குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

குர்ஆன் 15:09

இஸ்லாமின் அடிப்படை, அல்லாஹ்வின் வார்த்தைகளாகக் கருதப்படும் குர்ஆன் மற்றும் அல்லாஹ்வின் வார்த்தைகளையும் முஹம்மதின் சொல்-செயல்களைக் கூறும் ஹதீஸ்களும்தான். இதில் முஹம்மது தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக வஹியை அதாவது வேதம் வெளிப்பட்ட முறையையே முன்வைத்தார். அல்லாஹ்வால் வழங்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டதென்று தனக்குத் தானே சாட்சி கூறிக்கொள்கிறது.

அண்மையில் ஒரு இஸ்லாமிய நண்பருடன் விவாதத்தில் இருந்தபொழுது பாதுகாக்கப்பட்ட குர்ஆன் என்பது ஒரு நம்பிக்கையே, நிரூபிக்கப்பட்ட உண்மையல்ல என்றேன்.

அதற்கு அவர், குர்ஆனின் ஒவ்வொரு எழுத்தும் அல்லாஹ் முஹம்மது நபிக்கு அருளியவாரே இன்றுவரை பாதுகாக்கப்பட்டுள்ளது; அதற்கு குர்ஆன் 15:09 ஆதாரம் என்றார். ஏனெனில் குர்ஆன் கடவுள் அல்லாஹ்வின் வார்த்தைகளாம். ’நான் முஸ்லீம்’ தளமும் அதே பதிலைத்தான் கூறுகிறது.

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்;நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (15:9)

இங்கு குர்-ஆனின் பாதுக்காப்புக்கு தானே பொறுப்பேற்பதாக இறைவன் கூறுகிறான்.ஆதாவது மனிதர்களிடம் குர்-ஆனை பாதுக்காக்கும் பொறுப்பை சாட்டாமல் அதனை தன்னளவில் வைத்துக்கொண்டான்.இதன் மூலம் உலகமுடிவு நாள் வரையிலும் குர்-ஆன் பாதுக்காப்பிற்கு எந்த ஒரு மனிதனும் தனிப்பட்ட முறையில் சிரத்தை மேற்கொள்ள தேவையில்லை என்பதை தெளிவாக இவ்வசனத்தில் விளங்கலாம்…

நான் முஸ்லீம்

நமது கேள்வியே குர்ஆனின் நம்பகத்தன்மையைக் குறித்துதான் அதற்கு பதிலைக் குர்ஆனிலிருந்தே கூறுவர். பொதுவாகவே முஸ்லீம்களின் வாதம் வளைவிற்குற்குள் சுற்றிக் கொண்டே இருக்கும். அந்த நண்பரிடம், குர்ஆன் தொகுக்கப்பட்ட கதையைக் கூறுங்கள் என்றதும், முடியாது என்று திடமாக மறுத்துவிட்டார். இதுதான் குர் ஆனின் யதார்த்த நிலை!

”நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்” என்ற இந்த இரண்டு வாக்குறுதிகளின் அவசியம் என்ன? அன்றைய மக்கத்துக் குறைஷிகள் இவர்கள் சொல்வதைப் போல முட்டாள்கள் அல்ல! அவர்கள் தெளிவாகவே, முஹம்மது கடவுளின் பெயரால் கதையளப்பதாகக் கூறினர். அதற்காகத்தான் ”நாமே இந்த அறிவுரையை அருளினோம்” என்ற மாபெரும் விளக்கம். இந்த பதிலைக் காணும் பொழுது, நாம் இன்று காணும் அரைவேக்காடு இஸ்லாமிய அறிஞர்களும், அப்பாவி முஸ்லீம்களும் எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது. அவர்கள், குர்ஆன் சர்வவல்லமையுடைய கடவுளின் வார்த்தைகளே என்பதை நிரூபிக்க, அவர்கள் மேற்கொள்ளும் சிரமங்களைப் பார்க்கையில் எனது கண்களில் நீர் தழும்பி நிற்கிறது.

சரி..! ”நாமே பாதுகாப்போம்” என்று எதற்காகக் கூறவேண்டும்? குர்ஆனை அழித்துவிட யாராவது முயன்றனரா? என்றால், முஹம்மது, குர்ஆனைக் கூறிக் கொண்டிருந்த காலத்தில் அப்படி எந்த ஒரு முயற்சியும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. பிறகு ஏதற்காக இப்படியொரு உறுதிமொழி?

அவர்கள் (இஸ்ரவேலர்கள்) உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா?அவர்களில் ஒரு பகுதியினர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்.

குர்ஆன் 2:75

இவ்வாறு மற்ற வேதங்கள் மாற்றப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டை குர்ஆன் திரும்பத் திரும்பக் கூறுவதால், குர்ஆனின் தன்மை எத்தகையது என்ற கேள்வி எழுவதைத் தவிர்ப்பதற்காகக் கூறப்பட்டிருக்குமோ? அல்லது பிற்காலத்து இடைச்சொருகலா?

இஸ்லாமிய அறிஞர்கள் கூறும் விளக்கங்களைப் பார்ப்பதற்கு முன்பாக, நாம் அல்லாஹ்வின் இயல்பை சற்று கவனிக்கலாம். மூலப்பதிவேடு என்ற நூலில் துவங்கி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு புத்தகம் என்ற கணக்கில் எண்ணற்ற புத்தகங்களை, எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறான். முந்தைய வேதங்களாக அல்லாஹ் கூறும் தவ்ராத், ஸபூர், இஞ்ஜீல், மட்டுமல்லாது அவன் அனுப்பிய ஒவ்வொரு தூதர்களுக்கும் வேதங்களை வழங்கியுள்ளான். அன்றுமட்டுமல்ல இன்றும் தனது எழுத்தர்களை கொண்டு மனிதனது செயல்களைக் எழுதிக் கொண்டே இருக்கிறான்.

அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்துவந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
…அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (இன்னும் மேலே) உயர்ந்தார்கள். நான் ஓர் உயரமான இடத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது (வானவர்கள் தலை விதிகளைப் பதிவு செய்துகொண்டிருக்கும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன்…

முஸ்லீம் 263

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம். கியாமத் நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம்.

குர் ஆன் 17:13

இவ்வாறாக அல்லாஹ்வின் அலுவலகத்தில் எழுத்துப்பணி இடைவிடாது இயங்கிக் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொன்றும் எழுத்துவடிவத்தில் பாதுகாக்கப்படுவதை குர்ஆனும் ஹதீஸும் கூறுவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மோசேவிற்கு கற்பலகைகளில் தனது கட்டளைகளை எழுதிக் கொடுத்துள்ளதாகவும் அதை அவர்கள் ஒரு பேழையில் (உடன்படிக்கைப் பெட்டி) வைத்திருந்ததாகவும் பழைய ஏற்பாடு கூறுகிறது.

பேழையின் மாதிரிப் படங்கள்.

Ark+Fig-1.png

Ark+Fig-2.png

குர்ஆனும் தனது பங்கிற்கு மூஸாவிடம் ஒரு பேழை இருந்ததாகக் கூறுகிறது

"அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டதற்கு அடையாளமாக, உங்களிடம் ஓர் அலங்காரப் பெட்டி வரும். அதில் உங்கள் இறைவனிடமிருந்து (உங்களுக்கு) மன நிறைவு இருக்கும். மூஸாவின் குடும்பத்தாரும், ஹாரூனின் குடும்பத்தாரும் விட்டுச் சென்றவற்றில் எஞ்சியது அதில் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து வருவார்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அதில் உங்களுக்குச் சான்று உள்ளது” என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார்.

குர்ஆன் 2:248

மூஸா விட்டுச் சென்ற பெட்டியை மலக்குகள் வானிலிருந்து சுமந்துவந்து மக்களின் முன்பாக வைத்தனர் என்றெல்லாம் விரிவுரைக்கதைகள் கூறுகின்றன. நாம் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கு தேவையில்லாத காரணத்தினால் அதை பின்னர் பார்க்கலாம்.

இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, ஈஸா வானுலகிற்குக் கடத்திச் செல்லப்பட்டபொழுது தனது அடியார்களுக்கென்று இன்ஜீல் என்றொரு வேதப் புத்தகத்தை விட்டுச் சென்றிருக்கிறார். அந்த புத்தகம் என்ன ஆனது? இயேசு, அப்படி எந்த ஒரு எழுத்துப்பூர்வமான வேதத்தையும் விட்டுச் செல்லவில்லை என்பதாக கிருஸ்துவம் கூறுகிறது. இவர்களில் யார் சொல்வது சரியானது?

ஆக அல்லாஹ், வெளியிட்ட குர்ஆனுக்கு முந்தைய எந்த ஒரு வேதமும் இன்று உலகில் இல்லை. அவை மனிதக் கரங்களால் உருமாறிவிட்டது. அல்லது முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது என்பதுதான் இஸ்லாமியர்களின் வாதம்.

மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அவர்களுடன் அருளினான்.

குர்ஆன் 2:213

முஸ்லீம்களின் வெவ்வேறு விதமான நம்பிக்கைகளின் அடிப்படையில் சுமார் 30-லிருந்து 1,24,000 வரை நபிமார்கள் வந்துள்ளதாக அறிகிறோம். மேற்கண்ட வசனத்தை கவனத்தில் கொண்டால் தவ்ராத், ஜபூர், இன்ஜீல் மட்டுமல்லாது இன்னும் அதிக எண்ணிக்கையில் வேதங்கங்கள் இருந்துள்ளதாக பொருள் கொள்ளலாம்.

”வேதங்களை மாற்றிவிட்டனர்” என்று குர்ஆனில் அல்லாஹ் புலம்புவதை அடிப்படையாகக் கொண்டால், வேதங்களை திருத்தம் செய்யக் கூடாது என்ற எச்சரிக்கைகளை, ஒவ்வொரு வேதத்திலும் நிச்சயம் கூறியிருக்க வேண்டுமில்லையா? தனது வேதங்களை மாற்றியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேதங்களைப் பாதுகாக்கவுமில்லை!

பொதுவாக, மனிதர்கள், தாங்கள் எழுதியவற்றை தகுந்த அனுமதியின்றி பிறர் திருத்தம் செய்வதை அனுமதிப்பதில்லை. ஆனால், அல்லாஹ்வோ என்னைக் கேட்காமல் எனது புத்தகத்தை திருத்திவிட்டார்கள் என்று புலம்பிக் கொண்டிருக்கிறான். கொடுமையான தண்டனை வழங்குவேன் என்றெல்லாம் மிரட்டல் விடுத்தும், அவனை அவர்கள் ஏனோ சிறிதுகூட பொருட்படுத்தவில்லை, பயம் கொள்ளவில்லை என்கிறது குர்ஆன். அல்லாஹ்வின் ஆணைகளயும், படைப்புகளையும் மனிதர்களால் அவனது அனுமதியின்றி மாற்றமுடியும் என்பதை அல்லாஹ்வும் ஒப்புக்கொள்கிறான்!

சர்வல்லமையுடைய கடவுளுக்கு அடுத்தடுத்து புதிய தூதர்கள் மற்றும் வேதங்களின் தேவையென்ன? எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய, அனைத்துவிதமான சட்டங்களையும் உள்ளடக்கிய ஒரே வேதத்தை ஏன் இறக்கிப்பாதுகாக்கவில்லை?

இறுதி நாள் வரை வரும் மக்களுக்கு வழிக்காட்டியாக குர்-ஆன் இலங்கவேண்டும் என்பதற்காகவே குர்-ஆனின் பாதுகாப்பு மட்டும் அவசியாமாகிறது"முழுமைப்படுத்தப்பட்ட தொகுப்பு மட்டுமே பாதுக்காக்கப்படுவதற்கு தகுதியானது!" என்ற அடிப்படையில் தான் முன்னர் அருளப்பட்ட ஏனைய வேதங்களை பாதுக்காக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லையேயொழிய வேலி தாண்டி ஆடுகள் தோட்டத்தை மேய்வதை தடுக்க சக்தியற்ற தோட்டக்காரன் அல்ல…உலகின் இறைவன்!

நான் முஸ்லீம்

இஸ்லாம் மட்டுமல்ல எல்லா மதங்களிலும் விரும்பியவர்களெல்லாம் கடவுளின் அந்தரங்க காரிதரிசியாக பதவியேற்கலாம். அல்லாஹ்வின் அருகிலிருந்து அவனது நடவடிக்கைகளை கண்காணித்தவர்களைப் போன்று எவ்வளவு நுணுக்கமான செய்திகளைக் கூறுகின்றனர். இவர்கள்தான் அல்லாஹ்விற்கே ஆலோசனைகள் வழங்கியதைப் போன்று அளந்து விடுகின்றனர். அவனால் எதுவும் செய்ய முடியாது என்ற துணிச்சல்தான்.

நாம் நாத்தீகர்களா? இல்லை அவர்களா? அண்மைக் காலங்களில் இந்த சந்தேகம் அடிக்கடி எழுகிறது.

தோட்டக்காரனுக்கு, இஸ்லாம் என்ற மததத்தை மன்னிக்கவும் மார்க்கத்தை வேலியமைத்து பாதுகாக்க சுமார் 5500-க்கும் அதிகமான ஆண்டுகள் தேவைபட்டிருக்கிறது என்பதுதான் இதன் பொருள்.

குர்ஆன் என்ற வேதம் வழங்குவதற்காகத்தான் மற்ற வேதங்களை பாதுகாக்க விரும்பவில்லையாம்! பாவம், அந்தத் தோட்டக்காரன் இத்தகைய விளக்கங்களை எதிர்பார்க்கவில்லை போலும், அவனது புலம்பலை பார்ப்போம்.

எனவே, தங்களின் கரங்களால் வேதத்தை (மாற்றி) எழுதி பிறகு அதன் மூலம் (உலகின்)சொற்ப கிரையத்தை வாங்குவதற்காக, இது அல்லாஹ்விடமிருந்துள்ளது என்று வைல்(என்னும் பெரும் நாசம்) உண்டு; மேலும் அவர்களின் கரங்கள் (வேதத்தை மாற்றி)எழுதியதன் காரணத்தால் அவர்களுக்கு வைல் (என்னும் பெரும் நாசம்) உண்டு …

குர்ஆன் 2:79

முதலில் குர்ஆன் கடவுளின் வார்த்தைகளே என்பதை நிரூபித்த பிறகு தவ்ராத் மற்றும் இன்ஜீலையும் அதன் மூலப்பிரதிகளுடன் ஒவ்வொரு எழுத்தாக, வாக்கியமாக ஒப்பீடு செய்தபின்னர் இப்படியொரு முடிவைக் கூறியிருந்தால், ஏற்புடையதாக கருதலாம். ஆனால் திடீரென்று ”வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ” என்பதைப் போல வேதங்கள் மாற்றப்பட்டுள்ளன அறிக்கைசெய்வது குழந்தைத்தனமானது.

சனிக்கிழமை தடை நீக்கம், கொழுப்பு உண்பது அனுமதிக்கப்பட்டது என்று தவ்ராத்திற்கு மாற்றமான சில அனுமதிகள் பற்றி குர்ஆனில் உள்ளன. நமது விவாதம் அதைப்பற்றியல்ல என்பதை அறிவீர்கள்.

…வார்த்தைகளை அதற்குரிய இடங்களை விட்டும் அவர்கள் மாற்றுகின்றனர். அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர்…

குர்ஆன் 5:13

முந்தைய வேதங்கள் மாற்றப்பட்டதாக குர்ஆன் கூறுவதில் முரண்பாடுகள் உள்ளன. இன்னும் சொல்வதென்றால் முஹம்மதின் காலத்தில் மட்டுமல்ல அதற்குப்பின்னும் குர்ஆனைவிட அவைகளே பாதுகாப்பாக இருந்துள்ளதாகத் தெரிகிறது.

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் யூதர்கள் தம் சமுதாயத்தாரிலிருந்து விபசாரம் புரிந்து விட்டிருந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் அழைத்து வந்தார்கள். (தீர்ப்பளிக்கும்படி கேட்டார்கள்)அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உங்களில் விபசாரம் புரிந்தவரை நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அவர்கள் ‘நாங்கள் அவ்விருவரையும் (அவர்களின் முகங்களில்) கரும்புள்ளியிட்டு அடிப்போம்’ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், ‘(உங்கள் வேதமான) தவ்ராத்தில் (விபசாரம் செய்தவருக்கு) ‘ரஜ்கி’ (சாகும்வரை கல்லால் அடிக்கும்)தண்டனையை நீங்கள் காணவில்லையா?’ என்று கேட்க, யூதர்கள், ‘(அப்படி) ஒன்றும் அதில் நாங்கள் காணவில்லை’ என்று பதிலளித்தனர். உடனே, (யூதமார்க்க அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி), யூதர்களிடம், ‘பொய் சொன்னீர்கள்,நீங்கள் உண்மையாளர்களாயின் தவ்ராத்தைக் கொண்டு வந்து ஓதிக் காட்டுங்கள்’ என்று கூறினார்கள். (அவ்வாறே தவ்ராத் கொண்டுவரப்பட்டு ஓதப்பட்டது). அப்போது அவர்களுக்கு வேதம் கற்பிக்கும் வேதம் ஓதுநர் ‘ரஜ்கி’ தொடர்பான வசனத்தின் மீது தம் கையை வைத்து (மறைத்துக்கொண்டு) தம் கைக்கு முன்னால் இருப்பதையும் அதற்கு அப்பால் உள்ளதையும் மட்டும் ஓதலானார். (கைக்குக் கீழே உள்ள) ரஜ்முடைய வசனத்தை ஓதவில்லை. உடனே அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அந்த ஓதுநரின் கையை ரஜ்முடைய வசனத்தை ஓதவில்லை. உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அந்த ஓதுநரின் கையை ரஜ்முடைய வசனத்தைவிட்டு இழுத்துவிட்டு, ‘இது என்ன?’ என்று கேட்டார்கள். யூதர்கள் அதைப் பார்த்தபோது, ‘இது ரஜ்முடைய வசனம்’ என்று கூறினார்கள். எனவே, (விபசாரம் புரிந்த) அவ்விருவருக்கும் தண்டனை வழங்கும்படி நபியவர்கள் ஆணையிட்டார்கள்…

புகாரி 4556

முஹம்மதின் காலத்தில் முந்தைய வேதங்கள் பாதுகாப்பாக இருந்துள்ளதாக குர்ஆனும் கூறுகிறது.

"அல்லாஹ் அருளியதை நம்புங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்களுக்கு அருளப்பட்டதையே நம்புவோம்” என்று கூறுகின்றனர். அதற்குப் பிறகு உள்ளதை (குர்ஆனை) மறுக்கின்றனர். அது உண்மையாகவும், அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. "நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதற்கு முன் அல்லாஹ்வின் நபிமார்களை ஏன் கொலை செய்தீர்கள்?” என்று (முஹம்மதே!) கேட்பீராக!

குர் ஆன் 2:91

மேற்கண்ட வசனம் இறக்கப்படும் பொழுது, யூதர்களிடமிருந்த தவ்ராத்தும், கிருஸ்துவர்களிடமிருந்த இன்ஜீலும் உண்மையாக இருந்துள்ளது என்பதுதான் இதன் பொருள்! கடவுள் அல்லாஹ்வின் கட்டளைகளென்று கூறிக்கொண்ட முஹம்மதின் குர்ஆனை மறுத்ததும், நபிமார்களைக் கொலை செய்ததும்தான் அவர்கள் செய்த குற்றம். தவ்ராத் மற்றும் இன்ஜீல் பாதுகாப்பாகவே இருக்கையில்மாற்றப்பட்டதாக புலம்புவது வேடிக்கையானது. மற்றப்பட்டதாக அல்லாஹ் குற்றம்சாட்டுவது எதை? சரி… பாதுகாப்பாக இருந்த அந்த தவ்ராத்தும் இன்ஜீலும் எங்கே?

தன்னுடைய தூதர்கள் கொலை செய்யப்படும் வரையில் அல்லாஹ் என்ன செய்து கொண்டிருந்தான்? கொலை செய்யப்பட்ட நபிமார்கள் யார்? இதற்கான பதில் விளக்கமாக நன்கு விவரிக்கப்பட்ட குர்ஆனில் இல்லை. பதில் வேண்டுமென்றால் மாற்றப்பட்ட(?) வேதங்களில்தான் தேடிப்பார்க்க வேண்டும்.

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின்படி முந்தையவேதம் பாதுகாப்பாகவே இருந்துள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில் முஹம்மது துப்பறிந்து கண்டுபிடித்த “ரஜ்ம்” என்ற கல்லெறி தண்டனை பற்றிய அல்லாஹ்வின் அறிவிப்பு குர்ஆனில் இல்லை என்பதுதான்!

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

….நிச்சயமாக அல்லாஹ், முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தீல் கல்லெறி தண்டனை (ரஜ்கி) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதைப் புரிந்து மனனமிட்டுமிருக்கிறோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மண முடித்தவர் விபச்சாரம் புரிந்தால் அவருக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்கி) நிறைவேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாங்களும் அந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளோம். காலப்போக்கில் மக்களில் சிலர் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை’ என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழி தவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன்…

புகாரி 6830

மட்டுமல்ல,

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

"குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்” என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப் பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது,குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

முஸ்லீம் 2876

அதென்ன சிலரால் மட்டும் ஓதப்பட்ட வசனம்? மற்றவர்கள் ஓதிப் பாதுகாக்கவில்லையா?

