது" என்று சொல்லக்கூடிய "சுன்னா-Sunnah" என்பது குர்‍ஆனுக்கு துணையாக உள்ள அடுத்தபடியான நூல்கள் ஆகும். உண்மையைச் சொல்லவேண்டுமானால் சில சந்தர்பங்களில் இந்த "சுன்னா" குர்‍ஆனை விட அதிக முக்கியத்துவம் பெறுகிறது அல்லது "சுன்னா" வின் கை குர்‍ஆனைவிட ஒரு படி மேலே நிற்கிறது.

உதாரணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டை இங்கு சொல்லட்டும் , அதாவது குர்‍ஆன் தினமும் மூன்று முறை நமாஜ் செய்யவேண்டும்(24:58 and 11:114) என்று சொல்லும் போது, சுன்னா "ஐந்து முறை" தினமும் நமாஜ் செய்யவேண்டும் என்று சொல்கிறது (முஸ்லீம்கள் இன்று பின்பற்றுவது "சுன்னா" நிர்ணயித்த தினமும் 5 முறை நமாஜ் செய்வதைத்தான், குர்‍ஆன் சொல்வதை அல்ல‌ ).

இன்னும் சில சந்தர்பங்களில் இஸ்லாமின் ஆரம்ப கால பழக்கவழக்கங்களை பார்க்கும் போது, சில பழக்கங்கள், "சுன்னா" விற்கு முரண்பட்டவையாக கூட இருந்தது. உண்மையைச் சொல்லவேண்டுமானால், குர்‍ஆன் வெளிப்படையாக எல்லா கட்டளைகளையும் சொல்லவில்லை , இஸ்லாமின் அடிப்படை கட்டளைகளையாவது குர்‍ஆன் முழுமையாக சொல்வதில்லை. அதாவது, குர்‍ஆன் "நமாஜ் (தொழுகை)" செய்யவேண்டும் என்று கட்டளையிடுகிறது, ஆனால், எப்படி செய்யவேண்டும்? என்று சொல்வதில்லை. எப்படி நமாஜ் செய்யவேண்டும்? என்ற வழிமுறை முழுக்க முழுக்க "சுன்னா"வின் மீது ஆதாரப்பட்டுள்ளது. (Cyril Glass鬠"Sunnah", The Concise Encyclopedia of Islam, pp. 381-382.)

குர்ஆன் தினமும் தொழவேண்டிய தொழுகையாகிய "நமாஜ்" என்ற சலாவை(Salah) கடமையாக்கி அதை கட்டளையிட்டுள்ளது, மற்றும் அதை எப்படி செய்யவேண்டும் என்ற சில விவரங்களை (like Qiyam, Ruku`, Sujud and Qira'ah) குர்ஆன் சொல்கிறது. ஆனால், நமாஜை சரியான முறையில் எப்படி செய்யவேண்டும் என்பதையும், இந்த நமாஜ் சம்மந்தப்பட்ட இதர செயல்பாடுகள் எந்த வரிசையில் செய்யவேண்டும் என்பதைப் பற்றிய விவரங்கள் குர்ஆனில் சொல்லப்படவில்லை. அதே போல, ஹஜ்(Hajj) என்னப்பட்ட "மக்காவிற்குச் செல்லும் புனித யாத்திரை" என்பது ஒரு மதசம்மந்தப்பட்ட கடமை என்று குர்ஆன் சொல்கிறது. ஆனால், ஹஜ் என்பதை எந்த ஒழுங்கில்(Method) செய்யவேண்டும்? ஹஜ் செய்யும் போது என்னென்ன சாம்பிரதாயங்களை(Formalities) எப்படி செய்யவேண்டும்? போன்ற விவரங்களை குர்ஆன் விவரிப்பதில்லை. ஹஜ்ஜை எப்படி செய்யவேண்டும் என்று சரியான வழிமுறையை நபியே செய்துகாட்டியுள்ளார். (Habib Ur Rahman Azami, pp. 10-11.)

குர்ஆன் மற்றும் சுன்னா(Sunnah) என்ற இரண்டின் உதவியுடன் மட்டுமே இஸ்லாம் சட்டம்(Islamic Shariah) முழுமைபெறும். (Habib Ur Rahman Azami, p. 5.)

எப்படி தொழவேண்டும்? எப்போது தொழவேண்டும்? மற்றும் என்ன சொல்லி தொழவேண்டும்? ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது அதை எப்படி செய்யவேண்டும்? சுன்னத்து(circumcision) எப்படி செய்யவேண்டும்? போன்ற, இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் பெரும்பான்மையாக முகமதுவின் செயல்பாடுகளிலிருந்து(சுன்னா) வருகிறது . இஸ்லாமுக்கு சுன்னா(Sunnah) என்பது மிக முக்கியமானது, ஆனால், சுன்னா என்பது குர்ஆனிலிருந்து வரவில்லை, அதற்கு பதிலாக அது ஹதீஸ்களிலிருந்தும், சீராவிலிருந்தும் வருகிறது. மறுபடியும் நாம் கவனிக்கும் பொது, பைபிள் கோட்பாடுகள் இப்படி இல்லை. ஒரு கிறிஸ்தவனுக்கு தேவையான எல்லாவற்றையும் பைபிள் தன்னகத்தே கொண்டுள்ளது. இறைவன் நம்மை இரட்சிப்பதற்காக என்ன செய்தார்? மற்றும் இதனால் தன் பெயர் எப்படி கனப்படுத்தப்படும் மற்றும் நாம் எப்படி வாழவேண்டும்? போன்றவற்றை பைபிள் தெளிவாகச் சொல்கிறது. பைபிள் நம்முடைய ஞானத்திற்கும் விடுதலைக்கும் ஆதாரமாக உள்ளது. எனவே, பைபிளை குர்‍ஆனோடு மட்டும் ஒப்பிட்டு பார்ப்பது பிழையுள்ளதாகும் (inaccurate) மற்றும் அது தவறான முடிவுக்கு(misleading) கொண்டுபோகும்.

மிகச் சரியான ஒப்பிடும் முறை ( A More Accurate Comparison )

இப்போது ஒன்று மட்டும் தெளிவாக புரிந்துவிட்டது, அதாவது பைபிளை குர்ஆனோடு ஒப்பிடுவது என்பது சரியான ஒப்பிடுதல் அல்ல. ஏனென்றால், பைபிள் கிறிஸ்தவத்தின் அஸ்திபாரம் ஆகும். ஆனால், குர்ஆன் இஸ்லாமின் அஸ்திபாரம் அல்ல. மாறாக, குர்ஆன், ஹதீஸ்கள், மற்றும் சீரா இவை மூன்றும் இஸ்லாமின் அஸ்திபாரமாக உள்ளது. நீங்கள் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய புத்தகங்களை நேர்மையாகவும், சரியான முறையிலும் ஒப்பிட்டு பார்க்கவேண்டும் என்று விரும்பினால், நீங்கள் இவ்விரு மார்க்கங்களின் முக்கியமான புத்தகங்களை ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும். ( If you want an honest and accurate comparison between the books of Christianity and Islam then you must compare the essential books of both religions.)

ஹதீஸ்கள் பற்றிய சில விவரங்கள்: "ஹதீஸ் – hadith" என்ற வார்த்தையின் அர்த்தம் "ஒரு பொருளின் விவரம் அல்லது செய்தி (an account or news about something) " என்பதாகும். ஒரு ஹதீஸின் அளவு ஒரு வாக்கியமாகவோ அல்லது ஒரு பக்கம் அளவிற்கோ இருக்கும். இஸ்லாமைப் பொருத்தவரை முகமது என்ன சொன்னாரோ மற்றும் அவர் என்ன செய்தாரோ அது தான் ஹதீஸ்களின் முக்கிய கருப்பொருளாக உள்ளது. இதைத் தான் "சுன்னா" என்றுச் சொல்வார்கள், ஆக, ஹதீஸ்களில் இருப்பது "சுன்னா" ஆகும். ஹதீஸ்கள் பலவகையில் மிகப்பெரிய தொகுப்புகளாக உள்ளது. முக்கியமான ஹதீஸ் தொகுப்புக்கள் என்ன என்று பேராசிரியர். மசுத்-உல்-ஹசன் அவர்கள் விளக்குகிறார்.

முசன்னப் ("Musannaf"[1]) முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட ஹதீஸ்களின் தொகுப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அல்-புகாரி (கி.பி. 870 ) [7658 ஹதீஸ்களின் தொகுப்பு]

முஸ்லீம் (கி.பி. 875 ) [7748 ஹதீஸ்களின் தொகுப்பு]

அபு தாவுத் (கி.பி. 875 ) [5276 ஹதீஸ்களின் தொகுப்பு]

அல்-திர்மிதி (கி.பி. 892) [4415 ஹதீஸ்களின் தொகுப்பு]

அல்-நசய் (கி.பி. 915) [5776 ஹதீஸ்களின் தொகுப்பு]

இபின் மஜா (கி.பி. 886) [4485 ஹதீஸ்களின் தொகுப்பு]

… அல்-புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ் தொகுப்புக்கள் மிகவும் உயர்ந்ததாகவும் உண்மையானதாகவும் மதிக்கப்படுகிறது, எனவே இவை இரண்டும் "அல்-சஹிஹை – Al-Sahihain" ஆதாரப்பூர்வமான மற்றும் அதிகாரபூர்வமான ஹதீஸ்கள் என்று அழைக்கப்படுகிறது.

Al-Bukhari
The collection of hadith  by Imam Bukhari. 9 volumes in the  English/Arabic translation.
Muslim
The collection of hadith  by Imam Muslim. 8 volumes in the  English/Arabic translation.

மஸ்நத் – "Musnad"[2] முறைப்படி மிகவும் புகழ்பெற்ற ஹதீஸ் "அஹமத் இபின் ஹன்பல் " (கி.பி. 855 )தொகுத்த ஹதீஸ் தொகுப்பாகும்.

ஷியா முஸ்லீம் பிரிவினரின் ஹதீஸ் தொகுப்புக்களில், முகமது நபி என்ன சொன்னாரோ அல்லது செய்தாரோ போன்ற செய்திகளை மட்டும் அது உள்ளடக்கிக் கொண்டு இருப்பதோடு மட்டுமல்லாமல், ஷியா இமாம்கள்(அறிஞர்கள்)சொன்னதும் செய்ததும் அது உள்ளடக்கியுள்ளது.

ஷியா முஸ்லீம் பிரிவினரின் ஹதீஸ் தொகுப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முஹம்மத் இபின் யாகுப் அல்-குல்லுனி (கி.பி. 939)

முஹம்மத் அல்-ஹும்மி (கி.பி. 991)

தஹிர் அல்-ஷரிப் அல்-முர்தஜா (கி.பி. 1004)

முஹம்மத் அல்-துசி (கி.பி. 1067) (Prof. Masud-ul-Hasan, History of Islam, vol. 1, p. 613.)

"முவட்டா மாலிக் – Muwatta of Malik" என்ற பெயரில் ஒரு முக்கியமான ஹதீஸ் தொகுப்பும் உள்ளது.

சீராவைப் பற்றிய சில விவரங்களைத் தெரிந்துக்கொள்ளலாம். "சீரா"க்கள் என்பது முகமதுவின் வாழ்க்கையைப் பற்றிய சரிதைகள் ஆகும். இவைகள் முகமதுவின் வாழ்க்கையின் சூழ்நிலையையும், கால வரிசை முறையையும் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையும், கால வரிசை முறையும் தான் குர்ஆன் வசனங்களின் சூழ்நிலையும்(Context), காலவரிசையு(Chronology)மாக இருக்கிறது. பழமைவாய்ந்த இரண்டு சீராக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

முஹம்மத் இபின் இஷாக் (கி.பி. 773) Via இபின் ஹிஸம் (கி.பி. 840) recension, சீரத் ரசூல் அல்லாஹ் (English translation 798 pages[3].)

