Daily Archives: மே 4, 2008

கண்டிப்பா இவைகளை எல்லாம் நான் சொல்லவில்லை

விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள்  
  

  
 
1. ராபர்ட் மேயர் – ஆற்றல் அழிவின்மை விதி.

2. வோலர் – ïரியா.

3. பிராஸ் – கந்தகம் பிரித்தெடுத்தல்.

4. பிராண்ட் – பாஸ்பரஸ்.

5. சாட்விக் – நிïட்ரான்.

6. ரூதர்போர்டு- புரோட்டான்.

7. ஜே.ஜே.தாம்சன்-எலக்ட்ரான்.

8. ஜான் டால்டன் – அணுக்கொள்கை.

9. சார்லஸ் பாயில்ஸ் – வாயு விதிகள்.

10. சர்ஐசக் நிïட்டன் -புவி ஈர்ப்பு விசை.

தொகுப்பு: சு.ஷீபா ஞான வின்சா, டோனாவூர்.
 
http://www.dailythanthi.com

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஜான் டால்டன், பிராஸ், புவி ஈர்ப்பு விசை, ராபர்ட் மேயர்

தங்கம் என்பது ரகசியமல்ல என்பதை சொன்ன நம்பமாட்டிங்க

தங்க ரகசியம் 
  
 
 
1. பூமியில் தனித்து வெட்டி எடுக்கப்படும் ஒரே உலோகம்? – தங்கம்.

2. தங்கத்தின் தரத்தை அளவிடும் அலகு? – காரட்.

3. சுத்தமான தங்கம் என்பது…? – 24 காரட் தங்கம்.

4. ராஜதிராவகத்தினுள் தங்கத்தை போட்டால்…?- கரையும்.

5. திரவத் தங்கம்? – பெட்ரோல்.

6. வெள்ளைத் தங்கம்? – பருத்தி.

7. கருப்புத் தங்கம்? – நிலக்கரி.

ஆ.பெலிக்ஸ், மைக்கேல்புரம். 
 
http://www.dailythanthi.com/

2 பின்னூட்டங்கள்

Filed under காரட் தங்கம், தங்கம், திரவத் தங்கம், வெள்ளைத் தங்கம்

இவர்கள் எழுத்தாளர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

தெரிந்து கொள்ளுங்கள்  
  

  
 
1. `சக்கரவர்த்தி திருமகன்' என்ற நூலின் ஆசிரியர்? – ராஜாஜி.

2. செம்மீன் என்ற நாவலை எழுதியவர்? – தகழி சிவசங்கரன் பிள்ளை.

3. கடல் புறா என்னும் நாவலை எழுதியவர்? – சாண்டில்யன்.

4. `இந்தியன் பிலாசபி' என்ற நூலை எழுதியவர்? – டாக்டர் ராதாகிருஷ்ணன்.

5. நெஞ்சுக்கு நீதி என்ற நூலை எழுதியவர்? – மு.கருணாநிதி.

6. மோகமுள் என்ற நாவலை எழுதியவர்? – ஜானகிராமன்.

7. சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர நூல்களின் ஆசிரியர்? – கல்கி.

8. சமீபத்தில் ஞானபீட விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்? – ஜெயகாந்தன்.

9. பத்திரிகை துறையில் பயன்படுத்தும் ஏ.பி.சி. என்ற எழுத்துக்கள் விவரிக்கும் வார்த்தைகள்…? – ஆடிட் பிïரோ ஆப் சர்க்குலேசன்.

10. லஜ்ஜா என்ற நூலை இயற்றிய பெண் எழுத்தாளர்? – தஸ்லிமா நஸ்ரீன்.

 
http://www.dailythanthi.com

பின்னூட்டமொன்றை இடுக

Filed under எழுத்தாளர்கள், டாக்டர் ராதாகிருஷ்ண, பிலாசபி

ஆசி வழங்க சென்றபோது போப் ஜான்பால் சுடப்பட்டார்

 

ஆசி வழங்க சென்றபோது போப் ஜான்பால் சுடப்பட்டார்
 

ஆசி வழங்க சென்றபோது போப் ஜான்பால் சுடப்பட்டார் துருக்கி வாலிபன் கைது

ÚT֐ BPYŸ CWPÖY‰ ^ÖÁTÖ¥

 

போப் ஆண்டவரை, துருக்கி இளைஞன் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அடையச் செய்தது.

உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் ஆண்டவரின் ஆட்சியின் கீழ் இருக்கும் வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில், முக்கிய பண்டிகைகளின்போது விசேஷ பூஜை _ பிரார்த்தனை கூட்டம் போன்றவை நடைபெறுவது வழக்கம். இதில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் செல்வார்கள்.

 
போப் ஆண்டவர் இரண்டாவது ஜான்பால்
இந்த விசேஷ பிரார்த்தனையில் போப் ஆண்டவர் கலந்து கொள்வார். பொதுமக்களுக்கு ஆசி வழங்குவார்.

சுடப்பட்டார்

அதுபோல, போப் ஆண்டவர் இரண்டாம் ஜான்பால் 1981_ம் ஆண்டு மே 13_ந்தேதி செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்துக்கு காரில் சென்றார். அங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தார்கள்.

கூட்டத்தில் இருந்த ஒரு மர்ம மனிதன் போப் ஆண்டவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். போப் ஆண்டவரின் வயிற்றில் 2 குண்டு பாய்ந்தது. இன்னொரு குண்டு கழுத்து அருகே பாய்ந்தது.

குண்டு பாய்ந்த இடங்களில் இருந்து ரத்தம் சொட்ட, போப் ஆண்டவர் மயங்கி விழுந்தார். அருகில் இருந்த உதவி யாளர்கள் அவரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டார்கள்.
 
 

உடனே காரில் ஏற்றி, ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு போப் ஆண்டவரின் வயிற்றிலும், குண்டு பாய்ந்த மற்ற இடங்களிலும் 2 மணி நேரம் அவசர ஆபரேஷன் நடந்தது.

பிரார்த்தனை

போப் ஆண்டவர் சுடப்பட்டதும் வாடிகன் நகர் டெலிவிஷனிலும், ரேடியோவிலும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

"போப் ஆண்டவர் சுடப்பட்டார். அவர் உயிர் பிழைக்க பிரார்த்தனை செய்யுங்கள்" என்று டெலிவிஷனிலும், ரேடியோவிலும் வேண்டுகோள்விடப்பட்டது. போப் ஆண்டவரை தரிசிக்கக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் அவர் சுடப்பட்டதை அறிந்து கதறி அழுதனர். மண்டியிட்டு அமர்ந்து, பிரார்த்தனை செய்தனர்.

போப் ஆண்டவரை நோக்கி சுட்டதில் 2 குண்டுகள் குறி தவறி கூட்டத்தில் இருந்த 2 பெண்கள் மீது பாய்ந்தன. அதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆன் ஓடர் (வயது 60), ஜமைக்காவைச் சேர்ந்த ரோஸ் ஹால் (21) என்பவரும் காயம் அடைந்தனர். அவர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்கள்.

முதல் தடவை

போப் ஆண்டவர் சுடப்படுவது வரலாற்றிலேயே இதுதான் முதல் தடவை.

இதற்கு முன் 1970_ம் ஆண்டில் அப்போதைய போப் ஆண்டவர் (6_வது போப்பால்) பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றபோது அவரை கத்தியால் குத்த முயற்சி நடந்தது. ஆனால் மயிரிழையில் தப்பிவிட்டார்.

போப் ஆண்டவர் சுடப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டு, பிரதமர் இந்திராகாந்தி அதிர்ச்சி அடைந்தார். இந்த வன்முறை சம்பவத்துக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். இதேபோல உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்தும் மருத்துவ நிபுணர்கள் சென்று போப் ஆண்டவருக்கு சிகிச்சை அளித்தார்கள். தொடக்கத்தில் மிகவும் அபாய கட்டத்தில் இருந்த போப் ஆண்டவர், மெல்ல மெல்ல உடல் நலம் தேறி பூரண குணம் அடைந்தார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது அவர் தனது 61_வது பிறந்த நாளையும் கொண்டாடினார். போப் ஆண்ட வரை சுட்டவன், சம்பவ இடத்திலேயே பிடிபட்டான். அவனை போலீசார் கைது செய்தனர்.