அண்ணல் அவர்களுக்கு அல்குர்-ஆன் "ஒலி" வடிவிலேயே இறக்கியருளப்பட்டது; மாறாக "வரி" வடிவில்லல்ல என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை எனவே நபிகளுக்கு முழு குர்-ஆனும் அருளப்பட்டது எழுத்து வடிவத்தில் இல்லை என்பது தெளிவாகிறது…

நான் முஸ்லீம் தளத்திலிருந்து

இந்த வசனமும் தற்பொழுதைய குர்ஆனில் இல்லை. ஒலிவடிவில் பாதுகாப்பாக இருக்கிறது என்பவர்களிடம் நாம் கேட்கவிரும்புவது,

முஹம்மதிடம் அல்லாஹ் கூறியவாறே சிறிய மாற்றம்கூட இல்லாமல் ரஜ்கி மற்றும் ஐந்தாகக் குறைக்கப்பட்ட பால்குடி எண்ணிக்கைத் தொடர்பான வசனங்களைக் கூறமுடியுமா? மனிதர்கள் பாதுகாக்கும் தற்பொழுதைய குர்ஆனில் அவர்களால் இணைக்க முடியுமா?

ஹதீஸ்களை அடிப்படையாக வைத்து குர்ஆனை எப்படி குறை கூறலாம்? நாய் வாலை ஆட்டலாம், வால் நாயை ஆட்டமுடியாது, ஆட்டக்கூடாது என்பதுதானே உங்களது ஆதங்கம்?
தொடரும்…

source:http://iraiyillaislam.blogspot.in

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

ரிஸானா நபீக்: காட்டுமிராண்டிகால ஷரியத்த ின் கொடூரம்.

ஒருநாள் பேஸ்புக்கில் உலாவிக்கொண்டிருத்ந்தபோது TNTJTTj வகையராக்கள் ரிஸானா நபீக் என்ற சிறுமிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதைக்குறித்து “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்”(நிச்சயமாக நாம் அல்லாவுக்காகவே இருக்கிறோம். நிச்சயமாக அவனிடமே திரும்ப வேண்டியவர்களாக இருக்கிறோம்) என்ற வாசகத்தை முன்னிருத்தி குற்றம் செய்திருந்தாலும் இந்த தண்டனை மிக அதிகமானதே; ஒரு வேளை குற்றம் செய்யாது இத்தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அப் பெண்ணிற்குசொர்க்கம் கிடைக்கும். அதற்கு பிரார்திப்போம்” என்ற செய்திகள் உலாவந்தன. ஆனால் அவர்களது அவுலியா இந்த தண்டனையை வரவேற்றும் மனுஷ்யபுத்திரனனை கேவலமாக விமர்சித்தும் தமது இணையதளத்தில் கட்டுரையை எழுதியதும் சொந்த புத்தி எல்லாம் அவுலியாவுக்கு அடகு போய் தண்டனையை ஆதரித்தும் மனுஷ்யபுத்திரனனை கடுமையாக திட்டவும் தொடங்கிவிட்டனர். இந்த செய்திக் குறித்து விபரம் ஏதும் தெரியாத நிலையில் இருந்தபோது நக்கீரனில் வந்துள்ள மனுஷ்யபுத்திரனின் கட்டுரையை சுட்டிக்காட்டி தொலைபேசியில் ஒரு தோழர் விபரம் கூறினார். அதனைப் படித்த பிறகு மேலும் செய்திகளை அறிந்துகொள்ள இணைய இணைப்பில் அமர்ந்தேன். அப்பொழுது இசுலாமியர்கள் நிறைய உள்ள ஒரு பிரபலமான ஊரில் இருந்தேன். அந்த புரோஸிங் சென்டரும் ஒரு இசுலாமியருடையது. யுடியூப்பில் ரிஸானா நபீக் தலை வெட்டப்படும் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது என் இதயம் கனக்க, வயிற்றுக்குள் ஒருவர் கையைவிட்டு பிசைவதுபோன்று திணறல் ஏற்பட்டது. அநாகரீக காலத்திலிருந்து இந்த இசுலாமியர்கள் மாறவே மாட்டார்களா என்ற கேள்விக்குறியுடன் என்னை இயல்பு நிலைக்கு திருப்ப சற்று எழுந்து நகர்ந்து நின்றேன்.
Rizana_Nafeek-Killed.jpg

அருகில் அதனை பார்த்துக்கொண்டிருந்த தாடியும் மீசையும் மழித்து சிவந்த நிறத்திலிருந்த இசுலாமிய இளைஞர் ஒருவர் “இவனுக காட்டுப் பு…. மவனுக” என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டார். இன்னொரு இளைஞர் எதற்கு இந்த தண்டனை என்ற விபரம் அறியாது “இப்படி எல்லாம் தண்டனை கொடுத்தாலும் தப்பு பண்றவன் தப்பு பண்ணிக்கொண்டுதானே இருக்கான்” என்றார். தண்டனை பற்றி சிறு விபரம் கூறியதும் மௌனமாகிவிட்டார். மற்றொரு இளைஞர் “என்னங்க ரொம்ப கொடுமையாக இருக்கிறது என்றார்.
ஒரு 55 வயது முதியவர் ஒருவர் “சௌதியைப் பொருத்தவரை வேலை செய்யப்போகிறவர்கள் அனைவரையும் அடிமைகள் போல்தான் நடத்துகிறார்கள். நாம் என்ன சொன்னாலும் அங்கே எடுபடாது. சௌதி என்ன சொல்கிறானோ அதைத்தான் கேட்பார்கள், மலேசியாவிலும் அப்படித்தான்; மலேசிய முதலாளி என்ன சொல்கிறானோ அதைத்தான் கேட்பார்கள். ஆனால் பங்களாதேசத்தவர்கள் கூறினால் எடுபடும்” என்று கூறினார். இவர்களில் முதலாம் நபர் தவிர பிறருக்கு என்னைப்பற்றி நன்கு தெரியும் என்பதால் மேற்கொண்டு கருத்துக்கூறாமல் பேச்சு திசை திரும்பிவிட்டது.
ரிஸானா நபீக் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் நாள் சௌதியிலுள்ள Naif Jiziyan kalaf Al- otaibi என்பவர் வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். பாத்திரம் பண்டங்கள் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது, குழந்தையைப் பராமரிப்பது அவளுக்கு இடப்பட்ட வேலைகள். 2005 மே மாதம் 25 ஆம் நாள் அதாவது ஒருமாத்தில் தனது முதலாளியின் 4 மாதக் குழந்தையைக் கொன்றுவிட்டார் என்று சிறையிலடைக்கப்பட்டார்.
குழந்தையின் தாய் வெளிச்சென்றிருக்கும்போது குழந்தைக்கு ரிஸானா நபீக் புட்டிலிருந்து பால் புகட்டியுள்ளார். அப்படி பால் கொடுத்துக் கொண்டிருக்கும்போது மூக்கு வழியாக பால் வந்ததாகவும், அதனை துடைத்துவிட்டும் தொண்டையை தடவி விட்டுவிட்டும் குழந்தையை தொட்டியில் படுக்கவைத்ததாகவும் ரிஸானா நபீக் கூறுகிறார். ஆனால் முதலாளியம்மாள், குழந்தையை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டதாக கூறி ரிஸானாவை தனது செருப்பால் கன்னங்களில் மாற்றி மாற்றி அடித்துள்ளார். அதனால் ரிஸானாவின் கன்னத்தில் காயங்களும் மூக்கில் இரத்தமும் வடிந்துள்ளது. அதே நிலையில் சௌதி போலீசில் புகார் செய்ய ரிஸானா நபீக் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்திலும் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார். போலீஸ் ரிஸானாவை மிரட்டி ‘கழுத்தை நெறித்து கொன்றதாக’ வாக்கு மூலம் பெற்று வழக்குத் தொடர்ந்தது.
ஜூன் 16, 2007 அன்று தவாமி நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அப்துல்லா அல் ரோஸ்மி, சரியத் சட்டப்படி ரிஸானாவுக்கு மரண தண்டனை வழங்கி மேல் முறையீடு செய்துகொள்ளவும் அனுமதி அளித்தார். முறையான மொழிபெயர்பு வசதியும், வழக்காட வழக்கறிஞர் வசதியும் ரிஸானா நபீக்குக்கு வழங்கப்படவில்லை என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளதும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.
சர்வதேச தொழிலாளர் சங்கம் (ILO) ரிஸானா நபீக்காக சௌதி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. எப்படியும் தண்டனை உறுதி என்னும் நிலையை உணர்ந்த அவர்கள், குற்றம் சாட்டப்பட்டபோதுரிஸானாவின் உண்மையான வயது பதினேழுதான் என்பதை ரிஸானா நபீக்கின் பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ் ஆகியவற்றைக் ஆதாரமாகக்கொண்டு சர்வதேச குழந்தைத் தொழிலாளர் சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். வேலை கிடைக்கவேண்டும் என்பதால் வயதை கூடுதலாகச் சொல்லி ஏஜென்ட் மூலம் கடவுட் சீட்டு பெற்றுள்ளதாகவும் வாதாடினர். உச்சநீதிமன்றமோ கடவுட்சீட்டிலுள்ள வயதையே ஏற்றுக்கொள்ளமுடியும் என்று அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்துவிட்டது.
சரியத் சட்டத்திற்கு வயது ஒரு பொருட்டல்ல. அது குழந்தையாக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும் நிலை ஒன்றுதான். அதுபோக ஒரு பெண்ணிற்கு முதல் மாதவிடாய் வந்துவிட்டாலே அவள் முழு முதிற்சியடைந்த பெண்தான் என்பதே அவர்களின் நிலைப்பாடு. அதுபோல ஒரு பையனுக்கு விந்து என்று ஒன்று வெளிவந்துவிட்டாலே அவன் முதிற்சியடைந்த ஆண் என்பதும் அவர்களின் நிலைப்பாடு. அதனால்தான் முகம்மதுநபி 6 வயதுடைய ஆயிஷாவை மணந்து 9 வயதில் உறவுகொண்டதை நியாப்படுத்துகிறார்கள். நியாப்படுத்த முடியாதவர்கள் அது முகம்மதுநபிக்கும் ஆயிஷாவிற்கும் வழங்கப்பட்ட சிறப்பு சலுகை என்கின்றனர். அது அப்படி அல்ல என்பதை பின் வரும் செய்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
(Suhayli, ii.79: In the riwaya of Yunus I. I recorded that the apostle saw her (Ummu’l–Fadl) when she was a baby crawling before him and said, ‘If she grows up and I am still alive I will marry her.’ But he died before she grew up and Sufyan b. al-Aswad b.
‘Abdu’l-Asad al-Makhzumi married her and she bore him Rizq and Lubaba… (ibn Ishaq, 2001, p. 311).
(தவழ்ந்து கொண்டிருந்த உம்முல் -ஃபதல் என்ற குழந்தையை கண்ட நபி கூறினார், "இவள் வளரும் வரை நான் உயிருடன் இருந்தால், இவளைத் திருமணம் செய்வேன்". ஆனால் அவள் வளரும்முன் அவர் (நபி) இறந்து விட்டார்.
Musnad Ahmad: 25636
Muhammad saw Um Habiba the daughter of Abbas while she was fatim (age of nursing) and he said, "If she grows up while I am still alive, I will marry her."
(அப்பாஸ் என்பவரின் மகள் உம்மு ஹபீபா என்ற குழந்தையைக் கண்ட நபி (ஸல்), "இவள் வளரும் வரை நான் உயிருடன் இருந்தால், இவளைத் திருமணம் செய்வேன்". என்று கூறினார்)

ரிஸானா நபீக் மீது சுமத்துப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் சில கேள்விகள்:
1. பிறந்து 4 மாதமேயான பச்சிளங்குழந்தையை ஒரு சிறுமியிடம் பராமரிக்க கொடுத்துவிட்டு தாய் வெளியில் சென்றது என்னவகை நியாயம் என்று தெரியவில்லை. அது முதல் தவறு. அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அந்த அம்மாவே பொறுப்பேற்க வேண்டும்.
2. வேலைக்கு சேர்ந்து ஒரு மாதமே ஆன நிலையில் குழந்தையை கொல்லும் அளவுக்கு ஒரு சிறுமியின் மனதில் குரோதம் ஏற்பட எவ்வித காரணமும் இல்லை. தனியாக நாடுகடந்து நாடு சென்று வாழும் ஒரு ஏழைச் சிறுமிக்கு ஒரு குறுகிய காலத்தில் மனக்குரோதம் ஏற்படும் என்று சொல்வோமானல் அவரைப்போல ஒரு அறிவிலி எவரும் இல்லை. இம் மரணம் ஒரு விபத்தாகவே கருதவேண்டும். ஆனால் நீதிமன்றம் அதனை பரிசீலிக்கவே இல்லை.
3. ஒருவேளை அச்சிறுமி கொலை செய்திருந்தால் இயல்பாக குழந்தையை தொட்டியிலிட்டுவிட்டு மூக்கில் பால் வடிந்ததாகவெல்லாம் முதலாளியம்மாளிடம் கூறியிருக்க மாட்டாள். பயந்துபோய் என்ன நடக்குமோ என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்திருக்கவேண்டும். அப்படி ஏதும் அறியாததுபோல் கூற வேண்டுமானால் கொலைசெய்து அனுபவப்பட்டிருக்க வேண்டும். வயிற்றுப் பிழைப்புக்காக பெற்றோர்களைப் பிரிந்து வெளிநாடு சென்றுள்ள ஒரு சிறுமியிடம் கொலை செய்த அனுபவங்கள் உள்ளதுபோல் போலிசும் அநீதிமன்றமும் நடந்துகொண்டது மனித இனத்திற்கே ஒரு அவமானம்.
4. கழுத்தை நெறித்து குற்றம் சாட்டியுள்ளனர். அப்படி கழுத்தை நெறித்து கொலை செய்திருந்தால் குரல்வலை உடைந்திருக்கும். பிரேத பரிசோதனையில் உண்மை தெளிவாக தெரிந்திருக்கும். ஆனால் சௌதி போலீசும் அநீதிமன்றமும் இந்த நவீனக்காலத்திலும் பிரேதப் பரிசோதனை செய்து உண்மையை அறிய அக்கரை காட்டவில்லை. இது ரிஸானா நபீக்கு அவர்களால் மறுக்கப்பட்ட நீதியையே காட்டுகிறது.
5. கொலைக்கு சாட்சிகள் எதுவும் இல்லை. குழந்தையின் பெற்றோர்கள் தவிர பிற சாட்சிகள் கிடையாது. அப்படி இருக்கும்போது பிரேத பரிசோதனை செய்யாமல், ரிஸானா நபீக்கிற்காக வாதாட வழக்கறிஞர்களுக்கு அநீதி மன்றம் ஏற்பாடும் செய்யாமல் பெற்றோர்களின் குற்றச்சாட்டை மட்டுமே கொண்டு மரண தண்டனை வழங்கியது கொடுமையிலும் கொடுமை.
6. கொலைக்கான காரணம் எதுவும் எவரும் கூறவில்லை. கொலைக்கான காரணம் என்று ஒன்று இருந்தே தீரவேண்டும். அதன் தன்மையைப் பொறுத்தே தண்டனைகள் அமைய வேண்டும். எடுத்துக்காட்டாக் ஒருவர் தொடர்ந்து ஒருவரால் துன்பப் படுத்தப் படுவதால் கெலை செய்தார் என்று எடுத்துக்கொண்டால் கொலை செய்தவருக்கு மரணதண்டனை வழங்குவது நியாயமாகாது.
சூழ்நிலையும் மறுக்கப்பட்ட அறிவியல் ஆய்வும் குற்றமற்றவள் என்பதை உணர்த்தும்பொழுதுகுறைந்தபட்ச சிறு தண்டனையை (அதுவே தவறு என்ற போதிலும்) வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதுவே மனசாட்சியும் அறிவும் உடையவர்களின் செயலாகும். ஆனால் கொடுமையான தலையை வெட்டி எரியும்தண்டனை ஏன்?
ஒரு சௌதியின் நலனுக்காக சரியத் சட்ட முகமூடி அவர்களுக்கு முக்கியம். இப்படி தண்டனைகள்வழங்குவதன் மூலம் பிற தொழிலாளர்களையும் மிரட்டிவைக்கலாம் அல்லவா! கடுமையான தண்டனைகள் வழங்கினால்தான் குற்றம் செய்பவர்கள் பயப்படுவார்கள் என்று ஊளையிடுபவர்கள் இங்கே சற்று யோசியுங்கள்.
அக்குழந்தை 4,5 வயது சிறு குழந்தை என்றும் அவ்வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் அக்குழந்தையுடன் வீட்டு வேலைக்கார சிறுமி விளையாடிக் கொண்டிருக்கும்போது கால் தவறி அல்லது வேலைக்காரப் பெண் கால் தடுக்கி குழந்தை கீழே விழுந்து மண்டை உடைந்து இறந்துவிடுவதாக வைத்துக் கொள்ளவோம். அப்பொழுதும் குழந்தையின் பெற்றோர்கள் வேலைக்காரப் பெண் கொலை செய்துவிட்டாள் என்று குற்றம் சுமத்த முடியும். இங்கேயும் சாட்சிகள் இல்லை. அப்படியானால் குற்றம் சுமத்தப்பட்ட வேலைக்காரப் பெண் தான் செய்யவில்லை என்று சொல்லுவதை ஏற்று கொலைக்கான காரணச் சூழ்நிலைகள், பிரேதபரிசோதனைகள் செய்தும் அக்கம் பக்கத்தில் விசாரித்தும் தீர்ப்பு செய்யவேண்டுமா அல்லது பெற்றோர்கள்களின் குற்றச்சாட்டைக்கொண்டே தீர்ப்புச் சொல்வதா? ஒரு வேளை கொலையை நிருபிக்கவோ மறுக்கவோ முடியாத நிலை ஏற்படுமானால் குற்றம் சுமத்தப்பட்டவரை விடுதலை செய்வதே நியாயம். இங்கே குற்றம்சாட்டப்பட்ட வேலைக்காரப் பெண்ணின் வாக்கு மூலத்தை சௌதியின் அடியாள் பிஜே சொல்வதுபோல் ஏற்றகக் கூடாது என்றால் அது நீதியா? மனசாட்சியற்ற மதவெறியா?
ரிசானாவிற்கு வழங்கப்பட்ட தண்டனைக்கான சரியத் சட்டம் பின்வருமாறு:
குரான் 2: 178 இறைநம்பிக்கையாளர்களே! கொலை செய்யப்பட்டவர்கள் விஷயத்தில் பழிவாங்குதல் உங்கள்மீது விதியாக்கப்பட்டுள்ளது. சுதந்திரமானவனுக்குப் பதிலாக சுதந்திரமானவனும், அடிமைக்குப் பதிலாக அடிமையும், பெண்ணுக்குப் பதிலாக பெண்ணும் (பழிவாங்கப்படும்) எனினும்(கொலைசெய்யப்பட்ட) அவனுடைய சகோதர ர் மூலம் (கொலை செய்த) இவனுக்கு ஏதேனும் மன்னிப்பளிக்கப்பட்டால் அப்போது (கொலையாளி) நல்ல வழக்கமுறையைப் பின்பற்றி (அதற்கான ஈட்டுத்தொகை முதியவற்றை) நன்றியறிதலுடன் (கொலை செய்யப்பட்ட) அவ(னுடைய பாத்தியஸதரி)ன் பால் நிறைவேற்றுதல் வேண்டும். இது உங்களுடைய இறைவனிடமிருந்து (உங்களுக்கு கிடைத்து)ள்ள சலுகையும் கிருபையைமாகும். ஆகவே இதற்குப் பிறகு எவரேனும் வரம்புமீறினால் அப்பொழுது அவருக்கு நோவினை அளிக்கும் வேதனை உண்டு.
குரான்2:179 நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழிதீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு. நீங்கள் உங்களை காத்துக்கொள்ளலாம்.
குரான்5:45 மேலும் அ(வ்வேதத்)தில் நிச்சயமாக உயிருக்குப் பகரமாக உயிரையும், கண்ணுக்குப் பகரமாக கண்ணையும், மூக்குக்குப் பகரமாக மூக்கையும், காதுக்குப் பகரமாக காதையும், பல்லுக்குப்பகரமாக பல்லையும் (பழிக்கப் பழிவாங்க வேண்டுமென்றும்) காயங்களுக்குப் பழிக்குப்பழி உண்டு என்றும் அவர்கள் மீது நாம் விதித்திருந்தோம். எனினும் எவரேனும் இதனை தர்ம மாக விட்டுவிட்டால் அது அவரு(டைய பாவத்துக்கு) பகரமாகிவிடுர். எவர் அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அத்தகையோர் அவர்கள்தாம் அநியாயக்கார ர்கள்.
(குர்ஆன் வசனங்களுக்கிடையில் வரும் அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்களையும் தொடரந்தார்போல் சேர்த்தே படியுங்கள்.)
இச்சட்டம் ஒரு ஆடவனை நோக்கி கூறுகிறது. சுதந்திரமான உன்னை ஒருவன் கொன்றுவிட்டால் கொலைகாரனை உன் உறவினர்கள் கொலை செய்யலாம். உன்னுடைய அடிமையை ஒருவன்(சுதந்திரமானவன்) கொலை செய்துவிட்டால் அவனுடைய அடிமையை நீ கொலை செய்துக் கொள்ளலாம்.உன் (சுதந்திரமானவன்) வீட்டுப் பெண்ணை ஒருவன் கொலை செய்துவிட்டால் கொலை செய்தவனுடைய வீட்டுப் பெண்ணை நீ கொலை செய்யலாம் என்று கூறுகிறது. பாதிக்கப்பட்டவன் (சுதந்திரமானவன்)விரும்பினால் இழப்பீடுகள் (இரத்தப பணம்) பெற்றுக்கொண்டு கொலை செய்தவனை மன்னிக்கலாம்.மன்னிக்க விருப்பம் இல்லை என்றால் பழிக்குப்பழியே விதியாகிவிடும்.
சுதந்திரமானவாக உள்ள ஒருவன் அதாவது அடிமையாக இல்லாத எஜமான் இன்னொரு சுதந்திரமானவனின் சொத்துக்களான அவன் வீட்டுப்பெண்களையோ அல்லது அடிமைகளையோ கொன்றுவிடுவதனால் ஏற்படும் இழப்பிற்கு, இழப்பை ஏற்படுத்தியவனின் வீட்டுப் பெண்களையோ அடிமைகளையோ இழந்தவன் கொலை செய்து இழப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பது மட்டுமே இச்சட்டத்தின் குறிக்கோள். கொலை செய்தவனை கொல் என்று இச்சட்டம் கூறவில்லை
மனித உயிர்களின் மதிப்பை வெளிப்படுத்துவதான மனிதாபிமானச் சட்டம் அல்ல இது. அதனாலேயே இழப்பை இரத்தப்பணம் என்கிறது. பெண்கள்கூட ஒரு சொத்து என்பதையும் கூடுதலாக இச்சட்டம் நமக்கு புரியவைக்கிறது.
இச்சட்டம் சரிதானா என்று சிந்தித்துப்பாருங்கள். கொலை செய்தவன் ஒரு சுதந்திரமானவனாக அதாவது இன்றையக் காலத்தில் முதலாளியாக இருந்தால் அவன் ரிசானா போன்று வேலைக்கு வந்த ஒருவரை கொலை செய்தால் அவன் வீட்டிற்கு வேலைக்கு வந்துள்ள இன்னொரு பெண்ணை கொலை செய்துக்கொள்ளச் சொல்லுகிறது. எஜமானர்களுக்கு சேவை செய்யும் சட்டம். இது ஒரு சீரிய சட்டம் என்றும்,காலத்திற்கும்
பொருத்தமான சட்டம் என்றும் உதார் விடுகிறார்கள்.
கூடுதலாக குர்ஆனுக்கு விரிவுரை எழுதியவர்களில் அதி சிறந்தவர் என்று போற்றப்படும் இப்னு கஸிர் என்பவரின் விளக்கத்தையும் படித்துக்கொள்ளுங்கள்.