முஹம்மத் இபின் சைத் (கி.பி. 852), கிதாப் அல்-தபாகத் அல்-கபீர் (English translation, 1097 pages[4].)

( Muhammad ibn Ishaq (d. 773 C.E.) via ibn Hisham's (d. 840 C.E.) recension, Sirat Rasul Allah. (English translation 798 pages[3].)

Muhammad ibn Sa'd (d. 852 C.E.), Kitab al-Tabaqat al-Kabir, (English translation, 1097 pages[4].))

Ibn Ishaq
Ibn Ishaq, Sirat Rasul Allah  translated as 'The Life of Muhammad'
Ibn Sa'd
Ibn Sa'ad, Kitab Al-Tabaqat Al-Kabir

இக்கட்டுரையை படிக்கும் நீங்கள், இஸ்லாம் மார்க்கத்திற்கு குர்ஆன் மட்டுமல்லாமல், இன்னும் பல முக்கியமான புத்தகங்கள் இருப்பதை கவனிக்கமுடியும். இந்த இதர புத்தகங்களின் அளவை பார்க்கும் போது அவைகள் குர்ஆனை விட மிகவும் பெரியதாக காணப்படுகிறது.

புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ்களில் உள்ள வசனங்களின் எண்ணிக்கை குர்ஆனின் மொத்த வசனங்களாகிய 6236 வசனங்களை விட அதிகமாக உள்ளது. ஒரு முன்னாள் இஸ்லாமிய அறிஞர் ஒரு முறை எனக்கு கீழ்கண்டவாறுச் சொன்னார், அதாவது, "இஸ்லாமில் 10% குர்ஆன் மற்றும் 90% ஹதீஸ்கள் (ஹதீஸ் மற்றும் சீரா)" என்றார். குர் ஆன் என்பது ஒரு "வரை படத்தின்" நான்கு பக்கங்களிலும் போடப்பட்டு இருக்கும் சட்டங்கள்(Frame) போன்றது. குர்ஆன் சில எல்லைகளை குறித்துக் கொடுக்கும், ஆனால் அந்த படத்தில் வரையப்பட்டிருக்கும் விவரங்கள் அனைத்தும் ஹதீஸ்கள் மூலமாக கொடுக்கப்படுகிறது. ( The Quran is like the frame of a picture. It sets some boundaries, but the details of the picture are provided by the traditions. )

சில செயல்முறை விளக்கங்கள்: (Some Application)

1. பைபிளை குர்ஆனோடு ஒப்பிடும் இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் தலைவர்கள் நேர்மையுள்ளவர்களாக நடந்துக்கொண்டு மக்களை ஏமாற்றுவதை இனி நிறுத்திவிடவேண்டும். அவர்கள் இனி "குர்ஆன் தனக்குள் தானே முழுமையானது அல்ல" என்று மக்களுக்கு போதிக்கவேண்டும். இனி பைபிளோடு குர்ஆனை மட்டும் ஒப்பிடுவதோடு மட்டுமல்லாமல், இஸ்லாமில் உள்ள முக்கியமானதாக கருதப்படும் இதர அனைத்து புத்தகங்களையும் ஒப்பிடுங்கள். ஒரு இஸ்லாமிய அறிஞர் இப்படி நேர்மையற்ற முறையில் பைபிளோடு குர்ஆனை மட்டும் ஒப்பிட்டு வாதாடுவதை, இக்கட்டுரையை படிக்கும் நீங்கள் கவனிக்க நேர்ந்தால், உடனே தைரியம் கொண்டு அவர் செய்துக்கொண்டு இருக்கும் இந்த தவறை அவருக்கு எடுத்துக்கூறுங்கள்.

2. "பைபிளோடு குர்ஆனை மட்டும் ஒப்பிடுவது சரியானது" தான் என்று கிறிஸ்தவர்கள் நினைத்துக்கொண்டு ஏமாந்துப் போகாதீர்கள். இதைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். கிறிஸ்தவம் என்பது பைபிள் ஒன்றின் மீது மட்டும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இஸ்லாம் குர்ஆன் மீது மட்டுமல்ல, அதோடு கூட ஹதீஸ்கள் மீதும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஒரு முஸ்லீம் "இரண்டு புத்தகங்களையும்" ஒப்பிடுங்கள் என்று உங்களிடம் கூறினால், உடனே நீங்கள் "நேர்மையான முறையில்" ஒப்பிடவேண்டுமானால், குர்ஆனோடு கூட ஹதீஸ்களையும், சீராவையும் பைபிளோடு ஒப்பிடவேண்டும் என்று அழுத்திச்சொல்லுங்கள்.

3. ஒரு வேளை இக்கட்டுரையை படிக்கும் நீங்கள் ஒரு "கிறிஸ்தவரல்லாதவராகவோ" அல்லது ஒரு "முஸ்லீமாகவோ" இருப்பீர்களானால்,"உண்மையில் குர்ஆனும் பைபிளும் ஒரே வகையான புத்தகங்கள் இல்லை" என்பதை நினைவில் கொள்ளவும். குர்ஆன் என்ன வசனங்கள் சொல்கிறதோ அந்த வசனங்கள் வெளிப்பட்ட சந்தர்ப்பத்தை(சூழ்நிலையை – Context )அது சொல்வதில்லை அல்லது இஸ்லாமில் பின்பற்றப்படும் பல கோட்பாடுகளைப் பற்றிய சூழ்நிலையை குர்ஆன் சொல்வதில்லை. இவைகள் வேறு புத்தகங்களிலிருந்து வருகிறது. ஆனால், ஒரு கிறிஸ்தவனுக்கு தேவையான நம்பிக்கை மற்றும் அவன் பின்பற்றவேண்டிய எல்லா கோட்பாடுகளையும் பைபிள் தன்னிடம் கொண்டுள்ளது.

4. நாங்கள் "இயேசுவை உங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று உங்களுக்கு அழைப்பு விடுக்கும் போது, பைபிள் ஒன்றை மட்டும் நீங்கள் நம்பினால் போதும் என்றுச் சொல்கிறோம்.

5. ஒரு சாதாரண கிறிஸ்தவன் "பைபிள் முழுவதையும் படித்து அதன் கோட்பாடுகளை நன்றாக புரிந்துக்கொள்ள" அவனால் முடியும், ஆனால், ஒரு சாதாரண முஸ்லீம் குர்ஆனையும் மற்றும் இஸ்லாமில் உள்ள எல்லா புத்தகங்களையும் படித்து புரிந்துக்கொள்வது என்பது மிகவும் கடினமான வேலையாகும். ஏனென்றால், இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் அடங்கிய புத்தகங்கள் அதிக அளவில் உள்ளது, மட்டுமல்லாமல் அவைகள் எல்லாம் இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமானால், முகமதுவின் வாழ்க்கையை முதன் முதலில் சரிதையாக எழுதிய, இபின் இஷாக் அவர்களின் புத்தகமாகிய "சூரத் ரசூல் அல்லா – Ibn Ishaq's, Sirat Rasul Allah" என்ற புத்தகத்தை பெரும்பான்மையான முஸ்லீம்கள் படிப்பதில்லை.

பின் குறிப்புகள் :

[1] Where the hadiths are ordered according to topic.
[2] Where the hadiths are ordered according to narrator.
[3] Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998.
[4] Ibn Sa'ad, Kitab Al-Tabaqat Al-Kabir, (tr. S Moinul Haq) New Delhi: Kitab Bhavan, 2 volumes, no date.

References

Habib Ur Rahman Azami, The Sunnah in Islam, U.K.: UK Islamic Academy, 1995.
Prof. Masud-ul-Hasan, History of Islam, Delhi: Adam Publishers & Distributors, 2002.
Cyril Glass鬠The Concise Encyclopedia of Islam, San Francisco: Harper & Row, 1989.

Copyright © 2007 Samuel Green.

மூலம்: http://answering-islam.org/Green/compare.htm

ஆசிரியர் சாமுவேல் கிரீன் அவர்களோடு தொடர்பு கொள்ள: மெயில் விலாசம்
ஆசிரியருடைய இதர கட்டுரைகள் ஆங்கிலத்தில் படிக்க : இங்கே சொடுக்கவும்.

தமிழாக்கம் முற்றிற்று

நன்றியுரை: நான் சகோதரர் சாமுவேல் கிரீன் அவர்களுக்கு மெயில் அனுப்பி, ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் வெளியாகியுள்ள அவருடைய கட்டுரைகளை மொழிபெயர்க்க அனுமதி கெட்டபோது, உடனே எனக்கு அனுமதி கொடுத்தார். அதற்காக அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/samuelgreen/CompareGreen.htm

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இஸ்லாம், குரான், சாமுவேல் கிரீன், முகமது, COMPARING THE BIBLE AND THE QUR'AN, Samuel Green

போலி முஸ்லீமாக இருந்தவர் தன் மதத்தை மாற்றினார்

அகமதிய இயக்கத்தை மற்ற இஸ்லாமிய அமைப்புகள் போலிகள் என்று சொல்லுகின்றனர்.அதனால் தான் இந்த தலைப்பு.
                                                                             
                                                                                தேவப்பிரியன்

 
 
ஒரு அகமதிய முஸ்லீமகா இருந்த நஸரத் அமன் அவர்கள் இயேசுகிறிஸ்துவை தான் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டதை பற்றி விவரிக்கிறார்.இந்த கட்டுரையின் ஆங்கில மூலத்தின் தொடுப்பு;http://www.islamreview.com/testimonials/whychristian.shtml
 
 
 
 
நான் ஏன் கிறிஸ்தவனானேன் ? நஸரத் அமன்
1958 ம் வருடத்தில் ஒரு தீவிர இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தேன்;. பாகிஸ்தானில் அகமதியாக்கள் அமைப்பால் நடத்தப்படுகிற இஸ்லாமியப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தேன். இப்படி படித்துக் கொண்டிருந்தபோது, இஸ்லாம் மத்தைப் பற்றி படிக்க வேண்டும் என்ற விருப்பம் அதிகமானது, அதனால் நான் அகமதியாக்கள் அமைப்பில் சேர்ந்தேன். 1974 ம் வருடத்தில் பாகிஸ்தான் அரசாங்கத்தால் இந்த அமைப்பு ஒரு இஸ்லாமிய மதபேத அமைப்பாக அறிவிக்கப்பட்டது.

கிறிஸ்தவத்திற்கு எதிரான அகமதியாக்களின் நூல்களில் கிறிஸ்து அல்லது மேசியா என்ற பதங்களைக் கண்டேன்;. அகமதியாக்கள் அமைப்பின் ஸ்தாபகர் மிர்ஷா குலாம் அகமது தன்னை மஸிஸ்( வாக்குப் பண்ணப்பட்ட மேசியா) என்று அறிவித்திருந்தார். எனக்கு புதுமையும், கவரக்கூடியதுமாயிருந்த அகமதியக் கொள்கைகளையும், போதனைகளையும் பிரச்சாரம் செய்வதில் நான் மிகுந்த ஆர்வமுடையவனாயிருந்தேன். பைபிளிலுமு; குர்ஆனிலும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றியுள்ள குறிப்புகளை அர்த்தம் உணராமலேயே நினைவுகூர்ந்தேன்.