அவனுடைய பெயர் முகமது அலி அகா. துருக்கி நாட்டைச் சேர்ந்தவன். 23 வயது இளைஞனான அவன், பயங்கரவாத கூட்டத்தைச் சேர்ந்தவன். துருக்கியில் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு சிறையில் இருந்தான். போப் ஆண்டவரை கொலை செய்ய, அவன் ஜெயிலில் இருந்தபோதே திட்டமிட்டு இருக்கிறான். "போப் ஆண்டவரை கொலை செய்வேன்" என்று கடிதம் எழுதி வைத்து விட்டு சிறையில் இருந்து தப்பினான். பல மாதங்கள் தலைமறைவாக திரிந்து பிறகு வாடிகன் நகரில் போப் ஆண்டவரை சுட்டான்..

CWPÖY‰ ^ÖÁTÖ¥ ‰TÖefVÖ¥ rPTyPÚTÖ‰.

 
இரண்டாவது ஜான்பால் துப்பாக்கியால் சுடப்பட்டபோது.
முகமது அலியிடம் ரோம் நகர போலீசார் விசாரணை நடத்தினார்கள். "யாருடைய தூண்டுதலின் பேரிலும் நான் போப் ஆண்டவரை சுடவில்லை. நானாகவேதான் அதைச்செய்தேன்" என்று அவன் போலீசாரிடம் தெரிவித்தான்.

மன்னிப்பு

தன்னை சுட்டவனை மன்னித்து விட்டதாக போப் ஆண்டவர் அறிவித்தார். அவர் மக்களுக்கு ஒரு செய்தி விடுத்தார். அவருடைய பேச்சு பதிவு செய்யப்பட்டு வாடிகன் ரேடியோவில் ஒலிபரப்பப்பட்டது.

அதில், "என்னுடன் இருப்பவர்களுக்கும், எனக்காக பிரார்த்தனை செய்பவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். என்னுடன் காயம் அடைந்த 2 பேருக்கும் நான் பிரார்த்தனை செய்கிறேன். என்னைத் தாக்கிய சகோதரனை நான் முழுமையாக மன்னித்து விட்டேன். அவனுக்கும் பிரார்த்தனை செய்கிறேன்" என்று போப் ஆண்டவர் கூறியிருந்தார்.

போப் ஆண்டவர் ஜான்பால் குணம் அடைந்து திரும்பியதும் முகமது அலி அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைக்கு சென்று அவனை சந்தித்து பேசினார். அவனுக்காக பிரார்த்தனை நடத்தினார்.
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under துருக்கி, போப் ஜான் பால், முகமது அலி

இந்தியர்களை விட 5 மடங்கு அதிகம் தின்னும் அமெரிக்கர்கள்; புள்ளி விவரம் அம்பலம்

புஷ் சொன்னது தவறான தகவல்: இந்தியர்களை விட 5 மடங்கு அதிகம் சாப்பிடும் அமெரிக்கர்கள்; புள்ளி விவரம் அம்பலம்

புதுடெல்லி, மே. 4-

அமெரிக்க அதிபர் புஷ் விலைவாசி உயர்வு பற்றி கருத்து தெரிவிக்கையில் இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் இப்போது வருமானம் அதிகமாகி விட்டது. எனவே அதிகமாக சாப்பிடுகிறார்கள். இதனால் உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்து விட்டது என்று கூறி இருந்தார்.

ஆனால் இது உண்மை அல்ல. இந்தியர்களை விட அமெரிக்கர்கள் அதிகம் சாப்பிடுகிறார்கள் என்று புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது எந்த உணவு பொருளை எடுத்துக் கொண்டாலும் இந்தியர்களை விட அமெரிக்கர்கள் 5 மடங்குக்கு மேல் அதிகம் சாப்பிடுகின்றனர்.

இந்தியாவில் சராசரியாக ஒருவர் வருடத்துக்கு 178 கிலோ தானியம் சாப்பிடுகிறார். ஆனால் அமெரிக்காகாரர் 1046 கிலோ தானியம் சாப்பிடுகிறார். ஐரோப்பியர் சாப்பிடும் தானியத்தை விட 2 மடங்கு அதிகம் அமெரிக்கர் சாப்பிடுகிறாராம். ஒரு ஆண்டுக்கு முன்பு வரை அமெரிக்காவில் 946 கிலோ தானியம்தான் சாப்பிட்டுள்ளனர். கடந்த ஆண்டுதான் 1046 கிலோ ஆக அதிகரித்து உள்ளது.

அமெரிக்கர் ஒரு ஆண்டுக்கு 78 கிலோ பால் சாப்பிடுகிறார். இதன் அளவு இந்தியாவில் 36 கிலோவாகவும், சீனாவில் 11 கிலோவாகவும் இருந்தது.

தாவர எண்ணையை பொறுத்தவரை அமெரிக் கர் 41கிலோ. இந்தியர் 11 கிலோவும் சாப்பிடுகின்றனர்.

அமெரிக்காகாரர் ஒவ்வொரு ஆண்டு 42.6 கிலோ மாட்டிறைச்சி 45.1 கிலோ கோழி இறைச்சி சாப்பிடுகிறார். ஆனால் இந்தியர் 1.6 கிலோ ஆட்டிறைச்சி 1.9 கிலோ கோழி இறைச்சி மட்டுமே சாப்பிடுகிறார். இது போல் அமெரிக்கர் 29.7 கிலோ பன்றி இறைச்சியும் சாப்பிடுகிறார். இந்தியாவில் பன்றி இறைச்சி சாப்பிடுவது மிக குறைவு.
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under 1046 கிலோ, அமெரிக்கர்கள், இந்தியர், பன்றி இறைச்சி

"இந்தியாவிலேயே உயர்ந்த மனிதர்”- ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான்

`தசாவதாரம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்த ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், நிகழ்ச்சி முடிந்ததும் ஹாங்காங் புறப்பட தயாரானார்.

அவரிடம், “உங்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது'' என்று விழா குழுவினர் சார்பில் சொல்லப்பட்டது. ஜாக்கிசான் சிரித்துக்கொண்டே, “விருந்து எல்லாம் வேண்டாம்'' என்று கூறிவிட்டார்.

“விழா மேடையில், என்னைப்பற்றி முதல்-அமைச்சர் கருணாநிதி என்ன பேசினார்? என்பதை மட்டும் விசாரித்தார். அவருக்கு விளக்கம் சொல்லப்பட்டதும், “இந்தியாவிலேயே உயர்ந்த மனிதர், அவர்தான்'' என்று முதல்-அமைச்சர் கருணாநிதியை பாராட்டினார்!
 
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under முதல் அமைச்சர் கருண, ஹாலிவுட் நடிகர் ஜாக

இணைய தளங்களில் எளிமையான தேடலுக்கு வழிகள்

எளிமையான தேடலுக்கு

http://en.serchilo.net    
  
 
தேடல் வசதிகள் புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்படும் காலம் இது. நமக்கு தேவைப்படும் தகவலை, நாம் விரும்பும் இணையதளத்தில் இருந்து, உடனே பெறும் வசதியை அளிக்கும் இணையதளம் இது. உதாரணமாக சென்னையைப் பற்றி கூகுளில் தேட வேண்டும் என்றால், இந்த இணையதளத்திற்கு சென்று கீ g chennai என்று அளித்து, தேட வேண்டும். உடனே கூகுள் தேடலில் சென்னை சம்பந்தமான தேடலுக்கான பதில்கள் கிடைக்கும். சென்னையைப் பற்றி விக்கிபீடியா இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களை பெற w chennai என்று அளிக்க வேண்டும். gp chennai என்று அளித்து தேடினால், கூகுள் மேப்பில் சென்னை பற்றிய தகவல்கள் கிடைக்கும். a chennஎன்று தேடினால், சென்னை தொடர்பாக அமேசான் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள புத்தகங்கள் பற்றிய தகவல் கிடைக்கும். இப்படி விருப்பமான இணையதளத்தில் தேவையான தகவலை, நேரடியாக பெற விரும்புபவர்கள் பயன்படுத்தலாம். 
 

 

1 பின்னூட்டம்

Filed under இணைய தளம், கணினி, கணினி தொழில்நுற்பம், தேடுதல்

விலைவாசி உயர்வுக்கு இந்திய மக்கள் காரணமா?அமெரிக்க அதிபர் புஷ் கருத்து முற்றிலும் தவறானது-கண்டனம்

விலைவாசி உயர்வுக்கு இந்திய மக்கள் காரணமா?
அமெரிக்க அதிபர் புஷ் கருத்து முற்றிலும் தவறானது
காங்கிரஸ் – கம்ïனிஸ்டு கண்டனம்

புதுடெல்லி, மே.4-

விலைவாசி உயர்வுக்கு இந்தியர்கள் அதிகமாக சாப்பிடுவதே காரணம் என்று அதிபர் புஷ் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ், கம்ïனிஸ்டு உட்பட பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

விலைவாசி உயர்வு

அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இதே நிலைமை நீடிக்கிறது. விலைவாசியை கட்டுப்படுத்த தவறி விட்டதாக மத்திய அரசை கண்டித்து பாரதீய ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே இந்தியா மற்றும் சீனாவில் அதிக அளவில் உணவு பொருட்கள் பயன் படுத்துவதால் விலை அதிகரித்து விட்டதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி கண்டலீசா ரைஸ் தெரிவித்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்தியாவே காரணம்

இந்த நிலையில், வாஷிங்டன் அருகே ஒரு பொருளாதார மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் புஷ், `உலகம் முழுவதும் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள நடுத்தர மக்கள் அதிக அளவில் உணவு பொருட்களை சாப்பிடுவதால் அவற்றின் தேவை அதிகரித்து விலைவாசி உயர்ந்து விட்டது' என்றார்.

புஷ்சின் இந்த கருத்துக்கு காங்கிரஸ், பாரதீய ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறியதாவது:-

காங்கிரஸ் கண்டனம்

இந்தியாவில் உணவு பொருட்கள் பயன்படுத்துவதில் மாற்றம் ஏற்பட்டதாலேயே விலைவாசி அதிகரித்து விட்டதாக அதிபர் புஷ் கருதுவது முற்றிலும் தவறானது. இந்தியா, உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடு அல்ல. அது ஏற்றுமதி செய்யும் நாடு. வளர்ந்த நாடுகளில் பயோ-டீசல் உற்பத்திக்காக பெரும்பாலான விளைநிலங்களை ஒதுக்கியதே விலை உயர்வுக்கு முக்கிய காரணம் ஆகும்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியின்போது, இந்தியாவின் உணவு தன்னிறைவுக்காக முதலாவது பசுமைப் புரட்சி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் இருந்து இந்தியா பின்வாங்கவில்லை. இரண்டாவது பசுமை புரட்சி திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறது. அடுத்த 4 ஆண்டுகளில் வேளாண் உற்பத்தியை 4 சதவீதம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மணீஷ் திவாரி தெரிவித்தார்.

மத்திய மந்திரி தாக்கு

மத்திய வர்த்தக துறை இணை மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "அதிபர் புஷ்சுக்கு ஒருபோதும் பொருளாதார அறிவு சிறப்பாக இருந்தது கிடையாது. தற்போது, மீண்டும் ஒருமுறை அதை நிரூபித்து இருக்கிறார். இந்தியாவில் உணவு பொருட்களின் தேவை அதிகரித்துள்ளதால் உலக அளவில் விலைவாசி உயர்ந்து விட்டதாக கூறுவது முற்றிலும் தவறானது'' என்றார்.

பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

பாரதீய ஜனதா

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் மத்திய மந்திரிகளின் பொறுப்பற்ற அறிக்கைகளுக்கு அதிபர் புஷ், முழு வடிவம் கொடுத்து இருக்கிறார். விலைவாசி உயர்வு குறித்து மத்திய மந்திரி பிரபுல் படேல் கூறியபோது கூட, `மக்களின் உணவு பழக்க மாற்றத்தால் விலைவாசி அதிகரித்து விட்டது' என்று இதே போன்ற கருத்தை தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சி என்பது, அத்தியாவசிய பொருட்களின் அதிகப்படியான தேவையோடு இணைந்தது ஆகும். தேவையான அளவு உணவு பொருட்களை வினியோகம் செய்வதோடு, விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பதும் அரசின் பொறுப்பு.

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

இடதுசாரிகள்

இந்திய கம்ïனிஸ்டு தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா கூறுகையில், "இந்தியாவில் அதிக அளவு உணவு பொருட்கள் பயன்படுத்துவது குறித்து புஷ் எதுவும் சொல்லத் தேவையில்லை. அவருடைய நாட்டில் அவருக்கு நிலவும் பிரச்சினைகளை முதலில் கவனிக்க வேண்டும். இந்தியாவின் பிரச்சினையை நாங்களே சமாளிப்போம். இதுபோன்று அசிங்கமான முறையில், இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம்'' என்றார்.

மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், "உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்ததற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளே காரணம் என்று ஐ.நா.சபை தெளிவாக கூறியுள்ளது. எனவே, அதிபர் புஷ்சின் கருத்து முட்டாள்தனமானது'' என்று கூறினார்.

 

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=410584&disdate=5/4/2008

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அதிபர் புஷ், கம்ïனிஸ்டு, காங்கிரஸ், பாரதீய ஜனதா

`விலைவாசி உயர்வுக்கு இந்தியாவில் உள்ள நடுத்தர மக்களே காரணம்’அமெரிக்க அதிபர் புஷ் சொல்கிறார்

`விலைவாசி உயர்வுக்கு இந்தியாவில் உள்ள நடுத்தர மக்களே காரணம்'
அமெரிக்க அதிபர் புஷ் சொல்கிறார்

வாஷிங்டன், மே.4-

“இந்தியாவில் உள்ள நடுத்தர மக்கள், நல்ல தரமான உணவை உண்ண ஆரம்பித்ததால்தான் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து விட்டது'' என்று அமெரிக்க அதிபர் புஷ் தெரிவித்தார்.

அமெரிக்க மந்திரி பேச்சு

இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்திலும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதிலும் உணவுப் பொருட்களின் விளைச்சல் வெகுவாக குறைந்து விட்டது. கணிசமான அளவிலான உணவு பொருட்களை பயோ-டீசல் உற்பத்திக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

இதற்கிடையே, `இந்தியர்கள் அதிகமாக உணவு சாப்பிடுவதால்தான் தேவை அதிகரித்து விட்டது' என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி கண்டலீசா ரைஸ் கடந்த வாரம் தெரிவித்தார். இந்த நிலையில், வாஷிங்டன் அருகே மிசோரி என்ற இடத்தில் நடந்த பொருளாதார மாநாட்டில் அதிபர் புஷ் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியர்களே காரணம்

தற்போதைய விலைவாசி உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தபோதிலும் குறிப்பிடத்தக்க சில காரணங்களே முக்கியமானவை. உலகம் முழுவதும் உணவ பொருட்களின் தேவை அதிகரித்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் வளமான வாழ்க்கைக்கு திரும்பி விட்டன. இந்த நாடுகளில் பொருட்களை விற்பதற்கு பெரிய நாடுகள் கூட விரும்புகின்றன.

இந்தியாவில் உள்ள மக்களில் 35 கோடி பேர் நடுத்தர வர்க்கத்தினராக உள்ளனர். இது அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மக்கள் அனைவரும், வசதி வாய்ப்பு அதிகரித்ததும் தரமான, சத்தான உணவு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். அதனால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பயோ-டீசல் உற்பத்தி

அதுபோல பயோ-டீசல் உற்பத்திக்கு உணவு பொருட்களை பயன்படுத்துவதும் மற்றொரு காரணம் என்பதை மறுக்க முடியாது. எரிபொருட்களின் விலை கடுமையாக உயரும்போது இதை தவிர்க்க முடியாது. நீங்கள் ஒரு விவசாயியாக இருந்தால், உங்கள் விளை பொருட்களுக்கு அதிக விலை கிடைக்கும் இடத்தில்தானே விற்பனை செய்வீர்கள்.

ஆப்பிரிக்க Ö உள்ளிட்ட வளரும் நாடுகளில் அமெரிக்காவின் பொருளாதார கொள்கையை மாற்றி அமைக்க வேண்டிய பொறுப்பு வந்துள்ளதாக நான் கருதுகிறேன். வறுமையில் உள்ள நாடுகளில் பசி ஏற்படும்போது எல்லாம் அந்த துயரை துடைப்பதில் அமெரிக்கா முன்னிலையில் இருந்து வருகிறது. எனவே, அந்த நாடுகளில் உள்ள விவசாயிகளை ஊக்கப்படுத்த அமெரிக்கா உதவும்.

இவ்வாறு அதிபர் புஷ் கூறினார்.

 

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=410443&disdate=5/4/2008

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அமெரிக்க அதிபர் புஷ, வாஷிங்டன், விலைவாசி உயர்வுக்கு