The Command and the Wisdom behind the Law of Equality
Allah says;
O you who believe! Al-Qisas (the Law of equality) is prescribed for you in case of murder: the free for the
free, the slave for the slave, and the female for the female. Allah states: O believers! The Law of equality has been ordained on you (for cases of murder), the free for the free, the slave for the slave and the female for the female. Therefore, do not transgress the set limits, as others before you transgressed them, and thus changed what Allah has ordained for them.
The reason behind this statement is that (the Jewish tribe of) Banu An-Nadir invaded Qurayzah (another Jewish tribe) during the time of Jahiliyyah (before Islam) and defeated them. Hence, (they made it a law that) when a person from Nadir kills a person from Quraizah, he is not killed in retaliation, but only pays a hundred Wasq of dates. However, when a person from Quraizah kills a Nadir man, he would be killed for him. If Nadir wanted (to forfeit the execution of the murderer and instead require him) to pay a ransom, the Quraizah man pays two hundred Wasq of dates (double the amount Nadir pays in Diyah (blood money)). So Allah commanded that justice be observed regarding the penal code, and that the path of the misguided and mischievous persons be avoided, who in disbelief and transgression, defy and alter what Allah has commanded them. Allah said:
Al-Qisas (the Law of equality in punishment) is prescribed for you in case of murder: the free for the free, the slave for the slave, and the female for the female. Allah’s statement: (the free for the free, the slave for the slave, and the female for the female) was abrogated by the statement life for life (5:45).
However, the majority of scholars agree that the Muslim is not killed for a disbeliever whom he kills. Al-Bukhari reported that Ali narrated that Allah’s
Messenger said:
The Muslim is not killed for the disbeliever (whom he kills). No opinion that opposes this ruling could stand correct, nor is there an authentic Hadith to contradict it. However, Abu Hanifah thought that the Muslim could be killed for a disbeliever, following the general meaning of the Ayah (5:45) in Surah Al-Ma’idah.
The Four Imams (Abu Hanifah, Malik, Shafii and Ahmad) and the majority of scholars stated that; the group is killed for one person whom they murder. Umar said, about a boy who was killed by seven men, "If all the residents of San`a’ (capital of Yemen today) collaborated on killing him, I would kill them all.” No opposing opinion was known by the Companions during that time which constitutes a near Ijma (consensus).
There is an opinion attributed to Imam Ahmad that;
a group of people is not killed for one person whom they kill, and that only one person is killed for one person. Ibn Al-Mundhir also attributed this opinion to Mu`adh, Ibn Az-Zubayr, Abdul-Malik bin Marwan, Az-Zuhri, Ibn Sirin and Habib bin Abu Thabit.
Allah’s statement:
But if the killer is forgiven by the brother (or the relatives) of the killed (against blood money), then it should be sought in a good manner, and paid to him respectfully. refers to accepting blood money (by the relatives of the victim in return for pardoning the killer) in cases of intentional murder. This opinion is attributed to Abu Al-Aliyah, Abu Sha`tha’, Mujahid, Sa`id bin Jubayr, Ata Al- Hasan, Qatadah and Muqatil bin Hayyan. Ad-Dahhak said that Ibn Abbas said: (But if the killer is forgiven by the brother (or the relatives) of the killed (against blood money), means, "the killer is pardoned by his brother (i.e., the relative of the victim) and accepting the Diyah after capital punishment becomes due (against the killer), this is the `Afw (pardon mentioned in the Ayah).”
Allah’s statement:
…then it should be sought in a good manner, means, when the relative agrees to take the blood money, he should collect his rightful dues with kindness: and paid to him respectfully. means, the killer should accept the terms of settlement without causing further harm or resisting the payment.
Allah’s statement:
This is an alleviation and a mercy from your Lord. means the legislation that allows you to accept the blood money for intentional murder is an alleviation and a mercy from your Lord. It lightens what was required from those who were before you, either applying capital punishment or forgiving. Sa`id bin Mansur reported that Ibn Abbas said, "The Children of Israel were required to apply the Law of equality in murder cases and were not allowed to offer pardons (in return for blood money).
Allah said to this Ummah (the Muslim nation):
The Law of equality in punishment is prescribed for you in case of murder: the free for the free, the servant for the servant, and the female for the female. But if the killer is forgiven by the brother (or the relatives) of the killed (against blood money). Hence, `pardoning’ or `forgiving’ means accepting blood money in intentional murder cases.” Ibn Hibban also recorded this in his Sahih.
Qatadah said: (This is an alleviation from your Lord), Allah had mercy on this Ummah by giving them the Diyah which was not allowed for any nation before it. The People of the Torah (Jews) were allowed to either apply the penal code (for murder, i.e., execution) or to pardon the killer, but they were not allowed to take blood money.
The People of the Injil (the Gospel – the Christians) were required to pardon (the killer, but no Diyah was legislated).
This Ummah (Muslims) is allowed to apply the penal code (execution) or to pardon and accept the blood money.” Similar was reported from Sa`id bin Jubayr, Muqatil bin Hayyan and Ar-Rabi bin Anas.
Allah’s statement:
So after this whoever transgresses the limits, he shall have a painful torment. means, those who kill in retaliation after taking the Diyah or accepting it, they will suffer a painful and severe torment from Allah. The same was reported from Ibn Abbas, Mujahid, Ata Ikrimah, Al-Hasan, Qatadah, Ar-Rabi bin Anas, As-Suddi and Muqatil bin Hayyan. The Benefits and Wisdom of the Law of Equality
Allah’s statement:
And there is life for you in Al-Qisas, legislating the Law of equality, i.e., killing the murderer, carries great benefits for you. This way, the sanctity of life will be preserved because the killer will refrain from killing, as he will be certain that if he kills, he would be killed. Hence life will be preserved.
In previous Books, there is a statement that killing stops further killing! This meaning came in much clearer and eloquent terms in the Qur’an: (And there is (a saving of) life for you in Al-Qisas (the Law of equality in punishment).
Abu Al-Aliyah said,
"Allah made the Law of equality a `life’. Hence, how many a man who thought about killing, but
this Law prevented him from killing for fear that he will be killed in turn.” Similar statements were reported from Mujahid, Sa`id bin Jubayr, Abu Malik, Al-Hasan, Qatadah, Ar-Rabi bin Anas and Muqatil bin Hayyan.
Allah’s statement:
O men of understanding, that you may acquire Taqwa. means, `O you who have sound minds, comprehension and understanding! Perhaps by this you will be compelled to refrain from transgressing the prohibitions of Allah and what He considers sinful.’ Taqwa (mentioned in the Ayah) is a word that means doing all acts of obedience and refraining from all prohibitions.
ஒருமுஸ்லீம்அல்லாதவர்கொலைசெய்யப்பட்டால்அதற்காகஒருமுஸ்லீமைக்கொல்லக்கூடாதுஎன்றுஇசுலாமியபெருமக்கள்கருதுவதாகவும்இப்னுகஸிர்கூறுவதையும்கவனியுங்கள்.
இச்சட்டப்படி…
1. சாட்சிகள் தேவையில்லை.
2. கொலைக்கான காரணம் தேவையில்லை. சாட்சியும், காரணமும் தேவை என்று குர்ஆன் எங்கும் கூறவில்லை. முதலாளி முறையிட்டாலே போதும்.
3. இச்சட்டத்திற்கு வயது வேறுபாடு கிடையாது.
முகம்மதின் காலத்திற்கு ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஹமுராபி காலத்துச் சட்டம் இந்த பழிக்குப்பழி என்றச் சட்டம். யூதர்களும் இதனையே தங்களின் சட்டமாக நடைமுறைப்படுத்தியுள்ளனர்.இந்தச் சட்டம் ஒரு எஜமானனின் இழப்பை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளது. இச்சட்டப்படி ரிசானா நபீக் தண்டிக்கப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம், சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஆராயப்படவில்லை. சாட்சிகள் இல்லை. சாட்சிகள் இல்லாத நிலையில் பயன்படுத்தக்கூடிய அறிவியல் ஆய்வுகள், தடவியல் மற்றும் பிரேத பரிசோதனைகள் நடத்தப்படவில்லை. எஜமானியம்மாளின் முறையீடை மட்டுமே எடுத்துக்கொண்டு சரியத் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கிறோம் என்று தலையை சீவித்தள்ள உத்திரவிட்ட இந்த நீதிபதிகள் நீதிபதிகளா?மதவெறியர்களா?

Rizana_Nafeek-Killed+2013.jpg

487559_459320764121128_42719143_n.jpgசமீபத்தில் நடந்த இன்னொரு நிகழ்வை எடுத்துக்கொள்வோம். முஸ்லீம் நாடான ரியாத்திலுள்ள ஃபையான் காம்தி என்ற மதகுரு தனது பெண் குழந்தை "லாமியா காம்தி" யைகற்பழித்து கொலை செய்துள்ளான். மருத்துவ அறிக்கை அந்த பெண்னின் எல்லா உறுப்புக‌ளிலும்சித்திரவதை நிகழ்த்த பட்டுள்ளதும் அவளின்முதுகெலும்பு உடைக்கபட்டதாகவும், மலவாயும் சிதைக்கப்பட்டு தீயினால் சுடப்பட்டுள்ளதாகவும்சொல்கிறது.

கற்பழிப்புகளிலிருந்து உலகப் பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால் புர்கா அணியவேண்டும் என்று கூப்பாடுபோடும் மதவெறியர்களே. பெற்ற தந்தையே தன் குழந்தையை கற்பழிக்கும்போது புர்கா எவ்வாறு தடுக்கும்? அந்த குழத்தைக்கும் புர்கா போடவேண்டுமோ? அல்லது தந்தைக்கு முன்பாகவும் ஒரு மகளும் வரக்கூடாது என்று சட்டம் போடனுமோ? இசுலாமிய அறிவிலிகளே யோசிங்கள். இந்த காமக்கொடூரனுக்கு சரியத் சட்டப்படி இரத்தப்பணம் பெற்றுக்கொண்டு விடுதலை அளித்துள்ளது அநீதிமன்றம். இதற்கு இன்னொரு காரணமும் சொல்லி நியாப்படுத்துகறார்கள். அதாவது இந்தக் கொலைக்கு காரணம் ஏதும் இல்லையாம். ரிசானாவுக்கு “காரணம்” ஆராயப்பட மறுத்தவர்கள் முல்லாவுக்கு “காரணம் இல்லை” என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள்.

1. சரியத்சட்டப்படி குழந்தைகள் தந்தைக்கு உடமையானவர்கள். அப்படியானால் இரத்தப்பணம் கற்பழித்த அந்த காமுகனுக்குத்தான் அதாவது தனக்குத்தானே கொடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் குழந்தையின் அம்மாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியானால் சரியத்து எங்கே போனது?

2. இந்த காமக்கொடூரனுக்கு இரத்தப்பணம் பெற்றுக்கொண்டு விடுதலை செய்வதேன்? குழந்தையின் அம்மா மன்னித்ததால் இரத்தப்பணம் கொடுக்கப்பட்டது என்று அறிவுகெட்டத்தனமாக உளரவேண்டாம். காரணம் குழந்தைக்கு பாத்தியப்பட்டவன் அந்த தகப்பனே. அது மட்டுமில்லாது தனது கணவன் என்ற நிலையில் அந்த அம்மா அவனுக்கு மன்னிப்பு வழங்குவது இயல்பானது. இதை அனுமதித்தால் இரத்தப்பணம் கொடுக்கக் கூடிய பணக்காரன் எவனும் தனது மகள்களை கற்பழிக்கலாம் என்பதை சரியத் சட்டம் கூறுகிறது என்று பொருளாகும். சௌதிகாரனுக்கென்றால் சரியத் பல்டி அடிக்குமோ?
கடுமையாக தண்டித்தால்தான் குற்றங்கள் நடக்காது என்று ரிசானாவின் படுகொலைக்குகூக்குரலிட்ட பிஜே வகையரா மதவெறியர்களே, இதற்கு மௌனம் காப்பது ஏன்?
ஆனால் பல நாடுகளும், நாட்டின் மக்களும், மனித உரிமை அமைப்புகளும், தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் போன்ற சில காட்டுமிராண்டி அமைப்புகள் தவிர பிற இசுலாமியர்களும் 7 வருடங்களாக போராடியும்,வேண்டிக்கொண்டபோதும் மயிரளவுக்குக்கூட செவி சாய்க்காமல் ரிசானாவின் தலை சீவப்பட்டுவிட்டது.சௌதி சிறைச்சாலைகளில் இன்னும் ‘புத்தர் சிலையை வைத்திருந்தார், பைபிள் வைத்திருந்தார், மந்திரம்ஓதி மணிக்கட்டில் கட்டும் கயிறு கட்டியிருந்தார்’ என்றெல்லாம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மரதண்டனை வழங்கப்பட்டு தலைசீவப்பட காத்திருக்கிறார்களர். சௌதி, துபாய் போன்ற நாடுகளில் தொழிலாளர்களாகசென்றுள்ளவர்கள் தங்கள் தங்குமிடங்களில் தங்கள் தெய்வங்களை வணங்குவதைக்க தடுக்கும் அரசின் நடவடிக்கை குறித்து "அங்கேயும் போய் அநாச்சாரங்களை புகுத்த நினைத்தால் அரசாங்கம் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கையா பார்க்கும்" என்று இசுலாமியர்கள் தங்கள் மதவெறியைக் கக்குகின்றனர்.ஆனால் பிற நாடுகளில் தங்களுக்கு மதவழிபாட்டு உரிமை வேண்டும் என்று கேட்கின்றனர். ஜனநாயகம் பேசுகின்றனர்.
ரிசானாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்ட தினத்தன்று சந்தித்த மௌலவி ஏ.ஜே.எம்.மக்கதூம் ரிசானாவின் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் சிலவரிகள் பின்வருமாறு:
‘இறுதி ஆசை மற்றும் மரணசாசனம் ஏதும் உண்டா என்று கேட்டேன். அதற்கு அவர் "ஊருக்கு நான் எப்பொழுது செல்வது" என்று கேட்டார்’ என்றும், "என்னை மன்னித்து விட்டுவிடச் சொல்லுங்கள் நானா"என்று கெஞ்சிய குரலில் அவர் கூறியது எனது உள்ளத்தை உருக்கிவிட்டது" என்றும் எழுதியுள்ளார். இந்த இரண்டு வரிகளை என்னால் தட்டச்சு செய்ய முடியாமல் பல மணிநேரம் கழிந்தது
போதுமான மொழிபெயர்ப்பு வசதியைக்கூட இந்த மிருகங்கள் ஏற்படுத்தித் தராததால், கடைசி நிமிடங்கள் வரை தான் குற்றம் செய்யவில்லை என்பதால் மன்னிப்பு கிடைத்துவிடும் என்று அல்லாவின் கருணைமீது நம்பிக்கையுடன் 7 வருட காலங்களை சிறையில் கழித்திருக்கிறாள் இந்தச் சிறுமி.ஒவ்வொருநாளும் எப்படி கழிந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள. இந்த 7 வருட சிறைதண்டனையே இதற்கு அதிகம். ஆனால் மரணதண்டனை…….
எனது காதில் "ஊருக்கு நான் எப்பொழுது செல்வது" என்ற ரிசானா நபீக்கின் குரல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
உங்கள் காதுகளில் அது கேட்கிறதா? கேட்டால் இந்த காட்டுமிராண்டிகால சரியத் சட்டத்தையும், மதத்தையும் தூக்கி எரியுங்கள். மனிதர்களாக வாழுங்கள்.
ஒன்றை மறந்துவிடாதீர்கள்! ரிசானா நபீக்கின் சீவப்பட்ட தலை புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டுள்ளது.ஒருநாள் அரபு தேசங்களின் தொழிலாளர்கள் இதற்கு பழிவாங்குவார்கள்.

rizana.jpg
ஏழை ரிசானாவின் குடில்

நன்றி : நக்கீரன், ஆனந்தவிகடன்

source:iraiyillaislam.blogspot.in

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

அல்லாவின் திருப்பெயரால்… ….

அச்சிடுக மின்-அஞ்சல்
கடந்த இரண்டு வார காலமாக, தமிழகத்தில் நீடித்து வந்த சர்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக, இஸ்லாமியர்கள் தரப்புக்கும், கமல்ஹாசன் தரப்புக்கும் தமிழக அரசு நடத்திய கட்டப்பஞ்சாயத்தின் மூலம் ஏற்பட்ட உடன்பாட்டின் காரணமாக, போராட்டங்களை விலக்கிக் கொள்வதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன. கமல் தரப்பு 7 காட்சிகளில் ஒலியை நீக்குவது, குறைப்பது உள்ளிட்ட சமரசங்களுக்கு ஒப்புக் கொண்டதால், இன்று (03.02.2013) மதியம், அனைத்து மாவட்டங்களிலும் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.

Kamal-Sir-4
காட்சியை நீக்குவதாக கமல் ஒப்புக் கொண்டதோடு நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்ற ஒப்பந்தம், கமலின் கையை முறுக்கி கையெழுத்திட வைத்திருப்பதாகவே தோன்றுகிறது. மராட்டிய மாநிலம் தொடர்பாகவோ, மராட்டியர்கள் தொடர்பாகவோ, திரைப்படத்தில் கிண்டலாகவோ, கேலியாகவோ ஏதாவது காட்சிகள் வந்தால், அப்படம் வெளியாகும் தியேட்டர்களை சிவசேனை குண்டர்கள் அடித்து நொறுக்குவதும் பின்பு சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள், பால் தாக்கரேவின் காலில் விழுந்து, தங்கள் திரைப்படத்தை காப்பாற்றிக் கொள்வது போன்றதொரு காட்சி தமிழகத்திலும் அரங்கேறியிருக்கிறது.

இத்திரைப்படம் இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் இழிவு படுத்துகிறது என்று தமிழக இஸ்லாமிய அமைப்புகள் கொதித்தெழுந்தன. இங்கு இஸ்லாமிய அமைப்புகள் என்று குறிப்பிடுவது, அந்த அமைப்புகளின் தலைவர்கள் மட்டுமே. தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், இறை நம்பிக்கையோடு, உழைத்து தங்கள் வாழ்வை நடத்தி வருகிறார்கள். ஆனால், இஸ்லாமிய அமைப்புகள் என்று இஸ்லாமிய மக்களின் பெயரால் பிழைப்பு நடத்தி வரும் அமைப்புகள் மட்டுமே, ஒரு திரைப்படத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் தீவிரவாதிகளை தீவிரவாதிகளாகக் காட்டியதால் இஸ்லாத்தே இழிவுபடுத்தப்பட்டு விட்டது என்று கூக்குரலிட்டு, இத்தனை களேபரங்களுக்கும் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

DSC_0241

ஆயிரக்கணக்கான ஆண்டு பழமை வாய்ந்த ஒரு மதம், பல கோடி மனிதர்களால் பின்பற்றப்பட்டு, வளர்க்கப்பட்டு வரும் ஒரு மதம், ஒரே ஒரு திரைப்படத்தால் இழிவு படுத்தப்படும் என்று பிரச்சினை செய்யும் இந்த மதவாதிகள், உண்மையிலேயே, இஸ்லாமை அறிந்திருக்கிறார்களா என்ற சந்தேகமே ஏற்படுகிறது. எத்தனையோ நெருக்கடிகளையும், போர்களையும் தாண்டியும் இன்று இஸ்லாத் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. ஒரு திரைப்படமா இஸ்லாத்தை இழிவுபடுத்தி விடும் ?