 
என்னை இரட்சித்த ஒரு தவறு

ஒரு நாள் நான் ஒரு சபையைக் கடந்து சென்றுகொண்டிருந்தேன், அப்போது அங்கேயிருந்த பாதிரியாரிடம் சென்று , அவர் ஏன் இன்னும் முஸ்லீமாக மாறவில்லை? தீர்க்கதாரிசனமாக சொல்லப்பட்ட அனைத்து பண்புகளும் முகமதுவில் நிறைவேறியிருக்கிறதே? என்று கேட்க சாரியான வாய்ப்பு என்று நினைத்தேன், அப்படியாக சென்று பாதிரியை சந்தித்தேன்;. என்னை ஒரு முஸ்லீம் என்று அறிமுகம் செய்துகொண்டேன், நான் பாதிரியிடம் , இயேசுவே முகமதுவின் பாதரட்சைகளைத் தான் சுமப்பதற்கும் தகுதியில்லாதவன் என்று சொல்லியிருக்கும்போது நீங்கள் ஏன் முகமது நபியை விசுவாசிப்பது இல்லை என்று கேட்;டேன். அதற்கு அவர் இதை இயேசு எங்கு சொல்லியிருக்கிறார் என்று ஏதாவது ஆதாரம் கொடுப்பீர்களா? என்று கேட்டார் . உடனே நான் மத்தேயு 3.11-12 வசனங்களை எடுத்து அவருக்கு வாசித்து காண்பித்தேன், அவர் முழு அதிகாரத்தையும் வாசிக்க சொன்னார். 1-17 வரையான அந்த முழு வசனங்களையும் வாசித்தபோது அது யாரால் யாரைப்பற்றி சொல்லப்பட்டது என்பது தெளிவாக புரிந்தது, யாரும் விளக்கவேண்டியதில்லை. நான் அவமானமடைந்தேன் உடனே மற்றொரு வசனத்தையும் அவருக்கு காண்பித்தேன் அது யோவான் 14. 30
இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை, இந்த உலகத்தின் அதிபதி வருகிறான் ,
அவனுக்க என்னிடத்தில் ஒன்றுமில்லை,
அந்த பாதிரி சொன்னார் நீ இந்த வசனத்தை முகமதுவிற்கு பொருத்திக்கூறுவாய் என்றால் நான் அதை மறுக்கமாட்டேன். பிறகு அவர் இந்த வசனத்;தை மற்ற வசனங்களின் வெளிச்சத்தில் விளக்கினார் உலகத்தின் அதிபதி என்ற இப்பதம் யோவான் 12. 32 மற்றும் 16.11 ஆகிய வசனங்களில் உலகத்தின் அதிபதி என்பது சாத்தானைக் குறிக்கிறது என்று விளக்கினார்.

நான் எனக்குள்ளே பெருத்த அவமானமடைந்தேன் என்னுடைய அமைப்பின் மீதும் இந்த குறிப்புகளை தன்னுடைய புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அந்த இரண்டாவது மேசியா என்று அழைத்துக்கொள்கிற அவர் மீதும் பயங்கரமான கோபத்தோடு பாதிரியின் அறையிலிருந்து வெளியேறினேன், அதற்கு பிறகு நான் குர்ஆனையும் பைபிளையும் ஆழமாக படிக்க ஆரம்பித்தேன். இதற்காக நான் பாகிஸ்தானில் உள்ள ஒரு வேதாகமப்பள்ளியில் புறக்கல்வி முறையில் படிக்கத் துவங்கினேன். ஒரு தீவிர இஸ்லாமிய பிரசங்கியாக இருந்த எனக்கு குர்ஆனையும் பைபிளையும் தெளிவாகக் கற்று மேசியா என்ற வார்த்தையின் ஆழ அர்த்தத்தை அறிய ஆவல் அதிகமானது. பைபிளில் வாக்குப் பண்ணப்பட்ட மேசியாவின் இரண்டாம் வருகையைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தபோது மேசியாவின் முதல் வருகையைப் பற்றியும் தீர்க்கதாரிசன நிறைவேறுதல்களைப்பற்றியும் அறிய எண்ணினேன்.

நான் குர்ஆனில் வசனங்களிலும் மொழிநடையிலும் அதிக பழக்கப்பட்டிருந்தபடியால் வேதத்தை படிக்கும் போதே இரண்டையும் ஒப்பிட்டுக்கொண்டிருந்தேன். கிறிஸ்தவ கிரேக்க வசனங்கள் ( புதிய ஏற்பாடு) என்னை மிகவும் கவர்ந்தது. அவை ஏதோ வாழ்க்கைச் ரித்திரம் மட்டுமல்ல ஆனால் ஒவ்வொரு வர்ணணையிலும் இறைவன் மனிதனோடு நடந்து வந்ததை வெளிப்படுத்தும் பல சம்பவங்கள் உண்டாயிருக்கிறது.

குர்ஆனைப் படிக்கும் போதோ எதுவும் விசேஷமாக இல்லை ழூன்றில் இரண்டு பங்கு பேய் வணக்கத்தின் கட்டுக்கதைகளும், தோராவிலிருந்து திரித்து கேலியாக சித்தாரிக்கப்பட்ட படைப்புகளாயிருந்தது. குர்ஆனைப் படிக்கும் போது எந்த ஒரு நபரும் தன்னுடைய கவனம் சிதறாமல்பார்த்துக்கொள்ள முடியாது ஏனென்றால் குர்ஆனில் தொடர்ச்சியாக ஒவ்வொரு இரண்டு ழூன்று வசனங்களுக்கும் பிறகு தலைப்புகளும் விஷயங்களும் மாறுகிறது.

இப்புவியின் ஊழியித்தில் இயேசு தன்னுடைய பெரிய அதிகாரத்தை வெளிப்படுத்தியதை உணர்ந்தேன். அவர் முழு நிச்சயமுடையவராகவும் அதிகாரமுடையவராகவும் தன்னை குற்றம்சொல்லுகிறவர்களை எதிர்க்ககூடியவராகவும் இருந்தார். அவரை குற்றம்சொல்லிக்கொண்டிருந்தவர்கள் ஒருநாளும் அவரை நேராக எதிர்க்ககூடாதவர்களாயிருந்தார்கள். (யோவான் 6 .41, 43 மற்றும் யோவான் 8. 38,44)

ஆனால் முகமதுவின் விஷயத்தில் அவரைக் குறைகூறினவர்கள் மிகவும் உறுதியாகவும் .எதிர்க்ககூடியவர்களாவும் இருந்தார்கள். அவர்கள் சொன்னார்கள் ,

 

(சுரா 17;90-93 திருப்புமுனை)

 

நான் குர்ஆனையும் பைபிளையும் மிகத் தீவிரமாக படித்தேன். குர்ஆனின் ஒரு வசனம் என்னை உலுக்கியது , என்னுடைய எல்லா நம்பிக்கைகளும் அர்ப்பணங்களும் தவிடுபொடியானது. குர்ஆனின் அந்த வசனம் சொல்லுகிறது .நான் வரப்போகிற புதிய துதன் இல்லை, எனக்கு என்ன செய்யப்படும் என்று எனக்குத் தெரியாது. நான் எனக்கு வெளிப்படுத்தப்பட்டதை மட்டுமே பின்பற்றுகிறேன். உங்களைத் தெளிவாக எச்சரிப்பதே என்னுடைய பணி ஆகும்

நியாயத்தீர்ப்பின் நாள் (அழிவு) மட்டும் காத்திருக்க எனக்கு பொறுமையில்லை , தன்னைப் பற்றியும் ன்மேல் விசுவாசம் வைப்பவர்களை பற்றியும் அறியாத ஒருவரை நான் எப்படி பின்பற்றமுடியும்?

மாற்றம

95 சதவீதம் முஸ்லீம்கள் இருக்கிற பாகிஸ்தானில் மதமாறுவது என்பது சமுதாய, பொருளாதார மற்றும் கலாச்சார சவாலாக இருந்தது. கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு மதம்மாறுவது என்பது உறவுகளோடும் சமுதாயத்தோடும் உள்ள ஐக்கியத்ததை விடுவதாகும். எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு உள்ளாவோம் என்ற பயம் இருந்துகொண்டேயிருக்கும். இஸ்லாமின் பெயரால் முஸ்லீம் மக்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக எதைவேண்டுமானாலும் செய்யலாம், சொந்தக்காரர்களும் நண்பர்களும் கூட தங்கள் தனிப்பட்ட மற்றும் சொத்துபிரச்சனைகளை வைத்து கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக இவர்கள் முகமதுவையும் குர்ஆனையும் குறைகூறினார்கள் என்று சொல்லி பழிவாங்கமுடியும். தெய்வ தூஷணம் என்ற பெயரில் கிறி்ஸ்தவர்களுக்கு மரணதண்டனைகூட வழங்கப்படலாம் ஆனால் அல்லாவின் பெயரில் சொல்லப்படும் தவறான குற்றச்சாட்டுகளுக்கு எந்த தண்டணையும் கிடையாது,

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் கிறிஸ்துவை என்னுடைய சொந்தரட்சகரா ஏற்றுக்கொண்டு என் பெற்றோருக்கும் உறவினருக்கும் தெரியாமல் மறைமுகமாக 1979 ம் வருடத்திலே ஞானஸ்தானம் பெற்றேன.; 10 வருடங்கள் வரை நான் கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் கிறிஸ்தவனாகவும் என்னுடைய வீட்டில் முஸ்லீமாகவும் வாழ்ந்து வந்தேன். இறுதியாக ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுமாறு என் பெற்றோரின் கட்டாயம் அதிகமனபோது என்னால் என்ரட்சிப்பை மறைத்துவைக்கமுடியவில்லை,

நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் ஏனென்றால் தான் யார் என்பது என் ரட்சகருக்குத் தெரியும் (யோவான் 17 .14)

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14 .6)

இப்பொழுது இயேசு கட்டளையிட்டதுபோல் (மத்தேடூடூ 28. 20) சுவிஷேசத்தை பிரசங்கிப்பது தான் என்னுடைய பாரமாயிருக்கிறது. சுவிஷேசத்தை பிரசங்கியாவிட்டால் எனக்கு ஐயோ ( 1கொரி 9 . 16)

பாக்கிஸ்தானில் 2001 வரை commumity developmement project manager ஆக வேலை செய்துவந்தேன்.தற்பொழுது நான் கனடாவில் வசித்துவருகிறேன்.

கிறிஸ்தவத்தை குறித்த எந்த விதமான கேள்விகளுக்கும்,விவாதங்களுக்கும் என்னை தராளமாக தொடர்பு கொள்ளலாம்.

Nusrat Aman
E-mail:
naman@gosonic.ca
E-mail: nusrat04@hotmail.com
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அகமதியா, அல்லா, இஸ்லாம், கிறிஸ்தவம், குரான், மதமாற்றம், மிர்சா குலாம்

கௌதம புத்தரும்-முகமதுவும்

தமிழ் இஸ்லாம் தளத்துக்கு கேள்வி.புத்தர் சொன்னது சரி என்று பத்வா விடுவீர்களா?

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

தமிழ் இஸ்லாம் என்ற இனையம் பிற மதங்கள் ஒப்பீடு என்ற பகுதியில் "முஹம்மது(ஸல்) அவர்கள் புத்தமத வேதங்களில் முன்னறிவிப்புகள்" என்ற கட்டுரையை வெளியிட்டு உள்ளது.இதில் புத்தர் கூறிய புத்த மைத்ரேயர் முகமதுவே என்று கதைவிட்டுள்ளார்கள்.அப்படி சொல்லும் போது புத்தர் சொன்ன ஒரு சில குறிப்பையாவதும் இவர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்வார்களா? என்று தெரியாது.

அன்பு வழியை போதித்த புத்தர் எங்கே?

மற்ற மக்களை கொல்ல சொன்ன முகமது எங்கே?

கடவுள்,சொர்கம் இல்லை என்ற புத்தர் எங்கே?

கடவுள் உண்டு,சொர்கம் உண்டு,அங்கே கட்டழகிகள் உண்டு என்ற முகமது எங்கே?

திருமண பந்தத்தை உதறி துறவறம் பூண்ட புத்தர் எங்கே?

பதினோரு திருமண்ங்களுக்கு மேல் செய்த,அதுவும் ஆறு வயது சிறுமியை திருமணம் செய்து அவள் ஒன்பது வயதான போது அவளுடன் உறவு வைத்த முகமது எங்கே?

ஏன் இப்படி மொட்டத்தலைக்கும்,முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறீர்கள்.

சரி விசயத்துக்கு வருகிறேன்.

