சீதையை ஸ்ரீராமன் தொடவே இல்லையா?
லட்சுமண பகவான் ஒருநாள்….
அய்யர்: ஆகாயம் படைச்சார் பூமியும் படைச்சார்வாயு அக்கினி ஜலமும் படைச்சுட்டு…கடைசியாகத்தானே மனுஷாளப் படைச்சார் கடவுள் உலகத்தப் படைச்சார்
ராமசாமி(பெரியார்): இருக்கட்டும். கடவுள யாரு ஓய் படைச்சார்?
லட்சுமணன்: கடவுள யாரு படைக்கமுடியும் ஓய். அவா சுயம்பு தானா உண்டானவா – தான்தோன்றி
ராமசாமி: கண்காணா உன் கடவுள்தான் தோன்றி ஆகிறப்போ -கண் கண்ட பேரண்டம் தான் தோன்றி ஆகாதோ?
லட்சுமணன்: அசுரகுணம் உள்ளவாதான் – இப்படி அபஸ்வரமாக் கேள்வி கேப்பா…தேவகுணம் இருந்தா இப்படிக் குதர்க்கமாப் பேசமாட்டா ஒம்ம அசுர குணம் அழிகநீர் தேவகுணம் பெறுக…
ராமசாமி: இந்திரன் யாரு ஓய்…
லட்சுமணன்: தேவர்குலத் தலைவன்
ராமசாமி: இராவணன் யாரு ஓய்
லட்சுமணன்: அசுரர் குல அரசன்
ராமசாமி: காட்டில் இருந்த முனிவன் மனைவியின் கற்பைக் கெடுத்தவன் இந்திரன்.கவர்ந்து சென்ற மாற்றான் மனைவியைக் கற்போடு விட்டவன் இராவணன் இப்பச் சொல்லும் குணத்தில் உயர்ந்தவன் யார்?தேவனா?அசுரனா?
லட்சுமணன்: அசுரகுலத்திலயும் அப்பப்போ நல்லவா இருந்திருக்காளே!நந்தனுக்கு மோட்சம் கொடுக்கலியோ நடராஜப் பெருமான்?
ராமசாமி: நந்தனுக்கு மோட்சம் கொடுத்தீரோ தீயிட்டு எரிமூட்டி மோசம் புரிந்தீரா? மோட்சம் தந்தது மோட்சம் தந்தது முற்றிலும் உண்மையென்றால் – அவன்சந்ததியெல்லாம் சந்நிதி இழந்து சந்தியிலே ஏன் நின்றான்?
லட்சுமணன்: மனுஷாளா இருந்தாமடியா இருக்கணுமோ இல்லியோ? தீட்டுன்னு பெரியவா தெரியாமலா சொன்னா?
ராமசாமி: தீட்டு என்னய்யா தீட்டு… குடிக்கிற தண்ணியத் தொடப்படாது குளத்துலயும் கால் படப்படாது எப்படிய்யா வரும் சுத்தம்? ஒங்க மேலதான் குத்தம் குளிக்காத பசுவக் கும்புடுறீங்க – அதக் குளிப்பாட்டும் மனுசன ஏனய்யா கொல்றீங்க?
ராமசாமி: புராணம் இதிகாசம் – வெறும் பொய் மோசம் பொய் பேசிப் பேசியே பொய்யாப் போச்சே தேசம்!!
லட்சுமணன்: புராணம் இதிகாசம் பொய்யில்லேங்காணும்
ராமசாமி: அப்படியாங்காணும் ஆதாரம் கூறும்!
லட்சுமணன்: அணில் முதுகில் ஸ்ரீராமர் போட்டகோடு மூணும் அப்படியே இருக்குது ஓய் அழியலையே பாரும்
ராமசாமி: ஓகோ! முதுகத் தொட்டதும் மூணுகோடு விழுந்திருச்சோ? ஏங்காணும்! சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா – இல்ல சீதையை ஸ்ரீராமன் தொடவே இல்லையா? http://unmaionline.com/20070101/20.htm