இஸ்லாமியர்கள், இந்தியா முழுக்க பரவலாக இருக்கிறார்கள். விஸ்வரூபம் திரைப்படம், தமிழகத்தைத் தவிர, ஆந்திரா, கர்நாடகா, மற்றும் கேரளாவில் வெளியிடப்பட்டு கடந்த ஒரு வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஐதராபாத்திலும், கேரளாவிலும் கணிசமான அளவுக்கு இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். எந்த இடத்திலும், இஸ்லாமியர்கள் இத்திரைப்படத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்தியதாக தகவல் இல்லை. பெரும்பாலான இடங்களில் இத்திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடி வருகிறது. ஆனால், தமிழகத்தில் உள்ள மதவாதிகள், தமிழகத்தின் அனைத்து இஸ்லாமியப் பிரதிநிதிகள் போல, நாங்கள் சொல்வதைக் கேட்காவிட்டால், வெட்டுவோம், கொளுத்துவோம் என்று மிரட்டி அந்த மிரட்டலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் தனிப்பட்ட பிடிவாதத்தின் காரணமாக, இந்த மதவாதிகளின் கோரிக்கைக்கு, தமிழக அரசின் ஆதரவு கிடைத்தது. விஸ்வரூபம் திரைப்படத்தை வைத்து, ஜெயலலிதா தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். மதவாதிகள், நாங்கள் நினைத்ததை நிறைவேற்றியே தீருவோம்… எங்களைப் பகைத்துக் கொண்டால், எதுவும் நடக்காது என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளதாக இறுமாந்து இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையின் வீச்சு என்ன, இதன் எதிர்கால விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை ஜெயலலிதா உணர்ந்தாரா இல்லையா என்பது தெரியவில்லை… ஆனால் மதவாதிகள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

உள்துறைச் செயலாளரிடம் புகார் கொடுத்துவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்த, இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், இத்திரைப்படம் முழுக்க முழுக்க, இஸ்லாத்தை இழிவுபடுத்துவதற்காகவே எடுக்கப்பட்டுள்ளது.. அதனால், இப்படம் வெளியிடுவதை ஒரு நாளும் அனுமதிக்க மாட்டோம் என்றார்கள். இஸ்லாமிய அமைப்புகளின் சார்பாக வாதிட்ட, வழக்கறிஞர் சங்கர சுப்புவும், ஒரே ஒரு பாடல் காட்சியைத் தவிர, மொத்த திரைப்படமும் முஸ்லீம்களை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று கூறினார்.

ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தில், படத்தில் சில காட்சிகளை 7 நிமிடங்கள் குறைத்துக் கொள்ள கமல் தரப்பு ஒப்புக் கொண்டதால், திரைப்படத்துக்கு எதிராக போராட்டங்கள் வாபஸ் பெறப்போவதாக அறிவித்துள்ளனர். முழுக்க முழுக்க இஸ்லாத்தை இழிவுபடுத்துவதாக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம், வெறும் ஏழு நிமிடங்கள் குறைப்பதால், எப்படி ஏற்றுக் கொள்ளக் கூடிய திரைப்படமாக மாறியது என்பது இந்த மதவாதத் தலைவர்களுக்கே வெளிச்சம்.

2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 5.5 சதவிகிதத்தினர் இஸ்லாமியர்கள். 2001 கணக்கெடுப்பின்படி, இந்த 5.5 சதவிகிதம் 34,70,647. தற்போது இந்தத் தொகை 50 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். இந்த 50 லட்சத்தில் 50 பேர் மட்டுமே இத்திரைப்படத்தை நிறுத்த வேண்டும், கொளுத்த வேண்டும் என்று முழக்கமிட்டவர்கள். இந்த 50 பேரின் பின்னால் இருப்பவர்கள் எப்படிப் பார்த்தாலும் 5 லட்சத்தைக் கூடத் தாண்டாது. இந்த 5 லட்சத்தைக் கழித்து விட்டால், மீதம் உள்ள 45 லட்சம் இஸ்லாமியர்கள் அமைதியை விரும்புபவர்கள். சகோதரத்துவத்தோடு, தங்கள் வாழ்வை உழைத்து வாழ வேண்டும் என்று நாள்தோறும் உழைத்துக் கொண்டிருப்பவர்கள். இவர்களுக்கு, கடவுள் மனதில் இருக்கிறார். இவர்கள் இறைவனை மனதில் நினைத்து வாழ்வை நடத்துபவர்கள்.

An_Indian_Muslim_old_man

குரானில் சொன்னது போல,

“கடுமையாகச் சண்டையிடுபவன், மனதில் பகைமையை வைத்திருப்பவன் அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் ஆவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்”

“(நபியே!) கூறுவீராக: ""தங்கள் ஆன்மாக்களுக்கு கொடுமை இழைத்துக் கொண்ட என் அடிமைகளே! இறைவனின் கருணை பற்றி நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். திண்ணமாக இறைவன் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும், கருணையாளனும் ஆவான். திரும்பிவிடுங்கள் உங்கள் இறைவனின் பக்கம்’.

இறைநம்பிக்கையாளன் நேசத்தின் சிகரமாவான். மக்களை நேசிக்காதவனிடமும், மக்களால் நேசிக்கப்படாதவனிடமும் எந்த நன்மையும் இல்லை.

உங்களுக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்பாத வரையில் நீங்கள் உண்மையுள்ள இறை நம்பிக்கையாளர் ஆக முடியாது.”

என்பது போன்ற பொன்மொழிகளைப் பின்பற்றி தங்கள் வாழ்க்கையை நடத்துபவர்கள். அவர்களுக்கு நன்றாகத் தெரிந்தது, எவனோ ஒருவன் சினிமாவில் மோசமாகச் சித்தரிப்பதாலும், எவனோ ஒருவன் இறையை தவறாகப் பேசுவதாலும், இறைவனை இழிவுபடுத்தி விட முடியாது… ஏனெனில் இறைவன் மிகப்பெரியவன், அவன் கருணையே வடிவானவன் என்பதை உணர்ந்தவர்கள்.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 20 லட்சம். இதில் இஸ்லாமியர்கள் ஏற்கனவே சொன்னது போல 50 லட்சம் இருப்பார்கள். இதில் இந்த மதத் தலைவர்களின் பின்னால் உள்ளவர்கள், சுமாராக 5 லட்சம். இந்த 5 லட்சத்திலும், தியேட்டர்களில் கல்லெறிபவர்கள், மதவாதிகளின் கட்டப்பஞ்சாயத்துகளுக்கு துணை சென்று, இதையே பிழைப்பாக வைத்திருக்கும் இவர்கள் அதிகபட்சம் 10 ஆயிரம் இருப்பார்கள். இந்த 10 ஆயிரம் பேருக்கு வேறு பிழைப்பு இல்லை. எங்கே எப்போது பிரச்சினையை உண்டு பண்ணலாம். எந்த இடத்தில் குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கலாம் என்று காத்துக்கொண்டே இருப்பார்கள்.

“ஆசைகளையும் தம் தேவைகளையும் குறைத்துக் கொண்டவர்களே சுதந்திரமானவர்கள்.” என்கிறார் நபிகள். ஆனால் இந்த மதவாதிகளின் ஆசைகளுக்கும், தேவைகளுக்கும் எல்லையே இல்லை. பணம், பதவி, பகட்டு, சொகுசு என்ற இவர்களின் தேவைகளுக்கு அளவே கிடையாது.

உன் சகோதரனுக்கு உதவி செய் என்கிறது இஸ்லாம். இஸ்லாத்தின் மீதும், இஸ்லாமியர்கள் மீதும் உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள் என்ன செய்ய வேண்டும் ? இதே தேசத்தில் கல்வியறிவு இல்லாமலும், வறுமையிலும் வாழும் இஸ்லாமியர்களின் நிலையை மேம்படுத்த வேண்டுமா இல்லையா ? ஆறு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் தலைமையிலான குழு, முஸ்லிம்களின் கல்வியறிவு, முஸ்லிம் பட்டதாரிகளின் சதவிகிதம், பள்ளிப் படிப்பை கூட நுகராத முஸ்லிம்களின் நிலை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் வாழும் முஸ்லிம்களின் சதவிகிதம், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் முஸ்லிம்கள் உணவு, உடை, இருப்பிடம் இல்லாத வாழத் தகுதியற்ற நிலையில் இருக்கும் நிலை, குடிநீர், கழிப்பிட வசதியின்றி வாழும் முஸ்லிம்கள், 88 லட்சம் மத்திய அரசு ஊழியர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை எத்தனை என்பது உள்ளிட்ட முஸ்லிம்களின் சமூக வாழ்வை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

மதக் கலவரங்கள் ஏற்படும்போது முஸ்லிம் சமுதாயம் அதிகளவில், பொருளாதார சூறைக்கும், உயிர் பலிக்கும் ஆளாவதையும் கருத்தில் கொண்டு பாதுகாப்பு பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் பரிந்துரை செய்திருந்தார் நீதிபதி சச்சார். பாதுகாப்பு தொடர்பான பணிகளில் முஸ்லிம் பிரதிநிதித்தவம் வெறும் 3 சதவீதம்தான் என்கிறது சச்சார் அறிக்கை. இதன்படி, பாதுகாப்பு பணிகளில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்ற சச்சார் கமிட்டி பரிந்துரையை ஏற்று, இஸ்லாமியர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் இருக்கின்ற காவல் நிலையங்களில் குறைந்தபட்சம் ஒரு முஸ்லிம் ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டது மத்திய அரசு. இந்த பரிந்துரைகளில் ஒன்றாவது அமல்படுத்தப்பட்டிருக்கிறதா ? சென்னை நகரையே எடுத்துக் கொண்டால், சென்னையில் எத்தனை இஸ்லாமியர்கள் ஆய்வாளர்களாக இருக்கிறார்கள் ? விரல் விட்டு எண்ணி விடலாம்.

இதையெல்லாம் அமல்படுத்த வேண்டும் என்று இந்த இஸ்லாமிய அமைப்புகள் போராடியிருக்குமேயானால், இவர்களோடு, தோளோடு தோள் நின்று, போராட மனித உரிமையாளர்களும், நடுநிலையாளர்களும் களத்தில் குதித்திருப்பார்கள். ஆனால், அற்பத்தனமான, ஒரு திரைப்படத்திற்காக, கச்சைக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கும் இந்த மதவாதத் தலைவர்களின் உண்மை முகங்களைப் புரிந்து கொள்ளுங்கள்.

திரைப்படம் எடுத்தவனை அடாவடி செய்து, மிரட்டுவது….. முகநூலில் முண்டா தட்டுவது…. எங்களை ஏன் இப்படி இழிவுபடுத்துகிறீர்கள் என்று வரிந்து கட்டிக் கொண்டு முகநூலில் மணிக்கணக்காக எழுதுவது … இப்படி முகநூலில் சண்டை போட்டுக் கொண்டிருப்பதால், ஒரே ஒரு இஸ்லாமியனுக்காவது இது பயனளிக்குமா ? இதையா நபிகள் சொன்னார் ?

விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சை பல உண்மைகளை உணர வைத்தது. பல காலமாக நெருக்கமாகப் பழகிய இஸ்லாமிய நண்பர்கள் ஒரே நாளில் விரோதிகளானார்கள். பேசுவதை நிறுத்தினார்கள். நீ ஒரு ஆர்எஸ்எஸ் கைக்கூலி என்றார்கள். வலதுசாரிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு எழுதுகிறாய் என்றார்கள். அடையாளம் தெரியாமல், பின்னூட்டம் போட்டு மிரட்ட நினைக்கும் இவர்கள், இதே சவுக்கு தளம், அஜ்மல் கசாப்புக்கு உரிய உரிமைகளை வழங்காமல் இரவோடு இரவாக தூக்கிலிட்டதைக் கண்டித்து எழுதிய ஒரே ஊடகம் சவுக்கு மட்டுமே என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள். வெளிப்படையாக சவுக்கு தளம் அதைக் கண்டித்து எழுதியபோது, இவர்கள் அஜ்மல் கசாப்புக்காக ரகசியமாக தொழுகை நடத்தினார்கள்.

நான்கு ஆண்டுகளாக நெருக்கமாகப் பழகிய ஒரு தோழர், தாலிபான்கள் விடுதலைப் போராளிகள்… அவர்களை கமல்ஹாசன் விமர்சிப்பதே தவறு என்றபோது, அதிர்ச்சி மட்டுமே மேலிட்டது. அத்தோடு நிற்காமல், அவர், தாலிபான்களையும் விடுதலைப் புலிகளையும் ஒப்பிட்டுப் பேசினார். புலிகள் இயக்கம், பெண் புலிகளை உருவாக்கி போர்க்களத்திற்கு அனுப்பியது. தாலிபான்கள், பெண்களை முக்காடிட்டு, இருட்டில் அடைக்கிறார்கள். யாரை யாரோடு ஒப்பிடுவது ? இத்தனை ஆண்டுகளாக, தாலிபான்களை விடுதலைப் போராளிகளாக நினைத்த ஒருவருடனா பழகியிருக்கிறோம் என்ற அதிர்ச்சி மட்டுமே எஞ்சி நிற்கிறது. தாலிபான்களை விடுதலைப் போராளிகள் என்று கூறும் ஒரு நபரிடம் என்ன விவாதிப்பீர்கள் ? அதற்கு மேல் அவரிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது ?

முகநூலில் நடைபெறும் பெரும்பாலான விவாதங்களில் கூறப்படும் ஒரு விஷயம், இந்து தீவிரவாதம். இந்து தீவிரவாதத்தில் ஈடுபட்ட கர்னல் புரோகித் மற்றும் பெண் சாமியாரிணி சாத்தி பிரக்ஞா சிங் ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டாம் என்று யாருமே கூறவில்லை. அவர்கள் செய்ததையும் யாரும் நியாயப்படுத்தவில்லை. ஆனால், தீவிரவாதச் செயல்களில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த யாருமே ஈடுபட்டதில்லையா ? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்…!!!

இந்தியாவில் நடந்த முக்கியமான தீவிரவாதத் தாக்குதல்களின் பட்டியல் இதோ…

1993 மும்பை குண்டு வெடிப்பு மரணம் 257, 1993 சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டு வெடிப்பு மரணம் 11, 1996 பிரம்மபுத்ரா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு மரணம் 33, 1997 பாண்டியன் எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மரணம் 3, செங்கோட்டை துப்பாக்கிச் சூடு மரணம் 3, காஷ்மீர் சட்டசபை தாக்குதல் மரணம் 38, பாராளுமன்றத் தாக்குதல் மரணம் 7, 2002 ஜான்பூர் ரயில் குண்டு வெடிப்பு மரணம் 12, 2002 மும்பை பஸ் வெடி குண்டு மரணம் 2, 2002 கர்னூல் ரயில் தகர்ப்பு மரணம் 20, 2002 அக்ஷர்தாம் கோயில் தாக்குதல் மரணம் 31, 2003 மும்பை குண்டு வெடிப்பு மரணம் 1, 2003 மும்பை ரயில் குண்டு வெடிப்பு மரணம் 11, 2003 மும்பை பஸ் வெடிகுண்டு மரணம் 4, 2003 மும்பை கார் குண்டு வெடிப்பு 52, 2005 ஜான்பூர் ரயில் குண்டு வெடிப்பு மரணம் 13, 2005 புதுதில்லி தீபாவளி குண்டு வெடிப்பு 70, 2006 வாரணாசி குண்டு வெடிப்பு மரணம் 21, 2006 மும்பை ரயில் குண்டு வெடிப்பு மரணம் 209, ஐதராபாத் லும்பினி பார்க் குண்டு வெடிப்பு மரணம் 42, 2007 லூதியானா தியேட்டர் குண்டு வெடிப்பு மரணம் 6, 2007 வாரணாசி, லக்கோ மற்றும் பைசாபாத் குண்டு வெடிப்பு மரணம் 16, 2008 ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு மரணம் 63, 2008 பெங்களுரு சின்னசாமி விளையாட்டரங்க குண்டு வெடிப்பு மரணம் 2, 2008 அகமெதாபாத் தொடர் குண்டு வெடிப்பு மரணம் 29, 2008 டெல்லி மார்க்கெட் குண்டு வெடிப்பு மரணம் 21, 2008 இம்ப்பால் குண்டு வெடிப்பு மரணம் 17, 2008 தாஜ் ஓட்டல் தாக்குதல் மரணம் 171, 2010 பூனா பேக்கரி குண்டு வெடிப்பு மரணம் 17, 2011 மும்பை குண்டு வெடிப்பு மரணம் 18, 2011 டெல்லி நீதிமன்ற குண்டு வெடிப்பு மரணம் 10. இந்த அத்தனை குண்டு வெடிப்புகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் / தண்டிக்கப்பட்டவர்கள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

20081101T125107Z_01_DEL07_RTRMDNP_3_INDIABLASTASSAM

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு, சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மாலேகான் குண்டு வெடிப்பு மற்றும் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு ஆகிய இரண்டில் மட்டும்தான் இந்து தீவிரவாதிகள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் யாருக்காவது மாற்றுக் கருத்து இருக்க முடியுமா ? இந்து தீவிரவாதம் இருக்கிறது என்பதை யாராவது மறுக்க முடியுமா ? யாரும் மறுக்கவுமில்லை… மறைக்கவுமில்லை. ஆனால், மீதம் உள்ள அத்தனை குண்டு வெடிப்புகளையும் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் யார் ? அத்தனை வழக்குகளும் பொய் வழக்குகளா ? பம்பாய் படத்தை இயக்கியதற்காக, இயக்குநர் மணிரத்னத்தின் வீட்டில் குண்டு வீசியது யார் ?

இந்த குண்டு வெடிப்பு மற்றும் தீவிரவாத வழக்குகளில் கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் அனைவரும் நாத்தீகர்களா ? மார்க்சியம் பேசுபவர்களா ? அவர்களும் ஐந்து வேளை தொழுகிறார்களா இல்லையா ? குரான் படிக்கிறார்களா இல்லையா ?

ஆப்கானிஸ்தானில் குண்டு வைக்கப்படுவதாகவும், அதில் சம்பந்தப்பட்டவன், கோவையிலும் மதுரையிலும் தங்கியிருந்ததாகவும் ஒரு திரைப்படம் எடுத்தால் அரசாங்கத்தோடு கூட்டு சேர்ந்து, இத்தனை அராஜகமா ? கமல்ஹாசன் இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் போலச் சித்தரிக்கிறார் என்று கூறும் மதவாதிகளே…. நீங்கள் செய்யும் காரியத்தால்தான் அப்படி ஒரு கருத்து உருவாக்கப்படுகிறது. தாலிபான்களை தீவிரவாதிகளாகக் காண்பித்தால் தமிழக முஸ்லீம்கள் ஏன் கோபப்படுகிறார்கள் என்ற கேள்வி இயல்பாக எழுகிறதா இல்லையா ? நீங்கள் இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்கிறீர்களா.. இல்லை தாலிபான்களுக்கு விசுவாசமாக இருக்கிறீர்களா என்ற கேள்வி எழுமா எழாதா ?

இந்த மதவாதிகள் விஸ்வரூபம் படத்தில் ஏற்படுத்திய பிரச்சினைகளால் ஏற்பட்டிருக்கும் சேதம் குறைவானதல்ல. சாதாரணமாக, எவ்வித அரசியல் பிரக்ஞையுமின்றி, இயல்பாக தன் வாழ்வை நடத்தும் ஒரு நடுத்தர வர்க்க இந்து, இஸ்லாமியர்களை எடுத்த எடுப்பில் திட்டுகிறான்…. ஏன் இப்படிச் செய்கிறார்கள்…. இந்தப் படம் வந்தால் என்ன குடி முழுகப் போகிறது.. என்று கேட்கிறார்கள்…. ஏன் இவர்களைப் பற்றிப் படம் எடுக்கக் கூடாதா ? இது ஜனநாயக நாடுதானே என்று கேட்கிறார்கள்.

நாளை ஒரு வேளை தப்பித் தவறி, ஒரு மதக்கலவரம் உருவானால், அதனால் பாதிக்கப்படப் போவது யார் தெரியுமா ? பீடி சுற்றி பிழைக்கும், கறிக்கடை வைத்திருக்கும் ஏழை இஸ்லாமியன்தான் பாதிக்கப்படுவான். இன்று அரசோடு பேச்சுவார்த்தை நடத்தும், இந்த இஸ்லாமியத் தலைவர்கள் ஒருவரைக் கூடப் பார்க்க முடியாது. அனைத்தும் நடந்து முடிந்தபிறகு, ஆறுதல் சொல்ல வருவார்கள்.

விஸ்வரூபம் திரைப்படத்துக்காக இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தும் உள்துறைச் செயலாளர் ராஜகோபாலன் யார் தெரியுமா ? மரணப்படுக்கையில் இருக்கும் ஒரு இஸ்லாமியச் சிறைவாசியை பரோலில் அனுமதிக்க மறுத்து பிடிவாதம் பிடித்துக் கொண்டிருப்பவர். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் மூன்று ஆண்டு சிறை தண்டனை பெற்று, ஒரு சிறை அதிகாரியை கொலை செய்ததற்காக வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்று கோவையில் இருந்து வருபவர்தான் அபுதாஹிர். இந்த அபுதாஹிரின் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து விட்டன. இதயமும் பலவீனமாக உள்ளது. இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து விட்டதால், வாரத்துக்கு இரண்டு முறை டயாலிசிஸ் செய்ய வேண்டும். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய, இவருக்கு சிறுநீரக தானம் செய்ய யாரும் முன்வராததால், இவர் தினந்தோறும் மரணத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார். இவரை சிறை விதிகளின் படி, 90 நாட்களுக்கு பரோலில் அனுப்ப வேண்டும் என்று இவரது சகோதரர் உள்துறைச் செயலாளரிடம் கோரிக்கை வைக்கிறார். இந்த ராஜகோபால், அவரது மனுவை நிராகரிக்கிறார். 90 நாட்கள் பரோலில் அனுப்ப உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிடுமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பால் வசந்தகுமார், 24.08.2012 அன்று கீழ்கண்டவாறு உத்தரவிடுகிறார்.