உங்களின் கட்டுரையில் வருகிற வரிகள் நீங்கள் படித்துதான் வெளியிட்டீர்களா?அல்லது படிக்கவில்லையா?

தமிழ் இஸ்லாம் தளத்தின் கட்டுரையின் ஒரு பகுதி காண்க

http://www.tamilislam.com/comparitive_religion/muhammed_in_butist06.htm

உண்மையான அற்புதம்.

அருள்செய்யப்பட்டவர் பதிலளித்ததாவது:- ஒரு பாவி புனிதராவதும், உண்மையான ஞானத்தை அடைந்தவன் சத்திய பாதையை கண்டு சுயநல தீயவழிகளை கைவிடுவதும் இந்த உலகமே கதிடியன கிடப்பவர்களுக்கு அதிசயமான, மறைபொருளான, அற்புதமான விசயமாகத் தோன்றவில்லையா? இந்த தற்காலிக உலகின் சுகங்களை நிலையான புனிதமான பேரானந்திற்காக துறக்கும் பிக்சுக்களே அற்புதங்களை செய்கிறார்கள். அதுதான் உண்மையான அற்புதம் என அழைக்கப்பட முடியும்.ஜ278ஸ

பிரச்சாரக் குழுக்களை அற்புதங்கள் செய்ய அனுமதியளிக்குமாறு ஒரு முறை ஒரு சிலர் புத்தரிடம் மிகவும் வருந்திக் கேட்டுக் கொண்டனர். மற்றவர்களின் கண்களில் இது அவர்களுக்கு உயர்வை அளிக்கும் என காரணமும் கூறிக் கொண்டனர். அதற்கு புத்தர் பதிலளித்தாவது: – அற்புதங்கள் மூன்று வகையாக இருக்கின்றன. முதலாவது வகை அற்புதம் என்பது அசாதாரண ஆற்றல் வெளிப்படுகின்ற ஆற்றலின் அற்புதமாகும். தண்ணீரில் நடத்தல், பேய்களை ஓட்டுதல், இறந்தவர்களை எழுப்புதல் போன்றவைகள் இதில் அடங்கும். ஒரு விசுவாசி இதைக் காணும்போது அவரின் விசுவாசம் ஆழமாகும். ஆனால் ஒரு அவிசுவாசியை இது நம்ப வைக்காது. ஏனெனில் இதை மந்திர வேலை என்றே அவர் கருதுவார். ஆகவே அத்தகைய அற்புதங்களில் ஆபத்தையே நான் காண்கின்றேன். அவற்றை வெட்கக்கேடானது என்றும் அருவருக்கத்தக்கதென்றும் நான் கருதுகிறேன். இரண்டாவது வகையான அற்புதம் என்பது தீர்க்கதரிசன அற்புதம் என்பதாகும்.

ஒருவர் என்ன சிந்திக்கிறார் என்பதை அறிதல், குறி சொல்லுதல், ஜோசியம் சொல்லுதல் போன்றவை இதில் அடங்கும். இதிலும் ஏமாற்றமே மிஞ்சும்

ஏனெனில் இதுவும் ஒரு அசாதரண சித்து வேலையாகவே அவிசுவாசியின் கண்களில் தோன்றும். இறுதியானது போதனை எனும் அற்புதமாகும். என்னுடைய சீடர்களில் ஒருவர் ஒருவரை தன்னுடைய போதனையின் மூலம் அவரின் அறிவையும் ஒழுக்க ஆற்றல்களையும் சரியான முறையில் உபயோகிக்க வைத்து விட்டாரேயானால் அதுதான் உண்மையான அற்புதமாகும்.ஜ279ஸ

தான் உண்மையான அற்புதத்தை, அதாவது போதனையெனும் அற்புதத்தை வழங்கப் பெற்றிருப்பதாக முஹம்மது(ஸல்) அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அவர்களின் போதனையானது திருக்குர்ஆன் ஆகும். அதைப்பற்றி அதுவே கூறுகின்றது:-

புத்தர் சொன்ன கருத்தில் குரானுக்கு சுத்தமாக பொருந்தாத வார்த்தைகள் இருக்கும் போது எப்படி நீங்கள் அந்த கருத்தை உங்கள் தளங்களில் தைரியமாக வெளியிட்டு மக்களை முட்டாள்கள் ஆக்கப்பார்க்கிறீர்கள்.

ஆகவே அத்தகைய அற்புதங்களில் ஆபத்தையே நான் காண்கின்றேன். அவற்றை வெட்கக்கேடானது என்றும் அருவருக்கத்தக்கதென்றும் நான் கருதுகிறேன்


ஒருவர் என்ன சிந்திக்கிறார் என்பதை அறிதல், குறி சொல்லுதல், ஜோசியம் சொல்லுதல் போன்றவை இதில் அடங்கும். இதிலும் ஏமாற்றமே மிஞ்சும்

வெட்கக்கேடான,அருவருப்பான அற்புதங்களை அல்லாவின் நபிகள் செய்தார்களா?அல்லது அல்லவே அப்படி செய்ய சொன்னாரா?,அல்லது அல்லாவே அப்படி செய்தாரா??

குரான் வசனத்தின் படி அடையாளங்களும் அற்புதங்களும் ,தீர்க்கதரிசனங்களும் அல்லவின் அடியார்கள் அல்லாவின் அனுமதியுடன் தான் கொண்டுவந்ததாக சொல்கிறது.

 

(அதற்கு அவர்களிடம் வந்த தூதர்கள் அவர்களை நோக்கி, நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்களே அல்லாமல் வேறில்லை: எனினும் அல்லாஹ் தன் அடியார்களில் தனர் நாடியவர் மீது அருள் புரிகிறான் : அல்லாஹ்வின் அனுமதியின்றி நாங்கள் உங்களுக்கு எந்த ஓர் ஆதாரத்தையும் கொண்டு வருவதற்கில்லை

திருக்குர்ஆன் 14:11

– திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்: அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்: இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ(அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்: (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியைஙம் கொண்டு வருவதற்கு (அதிகாரம்) இல்லை. திருக்குர்ஆன் 40:78.

 

அப்படியானால் இந்த செயலை செய்யவைத்த அல்லா உண்மையான இறைவனா?நீங்களே சொல்லுங்கள்


வெட்கக்கேடானது, அருவருக்கத்தக்க, ஏமாற்றமே மிஞ்சும் செயலை செய்யக்கூடிய அல்லா

(இதற்குமுன் ஷஸமூது

கூட்டத்தாருக்கு ஒரு பெண் ஒட்டகத்தைக் கண்கூடான அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம் : அவர்களோ (வரம்பு மீறி) அதற்கு அநியாயம் செய்தனர்: (மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவேயன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை. திருக்குர்ஆன் 17:59

நிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை போடுத்திருந்தோம்: அவர் அவர்களிடம் (அவற்றைக்; கொண்டு) வந்த போது (என்ன நடந்தது என்று) பனீ இஸ்ராயீல்களிடம் (நபியே) நீர் கேளும். பிர்அவ்ன் அவரைநோக்கி ஷமூஸாவே நிச்சயமாக நான் உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே எண்ணுகிறேன்ஷ

என்று கூறினான். திருக்குர்ஆன் 17:101

– மேலும், மர்யமின் குமாரர் ஸோ: ஷஇஸ்ராயீல்; மக்களே … அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்

என்று கூறிய வேளையை (நபியே நீர் நினைவு கூறவீராக) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் ஷஇது தெளிவான சூனியமாகும் என்று கூறினார்கள். திருக்குர்ஆன் 61:6.

 

அல்லாவே இந்தமாதிரியான செயல்களை செய்துள்ளாரே எப்படி? சரி இப்பொழுது சொல்லுங்கள் அல்லா குரானில் சொன்னது தப்பு என்று.

புத்தர் சொன்ன பொன் மொழிகள்தான் சரியானது.எனவே குரான் என்ற போதக அற்புதத்தைக் கொண்டுவந்த மைத்ரேய புத்தர் முகமதுதான் என்று பத்வா கொடுப்பீர்கள்ளா?

உங்கள் பதிலை தாருங்கள்.
 
http://unmaiadiyann.blogspot.com/2007/10/blog-post_4338.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இஸ்லாம், தமிழ் இஸ்லாம், புத்தர், tamilislam

islam-இஸ்லாம்;உமரின் சிறு கதை: பக்ரீத் பண்டிகை 2007

islam-இஸ்லாம்;உமரின் சிறு கதை: பக்ரீத் பண்டிகை 2007

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

"பாத்திமா, இங்கே வந்து பாரு யார் வந்திருக்காங்கன்னு" அம்மா மகளை கூப்பிட்டாள்.

பாத்திமா சமையல் அறையிலிருந்து ஹாலுக்கு வந்து பார்க்கிறாள்.

"வாங்க வாங்க அக்கா, மாமா. சலாம் வாலைக்கும்" பாத்திமா சந்தோஷத்தில் தன் அக்காவையும், மாமாவையும் வரவேற்றாள்.

"வாலைக்கும் சலாம்" என்று அக்காவும், மாமாவும் திரும்பவும் சொன்னார்கள்.

பாத்திமாவுடைய அக்கா மும்தாஜுக்கு கல்யாணமாகி ஒரு மாதம் தான் ஆகிறது. தன் கணவரோடு இஸ்லாமாபாதில் வசிக்கிறாள். தனக்கு கல்யாணமாகி தன் கணவரோடு தன் பெற்றோர் வீட்டில், பக்ரீத் பண்டிகை கொண்டாட, பக்ரீத் பெருநாளின் முந்தைய நாள் வந்திருக்கிறாள்.

பாத்திமா இந்த ஆண்டு தான் மருத்துவ படிப்பில் சேர்ந்து முதலாமாண்டு படித்துக்கொண்டு இருக்கிறாள். அம்மா கதிஜா, தன் பெரிய மகளையும், மருமகனையும் வரவேற்று, மகள் வந்த சந்தோஷத்தில் பூரித்துபோனார்கள்.

"அப்பாவும், தம்பி உஸ்மானும் எங்கே, ஆளைக்காணோம்" என்றாள் அக்கா.

"அவங்க இரண்டு பேரும், பக்ரீத் பெருநாளுக்கு தேவையான சாமான்கள் வாங்க போயிருக்கிறாங்க, இப்போ வந்திடுவாங்க" என்றாள் பாத்திமா.

அதற்குள் அம்மா எல்லாருக்கும் காபி தயார் செய்துக்கொண்டு வந்தார்கள். எல்லாரும் குடித்தார்கள்.

"அக்கா, நீ இல்லாமே ஒரு மாசமா, அம்மா வேதனைப்பட்டு கரைந்தே போயிட்டாங்க, தெரியுமா? ஒவ்வொரு நாளும், தூக்கரத்துக்கு முன்னாடி, மும்தாஜ் இருந்தால், இது செய்து கொடுப்பாள், அது செய்து கொடுப்பாள் எனக்கு நிம்மதியா இருந்தது என்று அம்மா ஓயாமல் சொல்லிக்கிட்டே இருந்தாங்க" என்று மூச்சு விடாமல் சொன்னாள் பாத்திமா.

அம்மா தன் மூத்த மகளின் முகத்தை அப்படியே பார்த்துக்கொண்டே இருந்தாள், அவள் முகத்தில் காணப்படும் சந்தோஷத்தையும், கண்களில் தெரியும் ஒளியையும் பார்க்க அம்மா தவறவில்லை.

"இப்போ தான் நீ இருக்கேயில்லே, உன் அம்மாவுக்கு உதவி செய்யரது தானே" என்று மறுமொழி கொடுத்தார் அக்காளில் கணவர் செல்லமாக.

"இவளா! எனக்கு அதிக தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி, அதுவே எனக்கு போதும்" என்று சிரித்தார் அம்மா.

"மாமா, இதை விடுங்க, இஸ்லாமாபத்திலிருந்து எனக்கு என்ன கொண்டுவந்தீங்க, முதல்ல அதைச்சொல்லுங்க"

"பாத்திமா உன் மொபைள் கொண்டுவா?" என்றாள் அக்கா.

"ஏன், என் ஓட்ட மொபைளை நீ எடுத்துக்கப்போறியா" என்றாள் பாத்திமா.

"உன் மாமா உனக்கு கெமரா உள்ள கலர் மொபைளை பக்ரீத் பண்டிகைக்கு பரிசாக கொண்டுவந்திருக்கிறார் தெரியுமா" என்றாள் அக்கா.

"என்னது கலர் மொபைளா அதுவும் கெமராவா, வாவ் எங்கே சீக்கிரமா காட்டுங்களேன். புது மொபைள் வாங்கித்தரச்சொல்லி எத்தனைமுறையோ சொல்லிட்டேன், அப்பா தான் இப்போ வேண்டாம்மா அப்படின்னு சொன்னாரு" என்றாள் பாத்திமா.

அக்காள் மும்தாஜ், கருப்பு கலரில் வாங்கிக்கொண்டு வந்த மொபைளை எடுத்து காட்டினாள், "பல நாள் பட்டினியாக இருந்தவன் முதல்முறையில் நல்ல சாப்பாடு பார்த்தால் எப்படி பார்ப்பானோ, அது போல பாத்திமா அதை வாங்கி பார்க்கிறாள்.

" Thank You அக்கா, Thank You மாமா என்றுச் சொல்லி, மொபைளை வாங்கிக்கொண்டு தன் பெட் ரூமுக்குள் ஓடினாள்".

"ஏம்மா இப்படி பணத்தை செலவு செய்யரீங்க, அவ அண்ணே, சௌதிக்கு சென்று முதல் சம்பளத்தில் கலர் மொபைள் வாங்கி தருவதாக சொல்லியிருந்தான்" என்றுச் சொன்னார்கள் அம்மா.

"அதுல என்னம்மா இருக்கு, சின்ன பொண்ணு, இதுல வேற மருத்துவ படிப்பு படிக்கிறாள், அவளுடைய பழைய மொபைள் அடிக்கடி பேட்டரி வீக் ஆகுது என்று ரொம்ப கஷ்டப்பட்டா" என்று சமாளித்தாள் அக்கா.

அக்காவும் மாமாவும் பயணகலைப்பு நீங்க சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டார்கள். தம்பி உஸ்மானும், அப்பாவும் சாமானோடு வருகிறார்கள்.

"அக்கா, அப்பாவும் அண்ணாவும் வந்திருக்காங்க" என்று கூப்பிட்டாள் பாத்திமா.

அக்காவும், மாமாவும் ஹாலுக்கு வருகிறார்கள்.

ஒருவருக்கு ஒருவர் "சலாம்" சொல்லிக்கொண்டார்கள்.

"எப்படி இருக்கேம்மா நல்லாயிருக்கியா?"மகளை விசாரிக்கிறார் தந்தை.

"ரொம்ப நல்லா இருக்கே அப்பா" மகள் பேசினாள்.

"எப்படி இருக்கீங்க, உங்க வியாபாரம் எப்படி நடக்குது" என்று மருமகனை விசாரித்தார் மாமனார்.

"நல்லாயிருக்கேன் மாமா, வியாபாரமும் நல்லா நடக்குது, எங்க வீட்டிலே எல்லாரும் உங்களுக்கு சலாம் சொன்னார்கள்" என்றார் மருமகன்.

"வாலைக்கும் சலாம்" என்றார் மாமனார்.

"அப்பா என்னப்பா ரொம்ப எளச்சிட்டீங்க, சரியா சாப்பிடுவதில்லையா?" என்று கேட்டாள் மும்தாஜ்.

"அப்படி ஒன்னுமில்லேம்மா, நான் நல்லாத்தான் இருக்கேன், இதோ, உஸ்மானுக்கு சௌதியிலே நல்ல வேலை கிடைச்சிருக்கு இல்லையா, அதுக்கு தேவையான பணத்தையும், மற்ற காரியங்களையும் பார்ப்பதற்கு ரொம்ப அதிகமாக அலையவேண்டி இருந்தது, கொங்சம் ரெஸ்டு எடுத்துக்கிட்டா எல்லாமே சரியாகிவிடும்" என்றார் அப்பா.

"ஆமா, என்ன உஸ்மான், நீ போனவாரமே போகனும், ரொம்ப அர்ஜண்டு அப்படியுன்னு போன்லெ சொன்னெ இல்லியா, பின்னே ஏன் பிளானை மாத்திட்டே" என்று அக்கா கேட்டாள்.

"இல்லேக்கா, நீயும், மாமாவும் இந்த பக்ரீத்துக்கு இங்கு வர்ரதா அப்பா சொன்னாங்க, எனவே, நான் தான் ஏஜண்டிடம் பேசி, ஒரு வாரம் கழித்து, பக்ரீத்தை உங்களோடு கொண்டாடிவிட்டு போகலாம், பிறகு 2, 3 வருஷம் ஆகுமில்லையா உங்களை எல்லாம் மறுபடியும் பார்ப்பதற்கு" அப்படியின்னு சொல்லி, நான் தான் லேட் செய்தேன்.

"அப்படியா, ரொம்ப சந்தோஷம்" என்றாள் மும்தாஜ்.

மதியம் மிகவும் சந்தோஷமாக எல்லாரும் சாப்பிட்டார்கள். மாமா தூங்க சென்றுவிட்டார். உஸ்மான், அக்கா மும்தாஜும், அப்பா அம்மாவும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பாத்திமா இன்னும் தன் புது மொபைளை ஆராய்ச்சி செய்துக்கொண்டு இருப்பதை நிறுத்தவில்லை.

"பார் உஸ்மான், நீ சௌதிக்கு போய் நல்லா வேலை செய்யனும், நல்லா சாப்பிடனும், அப்பாவிற்கும் உடல் நிலை அடிக்கடி சரியில்லாமல் ஆகிறது, பாத்திமா வேறு நான் மருத்துவபடிப்பை படிப்பேன் என்று பிடிவாதமாக இருந்ததால், அப்பா இந்த வருஷம் ஃபீஸை கஷ்டப்பட்டு கட்டியிருக்கிறார், நீ தான் குடும்ப பாரத்தை சுமக்கனும், நானும் மாமாவும் தினமும் உனக்காக துவா செய்வோம்" என்றாள் மும்தாஜ்.

"அல்லா எனக்கு ரொம்ப நல்ல வேலையா கொடுத்திருக்கிறார், அக்கா, நீ ஒன்றும் கவலைப்படாதேக்கா, நான் போய் சம்பாதித்து ஒவ்வொரு மாசமும் தவறாமல் பணம் அனுப்புவேன், ஓவர் டைம் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்து, அதுவும் செய்து, நிறைய சம்பாதிப்பேன்." என்றான் உஸ்மான்.

"டேய், ஓவர் டைம் என்றுச் சொல்லி, ஒடம்ப கெடுத்துக்காதே, எப்படி வேலை செய்யரிய்யோ அதே போல நல்லா ஓய்வு எடுத்துக்கனும்" என்றாள் அம்மா அன்பாக.

"இல்லேம்மா நான் ரெஸ்டு எடுத்துக்குவேன், நல்லா சாப்பிடுவேன்மா, நீங்க கவலைப்படாதீங்க"

"என்னப்பா, இந்த வருஷம் மூனு ஆடு குர்பானி கொடுக்கிறீங்களா? வீட்டு வாசல்ல மூனு ஆடு இருக்கு?" என்றாள் மும்தாஜ்.

"ஆமாம்மா, பாரு, உனக்கு நல்ல இடத்திலே கல்யாணம் நடந்தது, தங்கம் போல மாப்பிள்ளை கிடைச்சாரு, பாத்திமாவுக்கு மருத்துவ படிப்புக்கு அல்லா உதவினாறு, இன்னும் உஸ்மான் சௌதி போகிறான் என்றுச் சொல்லி, மூன்று ஆடுகள் குர்‍பானி கொடுப்பதாக நானும், அம்மாவும் முடிவு செய்தோம்மா" என்றார் அப்பா.

"நல்லதுப்பா" என்றாள் மும்தாஜ்.

மறுநாள் காலை பக்ரீத் பண்டிகை, எல்லாரும் எழுந்து குளித்துவிட்டு,
புது துணிகளை அணிந்துக்கொண்டு, நமாஜுக்கு ஈத்கா போக தயாராகி விட்டார்கள். நாமாஜுக்கு போய் வந்து, ஆடுகளை குர்பானி கொடுக்கவேண்டும். அப்பாவும், உஸ்மானும், மாமாவும் நமாஜ் ஓதுவதற்கு ஈத்காவிற்கு போகின்றனர்.

"அம்மா போய் வரேம்மா" என்றான் உஸ்மான்.

"அண்ணா, வரும் போது, கடைத்தெருவிலே உள்ள ஸ்வீட் கடையிலே எனக்கு "பால் கோவா" வாங்கி வரணும்" – என்றாள் பாத்திமா.

"கண்டிப்பா கொண்டுவரேம்மா" என்றான் உஸ்மான்.

முன்று பேரும் ஈத்காவிற்கு செல்கின்றனர்.

குடும்பத்தின் சந்தோஷத்தைப் பார்த்து, "யா அல்லாஹ், உனக்கு நான் நன்றியை சொல்கிறேன்" என்று தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார் அம்மா.

நமாஜ் முடிந்தது, எல்லாரும் கடைசியாக துவா செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.

"அல்லாஹ் என் குடும்பத்தில் இப்போதுள்ள சந்தோஷம் நிலைத்து இருக்க உதவி செய். என் மகளுக்கு நல்ல மாப்பிள்ளையை கொடுத்தாய், என் மகன் சவுதிக்கு சென்று நல்ல முறையில் வேலை செய்ய உதவி செய், என் இளைய மகள் நல்ல முறையில் தன் மருத்துவ படிப்பை முடிக்க உதவி செய்" என்று வேண்டிக்கொண்டார் அப்பா.

"இறைவனே, எனக்கு கொடுத்த நல்ல மனைவிக்காக உனக்கு நன்றி, எல்லாரையும் ஆசீர்வதியும், என் மச்சான் நாளை சௌதிக்கு செல்கிறான், அவனுக்கு எல்லா உதவியையும் நீ தான் செய்யனும்" என்றான் மாமா.

"அல்லாஹ், உனக்கு நான் எப்படி நன்றி சொல்லுவேன், எங்கள் குடும்பத்தில் உன் கிருபை நிறம்ப இருக்கட்டும். என் அக்கா மாமாவிற்காக உனக்கு நன்றி." என்று வேண்டிக்கொண்டான். வீட்டுக்கு போன உடனே, நான் வாங்கிய மோதிரத்தை மாமாவின் விரலிலே நான் போடுவேன் அடுத்த முறை வரும் போது, அவருக்கு இன்னும் பெரிய பரிசு தருவேன் என்று தன் மனதில் நினைத்துக்கொண்டான்.

வீட்டிலே எல்லாரும் நமாஜ் செய்துவிட்டு, இந்த மூன்று பேருக்காக வழி மீது விழி வைத்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சிறு காயங்களுடன் இரத்த கறைகளோடு மூச்சு வாங்க‌ ஒருவன் ஓடி வருகிறான்.

"பெரியம்மா, மஜீத்லே நமாஜ் செய்துக்கொண்டு இருக்கும் போது, ஒரு குண்டு வெடித்து, அதுலெ, அதுலெ பெரியப்பாவும், உஸ்மான் அண்ணனும், மாமாவும், ……. ம..ரி….த்….து போனாங்கம்மா…" என்றுச் சொல்லி, ஓவென்று அழுகிறான்…..

அம்மா….?!@
அக்கா மும்தாஜ்….?!@
தங்கச்சி பாத்திமா…..?!@

இவர்களின் எதிர்கால வாழ்க்கை இனி இருட்டு தான்….