Rajagopal_IAS_2

உள்துறைச் செயலாளர் ராஜகோபாலன்

“Considering the medical report dated 10.08.2012, the Writ Petition is disposed of with a direction to the first respondent (Home Secretary) to grant leave to the petitioner’s brother, the life convict No. 1487 for 90 days from 30.08.2012 on condition that the petitioner’s brother shall report before the Ukkadam police station once in 15 days between 10 am to 12 noon”

10.08.2012 நாளிட்ட மருத்துவ அறிக்கையை பரிசீலித்ததன் அடிப்படையில், மனுதாரரின் சகோதரரான வாழ்நாள் சிறைவாசி (தண்டனைச் சிறைவாசி எண் 1487)க்கு 90 நாட்கள் விடுப்பு (பரோல்) வழங்குமாறும், அந்தச் சிறைவாசியின் சகோதரரான மனுதாரர், ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒரு முறை உக்கடம் காவல் நிலையத்தில் காலை 10 மணி முதல் 12 மணிக்குள் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்து பரோல் வழங்குமாறு உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிடப்படுகிறது.

நான் முடியாது என்று உத்தரவிட்ட பிறகு, அதற்கு மேல் உத்தரவிட நீதிமன்றத்துக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்ற இறுமாப்போடு நீதிபதி பால் வசந்தகுமார் முன்னிலையிலேயே சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்கிறார் ராஜகோபாலன். இந்த சீராய்வு மனுவை நீதிபதி பால் வசந்தகுமார் 14.09.2012 அன்று தள்ளுபடி செய்கிறார்.

தீர்ப்பு வழங்கி ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும், அத்தீர்ப்பை அமல்ப்படுத்தவில்லை ராஜகோபாலன். 29.09.2012 அன்று ராஜகோபாலனுக்கு, உங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கக் கூடாது என்று வழக்கறிஞர் அறிவிக்கை அனுப்பப் படுகிறது. இந்த வழக்கறிஞர் அறிவிக்கைக்குப் பிறகு, நீதிபதி பால் வசந்தகுமாரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல் செய்கிறார் ராஜகோபாலன். அந்த மேல்முறையீட்டு மனுவை, அப்போது தலைமை நீதிபதியாக இருந்த இக்பால், வேறு டிவிஷன் பென்ச்சுக்கு மாற்றி உத்தரவிடுகிறார். தற்போது இந்த வழக்கு நீதிபதிகள் கே.என்.பாஷா மற்றும் தேவதாஸ் முன்னிலையில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, மேலும் ஒரு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம், அரசு மருத்துவமனையில் சரியன சிகிச்சை வழங்கப்படாததால், தனியார் மருத்துவமனையில் சொந்த செலவில், டயாலிசிஸ் செய்ய அனுமதி வழங்கப்பட்டு, கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அபுதாஹிர். கடந்த 18.01.2013 அன்று அவரை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்தனர் மருத்துவர்கள். அன்று சிறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அபுதாஹிரின் உடல்நிலையைப் பார்வையிட்ட சிறை அதிகாரிகள், அவரை சிறையில் அனுமதிக்க முடியாது…. மருத்துவமனையில் அனுமதியுங்கள் என்று கூறியதன் அடிப்படையில் 19.01.2013 முதல் கோவை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வருகிறார். இன்று (04.02.2013) மாலை நிலவரப்படி, அவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகத் தெரிகிறது.

உள்துறைச் செயலாளரான ராஜகோபாலன் ஐஏஎஸ் அபுதாஹிருக்கு பரோல் வழங்காமல் இருப்பதற்கு தனிப்பட்ட காரணங்கள் எதுவுமில்லை. எனக்கு உத்தரவு போட நீதிபதி யார்…. ? புரட்சித் தலைவி அம்மாவின் அருளாசி பெற்ற ஒரே ஐஏஎஸ் அதிகாரி நான்தானே…. எனக்கு இல்லாத அதிகாரமா ? அப்படியே நீதிமன்றம் உத்தரவு போட்டாலும், நான் பணிந்து விடுவேனா என்ற இறுமாப்பும் திமிரும் மட்டுமே இதற்கான காரணம்.

அந்த உள்துறைச் செயலாளரிடம்தான், இந்த இஸ்லாமிய அமைப்புகள் விஸ்வரூபம் திரைப்படத்துக்காக மணிக்கணக்கில் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளன. மரணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு இஸ்லாமியனை, தன் இறுதி நாட்களில் குடும்பத்தோடு இருந்து மரணத்தைத் தழுவுவதற்கு இந்த இஸ்லாமிய அமைப்புகள் உதவியிருக்க வேண்டுமா இல்லையா ? அபுதாஹிருக்கு பரோல் வழங்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்து என்று இந்த 24 இஸ்லாமிய அமைப்புகளும் போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமா இல்லையா ? இந்த இஸ்லாமியனுக்காக போரட்டம் நடத்துவதை விட, விஸ்வரூபம் திரைப்படம் முக்கியமா ?

துப்பாக்கித் திரைப்படத்துக்காகவும், விஸ்வரூபம் திரைப்படத்துக்காகவும், ஒன்று கூடிய 24 இஸ்லாமிய அமைப்புகள், சச்சார் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தவோ, அபுதாஹிர் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்ப்படுத்தவோ, இவ்வாறு ஒன்று கூடவில்லை என்பதிலிருந்தே இவர்கள் இஸ்லாமியர்களின் பெயரைக் கூறி பிழைப்பு நடத்தும் வியாபாரிகள் என்பது புரிகிறதா இல்லையா ? இஸ்லாமியர்களின் மீது இவர்களுக்கு இருக்கும் அக்கறையை விட, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கடைக்கண் பார்வையில் இருக்க வேண்டும் என்பதில்தான் அதிக அக்கறை இருக்கிறது.

இன்று இஸ்லாமிய அமைப்புகளின் பெரும் தலைவர்களாக இருக்கும் சிலர், தமிழகத்தில் நடந்த பல குண்டு வெடிப்புச் சம்பவங்களில் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள். அவர்கள் உத்தரவின்படி குண்டு வைத்தவர்கள் சிறையில் இருக்கிறார்கள்…. உத்தரவிட்டவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறார்கள். கோவை குண்டு வெடிப்பில் தண்டிக்கப்பட்ட கைதிகளின் குடும்பங்கள் இன்று என்ன நிலையில் இருக்கிறது என்று என்றைக்காவது இத்தலைவர்கள் அக்கறை பட்டதுண்டா ?

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனையாகி, சிறையில் இருக்கும் அஸ்ரப் அலி என்பவரின் சகோதரி ஆமினா என்பவர், வறுமை காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டார். அவரின் வறுமையைப் போக்கவோ, அவர் வாழ்வை செழிக்க வைக்கவோ எந்த உதவியும் செய்யாத, அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், குரானுக்கு எதிராக பாலியல் தொழில் செய்தார் என்ற காரணத்தால் அவரைக் கொலை செய்து, அவர் உடல் பாகங்களை சிதைத்து வீசியெறிந்தனர். இதுதான் இவர்களின் இரட்டை வேடம்.

கோவை குண்டு வெடிப்பில் தண்டிக்கப்பட்டவர்களின் குடும்பங்களோடு, சாதாரண முஸ்லீம்கள் பழகுவதைத் தவிர்க்கிறார்கள். இவர்களோடு பழகினால், போலீஸ் தொந்தரவு வரும் என்று விலகியே இருக்கிறார்கள். கடுமையான வறுமையில் இருக்கும் இவர்களின் குடும்பங்கள், ஆட்டோ ஓட்டியும், பஜாரில் திருட்டு விசிடி விற்றும், பிழைத்துக் கொண்டிருக்கின்றன.

1997ம் ஆண்டு பாண்டியன் விரைவு வண்டி குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று கூறி, 19 வயது இளைஞர் கைது செய்யப்படுகிறார். 12 ஆண்டுகள் கழித்து, அவரை நிரபராதி என்று 2010ம் ஆண்டு விடுதலை செய்தது நீதிமன்றம். தன் இளமைக் காலம் முழுவதையும் சிறையில் கழித்த அந்த இளைஞர், இன்று பிழைக்க வழியில்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார். அந்த இளைஞருக்கு என்ன செய்தன இந்த இஸ்லாமிய அமைப்புகள்…. குறைந்தபட்சம் அந்த இஸ்லாமிய இளைஞர் எங்கிருக்கிறார் என்பதாவது இந்த அமைப்புகளுக்குத் தெரியுமா ?

எங்காவது ஒரு குண்டு வெடிப்பு நடந்தால் சமூகத்தைத் திருப்தி செய்வதற்காக, கையில் கிடைத்த முஸ்லீம்களையெல்லாம் கைது செய்து சிறையில் அடைக்கும் அரசு. யார் குற்றம் செய்தவன்… யார் செய்யாதவன் என்ற பாரபட்சமெல்லாம் பார்க்காமல், இக்குற்றத்தை கண்டு பிடித்து விட்டோம் என்று சமூகத்தை சமாதானப்படுத்துவதற்காக அப்பாவிகளைக் கூட காவல்துறை கைது செய்யத் தயங்காது.

அது போன்ற அப்பாவி இஸ்லாமியர்கள் பாதிக்கப்படக் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் மனித உரிமையாளர்களும், ஜனநாயகவாதிகளும், மதத்தின்பால் அல்லாமல் மனிதத்தின்பால் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த ஜனநாயகவாதிகளையும், மனித உரிமையாளர்களையும் முகம் சுளித்து ஒதுங்க வைக்கும் வேலைகளைத்தான் இந்த மதவாதிகள் செய்து கொண்டிருக்கின்றனர்.

விஸ்வரூபம் திரைப்படத்தில் ஏற்படுத்திய பிரச்சினையால், இஸ்லாமிய சமுதாயத்துக்கு இழப்பே அதிகம். ஒரு சிலர், அரசைப் பணிய வைத்து, அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி, தங்களின் சக்தியை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக, சமுதாயத்தில் ஒரு மாறாத வடுவை ஏற்படுத்தி விட்டார்கள். இஸ்லாமியர்களை ஒரு தீவாக மாற்றி விட்டார்கள்.

இனி எந்த திரைப்பட இயக்குநரும், திரைப்படங்களில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒரு பாத்திரமாக வைக்கக் கூட தயங்குவார்கள். இஸ்லாமியர்களின் கேரக்டரே இல்லாத வகையில் கதையமைப்பார்கள். இஸ்லாமிய சமூகத்தின் வாழ்க்கை முறை, சூழல், பண்பாட்டுக் கூறுகள் ஆகியவை தமிழ்த்திரைப்படங்களில் இடம்பெறாமலேயே போய் விடும் அபாயம் விஸ்வரூப சர்ச்சையால் ஏற்பட்டிருக்கிறது.

மலையாளத்தில் 2011ம் ஆண்டு ஆதாமிண்டே மகன் அபு என்று ஒரு திரைப்படம் உருவானது. ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் ஹஜ் பயணம் எவ்வளவு முக்கியமானது…. அந்தப் பயணத்தின் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் என்ன…. எப்படிப்பட்ட மனிதனாக அவன் இருக்க வேண்டும் என்று அற்புதமாக எடுத்துரைத்த ஒரு படம். சிறந்த வெளிநாட்டுத் திரைப்படமாக 2011ம் ஆண்டு இந்தியாவிலிருந்து ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் அது.

Adaminte_Makan_Abu

ஆயுஷும்மா மற்றும் அபு ஆகிய இருவரும் மலபார் பகுதியில் வசிக்கும் மாப்ளா முஸ்லீம்கள். எழுபது வயதாகும் அபு ஒரு அத்தர் வியாபாரி. அவர்களின் ஒரே மகன், அரபு நாடுகளுக்கு வேலைக்குச் சென்று அவர்களை மறந்து விடுகிறான். எப்படியாவது அந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்ல வேண்டுமென முடிவெடுக்கும்அபு, அது வரை அவர் சேர்த்து வைத்திருந்த அத்தனை சேமிப்புகளையும் கணக்கிட்டால் மிகவும் குறைவாக இருக்கிறது. ஆயுஷும்மா அவள் ஆசையாக வளர்த்து வந்த கோழிகளையும், மாடுகளையும் விற்கிறார். அப்போதும் பணம் குறைவாக இருக்கிறது. ஒரு பள்ளி ஆசிரியராக இருக்கும் ஒரு பிராமணர், அபுவின் நண்பர். அவர் அபுவுக்காக பணத்தை கடனாக அளிக்கிறார். கடன் பெற்று ஹஜ் செல்வது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதால் அவர் அந்த உதவியை அன்போடு மறுக்கிறார்.

இறுதியாக வாசலில் இருக்கும் பலா மரத்தை வெட்டி விற்றால் பணம் முழுமையாக வரும் என்று உணர்ந்து பல ஆண்டுகளாக வீட்டு வாசலில் இருக்கும் பலா மரத்தை மர வியாபாரிக்கு விற்கிறார். மரத்தை விற்பனை செய்து விட்டு, ஹஜ் பயணத்துக்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபடுகிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் அபுவுக்கு பக்கத்து வீட்டுக்காரராக இருந்தவரோடு சிறு சண்டை ஏற்பட்டது. பக்கத்து வீட்டுக்காரர் அபுவை அப்போது அடித்து விடுகிறார். பல ஆண்டுகளுக்குப் பின்னால், அவரைத் தேடி அவர் குடியிருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து, பல மைல்கள் பயணம் செய்து அவரைக் கண்டுபிடிக்கிறார். அந்த பக்கத்து வீட்டுக்காரர், பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருக்கிறார்.

அபு அவரிடம் சென்று, நான் ஹஜ் பயணம் செல்கிறேன். எந்தக் கடனையும் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது. பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் உன்னோடு சண்டையிட்டேன்… என்னை மன்னித்து விடு… என்று கேட்பார். அபுவை ஏற்கனவே அடித்திருந்த அந்த பக்கத்து வீட்டுக்காரர், கண்கணில் கண்ணீரோடு, நான் உன்னை அடித்ததற்குத்தான் ஆண்டவன் என்னை பக்கவாதத்தில் படுக்க வைத்துள்ளான் என்று அழுவார். இந்தக் காட்சி அபு என்ற மனிதனின் அற்புதமான குணத்தையும், ஹஜ் பயணம் ஒரு மனிதனை எப்படி பக்குவப்படுத்துகிறது என்பதையும் சிறப்பாக எடுத்துரைத்தது.

ADAMINTE_MAKAN_1_853933f

பயண ஏற்பாடுகள் அனைத்தும் தடபுடலாக நடக்க, ஹஜ் பயணத்துக்கான பொருட்கள், உடைகள் அனைத்தையும் நகரத்துக்கு சென்று வாங்கி விட்டு, விசா பெற்றுக் கொண்டு கிராமத்துக்கு திரும்புவார். திரும்புகையில் மரக்கடைக்காரர், அவர் வெட்டிய பலாமரம் உளுத்துப் போயிருந்தது… எதற்கும் பயன்படாதது என்பதைக் கூறுவார். அபு இடிந்து போவார். ஆனால் அந்த மரக்கடைக்காரர், மரம் போனால் போகிறது….. உங்களது ஹஜ் பயணத்துக்கு எனது அன்பளிப்பாக அந்தப் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்று பணத்தைக் கொடுப்பார். அந்த பணத்தை வாங்க மறுத்து, சோகமாக வீடு தீரும்புவார் அபு.

வீட்டுக்கு வந்ததும் தன் மனைவியிடம்…. அந்தப் பலா மரமும் ஒரு உயிர்தானே… அதைக் கொன்று நான் பாவமிழைத்து விட்டேன் அல்லவா ? அதனால்தானோ என்னவோ இறைவன் என்னை ஹஜ் பயணத்துக்கு வர விடாமல் தடுத்து விட்டான் என்று கூறி விட்டு, ஒரு பலா மரக்கன்றை நடுவார்.

ஹஜ் பயணம் சென்றிருக்க வேண்டிய மறுநாள், தொழுகைக்குச் செல்லும் காட்சியோடு அத்திரைப்படம் நிறைவடையும்.

எத்தனை அற்புதமான திரைப்படம் பார்த்தீர்களா….. இப்படி ஒரு திரைப்படத்தை தமிழில் எடுக்கவில்லையென்றாலும், அபு போன்ற பாத்திரங்களைப் படைக்கும் சிறப்பான இயக்குநர்கள் தமிழில் இருக்கிறார்கள். அப்படி ஒரு சூழலை மறுத்து, முடக்கும் வேலையைத்தான் இந்த இஸ்லாமிய மதவாதிகள் செய்திருக்கிறார்கள்.

திரைப்படத்தை காரணமாக வைத்து, மதவெறியைத் தூண்டும் மதவாதிகளே…. !!! உங்களை இறைவன் ஒருபோதும் மன்னிக்க மாட்டான். ஒரு திரைப்படத்துக்காக சமுதாய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மதவாதிகளே… குரானின் இந்த வாசத்தைப் படித்திருக்கிறீர்களா ?

“இறைக்கட்டளைகளை எடுத்துரைக்க மட்டுமே உரிமை உண்டு. ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக் கட்டாயப் படுத்துவது, மனிதனின் சுதந்திரத்தைப் பறிப்பதாகும். சுதந்திரம் வழங்கப்பட்ட மனிதனையே இறைவன் மறுமையில் அவனது செயல்களுக்கு பொறுப்பாளி ஆக்கி விசாரணைக்குட்படுத்தி தீர்ப்பு வழங்க முடியும்.”

மனிதனின் சுதந்திரத் பறிக்கும் உங்களைப் பற்றி குரான் என்ன கூறுகிறது தெரியுமா ?

“(இந்நயவஞ்சகர்கள்) இறைவனையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்றுகின்றனர். ஆனால் (உண்மையில்) அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனரே அன்றி வேறில்லை; எனினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை. அவர்களுடைய நெஞ்சங்களில் நோயிருக்கிறது.

(நபியே) இந்நயவஞ்சகர்கள் பேச ஆரம்பித்தால் நீர் இவர்களுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டே இருந்து விடுவீர். ஆனால், உண்மையில் இவர்கள், சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மரக்கட்டைகளைப் போன்றவர்கள் (எதற்கும் உதவாதவர்கள்). இவர்கள் ஒவ்வோர் உரத்த சப்தத்தையும் தங்களுக்கு எதிரானதாய் கருதுகின்றனர். இவர்கள் தாம் கடும் பகைவர்களாவர்.”

சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதற்காகவே திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த மதவாதிகள் உண்மையில் சமூகத்திற்கு கேடு விளைவிப்பவர்கள். அமைதியான சமூகத்தை சீர்குலைக்கும் பாவிகள். அவர்கள் அவர்களின் பாவங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கட்டும். நமக்கு ஆதாமின் மகன் அபு போன்ற இஸ்லாமியர்களோடு மரியாதையும், நட்பும், அன்பும், தோழமையும் எப்போதும் உண்டு. அந்த உழைப்பாளி இஸ்லாமியர்கள் நமது சகோதரர்கள்.

c2

மதவெறியைத் தூண்டும் இந்தப் பாவிகளை, அளவிளாக் கருணையும், இணையிலாக் கிருபையும் உடைய அல்லாவின் திருப்பெயரால் மன்னிப்போம்.

source:savukku.net

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

நீதி தவறாத சவூதி அரேபியா!!!!!!!!????!!!!!!!!! மகளை வல் லுறவுக்குட்படுத்தி கொலை செய்த இமாம்

மகளை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை


சவூதி அரேபியாவின் பிரபலமான இஸ்லாமியப் போதகரும் மத குருவுமான சேய்க் பைஹான் அல் கம்தி தனது ஐந்து வயது மகளைக் வல்லுறவுக்குட்படுத்தி, துன்புறுத்தி கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் சனிக்கிழமை அவர் தான் செய்த கொலைக்கு ஈடாக குருதிப் பணத்தை தனது மனைவிக்கு செலுத்தி விட்டு அவர் செய்த கொலைக் குற்றத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டதாக சவூதியிலிருந்து கிடைத்த செய்திகள் கூறுகின்றன.

அவரது விடுதலையைக் கண்டித்து மனித உரிமைகள் அமைப்புகள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன.

ஐந்து வயதுக் குழந்தை லாமியா அல் கம்தி, கடந்த டிசெம்பர் 25, 2011ஆம் வருடம் கடுமையான காயங்களுடன் குற்றுயிராக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சென்ற வருடம் (2012) ஒக்டோபர் 22ஆம் திகதி காலமானார்.

லாமியா அல் கம்தியின் தந்தையும் சவூதி அரேபியாவின் பிரபலமான தொலைக்காட்சி இஸ்லாமியப் போதகரும் மத குருவுமான செய்க் பைஹான் அல் கம்தி லாமியா அல் கம்தியின் துன்புறுத்தல்களுக்கு காரணமானவர் என்று விசாரணைகளின் மூலம் அறிந்தவுடன் சவூதி அராபிய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட லாமியா அல் கம்தி – வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதை பரிசோதனையின் பொழுது கண்டறியப்பட்டது. அதற்குக் காரணமானவர் அவரது தந்தை என்ற விடயமும் பரிசோதனையின் பொழுது தெரியவந்தது. அது மட்டுமன்றி அவரது இடது கையில் எலும்பு முறிவும், கை விரல்களில் ஒன்றிலிருந்து ஒரு நகம் கழட்டப் பட்டும், தலையில் மண்டையோடு உடைந்தும் இருந்திருக்கிறது.

அதிகாரிகளின் விசாரணையின்போது பைஹான் அல் கம்தி தான் தனது மகளைத் துன்புறுத்தியதை ஒப்புக் கொண்டிருக்கிறார். என்றாலும், சவூதி அரேபியாவில் அமுலில் இருக்கின்ற நீதிமன்றம் அவரது கொலைக்கு பகரமாக குருதிப் பணத்தை தாய்க்கு வழங்குமாறு பணித்து அவரை விடுதலை செய்துவிட்டது.

சவூதியில் அமுலில் இருக்கும் நீதியின் பிரகாரம் தனது பாதுகாப்பில் இருக்கும் குழந்தையை அல்லது மனைவியைக் கொலை செய்யும் குற்றத்துக்கு தண்டனையாக மரண தண்டனையை தந்தைக்கு அல்லது கணவனுக்கு தீர்ப்பாக தீர்ப்பளிப்பதில்லை. இந்தத் தீர்ப்புக்கும் செய்கைக்கும் எதிராக "நான் லாமியா அல் கம்தி பேசுகிறேன்" என்ற தலைப்பில் உலகில் இருக்கின்ற பல சமூக சேவைகள் அமைப்புகள் பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்கின்ற நீதி கேட்டு களமிறங்கியிருக்கின்றன.

இக்கொலைக்கு நட்டஈடாக சுமார் 50,000 அமெரிக்க டொலர்களை பைஹான் அல் கம்தி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

source:tamilmirror

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

Muhammad, Cross-Dressing, and the London Muslim Patrol

Muhammad, Cross-Dressing, and the London Muslim Patrol

New strategy. In the following video, I put on one of my wife’s garments to illustrate a point. Muslim critics are sure to condemn and mock me for doing it. As soon as Muslims speak out against cross-dressing, however, be sure to show them that they just condemned Muhammad.

Here are some sources:

Sahih Muslim 4415—Abu Bakr requested permission from the prophet to enter when the prophet was lying down on Aisha’s bed wearing her garment [mirt]. So the prophet gave permission to Abu Bakr to enter while he (Muhammad) was in that state and Abu Bakr finished what he needed and left. Later, Umar came and requested permission to enter and the prophet gave him permission to enter while he (Muhammad) was in that state. So Umar finished what he needed and left. Later, Uthman requested permission to enter to the prophet, so Muhammad sat up and told Aisha, "Take all the clothing that belongs to you."

Sahih Muslim 4472—The wives of the prophet sent Fatimah, the daughter of the prophet, to him and she requested permission to enter while he was lying down on my bed in my robe [Mirt]. He gave her permission to enter and she told him that his wives had sent her to him seeking justice concerning the daughter of Abu Kahafa (Aisha). The prophet said to her, ‘O daughter, do you not love what I love?’ She replied, ‘Yes! I do.’ He then said to her, ‘Then love her also.’ So Fatimah got up when she heard that from the prophet and returned to the wives of the prophet. Then the wives sent to the prophet Zaynab Bint Jahsh…who requested permission from the prophet to enter while he was with Aisha in her robe [Mirt] and in the same state that Fatimah found him in.”

Mishkat Al Masabih, Volume II, p. 1361—She told that the people used to choose: ‘A’isha’s day to bring their gifts, seeking thereby to please God’s messenger. She said that God’s messenger’s wives were in two parties, one including ‘A’isha, Hafsa, Safiya, and Sauda, and the other including Umm Salama and the rest of God’s messenger’s wives. Umm Salama’s party spoke to her telling her to ask God’s messenger to say to the people, “If anyone wishes to make a present to God’s messenger, let him present it to him wherever he happens to be.” She did so and he replied, “Do not annoy me regarding ‘A’isha, for inspiration has not come to me when I was in any woman’s garment but ‘A’isha’s.” They then called Fatima, sent her to God’s messenger, and she spoke to him, but he replied, “Do you not like what I like, girlie?” She said, “Certainly,” so he said, “Then love this woman.”

Sahih al-Bukhari 2442—It is related from ‘A’isha that the wives of the messenger of Allah fell into two parties. One party contained ‘A’isha, Hafsa, Safiyya and Sawda, and the other party contained Umm Salama and the rest of the wives of the messenger of Allah. The Muslims knew of the love of the messenger of Allah for ‘A’isha, so when any of them had a gift which he wanted to give to the messenger of Allah he would delay it until the messenger of Allah was in ‘A’isha’s house. Then the person with the gift would send it to the messenger of Allah while he was in ‘A’isha’s house. The party of Umm Salama spoke about it and said to her, "Tell the messenger of Allah to speak to the people and say, ‘Whoever wants to give a gift to the messenger of Allah should give it to him in the house of whichever wife he is.’" Umm Salama spoke to him about what they had said, but he did not say anything. They asked her and she said, "He did not say anything to me." They said to her, "Speak to him." She said she spoke to him when he went around to her as well, but he did not say anything to her. They asked her and she said, “He did not say anything to me.” They said to her, “Speak to him until he speaks to you.” He went around to her and she spoke to him. He said to her, “Do not injure me regarding ‘A’isha. The revelation does not come to me when I am in the garment of any woman except ‘A’isha.” She said, "I repent to Allah from injuring you, Messenger of Allah.” Then they called Fatima, the daughter of the messenger of Allah, and sent her to the messenger of Allah to say, “Your wives ask you by Allah for fairness regarding the daughter of Abu Bakr.” She spoke to him and he said, “O my daughter, do you not love what I love?” She said, “Yes indeed.” She returned to them and informed them. They said, “Go back to him,” but she refused to go back. They sent Zaynab bint Jahsh and she went to him and spoke harshly, saying. “Your wives ask you by Allah for fairness regarding the daughter of ibn Abi Quhafa.” She raised her voice until she turned to ‘A’isha, who was sitting down, and abused her until the messenger of Allah looked at ‘A’isha to see if she would speak. ‘A’isha spoke to answer back Zaynab until she had silenced her. She said, “The prophet looked at ‘A’isha and said, ‘She is indeed the daughter of Abu Bakr.’”

For more information on Muhammad’s clothing habits, see our "Jesus or Muhammad?" special:

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மதுரை ஆதீனம் மைனர் அருணகிரியை ஆட்கொண்ட அ ல்லா !

நித்தியானந்தா என்ற பொறுக்கியை இளைய ஆதீனமாக நியமித்துக் கொண்ட மைனர் அருணகிரியின் வாயால், பெண்களின் ஒழுக்கம் குறித்து அல்லா பேசுகிறானாம். என்னத்த சொல்ல, “எல்ல்…லா” புகழும் இறைவனுக்கே!

லங்கைத் தமிழ் இஸ்லாமியப் பெண் ரிசானா நபீக் சவுதி அரசாங்கத்தால் தலைவெட்டி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடக்கும் விவாதங்களை அறிவீர்கள். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த, வெகு சிலர் மட்டுமே இந்த விவகாரத்தில் ஷரியத் சட்டத்தையும் சவுதி அரசையும் விமர்சித்து வருகிறார்கள். இவ்விவகாரத்தில் சரியான முறையில் எதிர்வினையாற்றியிருந்த மனுஷ்யபுத்திரனை, தவ்ஹீத் ஜமாத் என்ற மதவெறிக் கும்பலின் தலைவர் பி.ஜைனுலாபிதீன் வார்த்தைகளாலேயே கொலை செய்திருந்ததும், அதைத் தொடர்ந்து வினவு தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையும் வாசகர்கள் அறிந்ததே.

ஷரியத் சட்டத்தின் ‘மாண்பை’ நிலைநாட்ட களமிறங்கியுள்ள பி.ஜே கும்பல், அதற்கு ‘கலர் கலராக’ விளக்கங்களைத் தந்து வருகிறது. நக்கீரனில் மனுஷ்யபுத்திரன், ஆனந்த விகடனில் பாரதி தம்பி – உள்ளிட்டு ஷரியத் சட்டத்தை விமர்சித்தவர்களை “டேய்… மரியாதையா நேரடி விவாதத்திற்கு வாங்கடா… #$%&*#@#$…” என்று சவுதி வஹாபியம் இவர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ள மரியாதையோடும் கண்ணியத்தோடும் கோட்டா சீனிவாசராவ் பாணியில் விவாதத்திற்கு அழைத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை மண்ணடியில் சென்ற 27.1.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் “இஸ்லாமிய சட்டமே தீர்வு” என்ற தலைப்பில் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு சென்று வந்தோம்.

நாங்கள் சென்றிருந்த போது கோவை ரஹ்மத்துல்லா என்பவர் பேசிக் கொண்டிருந்தார். பேச்சினூடாக பாரதி தம்பி, ஜோஸபின் உள்ளிட்ட பத்திரிகையாளர்களோடு சேர்த்து மனுஷ்யபுத்திரனுக்கும் மண்டகப்படி நடந்து கொண்டிருந்தது. “பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பற்றி யோசித்தீர்களா மிருகங்களே….” என்றவர், “இந்த ரிசானா நபீக் என்ன பத்தினியா.?.” என்று திடீரென்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

எல்லா ஆணாதிக்கப் பன்றிகளின் வாயிலிருந்தும் வருகின்ற வழக்கமான டயலாக் இது. ரிசானா நடத்தை கெட்டவளாவதற்கு குறைந்த பட்சம் ஒரு ஷேக்கின் துணையாவது தேவை என்பது ரஹ்மத்துல்லாவுக்கு தெரியாதா? அந்த ஷேக்கை கண்டு பிடித்து தண்டித்து விட்டார்களா? இத்தகைய குற்றம் செய்யும் ஆண்மகனுடைய உறுப்பை, எதைக் கொண்டு அறுப்பது என்று ஷரியத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா? அல்லது “குருதிப்பணம்” மாதிரி ஏதாவது அபராதம் கட்டிவிட்டு அத்தகைய மைனர் குஞ்சுகள் எஸ்கேப் ஆவதற்கு இறைவன் தன்னுடைய சட்டத்தில் வழி செய்து கொடுத்திருக்கிறானா?

தங்கள் மதத்தையே சார்ந்த பரிதாபத்துக்குரிய ஒரு ஜீவனை ரகமதுல்லாக்களும் ஜெயினுலாபுதீன்களும் இப்படிக் குதறுவதற்கு காரணம், அவள் ஒரு பெண், அதுவும் ஏழைப்பெண், இலங்கை என்ற ஏழை நாட்டைச் சேர்ந்த ஏழை தமிழ்ப் பெண். இவர்களோ, சவூதி ஷேக்குகளின் பங்களா நாய்கள்.

ரிசானா நபீக்கை தமிழ் சீரியலில் வரும் வில்லி ரேஞ்சுக்கு சித்தரித்து, மொழி தெரியாத நாட்டில் தெற்கு வடக்கு அறியாத ஊரில் பயங்கரமாகத் திட்டம் தீட்டி குழந்தையைக் கொன்ற கொலையாளி என்பதாக விவரித்து முழங்கிக் கொண்டிருந்த ரஹ்மத்துல்லா, ரிசானாவுக்கு அந்தக் குழந்தையைக் கொலை செய்வதற்கு என்ன நோக்கம் இருந்திருக்க முடியும் என்ற மிகச் சாதாரணமான கேள்விக்கு கூட கடைசி வரைக்கும் பதிலளிக்கவில்லை.

குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய கடமை ஷரியத் சட்டங்களின் படி யாருக்கு உள்ளது, வேலைக்காரிக்கா? பணக்காரப் பெண்களின் கடமைகள் என்ன, ஏழைப்பெண்களின் கடமைகள் என்ன என்று ஷரியத் சட்டத்தில் அல்லா தனித்தனியாக பிரித்து எழுதியிருக்கிறானா? எல்லாப் பெண்ணுக்கும் ஒரே சட்டம்தான் என்றால், பிள்ளைக்கு பால் கொடுக்க முடியாத தாயை அல்லவா முதலில் விசாரிக்க வேண்டும்? 3 மாதக் குழந்தைக்கு பால் கொடுப்பதற்குக் கூட ஆள் வைத்து விட்டு, ஷேக்கின் பொண்டாட்டி எங்கே போயிருந்தார்? பியூட்டி பார்லருக்கா, தொழுகை நடத்தவா?

ஆண்களின் துணையின்றி ரோட்டில் நடந்தாலே சாட்டையால் அடிக்கும் தலிபான்களை நியாயப்படுத்துகின்ற இந்த தமிழக தலிபான்கள், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆண் துணையின்றி ஏழைப் பெண்களை இறக்குமதி செய்கிறார்களே வளைகுடா ஷேக்குகள், அவர்களுக்கு ஷரியத் கூறும் தண்டனை என்ன என்று தெரிவிக்கவில்லை. இப்படி பெண்களை இம்போர்ட் எக்ஸ்போர்ட் செய்யும் டிராவல் ஏஜென்சி முஸ்லிம்களுக்கு என்ன தண்டனை என்றும் கூறவில்லை.

ஒருவேளை, ஷரியத்துக்கு உண்மையாக நடந்து கொள்ள வேண்டும், (பெண்களை ஆண் துணையின்றி தனியாக வரவழைக்க கூடாது) என்ற உயர்ந்த நோக்கத்தில்தான் 70 வயது ஷேக்குகள் 13 வயது சிறுமிகளை இந்தியாவிலிருந்து நிக்கா செய்து அழைத்துப் போகிறார்களோ?

கடுகளவாவது நேர்மையோ சொரணையோ இருந்தால், இவர்கள் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.

வார்த்தைக்கு வார்த்தை ரிசானா தான் கொலையாளி என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் உறுதிப் படுத்தியுள்ளதாகச் சொன்ன ரஹ்மத்துல்லா, கடைசி வரை அதன் அறிக்கையின் நகலை கூட்டத்தில் படித்துக் காட்டவே இல்லை. அதிருக்கட்டும். பிரேதப் பரிசோதனை என்கிற பெயரில் இறந்த உடலைக் கிழிக்க இஸ்லாம் அனுமதிக்கிறதா? இல்லை என்று சொல்லும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் உள்ளனர்.உயிரோடிருப்பவர்களை வெட்டித்தான் கொல்லவேண்டும் என்று தெளிவாக கூறியிருக்கும் இறைவன், பிணங்களை அறுப்பது, தைப்பது, ஆடோப்சி ரிப்போர்ட் எழுதுவது ஆகியவை பற்றி எதுவும் சொல்லாமலிருக்க வாய்ப்பில்லை. அது குறித்து அல்லா பிறப்பித்திருக்கும் ஆணைகளையும் ரகமதுல்லாக்கள் விளக்குவது நல்லது.

அடுத்து இஸ்லாத்தை அமெரிக்கா உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும் இழிவாகச் சித்தரிக்கிறார்கள் என்றும், இதை அந்த அல்லாவே முன்னின்று முறியடிக்கிறாரென்றும் பேசத் துவங்கினார் ரஹ்மத்துல்லா. அமெரிக்கா நடத்திய ‘ஆய்வு’ ஒன்றின் படி தற்போது உலகில் 175 கோடி(!?) முசுலீம்கள் இருப்பதாக சொன்னார்.

இஸ்லாமியர்களில் பல்வேறு பிரிவினரையும் உள்ளடக்கிய மொத்த மக்கள் தொகை 150 கோடி என்கிறது ஐ.நா சபையின் கணக்கு. வகாபி தீவிரவாதிகளின் கருத்துப்படி ஷியாக்கள், அகமதியாக்கள் மற்றும் சுஃபி மார்க்கத்தினர் கொன்றொழிக்கப்பட வேண்டிய காஃபிர்கள். அந்த வகையில் அளவற்ற அருளாளனான அல்லாவின் திருக்கருணையால் எப்படியும் இவர்கள் கொல்லப்பட்டு விடுவார்கள் என்பதால், இவர்களின் எண்ணிக்கையை மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கையிலிருந்து கழித்திருக்க வேண்டும்.

ஆனால் ரஹ்மத்துல்லாவோ, இன்னும் இருபது ஆண்டுகளில் முஸ்லிம்களின் மக்கட்தொகை 350 கோடிகளாக உயரும் என்று சொல்ல, கூட்டம் ‘அல்லாஹு அக்பர்’ என்று கூச்சலிட்டது. நமக்கோ முல்லா ஜோக் நினைவுக்கு வந்தது.

இந்தியாவில் இன்றைக்கு சிறுபான்மையினராக இருக்கும் இஸ்லாமியர்கள் மதமாற்றத்தின் மூலமும் பிள்ளை பெற்றுத் தள்ளுவதன் மூலமும் சீக்கிரம் பெரும்பான்மை பலம் பெற்றுவிடுவார்கள் என்பதே இந்து முன்னணி ராம கோபாலன்ஜீக்கள் காட்டும் பூச்சாண்டி.

இந்த நச்சுப் பிரச்சாரத்தையே கொஞ்சம் பட்டி பார்த்து பாலீஷ் போட்டு ‘ஆய்வு’ அறிக்கையாக அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளும் அவ்வப்போது வெளியிடுவது வாடிக்கை. இது போன்ற ‘ஆய்வறிக்கைகளின்’ மூலம் தான் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் இஸ்லாமியர்கள் பற்றிய ஒரு அச்சமூட்டும் பிரச்சாரமும், வெறுப்பும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. அதே சரக்கை தவ்ஹீத் மேடையிலிருந்து அவிழ்த்து விட்டு, கைதட்டலும் வாங்கி விட்டார் ரஹ்மத்துல்லா.

தொடர்ந்து பேசிய ரஹ்மத்துல்லா, “இஸ்லாத்தை தவறாகச் சித்தரிப்பவர்களின் வாயிலிருந்தே அல்லா இஸ்லாத்தின் சட்டதிட்டங்களின் ‘மேன்மையைப்’ பற்றிப் பேச வைக்கிறான்” என்று சொல்லி அதற்கு சில சான்றுகளையும் கூறினார். ”பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் இஸ்லாமியப் பெண்கள் போன்று பர்தா அணிவது மேலானது” என்று மதுரை ஆதினம் அருணகிரி சொன்னாராம். இதைச் சொன்னவுடன் நமக்கு குமட்டிக்கொண்டு வந்தாலும் கூடியிருந்த கூட்டம், அல்லாஹு அக்பர் என்று சொல்லி புல்லரித்தது.

நித்தியானந்தா என்ற பொறுக்கியை இளைய ஆதீனமாக நியமித்துக் கொண்ட மைனர் அருணகிரியின் வாயால், பெண்களின் ஒழுக்கம் குறித்து அல்லா பேசுகிறானாம். என்னத்த சொல்ல, “எல்ல்…லா” புகழும் இறைவனுக்கே!

பாரதிய ஜனதா கட்சி, பெண்கள் பாதுகாப்பாக வாழ வேண்டுமானால் கண்ணியமான உடை உடுத்த வேண்டும் என்று கூறியது கூட அல்லாவின் பவர்தான் என்றார் ரஹ்மத்துல்லா. 2002 இல் குஜராத்தில் பர்தா போட்ட இஸ்லாமியப் பெண்கள் வல்லுறவுக்கு ஆளாக்கி கொல்லப்பட்டார்களே, அங்கே அல்லாவின் பவர் “கட்”டாகி விட்டதா, ஷட் டவுனா என்று கூறவில்லை.

ரஹ்மத்துல்லா பேசிய உரையில் வரிக்கு வரி தவறான தகவல்களும் வெற்றுச் சவடால்களுமே நிறைந்திருந்தன. “25 கோடி மக்கள் தொகை கொண்ட சவுதியில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வருட்த்திற்கு 24 கொலைகளும் 13 கற்பழிப்புகளுமே நடக்கின்றன. இது மொத்த மக்கள் தொகையில் .0001 சதவீதம் தான்” என்றார் ரஹ்மத்துல்லா. அதிகாரப்பூர்வமாக சவுதி வெளியிட்டுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களின் படியே அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 2.7 கோடி தான். இதில் சவுதி தேசத்தவர் வெறும் 1.8 கோடியினர் தான்; மேலும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் 84 லட்சம். கூடவே ஷரியத் அமுல்படுத்தப்பட்டும் குற்றங்களின் சதவீதம் சமீப ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது என்பதற்காகவே குற்றங்களின் எண்ணிக்கை விவரங்களை வெளியிடுவதை 2011-ம் ஆண்டு முதலாக சவுதி அரசாங்கம் நிறுத்தியும் வைத்துள்ளது.

இத்தகைய பொய்களையெல்லாம் ‘எதிரி’களிடமிருந்து கடன் வாங்கிக் கொண்டாவது இஸ்லாத்தின் பெருமையை காப்பாற்ற வேண்டியிருக்கிறது போலும். அதுதான் அடுக்கடுக்கான பொய்களையும், அவதூறுகளையும் கரை புரண்ட வெள்ளம் போல பேச வைக்கிறது.

தொடர்ந்து சவுதியைப் பொறுத்தவரையில் இஸ்லாமியச் சட்டங்களின் படி யாராக இருந்தாலும் தண்டனை கொடுத்து விடுவார்கள் என்ற ரஹ்மத்துல்லா, அப்படிக் குற்றங்களில் ஈடுபட்டது சவுதி இளவரசன் குடும்பமாக இருந்தாலும், உயர்ந்த கோத்திரத்தைச் சேர்ந்தவராய் இருந்தாலும் சீவிப்புடுவோம் சீவி என்றார் (இதற்கும் ஒரு அல்லாஹு அக்பர்).

ஆனால் இலட்சக் கணக்கான இராக், ஆப்கான் குழந்தைகளையும் மக்களையும் காவு வாங்கிய அமெரிக்க ஏவுகணைகளுக்கு தளம் அமைத்துக் கொடுத்து, அமெரிக்க சிப்பாய்களுக்குத் தேவையான “மேற்படி” ஏற்பாடுகளையெல்லாம் செய்து கொடுத்த சவூதி அரச குடும்பத்தினரின் தலைகளை எந்த சீப்பை வைத்து தவ்ஹீத் காரர்கள் சீவிக்கொண்டிருக்கிறார்கள் என்றோ, அல்லது அல்லா சீவ இருக்கிறார் என்றோ ரஹ்மத்துல்லா சொல்லவில்லை.