செய்தித்தாளில் செய்தி: பாகிஸ்தானில் குண்டு வெடித்து, 54 பேர் மரித்துப்போனார்கள். பல பேர் காயப்பட்டார்கள்.

54 killed in suicide attack on Pak mosque

காட்டில் வாழும் புலி சிங்கம் கூட தன் இனத்தை அழிக்காது, ஆனால், மனிதன்…..

இயேசுவே, "நீ உன்னை நேசிப்பது போல பிறனையும் நேசிப்பாயாக" என்ற உம்முடைய‌ கட்டளையை மனிதன் என்று கடைபிடிக்கப்போகிறானோ…

1 பின்னூட்டம்

Filed under அல்லா, இஸ்லாம், குண்டுவெடிப்பு, சிறு கதை, முகமது

பிரபல இஸ்லாமிய நாதஸ்வர விதவான் இயேசுவை ஏற்றுக்கொண்டார்

பிரபல இஸ்லாமிய நாதஸ்வர விதவான் இயேசுவை ஏற்றுக்கொண்டார்

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

பால் ஷேக் சின்ன காசிம்
 
Image Image

PAUL SHEIK CHINNA KASIM

I was born in a small town in the southern part of India in the state called TamilNadu. Though a Muslim by birth i grew up in a  family that valued Indian tradition and culture more than religion. My ancestors had devoted their lives to Indian classical Music, especially to an instrument called Nadhaswara (pipe). I was also a part of this tradition until our Lord spoke to me through LIGHTNING and THUNDER and anointed me with His Holy spirit. Just as the Lord choose David who played the harp for Him , I feel He has predestined me to Glorify Him through my music . He called me for His Ministry seven years ago and since then I have been ministering His word to His people through the music of Nadhaswaram and the power of the Gift of the Word of God. He has blessed our ministry abundantly as He has used me to travel not only in many parts of India but also to many nations which include SRILANKA , MALAYSIA, SINGAPORE, UNITED ARAB EMIRATES, QATAR, SWITZERLAND, EUROPE, LONDON  CANADA AND USA .

Many people have come to know Christ through Gospel meetings held in many churches in these nations and are encouraged by the word of God.A part of my ministry is to explain the origin of Nadhaswaram and its relation to the Word of God. For ages this instrument has been forgotten by many but this instrument finds its roots in the Word of God. Indian classical music is loved through out the world and to know that God can use this instrument to Glorify Himself surprises many. I am blessed with two sons ages 12 and 14 and my wife has been a driving for my ministry. Her prayers for my salvation for 10 long years were finally answered when I had a personal encounter with Jesus Christ who transformed my life and gave me this ministry of "Lightning and thunder".  

Image  

PADMASHRI DR. SHEIK CHINNA MOULANA                                         

FAMILY    –   BACK GROUND     As they say Music runs in my blood. My family has always been in the limelight for our dedication to classical music. Especially my Grand Father PADMASHRI DR. SHEIK CHINNA MOULANA has performed Indian traditional Nadhaswaram concerts in different part's of the World  on behalf of Indian Government. Our family has been performing on Radio & Television also. A family which made India proud with its talents. My grandfather is the recipient of "PADMASHRI " the highest honor given to any Indian musician , the state Government of Tamil Nadu  has honored us with  DOCTORATE  &  KALAIMAMANI too.                               

http://www.paulsheik.org/index.php?option=com_content&task=view&id=14&Itemid=30

1 பின்னூட்டம்

Filed under அல்லா, இயேசு, இஸ்லாம், குரான், மதமாற்றம், முகமது

பால் ஷேக் சின்ன காசிம் நாதஸ்வரம்-1


பின்னூட்டமொன்றை இடுக

Filed under இசை, இஸ்லாம், கிறிஸ்தவம், நாதஸ்வரம், மதமாற்றம்

இறைநேசன் பெயரில் போலி?

என் தளத்தை தாக்கும் விதமாக இறைநேசன் என்பவர் எழுதிய கட்டுரையும் ,என் பதிலும்.
//

நாய் வாலும் பன்னாடைகள் புத்தியும்!

நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது பழமொழி !

பார்ப்பனப் பன்னாடைகளின் புத்தியைத் திருத்த முடியாது என்பது புதுமொழி!

திடீரென இறை நேசனுக்கு ஏன் இந்தக் கொலைவெறி என ஆச்சரியம் எழுகின்றதா ?. விஷயம் இல்லாமல் இல்லை .

பொய் பிரச்சாரம், போலி பெயர்களில் ஆபாச அரங்கேற்றம், மாற்றார் பெயர்களில் விஷமம், மதவெறி பரப்பல், காமவியாபாரம் போன்றவைச் செய்து மாட்டிக் கொண்டக் காரணங்களுக்காக அறிவுரை வழங்கப்பட்டுத் திருந்தாதக் காரணத்தினால் தமிழ்மணத்தை விட்டு ஓரங்கட்டப்பட்ட வந்தேறி ஈனக்கூட்டத்தைச் சேர்ந்த மதவெறி ஆபாச மன்னன்களின் கொசுத் தொல்லைகள் மறைந்து சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சில தினங்களுக்கு முன்னர் சாட்டில் பேசிக் கொண்டிருந்தச் சகோதரர் ஒருவர் அந்த ஓரங்கட்டப்பட்டத் தெருப்பொறுக்கிகள் தற்பொழுது என்ன செய்கிறார்கள் தெரியுமா எனக் கேட்டார்.

தொடர்ந்து எழுத முடியாதச் சூழலாலும் வேலைப்பழுவினாலும் வலையில் தொடர இயலாமல் நேரம் கிடைக்கும் பொழுது மட்டும் வருவதால் முழுமையான அப்டேட் என்னிடம் இல்லை எனக்கூறினேன்.

திடீரென நேற்றுத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அதே சகோதரர் ஓரங்கட்டப்பட்ட இழிபிறவிகள் மீண்டும் தமிழ்மணத்தில் தலைகாட்ட ஆரம்பித்துள்ளதாகவும் முன்னர் சல்மா அய்யூப் என்ற முஸ்லிம் பெயரில் தனது மனவக்கிரங்களைக் கொட்டி முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்துவதாக நினைத்து மலத்தை வாரி தன் உடம்பில் பூசித் தீராக் களங்கத்தை ஏற்படுத்திக் கொண்ட
அதே மடப் பன்னாடைகள் கூட்டணி சேர்ந்துத் தற்பொழுது மீண்டும் முஸ்லிம் பெயரில் அதுவும் எனது பெயரிலேயே மாற்று வழியில் சிண்டு முடிய ஆரம்பித்துள்ளதாகவும் அதன் சுட்டியை எனது மடலுக்கு அனுப்பி வைப்பதாகவும் உடன் ஏதாவது செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார் .

உடனே வந்து மடல் பெட்டியைத் திறந்தால் திறக்கப்படாத மடல்களில் கிட்டத்தட்ட 95 சதவீத மடல்களும் அந்த இழிபிறவியின் பதிவு குறித்து எனக்கு தகவல் தந்து ஏதாவது செய்யுங்கள் எனக் கோருவதாகவே இருந்தது .

ஆம், இறை நேசன் பெயரிலேயே ஓர் போலி. யாராக இருக்கும் எனத் தலையைப் பிய்க்க வேண்டிய அவசியமில்லாமல் சல்மா அய்யூப், முரளி மனோகர் போன்றவற்றைப் போன்று, தான் யார் என்பதற்கான குடுமியை மிகத் தெளிவாகவே இந்த இழிபிறவி தனது பதிவில் தன்னை அறியாமல் வெளிப்படுத்தியுள்ளது. காமவியாபாரம் செய்து மாட்டிக் கொண்ட கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு எவ்வித வெட்கம், மானம் , ரோசம், சூடு, சுரணை இன்றி மற்றவர்களுக்கு முகத்தை க் காட்டிக் கொள்ளும் இந்த வெட்கம் கெட்டப் பன்னாடைகளைக் கண்டு கொள்வது அவ்வளவு சிரமமான காரியமா என்ன?

இழிபிறவிகளின் புத்தியை ஒருக்காலும் திருத்த முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் இம்முறை தனது பெயரை இறை நேசன் என வைத்துக் கொண்டு தன்னை ஒரு கிறிஸ்தவராகக் காட்டியுள்ளது இந்த தெருப்பொறுக்கிப் பன்னாடை !

கிறிஸ்தவராகக் காட்டிக் கொண்டு எழுதினால் முஸ்லிம்கள் உடனடியாக கிறிஸ்தவர்களுக்கு எதிராகக் களமிறங்குவார்கள் என்ற நப்பாசை. எந்தப் பிரச்சனையும் இன்றி இருக்கும் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் மூட்டி விட்டு குளிர்காய நினைக்கின்றது இந்தப் பன்னாடைப் பொறுக்கி ஜென்மம்!

முஸ்லிம்களோ கிறிஸ்தவர்களோ தங்களதுக் கொள்கைகளை, மதத்தைப் பரப்ப எப்பொழுதும் நேரடியாகத் தங்களது வேதங்களில் இருந்து ஆதாரங்களை வைத்தே பிரச்சாரம் செய்வர். இந்தச் சாதாரண விஷயத்தைக் கூடப் புரிந்துக் கொள்ள இயலாத அளவிற்கு நாம் விவரம் கெட்டப் பன்னாடை ஜாட்டான்களைச் சேர்ந்த அறிவிலி அல்ல.

தங்களது மனுவின் கொள்கைகளை நேரடியாக, வெளிப்படையாக வைத்துப் பிரச்சாரம் செய்ய வக்கற்றப் பார்ப்பனப் பன்னாடைகள் தங்களின் அரிப்பைச் சொறிந்துக் கொள்வதற்கு இறை நேசன் தான் கிடைத்தானா?

விவரம் அறிந்த உடனேயே தமிழ்மண நிர்வாகத்திற்குப் போலியினைக் குறித்த விவரம் கூறி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளேன் . நிச்சயம் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகின்றேன் .

இனி என்ன ?

சும்மா இருந்தச் சங்கை ஊதிக் கெடுத்தக் கதை தான்.

கிறிஸ்தவர்களுக்கு எதிராக இறை நேசன் எழுதுவான் என நினைத்து மீண்டும் தங்கள் இனத்தின் இழிபுத்தியைக் காட்ட வந்திருக்கும்முரளி மனோகர் & கில்மாபன்னாடைக் கும்பலின் எண்ணத்தில் இடிவிழ, மீண்டும் பன்னாடைகளுக்கு எதிராக அவைகளின் ஈன இழி செயல்களுக்கு எதிராக நேரம் உருவாக்கிக் கொண்டு எழுத வருகிறேன்.

விரைவில் எதிர்பாருங்கள் – ”பிரேமானந்தாவுக்கும் பாரத ரத்னா வேண்டும்பதிவு.//

http://www.iiponline.org/

இறைநேசன் அவர்களுக்கு உங்களின் ஆதங்கம் எந்த அளவுக்கு சரியானது என்று அனக்கு புரியவில்லை.உங்களுக்கு ஏதாவதும் பிரச்சனை என்றால் அதை என் வலை பூவில் எழுத வேண்டியது தானே.அதை விடுத்து கீழ்தரமான வார்த்தைகளால் ஏன் உங்கள் மரியாதையை கெடுத்துக்கொள்ளுகிறீர்கள்.இணையத்தில் இறைநேசன் என்ற வார்த்தை கொஞ்ச நாளாக காணாத படியினால் பிளக்கர் தொடங்கியவுடன் இறைநேசன் என்ற பெயரை உபயோகித்தேன்.ஆனால் இந்த அளவுக்கு கீழ்தரமான எழுத்தாளருடைய பெயர் என்று அறிந்தவுடன் வெட்கப்பட்டேன்.அந்த பெயரை உடனடியாக மாற்றிவிட்டேன்.

ஆனால் வேண்டும் என்றே போலி பெயர்கள் வைக்க முதலில் ஆரம்பித்தவர்கள் முஸ்லீம்கள் தாம்.நேசமுடன் இஸ்லாம் என்ற பெயரில் முதலில் நேசகுமார் அவர்களின் தளம் இருக்கும் போது ஒரே ஒரு h போட்டு போலி உருவாக்கியது உங்கள் ஆட்கள் தான்.

ஏதோ நான் எழுதியது கிறிஸ்தவர்களுக்கும்,முஸ்லீம்களுக்கும் சண்டை மூட்டி விடுவதாக எழுதினீர்கள்.இணையத்தில் ஈசாக்கும்,இஸ்மாவெலுக்கும் நடக்கும் சண்டை சின்னக்குழந்தைக்கு கூட தெரியும்.

//முஸ்லிம்களோ கிறிஸ்தவர்களோ தங்களதுக் கொள்கைகளை, மதத்தைப் பரப்ப எப்பொழுதும் நேரடியாகத் தங்களது வேதங்களில் இருந்து ஆதாரங்களை வைத்தே பிரச்சாரம் செய்வர். இந்தச் சாதாரண விஷயத்தைக் கூடப் புரிந்துக் கொள்ள இயலாத அளவிற்கு நாம் விவரம் கெட்டப் பன்னாடை ஜாட்டான்களைச் சேர்ந்த அறிவிலி அல்ல//

இதிலிருந்தே தெரிகிற்து நீங்கள் ஒரு அறிவிலி என்று.இணையத்தில் எங்கு பார்த்தாலும் மற்ற மதங்களின் வேதங்களுக்கு தவறான அர்த்தம் கொடுத்து அதை திரித்து எழுதும் இஸ்லாமிய வலைதளங்களை நீண்ட பட்டியல் போடலாம்.உதாரணத்துக்கு ஒன்று;http://www.tamilmuslim.com/piramathangak/piramatangal3- 4.htm.

இதற்கு மறுப்பு தெரிவித்து வெளியான கட்டுரைகள்;

1,தமிழ் முஸ்லீம் தளமும், ” அல்லேலூயாவார்த்தையும்

http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/tamilmuslim/alleluyamuslim.htm

2,தமிழ் இஸ்லாம் தளத்துக்கு கேள்வி .புத்தர் சொன்னது சரி என்று பத்வா விடுவீர்களா ?

http://unmaiadiyann.blogspot.com/2007/10/blog-post_4338.html

இதை எல்லாம் அறியாத நீங்கள் என்னை அறிவிலி என்று சொல்லுவது உங்கள் அறிவை உலகுக்கு அடையாளம் கண்பிக்கிறது.நீங்கள் நினைப்பது போல் நான் எந்த பார்பனீய பின்னனியத்திலும் இல்லை.ஒரு உண்மை கிறிஸ்தவன்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இறைநேசன், இஸ்லாம், கிறிஸ்தவம், குரான், முகமது

இஸ்லாம் இணைய பேரவைக்கு பகிரங்க எழுத்து வடிவ விவாத அழைப்பிதழ்.(உமர்,உண்மை அடியான்,மற்றும் குழுவினர்)

அருமை இணைய வாசகர்களே,உண்மை தெய்வம் இயேசுகிறிஸ்துவையும்,அவருடைய சிலுவை மரணத்தையும் மறுதலிக்கும் நோக்கில் உலகில் தோற்றுவிக்கப்பட்ட வழிகளில் இஸ்லாமும் ஒன்று .இயேசு போதித்த அன்பு,பரிசுத்தம் இவை அனைத்துக்கும் கொஞ்சமும் இடம் இல்லாமல் உருவாக்கப்பட்ட மதம் இஸ்லாம் .அதை உலக மக்கள் அனைவரும் அறிந்துள்ளனர்.

ஆனால் ஒரு சில இஸ்லாமியர்களின் புரட்டுகளை நம்பி ஒரு சிலர் முஸ்லீம்களாக மாறுவது நடக்கத்தான் செய்கிறது.ஆனால் அப்படி மாறினவர்கள் எலிப் பொரியில் மாட்டினவர்களாய் வெளியே வரவும் முடியாமல் ,உள்ளே இருக்கவும் முடியாமல் தவிக்கிறாவ்ர்கர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள்.அப்படிப்பட்ட இவர்கள் முகத்தில் கரி பூசும் வகையில் கடந்த ஆறு மாதகாலமாக அவர்களின் அனைத்து தாக்குதல்களுக்கும் இணையத்தில் பதில் சொல்லப்பட்டு வருகிறது .ஆனால் கடந்த ஒரு சில நாட்களுக்கு நம்முடைய உண்மை அடியான் தளத்திலும்,மற்ற ஒரு தளத்திலும் ஒரு ஹதீஸ் பற்றிய செய்தி வெளியிட்டு இருந்தோம் .அதில் முகமதுவை திட்டியதற்காக கர்பிணிப்பெண்ணைக் கொலை செய்தவனுக்கு மண்ணிப்பு வழங்கி தன் கோர முகத்தை உலகத்துக்கு பதிவு செய்த முகமதுவை அடையாளம் காட்டினோம் .

தொடுப்பு;http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=8694#8694
அதற்கு பதில் அளித்த இஸ்லாம் இணைய பேரவை என்ற இணையம்
அப்படியே எல்லா முஸ்லீம்களும் நபியை திட்டினால் கொலையா செய்கிறார்கள் ,அப்படி கொலை செய்வதாக இருந்தால் இணையத்தில் இஸ்லாமுக்கு எதிராக விமர்ச்சனம் செய்யும் எல்லோரையும் தீர்த்துக்கட்டியிருப்போம் அல்லவா? என்பது போல் மிரட்டல் தொனியில் பேசிவிட்டுமுகமது வெறும் இறைத்தூதர் மட்டும் அல்ல அவர் ஒரு னாட்டை ஆளுபவர்.நாட்டை ஆள்கிறவர்களை யார் திட்டினாலும் சும்மா இருக்க மாட்டார்கள்என்றெல்லாம் சொல்லி ஒரு ஹதீஸை ஆதாரமாக வைத்தார்கள்.
அதன் தொடுப்பு;http://www.iiponline.org/
ஆனால் அவர்கள் வைத்த ஹதீஸ் அவர்களுக்கு வினையாக முடிந்தது
.ஏன் என்றால் அவர்களின் முதல் ,மற்றும் இரண்டாவது கலிபாக்களே முகமதுவை திட்டுகிறவர்களை கொல்ல வேண்டும் என்று சொல்லுவதை காண முடிந்தது.மேலும் ஆளுகிற கலிபாவை திட்டினால் கூட பொருத்துக்கொள்ள வேண்டும் முகமதுவை திட்டினால் பொருக்க கூடாது என்பதையும் அந்த ஹதீஸ் எடுத்துக்காட்டுவதை நாம் சுட்டினோம் .
அந்த ஹதீஸ்:

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அபூபக்கர் (ரழி) ஆட்சி காலத்தில் இதே போன்று ஒருவன் அபூபக்கர் (ரழி) அவர்களை திட்டிக் கொண்டே இருந்தான். அப்போது உமர் (ரழி) அவர்கள் அவனுக்கு மரணதண்டனை அளிக்குமாறு ஆட்சித் தலைவராக இருந்த அபூபக்கர் (ரழி) அவர்களிடம் முறையிடுகிறார்கள். அப்போது அபூபக்கர் (ரழி) அவர்கள் மரணதண்டனை என்பது நபிகளாரை விமர்ச்சித்தால்தான் என்று விளக்கி விடுகிறார்கள். (பார்க்க : அபூதாவூது 4349).

அதற்கு சரியான பதிலை தராத அந்த இணையம் நம்மை நேரடி விவாதத்துக்கு அழைத்துள்ளது.

ஆனால் நேரடி விவாதம் என்பதெல்லாம் கதைக்கு உதாவது என்பதால் அதை நான் ஏற்க வில்லை

,ஆனால் நண்பர் உமர் அவர்களும்,நானும் எழுத்து வடிவ விவாதத்துக்கு இஸ்லாமிய இணைய பேரவைக்கு அழைப்பு விடுகிறோம். தாங்கள் பின்பற்றுவது உண்மையான மார்கம் என்று நம்புவார்களானால்,தைரியம் இருந்தால் நம் அழைப்பை ஏற்று எழுத்து விவாதத்துக்கு வரட்டும் .நாங்கள் தயார்.அவர்கள்…..?

அருமை இஸ்லாமிய இணய பேரவை நண்பர்களுக்கு

,உங்களின் நேரடி விவாத அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றோம்.ஆனால் நேரடி விவாதத்துக்கு எங்களால் வர இயலாது.அதற்கான காரணங்களை உமர் அவர்கள் கீழே விளக்கியுள்ளார்.

நாங்கள் உங்களுக்கு ஒரு அழைப்பிதழ் கொடுக்கிறோம்
.எழுத்து வடிவ விவாதத்துக்கு நாங்கள் தயாராக உள்ளோம்,நீங்கள் உண்மையை வைத்திருந்தால் எங்களுடன் விவாதத்துக்கு வாருங்கள். உங்களின் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல எங்கள் குழு தயாராக உள்ளது.
ஏற்கனவே உமர் அவர்கள் அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.அதன் தொடுப்பு; http://unmaiadiyann.blogspot.com/2007/11/blog-post_20.html

ஏன் எங்களால் நேரடி விவாதத்துக்கு வரமுடியாது,


விளக்கம் உமர்

நான் ஏற்கனவே “ஈஸா குர்‍ ஆன் தளத்தின்” சார்ப்பில் “ஒரு எழுத்து” விவாதத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தேன். ஆனால், அதற்கு இது வரை பதில் வரவில்லை.

ஆனால், இப்போது ஒரு மேடை விவாதத்திற்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். இதை முக்கியமாக “உண்மையடியானுக்கு” விடுத்துள்ளார்கள், அதே நேரத்தில் இவ்விவாத அழைப்பு எல்லாக்கும் என்றும் சொல்லியுள்ளார்கள்.

இவ்விவாத அழைப்பிற்கு ஈஸா குர்‍ ஆனின் பதில்:

நான் எழுத்து விவாதத்தை மட்டுமே ஏற்றுக்கொள்கிறேன். மேடை விவாதத்திற்கு என்னால் வரமுடியாது. எழுத்து விவாதத்திற்கு விருப்பமிருந்தால், நான் விவாதிக்க தயார்.

நேரடி மேடை விவாதத்திற்கு ஈஸா குர்‍ஆன் வராததிற்கு காரணங்கள்:

1. நான் ஒரு முழு நேர ஊழியன் கிடையாது, வாரம் ஒரு நாள் எனக்கு கிடைக்கும் ஒரு சில மணித்துளிகளை நான் என் கட்டுரைகளுக்கு பயன்படுத்துகிறேன். எனவே, மேடை விவாதத்திற்கு என்னால் வரமுடியாது.

2. மேடை விவாதத்தில் “முஸ்லீம்கள்” முன்வைக்கும் ஆதாரங்கள் உணமையா பொய்யா? என்று என்னால் கண்டுபிடிக்க முடியாது. இதுவே எழுத்து விவாதமாக‌ இருந்தால், எனக்கு அதிக நேரமிருக்கும் அந்த நேரத்தில் என்னால் சில விவரங்களை கண்டுபிடிக்கமுடியும்.

(சில முஸ்லீம் அறிஞர்கள் சொல்லும் விவரங்கள் நிச்சயமாக உண்மையாக இருக்கும் என்று நமப நான் தயாராக இல்லை, அது ஜாகிர் நாயக் அவர்களாக , ஜைனுல் ஆபீதீன் அவர்களாக அல்லது மற்ற யாராக இருந்தாலும் சரி. நாங்கள் சொல்வதை ஏன் நம்பமாட்டீர்கள்? என்று கேட்காதீர்கள். காரணம், உங்கள் உயிரினும் மேலான முகமதுவின் வார்த்தைகளையே நாங்கள் நம்பவில்லை என்று தான் இந்த இக்கட்டுரைகள் எழுதப்படுகின்றன, அப்படி இருக்கும் போது உங்களை எப்படி நம்பமுடியும்? நூலையே நாங்கள் நம்பவில்லை அப்படியிருக்கும் போது, சேலையை எப்படி நம்புவது. அந்த நூலில் நெய்த சேலை தானே இதுவும்.)

3. மேடை விவாதத்தில் விவாதிக்கும் அளவிற்கு பேச்சாற்றல் பெற்றவன் அல்ல நான். அவ்வளவு அறிவு கூட எனக்கு இல்லை. மேடை பேச்சுக்கு அனுபவம் அதிகம் வேண்டும். அது எனக்கு இல்லை. எனவே, எழுத்து வடிவ விவாதமே எனக்கு சரியானது.

4. மேடையில் பேசும் போது, என் மீது ஒருவன் கல்லெடுத்து எரிவான், எனக்கு காயம் உண்டாகும். அதற்கு உங்கள் பதில் என்ன இருக்கும்? “, அவனுக்கு மார்க்க அறிவு கிடையாது, அதனால் தான் உன் மீது கல்லெரிந்தான்” என்று சொல்லி தப்பித்துக்கொள்வீர்கள்.

5. கடைசியாக இஸ்லாம் ‍கிறிஸ்தவ விவாதம் என்பது ஒரு நாளில் பல மணிகள் மேடையில் பேசினால் தீர்ந்துவிடும் விசயம் இல்லை. இதற்கு பல ஆதாரங்களை முன்வைக்கவேண்டும், பல விவரங்களை, புத்தகங்களை படித்து தெரிந்துக்கொள்ளவேண்டும். மேடை விவாதத்தில் இதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்காது.

எனவே, எழுத்து வடிவ விவாதத்திற்கு சரி என்றுச் சொன்னால், நான் தயாராக உள்ளேன்.

எப்போது ஆரம்பிக்கலாம்? ( நான் மட்டும் 6 மாதத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டேன்)

மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கொள்ளுங்கள்(மகொமவா):

அருமையான இஸ்லாமிய நண்பர்களே, முதலாவது மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கொள்ளுங்கள்:

1. நோயாளிகள்
2. தொடை நடுங்கிகள்.
3. பேடிகள்

என்று மரியாதை இல்லாமல் எழுதாதீர்கள்.

யாருக்கு தொடை நடுங்கிக்கொண்டு இருக்கிறது என்று கடந்த 6 மாதமாகவே எல்லாருக்கும் தெரியும்.

உங்கள் மார்கத்தை விமர்சித்தால், உடனே இப்படிப்பட்ட வார்த்தைகளை பேசுவீர்களோ?

உங்களால் முடிந்தால், இஸ்லாமிடம் ஆதாரம் இருந்தால் எங்கள் கட்டுரைகளுக்கு அதாரபூர்வமாக பதில் கொடுங்கள். அது உண்மையாகவே ஆதாரமாக இருந்தால், எங்கள் முகத்தில் அதுவே கரியை பூசிவிடும். எங்கள் கட்டுரைகளையும் உங்கள் கட்டுரைகளையும் படிப்பவர்கள் புரிந்துக்கொள்வார்கள் யார் சொலவது உண்மை என்று.ச் அதை விடுத்து, இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.

இஸ்லாமை விமர்சித்தால் இப்படி எழுதுகிறீர்களே, கிறிஸ்தவத்தை நீங்கள் விமர்சிக்கிறீர்களே, இயேசுவைப்பற்றி பொய்யையும், அவதூறையும் அள்ளி வீசுகிறீர்களே, நாங்கள் எப்படி சொல்வது? உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா?

நீங்கள் நோயாளிகளாக இல்லாமல் இருந்தால்,
உங்கள் தொடைகள் நடுங்காமல் இருந்தால்,
நீங்கள் பேடிகள் இல்லாமல் இருந்தால்,

என்னோடு “எழுத்து வடிவ விவாததிற்கு வாருங்கள்”.

நான் இஸ்லாமிய உலக செய்திகளை என் தளங்களில் பெரும்பான்மையாக பதிக்க முயற்சி எடுப்பதில்லை. நான் இஸ்லாமியர்களுக்கு பதில் எழுதவில்லை, இஸ்லாமுக்கு பதில் எழுதுகிறேன். என் தளத்தில் பல கட்டுரைகள் உள்ளன. அவைகளுக்கு பதில் சொல்லுங்கள்.

உங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டு பொய் என்று நிருபிக்க, மேடை விவாதம் மூலமாகத்தான் தீர்வு காணவேண்டும் என்பதில்லை, எழுத்து விவாதம் மூலமாகவும் செய்யலாம், உங்களால் முடிந்தால்?

இஸ்லாமை உண்மை என்று நிருபிக்க ஒரு வாய்ப்பு,
முகமது ஒரு நபி என்று நிருபிக்க ஒரு வாய்ப்பு, உங்கள் முன்பு உள்ளது, அதை பயன்படுத்திக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

நேரடி விவாததிற்கு என் இயலாமையை நான் சொல்லிவிட்டேன், “நாங்கள் நேரடி விவாதத்திற்கு அழைத்தால், கிறிஸ்தவர்கள் வரவில்லை” என்று ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்காதீர்கள். உங்களால் முடிந்தால், எழுத்துவிவாதத்திற்கு வரவும்.

“இலவசமாக தளம் வருகிறது என்று எழுதுகிறார்கள்” என்று குற்றம் சாட்டுகிறீர்களே. ஒரு வேளை பணம் கொடுத்து சொந்த தளத்தில் என் கட்டுரைகளை பதித்து விட்டால் பதில் சொல்லிவிட்டு இருப்பீர்களோ? தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில் என் கட்டுரைகள் அனைத்தும் உள்ளது. அந்த தளம் “பணம்” கொடுத்து வாங்கியது தான். அதற்கு பதில் சொல்லவேண்டியது தானே?

“நாட்டியம் ஆடத்தெரியாதவளுக்கு ஆடச்சொன்னால், மேடை சரியில்லை என்று சொன்னாளாம் ஒருத்தி” அது மாதிரி உள்ளது உங்கள் கேள்விகள்.

எழுத்து விவாதத்திற்கு தயாரா? நான் ரெடி அப்ப நீங்க?

=================================
Joke of the year 2008:
ஒரு முஸ்லீம் மற்றவனை தீவிரவாதி என்பது நகைச்சுவை இல்லையா?

நமது இணையதளத்தை தாக்கி அழித்திடும் நோக்கில் 3 மாதங்களுக்கு முன்னர் ஒன்றரைலட்சம் ஹிட்ஸ் அடித்து வெறுத்துப் போன தீவிரவாதிகளுக்கும் பொருந்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
=================================
http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=8736#8736

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இணைய பேரவை, இஸ்லாம், குரான், முகமது, விவாதம்

உண்மை அடியானின் பதிவுக்கு கேள்வி கேட்டவருக்கு தமிழ் கிறிஸ்தவ இணையத்தில் பதில்

 
http://thamilislam.blogspot.com/2008/01/blog-post_11.html  இந்த பதில் வந்த உண்மை அடியானின் கட்டுரைக்கு ஒரு பிண்ணூட்டம் வந்து இருந்தது.அதை தமிழ் கிறிஸ்தவர்கள் இணையத்தில் பதித்து இருந்தேன்.
 
 
 
//என் தளத்தில் பதிக்கப்பட்டு இருந்த உண்மை அடியானின் கட்டுரைக்கு ஒரு பிண்ணூட்டம் வந்துள்ளது.

//Dhaasan said…
Dear Friend,

You have abused and blamed Mohammed for manything. None of them have been clarifid with single aunthetic evidence.

Your arquement are just doing "Nunippul Meithal". Not deeply analysing or crisising the matter. You arquement should have aunthetic evedence from Quran and prophet's hathiz.

January 19, 2008 7:38 AM//

http://thamilislam.blogspot.com/2008/01/blog-post_11.html//

 
அதற்கு அந்த தளத்தின் நண்பர் பதில் அளித்து உள்ளார்.அதை கீழே காணலாம்.
 
 
அப்படியா! சரி, இங்கு சிலர் "நுணிப்புல் அல்ல" புல்லின் அடிவரை மேய்ந்து உள்ளார்கள், அதாவது ஹதீஸ்களின், குர்‍ஆனின் உதவியுடன் சில கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். இக்கட்டுரையை படித்து இவர்கள் அடிப்புல் வரை மேய்ந்துள்ளார்களா? என்பதை கண்டுபிடித்து பதில் சொல்லுங்கள்:

1. An Examination of Muhammad’s Marriage to a Prepubescent Girl And Its Moral Implications ( http://www.answering-islam.org/Shamoun/prepubescent.htm )


2. Banish Them to Their Beds and Scourge Them!
Muhammad’s Low Opinion of Women
(
http://www.answering-islam.org/Authors/Wood/women.htm )

3. Muhammad's Sexual Prowess( http://www.answering-islam.org/Muhammad/sex_superman.html )

4. Why Did Mohammed Get So Many Wives?
(
http://www.muslimhope.com/WhyDidMohammedGetSoManyWives.htm )

இந்த கடைசிக்கட்டுரையில் முகமதுவின் வாழ்க்கை வரலாறு நூல்களையும், ஹதீஸ்களையும் பயன்படுத்தி 30 பெண்களைப்பற்றி சொல்லப்பட்டுள்ளது. இவர்கள் பற்றிய ஹதீஸ் எண்கள, மற்றும் சீராவின் ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இக்கட்டுரை முகமதுவோடு சம்மந்தப்பட்ட பெண்களை மூன்றாக பிரிக்கிறது.

1. மனைவிகள்
2. அடிமைகள், மறுமனையாட்டிகள் ('slaves / concubines')
3. இதர உறவுமுறைகள் ('uncertain relationship')

இவைகளை படித்து இவைகள் சரியானவையா இல்லையா? என்பதைப்பற்றி எழுதும்படி பின்னூட்டம் கொடுத்த நண்பரை கேட்டுக்கொள்கிறேன்.

1. மனைவிகள்

1. Khadija/Khadijah bint Khuwailid/Khywaylid – died first
2. Sauda/Sawda bint Zam?a
3. 'Aisha/Aesha/?A?ishah – 8 to 9 yrs old, 2nd wife
'Aisha's Slaves
'Aisha and the Battle of the Camel
4. Omm/?Umm Salama/Salamah
5. Hafsa/Hafsah
6. Zaynab/Zainab of Jahsh
7. Juwairiya/Jowayriya bint Harith
9. Safiya/Safiyya bint Huyai/Huyayy bint Akhtab
10. Maymuna/Maimuna of Hareth
11. Fatima/Fatema/Fatimah
12. Hend/Hind
13. Asma of Saba (Sana bint Asma')
14. Zaynab of Khozayma
15. Habla?
16. Divorced Asma of Noman / bint al-Nu?man

'slaves / concubines'
2. அடிமைகள், மறுமனையாட்டிகள்

17. Mary the Copt/Christian
18. Rayhana/Raihana/Rayhanah bint Zayd/Zaid

'uncertain relationship'
3. இதர உறவுமுறைகள்

19. Divorced Omm Sharik
20. Maymuna/Maimuna (slave girl?)
21. Zaynab/Zainab the third?
22. Khawla / Khawlah
23. Divorced Mulaykah bint Dawud
24. Divorced al-Shanba? bint ?Amr
25. Divorced al-?Aliyyah
26. Divorced ?Amrah bint Yazid
27. Divorced an Unnamed Woman
28. Qutaylah bint Qays (died right away)
29. Sana bint Sufyan
30. Sharaf bint Khalifah
31. Women of Mohammed?s Right Hand
Mohammed Turned Some Women Down
Some Women Turned Mohammed Down

 
 
 
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இஸ்லாம், உண்மைஅடியான், குரான், முகமது, முஸ்லீம்