பெண்களை பர்தா போட்டு மூடியோ, கல்லால் அடித்தோ, ஆண்களின் தலையை சீவியோ, சாட்டையால் அடித்தோ தான் சவூதி போன்ற நாடுகளில் பெண்களின் கற்பு காப்பாற்றப்படுகிறது என்றால், அப்பேர்ப்பட்ட நாட்டு ஆண்களின் யோக்கியதை எப்படி இருக்கும் என்று ரஹமத்துல்லா சிந்தித்துப் பார்க்கவில்லை. சாட்டையோ வாளோ கிடைக்காமல் போனால், அந்த நாட்டுப் பெண்களின் நிலை என்ன என்பதையும் அவர் சிந்திக்கவில்லை போலும்.

அடுத்து ரிசானா விவகாரத்தில் இஸ்லாமிய ஷரியா சட்டங்களை விமரிசித்து எழுதிய ஜோசபின் பாபா எனும் பத்திரிகையாளரைக் குறித்துப் பேசிய ரஹ்மத்துல்லா, அவர் கிருஸ்தவராகப் பிறந்த காரணத்தால் தான் இவ்வாறு எழுதி இருக்கிறார் என்றார். மேலும், கிருஸ்தவத்தைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா உங்கள் மதப் புத்தகமே ஆபாசக் குப்பை தானே என்றும் அதற்கு ஆதாரமாக பைபிளின் பழைய ஏற்பாட்டிலிருந்து கதை ஒன்றையும் குறிப்பிட்டுப் பேசினார் (இதற்கும் கூட்டத்திலிருந்து ஒரு அல்லா ஹு அக்பர்).

ஜெயினுலாபிதீன்

பி.ஜெயினுலாபிதீன்

ரஹ்மத்துல்லாவைத் தொடர்ந்து பீ.ஜே விஸ்வரூபம் விவகாரம் பற்றிப் பேசத் துவங்கினார் ஜெயினுலாபுதீன். கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் இந்தப் படத்தை வெளியிட வேண்டுமென்று பத்திரிகைகளில் எழுதப்படுவது குறித்தும், சினிமாத்துறையினரும் அதே வகையில் கருத்துத் தெரிவித்து வருவதையும் விமர்சிக்கத் துவங்கிய பீ.ஜே, திரைத் துறையினரைப் பற்றியும் பத்திரிகைகள் பற்றியும் நாலாந்தர மொழியில் வசைபாடத் துவங்கினார்.

பீ.ஜேவின் வாதத்தில் விஸ்வரூபம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பதை நிறுவும் நோக்கத்தை விட, டைம்பாஸ் ரகத்திலான படுக்கையறைக் கிசு கிசுக்கள் மற்றும் புவனேசுவரியின் சாகசங்கள், நடிகையின் கதை போன்றவையே அதிகம் இடம் பெற்றிருந்தன. உள் விவரங்களுடன் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார். இவரை இஸ்லாமிய மார்க்க அறிஞர் என்று சொல்கிறார்கள். ஒரு “மார்க்கமான” அறிஞர்தான்.

பாரதிராஜா வீட்டினர் விபச்சாரிகளா என்று தனது வசைபாடலைத் துவங்கிய பீஜே, ஒவ்வொரு நடிகர் நடிகைகளின் படுக்கையறையாகப் புகுந்து புறப்படத் துவங்கினார். உச்சகட்டமாக, ஸ்ருதி ஹாசனையும் கமல்ஹாசனையும் பாலியல் ரீதியில் கீழ்த்தரமான முறையில் இணைத்துப் பேசிய போது கூட்டம் புல்லரித்துப் போனது. தீப்பொறி ஆறுமுகம் போன்றோர் பொதுக்கூட்டத்தில் இப்படிப் பேசும்போது, உடன்பிறப்புகள் விசில் அடிப்பார்கள். இது தவ்ஹீத் ஜமாத்தின் கூட்டம் என்பதால், விசிலுக்குப் பதிலாக ‘அல்லாஹு அக்பர்’ என்று கூட்டம் முழங்கியது. சும்மா சொல்லக் கூடாது, இறைவன் மிகமிகப் பெரியவன்தான்!

. அவருடைய பேச்சைக் கேட்கும் சராசரி முஸ்லிம் இஸ்லாமிய மதவெறியன் ஆகக் கூடும். அதே பேச்சு ஒரு சராசரி இந்துவை மதவெறியன் ஆக்கும். முதலாவதாகச் சொன்னது நடக்கவில்லை என்றாலும், இரண்டாவதாகச் சொன்னது நடந்தே தீரும்.

விஸ்வரூபம் மேட்டரில் மீன் பிடிப்பதற்கு நல்ல வாய்ப்பு இருந்தும் ஆர்.எஸ்.எஸ் காக்கி அரை டவுசர்களின் சத்தத்தை அதிகமாகக் காணோமே, என்று ஆச்சரியப்பட்டார் ஒரு நண்பர். மண்ணடி கூட்டத்துக்குப் போன பின்னர்தான் விசயம் புரிந்தது.

“நம்ம சார்பில் பி.ஜே பாய், பேசிக்கொண்டிருக்கும்போது நாமும் எதற்கு தொண்டை தண்ணியை வேஸ்ட் பண்ணவேண்டும்?” என்று ராம கோபாலன்ஜி மைக்கை ஆஃப் பண்ணியிருப்பார்.

000

குறிப்பு:

ஒரு கொள்கை என்ற அடிப்படையிலேயே மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய கோட்பாடுகளில் இஸ்லாமிய அமைப்புகளுக்கு நம்பிக்கை கிடையாது. அதனால்தான் சவூதியில் நடந்த ரிசானா கொலையை அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். சில இஸ்லாமிய அமைப்புகள் மட்டும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கு கண்டிக்கின்றன. தற்போது, விஸ்வரூபம் பிரச்சினையை ஒட்டி, அம்மாவின் ஆதரவும் மாநில அரசின் ஆதரவும் தங்களுக்கு இருப்பதால், மதச்சார்பற்ற சக்திகள் தங்களை ஆதரிக்கிறார்களா இல்லையா என்பது பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று இஸ்லாமிய அமைப்புகள் கருதுவதையே அவர்களது பேச்சும் நடவடிக்கைகளும் காட்டுகின்றன. சாதாரண முஸ்லிம் மக்களைத் தற்கொலைப் பாதைக்குள் இவர்கள் தள்ளி விடுகிறார்கள், என்று எச்சரிப்பது எங்கள் கடமை.

source:vinavu.com

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

விஸ்வரூபம் சரி குரானில் திருத்தம் தேவைய ா? இல்லையா?

விசுவரூபம் படத்திற்கு தடை கோரும், துப்பாக்கி படத்தில் திருத்தம் கேட்ட எனதருமை இசுலாமிய சகோதரர்களே,
ஒரு திரைப்படம் இசுலாமியர்கள் பற்றி மக்கள் மனதில் தவறான பாதிப்பை ஏற்ப்படுத்தும்,இசுலாமியர்களுக்கும் பிற மக்களுக்கும் பிரச்சனையை உண்டாக்கும் என்று தடை கோருகிறீர்களே உங்கள் நல்லெண்ணத்தை நான் பாராட்டுகிறேன்.

ஆனால் நீங்கள் இறைநூலாக கருதும் குரானிலே பிற மத மக்களை பற்றி தவறான கருத்துக்கள் உள்ளதே. இது பற்றி என்றேனும் நீங்கள் கவலைப்பட்டதுண்டா? இந்த வசனங்களை நீங்கள் படித்ததே இல்லையா?இதில் திருத்தம் வேண்டும் என்று நீங்கள் கேட்டதுண்டா?
உங்களில் சிலர் இது பற்றி படிக்காமல் இருந்திருக்கலாம் அவர்களுக்காக சில வசனங்கள்.

5:82. நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.

இந்த வசனத்தில் தெள்ளத்தெளிவாக யூதர்களையும்,இணைவைப்பவர்களையும் அதாவது இந்துக்களையும் பகைவராக பார்க்கும்படி குரான் கூறுகிறது. இது எந்த விதத்தில் நியாயம்? இதை நீங்கள் வரவேற்கிறீர்களா?

அல்லாவை வணங்குபவர்களை எதிரிகளாக பாருங்கள் என்று ஒரு நூலில் எழுதி இருந்தால் நீங்கள் சும்மா விட்டு விடுவீர்களா? பொழுதுபோக்கான திரைப்படத்தில் கூட உங்களை அவமதிக்கும் காட்சிகள் இருக்க கூடாது என்கிறீர்களே ஆனால் இறைவேதம் எனப்படும் குரானில் இப்படிப்பட்ட வசனங்கள் இருக்கலாமா? சிந்தியுங்கள் எனதருமை சகோதரர்களே.

மேற்கூறிய வசனத்தில் கிருத்துவர்கள் பற்றி நல்லபடியாக இருந்தாலும் பின்வரும் வசனம் அவர்களையும் நம்பவேண்டாம் என்கிறது அதையும் பாருங்கள்.

5:51. முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.

இதில் யூதர்களும் கிருத்துவர்களும் அநியாயக்காரர்கள் என்கிறது குரான்.

இப்படிப்பட்ட வசனங்களை படிக்கும் ஒரு முஸ்லிம் மனதில் யூதர்களும்,கிருத்துவர்களும்,இந்துக்களும் முஸ்லிம்களுக்கு பகைவர்கள் என்ற எண்ணம் வருமா? வராதா? சொல்லுங்கள் சகோதரர்களே.

கற்களை வணங்குபவர்கள்-இந்துக்கள் சாத்தான்களின் நண்பர்களா?
சகோதரர்கள் நீங்கள் அல்லாவை வணங்குகிறீர்கள் அது உங்கள் விருப்பம். ஆனால் கற்களை வணங்குபவர்களை சாத்தானின் நண்பர்கள் என்று கூறுவது எந்த விதத்தில் சரி?
அப்படிக்கூறும் இறைவேதம் குரானின் வசனங்களை படியுங்கள்:
5:90. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
4:76. நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்; நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில்போர் செய்கிறார்கள்; ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் – நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.

சாத்தான்கள் என்று மட்டும் சொல்லவில்லை அவர்களுக்கு எதிராக போர் புரியுங்கள் என்று வேறு இந்த வசனம் கூறுகிறது. இதைபடிக்கும் முஸ்லிம் மக்கள் மனதில் இந்துக்களை பற்றி தவறான எண்ணமும் இந்துக்களுக்கு எதிராக போர் புரியவேண்டும் என்ற எண்ணமும் வருமா? வராதா? என்று நீங்களே சொல்லுங்கள் சதோதரர்களே.

போர் கொலை இது பற்றி கூறும் வசனங்கள்:
ஒரு இறைவேதத்தில் ஏன் கொலைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என எனக்கு புரியவில்லை.

5:33. அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.

9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் – ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

மேலே உள்ள வசனங்கள் அல்லாவை நம்பாதவர்களை கொல்ல சொல்கிறது என்றால் கீழே உள்ள வசனம் உங்கள் உயிர்களையும் கொடுக்க சொல்கிறது.

9:41. நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் – நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது.

முகமது நபி ஏதோதோ சொல்லி போர் புரிய சொன்னாலும் சிலர் மறுக்கின்றனர். எனவே அவர்களுக்கு நரக நெருப்புதான் கிடைக்கும் என்று பின்வரும் வசனத்தின் மூலம் பயமுறுத்துகிறார்.

9:81. (தபூக் போரில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு விரோதமாக(த் தம் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றனர்; அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருட்களையும், உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிவதையும் வெறுத்து (மற்றவர்களை நோக்கி); “இந்த வெப்ப (கால)த்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்” என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் “நரக நெருப்பு இன்னும் கடுமையான வெப்பமுடையது” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (இதை) அவர்கள் விளங்கியிருந்தால் (பின் தங்கியிருக்க மாட்டார்கள்).

அடைப்பு குறி என்பது அல்லா போட்டது அல்ல நமது மார்க்க அறிஞர்கள் போட்டதுதான். இதை நான் வரவேற்கிறேன்.ஆனால் பல பதிப்புகளில்
இந்த பதிப்பில் உள்ளதுபோல தேவையான இடத்தில் அடைப்புக்குறி இல்லை. அடைப்புக்குறி இல்லாமல் படித்தால் தான் பின்வரும் வசனத்தின் வீரியத்தை நீங்கள் உணரமுடியும்.

47:4. (முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்; கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள்; அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான்; ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்; ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.

இப்படி கொலை, போர் பற்றி ஒரு இறைவேதத்தில் இருந்தால்…அதை இறைவேதம் என்று நம்புபவன் இந்தமாதிரி செயல்களில் ஈடுபடமாட்டான் என்று கூற இயலுமா?

பின்வரும் வசனம் பிற சமூகத்தினருடன் நட்புறவு கொள்ள வேண்டாம் என்கிறது.

60:13. ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டிருக்கிறானோ, அந்தச் சமூகத்தாருடன் நேசம் கொள்ளாதீர்கள்; ஏனெனில் மண்ணறை வாசிகளைப் பற்றி (எழுப்பப்பட மாட்டார்கள் என்று) நிராகரிப்போர் நம்பிக்கை இழந்தது போல், மறுமையைப் பற்றி, நிச்சயமாக இவர்களும் நம்பிக்கை இழந்து விட்டனர்.

ஒரு திரைப்படம் மக்கள் மனதில் தவறான பிம்பத்தை ஏற்ப்படுத்தும் என்றால்.குரான் முஸ்லிம்கள் மனதில் தவறான பிம்பத்தை ஏற்ப்படுத்தாதா?
பல முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக மாற இந்த வசனங்கள் உதவியதா அலல்து வேறு காரணமா என இறைவனுக்கே தெரியும்.

புனிதப்போர்-ஜிஹாத்-அறப்போர்,தீவிரவாதம் அல்லாவின் வியாபாரமா?

சகோதரர்களே அல்லா உங்களுடன் வியாபாரம் செய்கிறார். அதாவது நீங்கள் உங்கள் உயிர்களையும்,உடமைகளையும் கொண்டு போர் புரிந்தால் அவர் சுவனம் தருவாராம். இந்த வசனத்தை மனதில் வைத்துத் தான் உலகெங்கிலும் பல இசுலாமியர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனரோ எனக்கு அச்சம் ஏற்ப்படுகிறது சகோதரர்களே.

61:10. ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?

61:11. (அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.

இந்த வசனங்களின் வீர்யத்தை நீங்கள் உணர்வீர்கள் என நினைக்கின்றேன்.

61:12. அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான்; சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அன்றியும், நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும்.
சுவனத்த்தில் என்ன உள்ளது பார்த்தீர்களா ஆறு ஓடுமாம். பாலைவனத்தில் இருப்பவர்கள் ஆற்றின் மேல் ஆசைப்படலாம்

என்பதில் நியாயம் உள்ளது.சரி ஆற்றின் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு? போதிய குடிநீர் கிடைப்பவர்களுக்கு?

பின்வரும் வசனத்தில் அல்லா தன்னுடைய வியாபாரத்தை உறுதிபடுத்துகிறார். அவர்களுக்காக முஸ்லிம்கள் எதிரிகளை (அதாவது யூதர்கள்,கிருத்துவர்கள்,இந்துக்கள் (இதில் நாத்திகவாதிகளும் அடக்கம்) ) கொன்றால் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்கிறார். இதை நினைத்து இசுலாமியர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்கிறது பின்வரும் வசனம்.
9:111. (நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் – அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் – இதுவே மகத்தான வெற்றியாகும்.
இது நியாயமா தர்மமா? சொல்லுங்கள் எனதருமை சோதரர்களே. இதை படிக்கும் ஒரு முஸ்லிம் மனதில் பிற மதத்தினரை கொல்வது சரி என்ற எண்ணம் உண்டாகும் இல்லையா? தற்கொலைப் படைகளை ஊக்குவிப்பது போலவே அல்லவா இந்த வசனங்கள் உள்ளன. இது தவறில்லையா எனது சகோதரர்களே. இதை திருத்த வேண்டாமா?
மேலும் ஒரு வசனம்
2:191. (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்; இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் – இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.
பின்வரும் வசனத்தில் பிற மதத்தவர்களை நண்பர்களாக ஆக்கிக்கொள்ளக்கூடாது என்கிறது.

4:89. (முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்; ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் – அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.

இது எந்த விதத்தில் நியாயம் சகோதரர்களே? இதை நீங்கள் ஏற்க்கிறீர்களா? இதை படிக்கும் ஒரு முஸ்லிம் பிற மதத்தவரை எதிரியாகத்தானே பார்ப்பான்?

ஒருவனுக்கு நல்லது செய்வதால் உனக்கு சுவனம் கிடைக்கும்,பிறர் மீது அன்பு செலுத்தினால் உனக்கு சுவனம் கிடைக்கும் என்று கூறினால் நியாயம். ஆனால் போர் புரிபவர்களுக்கு மட்டுமே என்று கூறி அனைவரையும் போர் புரிய வைப்பது எந்த விதத்தில் நியாயம் எனதருமை சகோதரர்களே? பின்வரும் வசனத்தை பாருங்கள்.
3:142. உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா?
இது பற்றி நான் என்ன சொல்ல? 😦
எந்த ஒரு மதமும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்ற வசனம் நன்றாகவே உள்ளது. ஆனால் குரான் வசனங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா இல்லையா என்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகின்றேன்.
என் புரிதலில் சில வசனங்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவே உள்ளது. இல்லை இந்த வசனங்களுக்கு வேறு அர்த்தம் என்றால் அந்த அர்த்தம் என்னவென்று நீங்கள் மக்களுக்கு சொல்லவேண்டாமா? ஒவ்வொரு குரானிலும் விளக்கத்தை தரவேண்டாமா? போதிய திருத்தத்தை செய்யவேண்டாமா ? கூறுங்கள் எனதருமை சகோதரர்களே.
ஒரு திரைப்படத்தினால் பாதிப்பு ஏற்ப்படும் என்பது உண்மையானால் குரானால் பாதிப்பு ஏற்படுமா இல்லையா?
குரான் எனபது சாதரான புத்தகம் அல்ல. இதை நீங்கள் இறைவேதமாக நம்புகிறீர்கள். ஒவ்வொரு முறை தொழும்போழுதும் இதிலிருந்து வசனங்கள் படிக்கப்படுகின்றன என அறிகிறேன். ஒவ்வொரு மனிதனும் இதை இறைவேதமாக ஏற்க்கவேண்டும் என்று உங்களில் பலரும் பிரச்சாரம் கூட செய்கிறீர்கள்.
சமூக நல்லிணக்கத்தை திரைப்படம் கெடுக்கும் என்று தடை கேட்கிறீர்கள். குரான் வசனங்களும் சமூக நல்லிணக்கத்தை கெடுப்பதாக உள்ளது எனபதை நீங்கள் உணர்வீர்கள் என நினைக்கின்றேன்.

இந்த பதிவை படிக்கும்பொழுது நிச்சயம் என் மீது உங்களுக்கு கோபம் வரும். ஆனால் நீங்கள் சிந்தித்து பாருங்கள் நானாக எதையும் கூறவில்லை. குரானில் இருக்கும் சில வசனங்களைத்தான் எடுத்துக்காட்டியுள்ளேன். உங்களுக்கு கோபம் யார் மீது வரவேண்டுமெனில் இந்த குரான் வசனங்களை தீவிரவாதத்திற்கு பயன்படுத்துபவர்கள் மீது வரவேண்டும்.இதை மேலும் பலர் தவறாக பயன்படுத்தாதவரு நீங்கள் சிந்தித்து செயல்படவேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம் .

போர் பற்றி கூறும் வசனங்களுக்கு என்ன விளக்கங்கள் மார்க்கபந்துகள் கூறுகின்றனர் என அறிவேன்.
போர் என்பது வரலாற்றில் பிற நாட்டின் மீதுதான் எடுக்கப்பட்டுள்ளன். ஆனால் குரான் வசனங்கள் என்ன கூறுகின்றன?
முஸ்லிம் அல்லாதவர்களை அல்லவா வெறுக்க சொல்கிறது, எதிரியாக பார்க்க சொல்கிறது,கொல்ல சொல்கிறது?
எனவே இது மதத்தை அடிப்படையாக வைத்துத்தான் கூறப்படுகிறதே தவிர நாட்டினை அடிப்படையாக அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள் எனது சகோதரர்களே.(இது என்னுடைய புரிதல் இதற்க்கு சரியான விளக்கத்தை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.)

மற்றும் ஒரு விளக்கம் என்ன கூறலாம் எனில் இவைகள் அந்த காலத்தில் கூறிய வசனங்கள் இந்த காலத்திற்கு பொருந்தாது. அப்படி எனில் ஏன் இந்த வசனங்கள்? இதை திருத்தலாம் அல்லவா?
குரான் என்பது வாழ்வியல் நூலா வரலாற்று நூலா?
யூதர்களையும்,கிருத்துவர்களையும்,சிலை வணங்கிகளையும்,இணைவைப்பவர்களையும் எதிரியாக பாருங்கள் என்ற வசனம் ஒவ்வொரு முறை குரான் படிக்கும் பொழுதும் ஒரு முஸ்லிமை எந்த மனநிலைக்கு உள்ளாக்கும் என்று சிந்தித்து பாருங்கள் சகோதரர்களே.

உங்களில் சிலர் கேட்கலாம். நான் முஸ்லிம்தான் ஆனால் நான் பிறரை எதிரியாக பார்க்கவில்லையே என்று.
இதற்க்கு காரணம் குரானின் இந்த வசனங்களை நீங்கள் இதுவரை படிக்காமல் இருந்திருக்கலாம். அல்லது இந்த வசனங்களுக்கு சரியான / தவறான விளக்கங்கள் உங்களுக்கு அளிக்கபபட்டிருக்கலாம் . நமது தமிழ் சமூகத்தில் நிலவும்
மத சகிப்புத்தன்மை உங்கள் மனதிலும் இருக்கலாம். இது நல்ல விடயமே. ஆனால் எதிர்கலாத்தில் மக்கள் இந்த குரான் வசனங்களை மனதில் கொண்டு பிற மத மக்களை வெறுக்க ஆரமபிக்கலாம்,பிற மத மக்களை கொன்றால்தான் சுவனம் என நம்பி தீவிரவாதத்தில் ஈடுபடலாம் அல்லவா? சிந்தித்து பாருங்கள் சகோதரர்களே.

இப்படி நடக்க வாய்ப்புண்டா என்று நீங்கள் கேட்கலாம். பல தீவிரவாதிகளின் செயல்கள் இதற்க்கு வாய்ப்பு உண்டு என்றே நம்பசொல்கிறது.

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பேசிக்கொண்டது :
நாம் அல்லாவின் அடிமைகள்,இசுலாமை பரப்புவதற்காக அல்லா நம்மை அனுப்பியுள்ளார். சண்டையில் இறக்கவேண்டும்,இறந்தால் நமக்கு சுவனம். நாம் இறக்கும் விதம் எதிரிகளுக்கு பயத்தை உண்டாக்கவேண்டும் என்று பேசிக்கொண்டுள்ளனர்.
அவர்கள் பேசிக்கொண்டதன் ஆங்கில மொழிபெயர்ப்பு கீழே:

My friend, may Allah accept your deed. Balm has been put on the wounds of many people. Do not forget the prayer that we made you learn; wherever you sit recite the prayer three times.

"Tell my ‘Salaam’ to the rest of the brothers. Be strong in your actions; in your actions instill strength. You have left this world. Paradise is far better than this world. You must fulfil your promises, which are true promises. Pray for us too"

"God willing, you know, what I mean is at this time the issue is between Islam and heresy. We are the slaves of God whom he has sent for expansion of the true faith. I mean, death as a martyr is a big thing. But the style of martyrdom should be such as to put fright in the
heart of the enemies and that is the style of martyrdom. What I mean is there is nothing to fear, the message of the martyr must be put
forward"

”Pray. It is time for prayer and keep your promise to Allah. All right!”

Fight in such a way, they should feel that Allah’s lion is after them.

My brother you have to be strong. Do not be afraid. God willing. If you are hit by a bullet, in that is your success. God is waiting for you.

http://supremecourtofindia.nic.in/outtoday/39511.pdf

படித்தீர்களா சகோதரர்களே,
அல்லா குரானில் எனக்காக உங்களது உயிர்களை கொடுத்து சண்டையிட்டால் அதில் இறந்தால் உங்களுக்கு சுவனம் என்கிறார். அதைத்தான் இந்த தீவிரவாதிகளும் செய்துள்ளனர்.அப்படித்தான் பேசிக்கொண்டுள்ளனர். எனவே குரான் வசனங்களும் (அதை தவறாக அல்லது புரிந்துகொள்ளுதல்) இதற்க்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் அல்லாவா?

இந்த உண்மை உங்களுக்கு கசப்பாகத்தான் இருக்கும். இந்த தீவிரவாதிகளால் உயிரை இழந்தது இந்துக்களும்,யூதர்களும் மட்டுமல்ல இந்தியாவில் இருந்த அப்பாவி முஸ்லிம்களும் தான்.

குர்ஆனில் இருக்கும் வசனங்களுக்கு ஏற்ப்பத்தான் சிலர் தீவிரவாதத்தில் ஈடுபடுகின்றனர் என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும் என நினைக்கின்றேன்.

தீவிரவாதத்தால் முஸ்லிம் மக்களும் கொல்லப்படுகின்றனரே என்று நீங்கள் கேட்கலாம்.
உண்மைதான் ஷியா மக்கள் கொல்லப்படுவதற்கு குரானை நான் காரணம் காட்ட மாட்டேன் எனக்கு அதுபற்றி தெரியவில்லை. ஆனால் சூபி மக்கள் கொல்லப்படுவதற்கு சில குரான் வசனங்கள் காரணமாக இருக்கலாம்.
ஏன் எனில் இன்று வாகாபியம் சூபிக்களின் தர்க்கா வழிபாடும் இணைவைத்தலே என்கிறது.குர்ஆனில் சில வசனங்கள் இணைவைப்பவர்களை எதிரியாக பார்க்கவும்,கொல்லவும் சொல்கிறது . எனவே சில வசனங்கள் காரணமாக இருக்கலாம்.

குர்ஆனில் பல நல்ல கருத்துக்கள் உள்ளன என்பதை நான் ஏற்கிறேன். அதே நேரத்தில் சில வசனங்களால் மக்கள் மூளைசலவை செய்யப்பட்டு தீவிரவாதிகளாக மாற்றப்படுகிறார்கள் எனில் அந்த வசனத்திற்கு சரியான போதிய விளக்கமோ அல்லது அந்த வசனங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் அதை இடைச்சொருகல் என்று கூறி நீக்குதல் என்பது மக்களை நல்வழிப்படுத்தும் எனபதே என் கருத்து.

இப்பதிவின் நோக்கம் குரானை இழிவுபடுத்தவேண்டும் எனபதல்ல மாறாக குர்ஆனில் உள்ள சில வசனங்கள் தவறாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளன அதற்க்கு நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியே இந்த பதிவு .

ஒரு திரைப்படம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டினால் உங்கள் மனம் புண்படுவது போலத்தானே உங்கள் இறைவேதம் யூதர்களையும்,சிலை வணங்கிகளையும்(இந்துக்கள்,கிருத்துவர்கள்), இணை வைப்பவர்களையும் (இந்து,முஸ்லிம் சூபிக்கள்) எதிரிகள்,பகைவர்கள்,சாத்தான்கள் அவர்களை கொல்லுங்கள் என்பதும் அவர்கள் மனதை புண்படுத்தும்?. சிந்தித்து பாருங்கள் எனதருமை சகோதரர்களே. தேவையான திருத்தத்தை,விளக்கத்தை கொண்டுவர முயலுங்கள்.

இந்தப்பதிவு உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும்.இப்பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன். இந்த பதிவிற்கு மறுப்பை பதிவாக தந்தாள் அந்த பதிவை இதே தளத்தில் வெளியிடுகிறேன். என்றும் வாய்மையே வெல்லட்டும்.மனிதமே வெல்லட்டும். எல்லாம்வல்ல இறைவன் நம் அனைவர் மீதும் சாந்தியும் அமைதியும் உண்மையில் உண்டாக்குவானாக.

என்றும் அன்புடன்
இராச.புரட்சிமணி

source:http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்: முஸ்லி ம்கள் 42 பேர் பலி

ஈராக் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்: ஷியா முஸ்லிம்கள் 42 பேர் பலி

ஈராக் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்: ஷியா முஸ்லிம்கள் 42 பேர் பலி

பாக்தாத், ஜன. 23-

ஈராக்கில் சன்னி, ஷியா முஸ்லிம் தீவிரவாதிகளிடையே தீவிர சண்டை நடந்து வருகிறது. ஈராக்கின் வடக்குப் பகுதி துஸ் கொர்மாடு என்னுமிடத்தில் ஷியா முஸ்லிம்களின் மசூதியில் இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 42 ஷியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 75 பேர் படுகாயமடைந்தனர்.

நேற்று கொல்லப்பட்ட அரசியல் தலைவரின் இறுதிச்சடங்கு மசூதியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் பங்கேற்ற அவரது உறவினர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

முகமது நபியை கொன்றது யார்?பரபரப்பு கட்டு ரை

0.jpg&sa=X&ei=R1fqUKueEIjtkgWI3oGwBQ&ved=0CAkQ8wc4Fg&usg=AFQjCNFD7xqpaXS2phuBirebP2_-9ShIxg

முகமதுவை கொன்றது யார் என்னும் விவாதம் முகமதியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதை நாம் அறிந்த செய்தி.இஸ்லாமிய ஷியா பிரிவினர் முகமதுவின் கன்னி மனைவி ஆயிஷாவே முகமதுவை கொன்ற முக்கிய குற்றவாளியாக தீர்கின்றனர்.இந்த சாவை குறித்த ஒரு விரிவான ஆராய்ச்சியை தஜ்ஜால் ஒருவர் எழும்பி விரிவாக எழுதியுள்ளார்.அவருடையை கட்டுரைகள் முகமதுவின் மரணத்தின் முடிச்சுகளை சிக்கலின்றி அவிழ்க்க உதவுகிறது .இதை வாசக நெஞ்சகங்களுக்கு சமர்பிக்கிறேன்

ஒரு மரணம் சில கேள்விகள்-1

ஒரு மரணம் சில கேள்விகள்-2

ஒரு மரணம் சில கேள்விகள்-3

ஒரு மரணம் சில கேள்விகள்-4

ஒரு மரணம் சில கேள்விகள்-5


http://thamilislam.blogspot.in

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பெண் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று நபிகள் நாயகத்தின் வழிகாட்டல்

இஸ்லாத்தின் இறைதூதர் நபிகள் நாய்கம் எப்பேர்ப்பட்ட மனிதர் என்பதற்கு ஒரு முக்கியமான ஆதாரத்தை நண்பர் முகவை அப்பாஸ் பதிவாக எழுதியுள்ளார்.

இஸ்லாத்தை உண்மைப் படுத்தும் நாட்டு நடப்பு; குடும்ப கட்டுப்பாட்டுக்கு பின் குழந்தை.

இப்போது வீரமணியார் வகையறாக்கள் ஒரு கேள்வி எழுப்பலாம், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட லட்சத்தில் ஒருவருக்குத் தானே குழந்த பிறந்துள்ளது. அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட எல்லாருக்கும் பிறக்க வில்லையே என்று. இங்கேயும் இறைவனின் சான்று பளிச்சிடுகிறது. அதாவது குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்யாமலேயே குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் தம்பதிகளில் எப்படி தான் நாடியவர்களுக்கு மட்டுமே குழந்தை தருவது போன்று, அறுவைச் சிகிச்சை செய்தவர்களிலும் தான் நாடியவர்களுக்கு மட்டுமே குழந்தை தருகிறான் இறைவன் என்பதுதான் அது.

இதைத்தான் இறைவனின் தூதர்[ஸல்] அவர்கள் பின்வரும் பொன்மொழியில் தெளிவான வார்த்தையில் சொல்லியுள்ளார்கள்;

அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்கள்;
”நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!” என்று கூறினார்கள்.[புகாரி]

நாத்திக மடையர்களான வீரமணியார் வகையறாக்கள் என்ன கேட்பார்கள் என்பதை முன்னரே யூகித்து சகோ முகவை அப்பாஸ் பதிலளித்துள்ளார்கள்.

அல்லாஹ் யாருக்கு குழந்தையை தர நாடுகிறான் என்பது நமக்கு தெரியாது. ஏன் நபிகள் நாய்கத்துக்கே தெரியாது. அவரும் ஆண் குழந்தைக்காக இறைஞ்சி அவருக்கு ஆண் குழந்தை கொடுக்கப்படவில்லை. எத்தனையோ பெண்களை நபிகள் நாய்கம் கற்பழித்தததால்தான் என்று பிறமத சகோதரர்கள் அவதூறு சொல்லியுள்ளார்கள். ஆனால் அது உண்மை இல்லை. உங்களது பாவம் உங்களது பிள்ளைகளுக்கு இல்லை என்று அல்லாஹ் திருமறையில் அறிவித்திருக்கிறான். ஆகவே நபிகள் நாய்கம் செய்த கற்பழிப்புகளின் பாவம் அவரது பிள்ளைக்கு எப்படி வரும்? இது கூட தெரியாத் நாத்திக மடையர்களான வீரமணி வகையறாக்கள் என்ன விவாதம் செய்யப்போகிறார்கள்?

சரி இப்போது நபிகள் நாய்கத்தின் பொன்மொழிக்கு வருவோம். அதிலிருந்து இறையச்சம் பெறுவோம்.

நபிகள் நாய்கதின் போர்வீரர்கள் கற்பழிப்பு செய்கிறார்கள். யாரை? போரில் பிடிக்கப்பட்ட பெண்கைதிகளை. அபு க்ரைபுக்கு முன்னாலேயே அமெரிக்காவுக்கே வழிகாட்டியாக நபிகள் நாய்கம் அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

அபு க்ரைபில் எந்த பெண்கைதியையும் அமெரிக்கா கற்பழிக்கவில்லை. ஆனால், இனி அமெரிக்கா நபிகள் நாய்கம் வழியை மேற்கொண்டால், ஈராக்கில் பெண்கைதிகளை பிடித்து கற்பழிக்கலாம் என்ற உயரிய போதனையை நபிகள் நாய்கம் சல்லல்லாஹூ அலைஹிவசல்லம் அறிவிக்கிறார்கள்.

இதில் நபிகள் நாய்கத்தின் போர்வீரரான அபு சயீத் (ரலி) ஒரு அக்கறையாக இந்த பெண் போர்க்கைதிகளை கற்பழிக்கலாமா என்று கேட்கிறார். அவருக்கு அந்த பெண்கள் அன்றுதான் தன் கணவன்மார்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் கொல்லப்படுவதை கண்ணால் பார்த்திருக்கிறார்கள். அன்றே நபிகள் நாய்கத்தின் போர்வீரர்கள் அந்த பெண்களை கற்பழித்து அந்த பெண்களுக்கு இன்பம் தருகிறார்கள்.

இந்த வேளையில் அபு சயீத் (ரலி) அவ்ர்களுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. இந்த பெண்களை கற்பழித்து அந்த பெண்கள் கர்ப்பமாகிவிட்டால், இந்த பெண்களை விற்று பணம் பண்ண முடியாதே என்று கவலைப்படுகிறார்.

ஒரு குலத்தார் மீது போர் தொடுத்து அவர்களது ஆண்களை கொன்று பெண்களை சிறைபிடிக்க வேண்டும் என்பது நபிகள் நாய்கத்தின் வழிமுறை. அவ்வாறு செய்திருக்கும் இந்த நிகழ்வில் அதுவரை சுதந்திர பெண்களாக இருந்த அவர்கள் அடிமைகளாக விற்கப்பட தகுதியுடையவர்களாக ஆகிவிடுகிறார்கள். இதுவும் நபிகள் நாய்கத்தின் வழிமுறை. இது தவறு என்று இன்று நாம் கருதக்கூடாது. நபிகள் நாய்கம் எந்த புறம் நின்று உச்சா போனார் என்பதையும் நாம் பின்பற்றுபவர்கள். இப்படிப்பட்ட முக்கியமான அறிவுரையை நாம் உதறித்தள்ளி விட முடியுமா? சிந்தியுங்கள் என்று அல்லாஹ் அல்குரானில் அடிக்கடி நம்மை கேட்டுகொள்கிறான்.

ஆனால் அங்கே நபிகள் நாய்கம் என்ன அறிவுரை சொல்கிறார் என்று சிந்திக்க வேண்டும்.

”அடே பதர்களே.. இன்றுதான் கணவனை இழந்திருக்கிறார்கள். பெற்ற பிள்ளைகளை இழந்திருக்கிறார்கள். இன்றுதான் பெற்ற தந்தையை இழந்திருக்கிறார்கள். அவர்களை போய் கற்பழித்து அடிமையாக விற்கிறேன் என்று சொல்கிறாயே உனக்கு மனிதாபிமானம் இருக்கிறதா?” என்றா நபிகள் நாய்கம் கேட்டார்கள்? இல்லவே இல்லை!

”இந்த பெண்களை கற்பழிக்கிறேன். உள்ளே விடலாமா? வெளியே விடலாமா? என்று கேட்கிறாயே? நீ ஒரு மனுஷனா? இதற்காகவா நீ மனிதனாக பிறந்தாய்? உன் மனைவியிடம் போய் உடலுறவு கொள். போரில் தோல்வியடைந்தால் என்ன? அவர்கள் மனிதர்கள் இல்லையா?” என்றா நபிகள் நாய்கம் கேட்டார்கள்? இல்லவே இல்லை!

“அடே நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளே.! நான் இந்த காலத்துக்கு மட்டுமா போதனை கொடுக்க வந்தேன்? இனி வரும் காலம் அனைத்துக்கும் போதனை கொடுக்க வந்தேன். இதே ஆட்கள் நம்மை கைப்பற்றினால் நம் பெண்களை இதே போல கற்பழிப்பார்கள். அது உண்மைதான். அது காட்டிமிராண்டி வழக்கம். நாம் நாகரிகமான புதிய மதத்தில் இருக்கிறோம். அந்த மதத்தில் இது போன்ற காட்டிமிராண்டித்தனமான செய்கைகளுக்கெல்லாம் இடமில்லை. இவர்களை மரியாதையாக கண்ணியமாக நடத்துங்கள். இவர்களை அடிமைகளாக விற்காதீர்கள். அவர்கள் பெண்கள். அவர்கள் நம்மோடு போர்புரியவில்லை. அவர்களது கணவன்கள், பெற்றோர்கள் குழந்தைகள் நம்மோடு போர் புரிந்தார்கள் தோற்றார்கள் இறந்தார்கள். ஆனால் இந்த பெண்கள் என்ன தவறு செய்தார்கள்? . அதற்காக இவர்களை கற்பழிப்பதோ இவர்களை அடிமைகளாக்கி விற்பதோ தகுமா? இந்த பெண்களே நம்முடன் போரிட்டாலும், இவர்களை அவமரியாதை செய்வதோ கற்பழிப்பதோ தகுமா? அது நாகரிகமானதா? பண்பாடுள்ள விஷயமா? இவர்களை கற்பழிப்பவன் கேடுகெட்டவனிலும் கேடுகெட்டவனாயிற்றே. நாம் செய்யக்கூடாது. இவர்களை க்ளங்கப்படுத்தாமல் அனுப்பி வையுங்கள். அந்த பெண்களை கவுரதையாக அனுப்பி வையுங்கள். அவர்களை சுதந்திரமாக இருக்க விடுங்கள். அவர்கள் யாரை கணவராக எடுத்துகொள்கிறார்களோ அவர்களிடம் செல்லட்டும். அந்த பெண்கள் தனியாகவே இருக்க விரும்பினாலும் இருக்கட்டும். அவர்களை அடிமையாக விற்பது மனித அறத்துக்கே எதிரானது. இறைவனின் முன்னால் மனிதர்கள் எல்லோருமே சமம். அப்படியிருக்கும்போது ஒரு மனிதனின் அடிமையாக இன்னொரு மனிதன் இருப்பது தகுமா?” என்றா நம் நபிகள் நாயகம் சொன்னார்? இல்லவே இல்லை!

அவர்கள் என்ன சொன்னார்கள்?

அந்த பெண்களை எப்படி கற்பழிக்க வேண்டும் என்றல்லவா நமது நபிகள் நாயகம் அறிவுரை வழங்குகிறார்! சிந்தியுங்கள்!

“அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? உச்சகட்டத்தில் ஆண் குறியை வெளியே எடுத்து விந்தை கொட்டக்கூடாது என்று ஒன்றுமில்லை. ஆனாலும் அப்படி செய்யாமலிருப்பதே மேலானது. அதாவது அந்த பெண்ணின் கருப்பைக்குள் உங்கள் விந்தை அனுப்புவதே மேலானது. ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!”

ஆஹா…!

இதுதானே நம் இறைதூதரின் அதுவும் இறுதி இறைதூதரின் அறிவுரை!!!
இதுவல்லவோ இறைதூதரின் இலக்கணம்!!!! படிக்கும் எனக்கே புல்லரிக்கிறது!!. இப்படிப்பட்ட்வரை இறைதூதராக கொண்ட நாம் எவ்வளவு பேறு பெற்றவர்கள்!! இப்படிப்பட்ட இறைதூதரிடம் எப்படிப்பட்ட கூட்டம் சேரும்!!!, எவ்வளவு கூட்டம் சேரும்!!! என்று சிந்தித்து பாருங்கள். சும்மாவா அல்லாஹ் சிந்திக்க மாட்டீர்களா என்று குரான் வசனங்களில் இறைஞ்சுகிறான்.

இவையே நபிகள் நாயகத்தின் வழிமுறைகள்.

போரில் பிடித்த பெண் கைதிகளை எப்படி நடத்த வேண்டும், எப்படி கற்பழிக்க வேண்டும், எப்படி விந்தை உள்ளேயே விட வேண்டும் என்பதனை தெளிவு படுத்தியிருக்கும் இந்த பொன்மொழிகள் இன்னமும் 1400 ஆண்டுகளுக்கு பின்னாலும் முகவை அப்பாஸ் போன்ற மனிதர்களை இஸ்லாமுக்கு அழைத்து வருகின்றன. இப்பொன்மொழிகள் முகவை அப்பாஸ் பொன்ற ஈமானுள்ள முஸ்லீம்களை உற்சாகப்படுத்துகின்றன என்றால் அதில் ஆச்சரியம் இருக்கிறதா?

இதனால்தான் உலகத்தில் வேகமாக பரவும் மதமாக இஸ்லாம் இருக்கிறது என்றால் மிகையில்லை.

சிறைக்கூடங்களில் இஸ்லாம் வேகமாக பரவுகிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

காரணம் இறைதூதரின் இது போன்ற பொன்மொழிகளே என்றால் மிகையில்லை. எவ்வளவு சிறைக்கைதிகள் தாங்கள் செய்வதை அல்லாஹ் பெயரில் நியாயப்படுத்தலாம் என்று சந்தோஷப்படுவார்கள் என்று நினைத்து முகவை அப்பாஸ் போன்ற தூய இஸ்லாமியர் மகிழ்ச்சி அடைவதில் ஆச்சரியமென்ன?

source:http://pagaduu.wordpress.com

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized