Category Archives: முஸ்லீம்

நான், மாறியவன் , என்னுடைய மாற்றம் ஒரு மதமாற்றம் இல்லை, ஒரு இதய மாற்றம்

 

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

ஆனந்த் மகாதேவனின்
        கருத்து

                           நான், மாறியவன்

             என்னுடைய மாற்றம் ஒரு மதமாற்றம் இல்லை, ஒரு இதய மாற்றம்

Illustration by Sorit

நான் ஒரு பிராமணணாக பிறந்தேன். நான் ஒரு புரோகிதரின் பேரனாக இருந்தேன் அவரை மிகவும் நேசித்தேன். நான் நன்றாக படித்தவன். என்னுடைய தற்போதைய பணி நான் எப்படி அறிவுள்ளவன் என்பதை குறிக்கிறது. நான் போதுமான வசதியுடையவன்  என்னுடைய வருமானம் என்னை சமுதாயத்தின் உயர் நடுத்தர மக்கள் வகையில் வைத்துள்ளது. அது என்னை உயர்ந்த ஜாதியான பணக்காரனாக மாற்றும் என்று அநுமானிக்கிறேன். வேறு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால் நான் ஏதோ தாழ்த்தப்பட்ட பழங்குடியோ அல்லது வறுமையில் வாடும் பரிதாபமான ஏழையோ இல்லை. இருந்த போதிலும் நான் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுவதை தெரிந்து கொண்டேன்.

 உலகம் என்னை நான் கிறிஸ்தவத்திற்கு மதம்மாறியவன் என்று சொல்லும். ஆனால் எனக்கு அதில் எந்த பிரச்சினையும் கிடையாது. இயேசு கிறிஸ்து மூலமாக கடவுள் மீதான என்னுடைய நம்பிக்கையை ஒரு மதம் என்பதை விட ஒரு உறவாகத்தான் பார்க்கிறேன். என்னை யாரும் பணம் கொடுத்தோ அல்லது கட்டாயமாகவோ அல்லது ஏமாற்றியோ மதம் மாற்றவில்லை என்று பதிவுகளுக்காக நான் தைரியமாக கூறமுடியும்.

  நான் ஒரு இந்தியன் என்று சொல்லும் தேசிய அடையாளத்தினிமித்தம் நான் மிகவும் பெருமைப் படுகிறேன். மேலும் என்னுடைய கலாச்சாரத்தின் படி நான் ஒரு இந்துவாக அடையாளம் காட்டப்டுவதில் மிகுந்த சமாதானம் உடையவனாக இருக்கிறேன்.  என்னுடைய பெற்றோர்கள் எனக்கு வைத்த பெயரையுடையவனாகத் தான் இருக்கிறேன். என்னுடைய நம்பிக்கையில் பங்கு வைக்கும் என் மனைவியும் தன்னுடைய இந்து பெயரோடு தான் இருக்கிறார்கள். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்கள் இருவருக்கும் நல்ல அருமையான் இந்து பெயர்களைத் தான் வைத்துள்ளோம். ஒரு வேளை இந்த பகுதியை வாசிக்கும் என்னுடைய சக பணியாளர்கள் மற்றும் மிகவும் பழக்கமானவர்களுக்கு  இது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கலாம். அவர்களுக்கு என்னுடைய நம்பிக்கைப் பற்றி அறிகுறிகள் கிடையாது பொதுவாக நான் யாரிடம் அதை அறிவிக்கப் போகிறதில்லை. ஆனால் ஒரு வேளை யாராவது என்னிடம் என் வாழ்க்கையில் எப்போதும் நிரம்பியிருக்கும் மகிழ்ச்சிக்கும் நம்பிக்கைக்கும் என்ன காரணம் என்று கேட்டால் நான் மிகவும் சந்தோஷத்தோடு அவர்களிடம் அதை பகிhந்து கொள்ளுவேன்.
 
 நான் இந்த பகுதியை எழுதுவது ஒரு முக்கியமான குறிப்பை வலியுறுத்துவதற்குத்தான் – என்னுடைய மாற்றம் என்பது மதத்தை மாற்றியது அல்ல ஆனால் ஒரு இதய மாற்றம் என்பதாகும். இதை தெளிவாக விளக்குவதற்கு நான் மற்ற பிரமாண சிறுவர்களைப் போல் சென்னையில் சிறுவனாக இருந்த நாட்களுக்கு செல்ல வேண்டும்.  ஒரு சிறந்த புரோகிதராக இருந்த என்னுடைய தாத்தா என்னை எப்பொழுதும் கவரக் கூடியவராக இருந்தார். நான் அவர் மீது முழு அன்பு கொண்டாடினேன் நடக்கப் பழகுபவனாக எப்பொழுதும் அவருடன் ஒட்டியிருந்தேன். அவரும் என்னை வெகுவாக நேசித்தார். என்னுடைய எந்த விருப்பத்தையும் அவர் நிறைவேற்றாமலிருந்ததில்லை. ஆனால் என்னுடைய ஆரம்ப காலங்களில் அவர் தீவிதமாக ஈடுபட்ட வந்த மதத்தோடுகூட என்னை தொடர்புபடுத்திக் கொள்ள முடியவில்லை. பிறகு, என்னுடைய பள்ளி நாட்களில் நான் அவரோடு கூட என்னுடைய கோடை விடுமுறை செலவிட்டேன். அவருடன் காவேரியில் இறங்கி ஆசாரங்களை அனுசரித்து வந்தது போன்ற பல நினைவுகள் இன்றும் என் மனதில் மறையாமல் இருக்கிறது. நான் அநேக ஸ்லோகங்களை கற்றேன் இன்றும் அவற்றில் சில எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஆனால் அவற்றில் எதையும் நான் புரிந்து கொள்ளவில்லை எதுவும் என்னை கடவோளோடு இணைக்கவில்லை.

 நான் 19 வயதாக இருந்தபோது, நான் சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் என்னுடைய கிறிஸ்தவ நண்பன் அவனது வீட்டில் நடக்கும் ஜெபத்திற்கு அழைத்தான். ஒரு வேளை அவன் வீட்டின் ஏதாவது பார்ட்டிக்கு அல்லது  நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தாலும் நான் போயிருப்பேன். அவனது வீட்டில் அவனும் அவன் சகோதரியும் எனக்காக ஜெபித்தார்கள். அது ஒரு எளிய ஆனால் மகிழ்ச்சியான உரையாடல் கடவுளுடன்,  ஐந்து நிமிடம் தான் நீடித்தது. அதன் முழுவரிகளும் எனக்கு நினைவிலில்லை ஆனால் அவர்கள் என்னுடைய வாழ்க்கை, எதிர்காலம், தொழில் மற்றும் குடும்பத்திற்காக ஜெபித்தார்கள். அது ஒரு சாதாரண நிகழ்வுதான்- எந்த அற்புதமோ தேவ தூதர்களோ வரவில்லை. அவர்கள் செய்ததெல்லாம் தங்களுடைய ஊக்கமான கண்ணீரின் ஜெபத்தை சர்வ வல்லமையுள்ள இறைவனிடமும் அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவிடம் ஏறெடுத்தார்கள். அவர்கள் ஆமென் என்று சொன்னபோது, இயேசுவை பின்பற்ற வேண்டும் என்ற ஆவல் என் உள்ளத்தில் ஏற்பட்டதை உணர்ந்தேன்.

 இது கடவுளடனான ஒரு விசுவாச சந்திப்பு இதை புரிந்து கொள்வதற்கோ, காரணப்படுத்துவதற்கோ அல்லது விவரிப்பதற்கோ நான் முயற்சி செய்வதில்லை. நான் இதை அப்படியே ஏற்றுக்கொண்டேன் இது என்னுடைய விசுவாசம் நான் நம்புவதற்காக தெரிந்து கொண்டேன். அந்த மாலை வேளையில் நான் என்னுடைய மதத்தை மாற்றவில்லை, அதற்கு பின்னும் இல்லை. இந்து என்னுடைய அடையாளம் ஆகும் மதம் இல்லை, இன்று வரை அப்படித்தான்.

 அந்த மாலை வேளையில் நான் பெற்றுக் கொண்ட கிறிஸ்தவம் ஒரு மதம் அல்ல. மாறாக அது இயேசுவுடனான ஒரு தீவிர உறவாகும். கடந்த 15 வருடங்களாக நான் இந்த இயேசுவை இன்னும் நெருக்கமாக அறிந்து கொண்டேன். அவர் தான் பாவமற்ற பரிசுத்த தேவ குமாரன் என்பதை அறிவேன். என்னுடைய தொழில், வாழ்க்கை, கனவுகள், வெற்றி தோல்விகள் இன்னும் என் உறவுகளைப் பற்றி ஒவ்வொரு நாளும் நான் பேசக்கூடிய ஜெபிக்ககூடிய என்னுடை மிகச் சிறந்த நண்பர் என்று அறிவேன்.

 ஒரு வேளை நான் ஒரு நல்ல புத்தகத்தை படித்தாலோ, நல்ல ஒரு சினிமாவைப் பார்த்தாலோ, அல்லது ஒரு நல்ல ஹோட்டலில் சுவையான உணவை உண்டாலோ என் எல்லா நண்பர்களுக்கும் அதைப் பற்றிச் சொல்லுவேன். இயேசுவில் நான் ஒரு மிகச் சிறந்த ஆச்சரியமான நண்பனை, வழிநடத்துபவரை, தலைவரை, இரட்சகரை மற்றும் தெய்வத்தை கண்டிருக்கிறேன். நான் எப்படி அவரைப் பற்றி என்னுடைய எல்லா நண்பர்களுக்கும் சொல்லாமல் இருக்கமுடியும்? ஒரு வேளை யாராவது கவனித்து, இயேசுவில் விசுவாசம் வைக்க கடந்து வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். உலகம் இதை மதமாற்றம் என்று சொல்லும் ஆனால் நான் என்னுடையதைப் போல இதை ஒரு இதய மாற்றம் என்றுதான் கூறுவேன்.

 ஆனால் நான் சொல்லுவதையெல்லாம் கேட்கும் படி யாரையும் நான் கட்டாயப்படுத்தவோ நிர்பந்திக்கவோமாட்டேன். அப்படி செய்வது என்னுடைய விசுவாசத்திற்கு அர்த்தமற்றதாகும். ஆனால்  எந்த வஞ்சனையும், கட்டாயமும், லஞ்சமும் இல்லாமல் என்னுடைய விசுவாசத்தை பிரசங்கிப்பதற்கும்,  கடைபிடிப்பதற்கும் எனக்கு சட்டப் பூர்வமாக அதிகாரமுண்டு. இப்படிப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் கூட ஒவ்வொரு நாளும் மிக கொடுமையான முறையில் இந்த சிறந்த இந்திய நாட்டில் மீறப்படுவதென்பது மிகவும் வேதனையளிக்ககூடியதாயுள்ளது.

 (ஆனந்த் மகாதேவன் பதிப்பாசிரியர், அவுட் லுக்) 
 
 
 

Illustration by Sorit
OPINION
I, The Convert
My conversion was not a change of religion; it was a change of heart
Anand Mahadevan
e-mail | one page format | feedback: send read |
I was born a Brahmin and am the grandson of a priest whom I dearly loved. I am educated and my current professional standing indicates that I am reasonably intelligent. I am also affluent and my income would put me distinctly in the upper middle class bracket. I guess that would make me high-caste, rich and smart. In other words, I am not a tribal, or poor or dim-witted. And yet, I chose to become a follower of Jesus Christ.

The world would call me a convert to Christianity. I have no problems with that, though I see my faith more as a relationship with God through Jesus Christ than as a religion. And for the record, I can truthfully claim that no one financially induced or threatened or deceived me into converting to Christianity.

I am fiercely proud of my national identity as an Indian and I am completely at peace with my cultural identity as a Hindu. I retain the name my parents gave me. My wife, who also shares my faith, continues to go by her Hindu name. We have two children and we have given both distinctly Hindu names. In fact, many of my colleagues and acquaintances who may happen to read this column are likely to be surprised. They have no inkling about my faith, for I generally don't go about announcing it. But if someone does ask me the reason behind the joy and hope that is everpresent in my life, I am always delighted to share it with them.

I write this piece to make one point—that my conversion was not a change of religion but a change of heart. To explain this, I need to go back to my childhood in Chennai, similar to that of so many other Tamil Brahmin boys like me. My grandfather, every bit the virtuous priest, had enormous influence over me. I absolutely adored him and as a toddler, always clung to him. He too loved me to a fault. There was no wish of mine that he would not rush to fulfil. But even in my early, formative years I was unable to relate to the religion he fervently practiced. Later, in my school days, I once spent my summer holidays with him in Trichy. Memories of dawn walks with him, for the ritualistic dip in the Cauvery river, cow in tow, are still fresh in my memory. I learnt many shlokas, some of which I still remember. But I never understood any of it and none of it helped me connect with God.

When I was 19, a Christian friend with whom I used to play cricket invited me to his house for prayer. If he had invited me to a pub, or party, I would have gone too. At his home, he and his sister prayed for me. It was a simple yet delightful conversation with God that lasted all of five minutes. I don't remember it verbatim, but they articulated a prayer of blessing on my life, future, career and family. It was a simple affair—no miracles, no angels visiting. All they did was utter a deep human cry out to the creator God and His only son Jesus Christ. When they said Amen, I felt in my heart a desire to follow Jesus.

It was a faith encounter with God that I shall not even attempt to understand, rationalise or explain. I simply accept it. It is my faith. It is what I choose to believe. That evening I did not change my religion, for in reality I had none. Hinduism was my identity, not my religion. It still is.

The Christianity I acquired that evening is not a religion. On the contrary, it is an intensely intimate relationship with Jesus. Over the past fifteen years, I have come to know this Jesus even closer. I know Him as the pure and sinless Son of a Holy God. And I know Him as a dear friend to whom I pray and talk to every day—about my career, my dreams, successes, failures, finances and even my sexuality.

If I read a good book, watch a good movie (Rock On is terrific, mate), or eat a good meal at a new restaurant, I would naturally tell my friends about it.In Jesus, I have discovered a truly amazing friend, guide, leader, saviour and God. How can I not tell all my friends about Him? And if anyone does listen and he too comes to believe in Jesus, I am delighted. The world would call it a conversion; I call it a change of heart, like mine.

But I would never force anyone to listen to me, leave alone financially induce, coerce or con him into believing. That to me is pointless and against the very grain of my faith. But I do have a constitutional right to practice my faith and to preach it without deception, force or bribery. It pains to see such basic rights of mankind being cruelly violated every day in this great Hindu nation.

God bless India.


(Anand Mahadevan is the editor of Outlook Business.)

 

english source:http://outlookindia.com/full.asp?fodname=20081027&fname=Conversions+%28F%29&sid=5

 

 

http://unmaiadiyann.blogspot.com/2008/10/blog-post_24.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம்

சங்பரிவார் அமைப்புகள் ஒரிசாவில் செய்த அட்டூழியங்களின் அட்டவணை

 

Names of 26 People Killed in the Violence

A Circulating List of the 26 People Killed in the Orissa Violence

Church groups have been able to give the names of atleast 26 people who were killed in the week-long violence in Orissa, in which Hindu fanatics also burned down or destroyed some 4,000 Christian homes, several churches and convents

A circulated list gives the names of the 26 deceased as follows:

Names of the Deceased

1. Dasarath Pradhan (Tiangia)
2. Kamolini Nayak (Mondakia)
3. Pastor Samuel Nayak (Bakingia)
4. Romesh Digal (Bakingia)
5. Jecob Digal (Petapanga)
6. Sureshon Nayak
7. Abhimonyu Nayak
8. Bikram Nayak (Tiangia)
9. Goyadhar Digal, Kasinipadar
10. Dibyasundar Digal
11. Parakhita Nayak(Tiangia)
12. Trinath Digal (Tiangia)
13. Joseph Digal
14. Gopan Nayak (Mondakia)
15. Khogeswar Pradhan
16. Ajuba Nayak, Barakhama
17. Rosananda Prodhan
18. Jaka Nayak Budamaha
19. Akhar Digal Totomaha
20. Sidheswar Digal, Sulisoru
21. Praful Nayak, Barakhama
22. Mary Digal, Barakhama
23. Daniel Mallick (Pastor) Bankingia
24. Michael Nayak, Bankingia
25. Gulu, Kanbagiri
26. Bidyadhara Digal, Kattargarh

Churches Attacked

1. Petapanga Church
2. Catholic Church, Mondakia
3. Catholic Church, Ratingia
4. Believers church, Ratingia
5. Diocese Church, Ratingia
6. Believers Church, Gimangia
7. Diocese Church, Gimangia
8. Mdahukia Church
9. Catholic Church, Raikia
10. Catholic Church, Badimunda
11. Pentocastal Church, Badimunda
12. Catholic Church, Breka
13. Pentocastal Church, Breka
14. Catholic Church, Pobingia
15. Catholic Church, Srasanaanda
16. Catholic Church, Phulbani
17. Catholic Church, Phulbani
18. Catholic Church, Balliguda
19. Catholic Church, Sankrakhol
20. R.C. Church, Kanjamedi
21. Diocese Church, Kanjamedi
22. Pentecostal Church, Kanjamedi
23. Pentecostal Church Jugapadar, Nuagam
24. Baptist Church, Tumudiband
25. Pentecostal Church, Tumudiband
26. Catholic Church, Padanpur
27. Church in Dhanpur
28. Catholic Church, Tiangia
29. Baptist Church, Tiangia
30. Catholic Church, Gabindapali
31. Catholic Church, Padua
32. Catholic Church, Duburi
33. Pentecostal Church, Tiangia
34. Seveth Advent Church Bakingia
35. Catholic Church Nilungia36. Pentecostal Church Nilungia
37. Catholic Church Boipariguda
38. R.C. Bakingia
39. Penteconstal church, Bakingia
40. R.C. Kotimaha
41. Pentocostal church, Budamaha
42. Baptist Church, Sukananda
43. Pentaconstal church Adaskupa
44. R.C. Church, Adaskupa
45. Pentacostal Church, Rupagao
46. Sulesoru Church
47. Pengoberi village Church
48. Kambaguda, Church
49. Tengapadar village church
50. Prakash Prayer House, Raikia

3. Shops Destroyed in Raikia

1. Biraj Nayak – Chicken Centre
2. Alok Nayak – Chicken Centre
3. Chiku Nayak
4. Rohit Nayak – Tea Stall
5. Simon Nayak – Computer
6. Kabula Nayak
7. Sudhir Nayak – Xerox
8. Junes Nayak – Computer
9. Jerbas Mondal – Grocery
10. Paburia shops

4. Convents

1. St. Joseph’s Convent, Sankharkhole
2. St. Anne’s Convent, Pobinga
3. Mt. Carmel Convent, Balliguda
4. St. Anne’s Convent, Padangi

5. Hostels

1. Boy’s Hostel, Padangi
2. Girl’s Hostel, Padangi
3. Balliguda Convent
4. Boy’s Hostel, Pobingia
5. Girl’s Hostel, Pobingia

6. Six Institutions Damaged

1. Janvikas
2. Pastoral Center
3. Ajka, Raikia
4. Poly Shree, Paburia
5. Gramya Pragati, Balliguda
6. Karuna, Raikia

7. Priests and Religious Attacked who are Seriously Injured

1. Fr. Thomas Chellan
2. Fr. Bernard Digal
3. Fr. Edward, SVD
4. Fr. Simon Lakra, SVD
5. Sr. Meena HM
6. Fr. Xavier Tirkey

 
 

 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், பெண்கள், முஸ்லீம்

விரட்டி விரட்டி வேட்டையாடிய மனித மிருகங்கள்! உயிரை உறைய வைத்த ஒரிஸா படுகொலைகள்!!

-சர்ஜுன்
ஒரிஸா மீண்டும் பற்றி எரிகிறது. ஆப்பிரிக்காவின் ருவாண்டா போல், 2002ன் குஜராத்தைப் போல் ஓர் பெரு மெடுப்பிலான ஒரு இனப்படு கொலை களுக்கான அசாதாரணமான ஆயத்தங் கள் அதில் தென்பட்டன. ஒரிஸாவின் துயர நிகழ்வுகள் மீண்டும் ஒருமுறை வெடித்தது. ஃபாதர் கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது பிஞ்சுக் குழந்தைகள் கொடூரமாகக் கொளுத்திக் கொல்லப் பட்ட சம்பவம் என வரலாறு மறக்காத வேதனைச் சம்பவங்கள் மீண்டும் ஒருமுறை அரங்கேறியது. மனித சமூகம் நாளும் நேசிக்கும் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், அனாதை இல்லங் கள் அழிக்கப்பட்டதும் சேவை உள்ளம் கொண்ட கன்னியாஸ்திரிகள் வன்முறை ஹிம்சை போன்றவற்றை கனவிலும் கூட நினைக்காதவர்கள் அவர்களை கொளுத் திக் கொன்ற வேதனையையும் என்ன வென்று சொல்வது?

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவரான சாமியார் லஷ்மானந்தா சரஸ்வதி என்பவர் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து சாமியாரின் கொலைக்கு யார் காரணம் என உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்தும் கிறித்தவர்கள் தான் இதற்கு காரணம் என கொடூரமாகக் கதை பரப்பி கிறித்தவர்கள் வேட்டையாடப்பட்டனர். ஆகஸ்டு 23க்குப் பிறகு மனித வர லாற்றில் மீண்டும் சில கொடூர நிகழ்வுகள் அரங்கேறின. ஆம்! விஸ்வ ஹிந்து பரிஷத் தனது வெறியாட்டத்தை தொடங்கியது. 23ஆம் தேதி கோத்த குடா என்ற பகுதியில் வேகமாக சென்ற வாகனங்கள் வழி மறிக் கப்பட்டன, கொளுத்தப் பட்டன. வாகன ஓட்டுநர் கொடூரமாக தாக்கப்பட்டார். சம்பல் பூரில் உள்ள ஆனந்த பள்ளியில் இரண்டு கன்னியாஸ்திரிகள், ஒரு சிறு சர்ச் எல்லாம் பஸ்பமாக்கப்பட்டன. அழிக்கப் பட்டன. பாதிரியார்கள் கன்னியாஸ்திரி கள், கிறிஸ்தவர்கள் அவர்களின் வீடுகள் கடுமையாக தாக்கப்பட்டன. மானாவாரியாக கொளுத்தப்பட்டன.

பிரச்சனைக்குரிய கந்தமால் மாவட் டத்தில் ஒரிஸா மாநில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தும் ஒரு பயனும் விளையவில்லை.

ஆகஸ்டு 25ஆம் தேதி விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்த பந்தை தொடர்ந்து வன்முறை வெடித்தது. முழு அடைப்பின் போது விரும்பத்தகாத சம்பவமாக வன்முறை சம்பவங்கள் சில நடக்கும். ஆனால் வன்முறை வெறியாட் டத்தை நிகழ்த்துவதற்காகவே பந்த் நடத்தியது விஸ்வ ஹிந்து பரிஷத் என நடுநிலையாளர் நினைத்த வண்ணமே அந்த வன்முறைகள் நடந்தேறியன.

கிறித்தவர்களுக்கு எதிராக சர்ச்சை கள் நிகழ்த்தி வந்த வரும் உழைக்கும் மக்கள் சாப்பிடும் மாட்டிறைச்சிக்கு எதிராக அரசியல் நடத்தி வந்த சுவாமி லக்ஷ்மானந்தா கொலையை காரணம் காட்டி இதற்கென காத்திருந்தவர்களைப் போல வெறிகொண்ட விதமாக வேட்டை யாடினர் வி.ஹெ.பியினர்.

ஞாயிற்றுக்கிழமை 24 ஆம் தேதி வன்முறை வெறியாட்டத்துக்கு அஞ்சி தேவாலயங்கள் வெறிச்சோடின.

அதே நாளில் கந்த மால் மாவட்டத் தில் சிறுபான்மையினர் மீதான தாக்கு தல்கள் அதிகரித்தன. ஆர்ச் டயோசீசன் ஆஃப் புவனேஸ்வர் அலுவலகம் தாக்கப்பட்டது. ஜான் விகாஸ் என்ற சமூக நல அலுவலகம் இந்த டயோசீ சனுக்கு கீழ் செயல்பட்டு வருகிறது. அடித்தட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து செயல்படும் அந்த அலுவலகம் தீக்கிரையானது. சூறையாடப்பட்டது. மூன்று கார்களும், ஆறு இரு சக்கர ஊர்திகளும் கொளுத் தப்பட்டன.

முக்கியமான ஆவணங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. மாலை
5 1/2 மணிக்கு இவையனைத்தும் கச்சிதமாக முடிக்கப்பட்டன.

6 மணிக்கு…

அதன்பிறகு திவ்ய ஜோதி பாஸ்ட்ரல் சென்டர் மீது மாலை ஆறு மணிக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. சூறையாடல் நடத்தப்பட்டது. பலிகுடாவில் மாணவர் விடுதி, மாணவியர் விடுதி, கன்னி யாஸ்திரிகளின் உறைவிடமும் தாக்கப் பட்டது. கன்ஜம்படி பகுதியில் உள்ள ரோமன் கத்தோலிக்க ஆலயம் தாக்கப் பட்டது. கன்ஜம்டி பகுதியில் உள்ள பிராட்டஸ் தேவாலயம் தாக்கப்பட்டது. சூறையாடப்பட்டது.

6.45 மணி…

பலிகுடா பகுதியில் உள்ள மூன்று பெந்தே கோஸ்தே தேவாலயங்கள் அழிக்கப்பட்டன.

இரவு 7 மணிக்கு..

ரைகியா பகுதியில் தலித் சமூகத் தினருக்கு சொந்தமான 12 கடைகள் சாம்பலாக்கப்பட்டன. விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்ட அப்பாவி மக்கள் அடர்ந்த காட்டுக்கு சென்றால்தான் உயிர் பிழைக்க முடியும் என்ற அவல நிலையில் அவர்களுக்கு இருண்ட வாழ்வை அளித்த மாநில அரசை நொந்து கொண்டு இருண்ட காட்டுக் குள் சென்றனர்.

ஆகஸ்ட் 25, 2008…

வன்முறைகள் தொடர்ந்தன. ஒரிசா மாநிலம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர் கள் உச்சகட்ட பீதியில் உறைந்தனர்.

காலை 7 மணி..

புல்பானி சர்ச்சும் அநாதை இல்லங் களும் தாக்கப்பட்டன. சிறிசண்டா எம்.சி சகோதரர் விடுதி என்ற ஆதரவற்றோர் விடுதி தாக்கப்பட்டது. அதிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் நோயாளிகள் அடித்து விரட்டப்பட்டனர். குஜராத் இனப்படுகொலையின் போது சிறு பான்மை சமூகத்தினர் வேட்டையாடப் பட்ட விவகாரம் நெருஞ்சி முள்ளாய் நாட்டு மக்களின் இதயங்களை நெருடிய போதும் கூட அரசும் காவல்துறையும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரிசாவில் மனித உரிமை மீறல்கள் நடந்தன. சிறுபான்மை யினரின் உயிர்கள் உடமைகள் எவ் வளவு மலிவானது என்பதை விவரித்தது.

10.30 மணி..

பலிகுடாவில் வாழும் கிறித்தவர் களின் வீடுகள் இப்போது தாக்கப்பட்டன. சேதங்கள், உயிர் பலிகள் குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை துல்லியமாகக் கிடைக்கவில்லை.

முற்பகல் 11.30 மணி…

நுஆஷி பகுதியில் உள்ள கிறிஸ்தவர் கள் வாழும் தெரு முழுமையாக தீயிட்டு கொளுத்தப்பட்டது. உயிருக்கு அஞ்சி மக்கள் கானகத்திற்கு ஓடினர்.
தேவாலயத்தின் சார்பாக நடத்தப் பட்ட மாணவர் விடுதி சரமாரியாக தாக்கப்பட்டது. அதில் இரண்டு மாணவர் களின் தலைப் பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டனர்.

ஒரு மணி..

ஜமாஜ் பரிச்சா என்ற கிறித்தவரின் வீடு. வாகன ங்கள் தீயிடப் பட்டன. கதவு கள் நெருப்பினால் துண்டு துண்டாக உடைந்தன. கூடியக் கூட்டத்தினரால் அவர் செம்மையாக உதைக்கப்பட்டார்.

தலையில் கடும் காயமடைந்த அவர் அவசர சிகிச்சைக்காக தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக் கிறார். (அவர் சிகிச்சை பெறும் மருத்துவ மனையின் பெயர் ரகசியமாக வைக்கப் பட்டிருக்கிறது) அவரது மனைவி ஹிந்து வாக இருந்தும் அவர் மீது கூடியிருந்த கும்பல் இரக்கம் காட்டவில்லை. அவர் மனைவியும் தாக்கப்பட்டார்.

2 மணி…

கிறிஸ்வர்களின் வீடுகளை தீயிட்டுக் கொளுத்துவதற்காக வன்முறை கும்ப லுக்கு அப்பகுதி பெண்கள் மண்ணெண்ணைய் கேன்களை போட்டி போட்டுக் கொண்டு கொடுக்கிறார்கள்.

இந்த வன்முறை கும்பல் செய்த குற்றச் செயலுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 436ன்படி ஏழு வருடம் அதற்கு மேற்பட்ட காலம் சிறையில் தள்ள வேண்டிய அளவு குற்றம் செய்தார் கள். ஆனாலும் துணிச்சலுடன் உலா வருகிறார்கள்.

ஃபாதர் சல்லான் கன்ஜம்டி பாஸ்ட்ரல் சென்டரின் இயக்குநர், அந்த சென்டரின் நிர்வாகி சிஸ்டர் மீனா இருவரோடு சேர்ந்து அந்த அலுவலகங்கள் கொளுத் தப்பட்டன. உள்ளே மாட்டிக் கொண்ட இருவரும் உயிர் பயத்தில் அலறவும் அஞ்சி தப்பித்தோம் பிழைத்தோம் என அவர்களும் காட்டுக்குள் ஓடினார்கள்.

சில, இடங்களில் கிறித்தவர்களின் வீடுகளுக்குள் வன்முறை கும்பல் நுழைந்து அங்கு வீட்டுக்குள் இருந்தவர் களை வெளியே இழுத்து வந்து அருகிலுள்ள காவல்நிலையத்துக்கே கொண்டு சென்று உதைத்தனர்.

ஆகஸ்ட் 25 ஆம் தேதி பாதிக்கப் பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளிவர ஆரம்பித்தன.

1. விஜய் பரிச்சா
2. ஆர்.கே. நாயக்
3. ஜோசப் நாயக்
4. சூசன் நாயக்
5. சந்தோஷ நாயக்
6. ஹரி ஹர்தாஸ்
7. மோசே நாயக்
8. பிரகாஷ் நாயக்
9. மோசே நாயக்
10. ராஜு மற்றும் பலர்

ரைகியா போலிஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கருணா அநாதை நிலையம்.
பத்மஹாவில் உள்ள மூன்று பெந்தோ கோஸ்தே பள்ளி மஸாதிகா சர்ச்
பைசர் மஹா சர்ச், மொண்டாகியா பகுதியின் பாப்டிஸ்ட் சர்க் ஆர்.சி.சர்ச்
மாத பங்கா சர்ச் வன்முறைகள் தொடர்வதால் இன்றும் ஏராளமான பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் கதி குறித்த தகவல் தெரியவில்லை.

பூல்பானி, சரஸ்னந்தா, பேபின்கியா, பலிகுடா மற்றும் கொஞ்சம்ண்டி பகுதி களில் கிறிஸ்தவர்களின் வீடுகள் முற்றி லும் கொளுத்தப்பட்டன. இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் இதனை செய்தியாக மட்டும் வெளியிட்டன. இருந்தும் நாடெங்கும் பரபரப்பு ஏற்பட் டது. கலவரக்காரர்களை சுட உத்தரவிடப் பட்டதாக உள்துறை அமைச்சர் அறிவித் தும் கூட வன்முறை ஓயவில்லை.

குழந்தைகளையும் பெண்களையும் உயிரோடு கொளுத்திக் கொன்ற செயல் நாடெங்கும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.

குழந்தைகளைக் கூட கொலை செய்யும், பெண்களைக் கூட தீயிட்டு கொல்லும் இரக்கமற்ற மிருகத்தனத்தை பல்வேறு இயக்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. சட்டத்தை கையி லெடுத்து காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளும் மனித குல விரோதி சக்திகளை வேட்டையாட விட்டு வேடிக்கை பார்த்த ஒரிசா மாநில அரசையும் மத்திய அரசையும் வன்மை யாகக் கண்டிப்பதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பொதுச் செயலாளர் நுஸ்ரத் அலி தெரிவித்தார். பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் போராட்டங் களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.

ஒரிசா மனித வேட்டையை எதிர்த்து உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் 16 ஆம் பெனடிக்ட் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். வன்முறைகள் இன்னும் தொடர்கின்றன.

பள்ளிகள், கல்லூரிகள் அடையாள வேலை நிறுத்தம் செய்து தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின் றன. ஆந்திராவில் ஒரிசா சம்பவத்தில் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு ஆறுதல் தெரிவித்து முஸ்லிம் கல்வி நிறுவனங் களும் கதவடைத்தன.

முஸ்லிம் கல்வி சமூக மற்றும் கலாச் சார அமைப்பு, சிறுபான்மை மேம்பாட்டு அமைப்பு, தமீரெ மில்லத், அமாரத் மில்லத் இஸ்லாமியா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் ஒருநாள் வேலை நிறுத்தத்தினை அறிவித்தன.

இன்னமும் ஒரிசாவில் புதுப்புது சாம்பல் மேடுகள் முளைத்து வருவதாக வேதனை தகவல்கள் வேலைக்கொன் றாய் வந்து கொண்டிருக்கின்றன.

ஒரிசாவில் கிளம்பும் தீ ஜுவலை இந்தியாவின் மதசார்பின்மை(!) பெருமைப் பற்றி உரக்க ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
 
 
source=tmmk.info
 

1 பின்னூட்டம்

Filed under அல்லா, அல்லாஹ், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், குரான், பெண்கள், முகமது, முஸ்லீம்

பல விதமான அரபி குர்‍ஆன்கள்

பல விதமான அரபி குர்‍ஆன்கள்

(THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN)

(இக்கட்டுரையின் முந்தைய பெயர் "குர்‍ஆனை ஓதும் ஏழு விதங்கள்")

ஆசிரியர்: சாமுவேல் கிரீன்

நான் சந்தித்துள்ள முஸ்லீம்களில் பெரும்பான்மையானவர்கள் குர்‍ஆன் பற்றி மிகவும் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். இதுவரையிலும் பொதுவாக முஸ்லீம்கள் என்னிடம் சொல்லியுள்ள‌ ஒரு விவரம் என்னவென்றால், உலகத்தில் உள்ள அனைத்துக் குர்‍ஆன்களும் ஒன்று போலவே இருக்கின்றது(Identical) என்பதாகும். குர்‍ஆன் மட்டும் தான் முழுவதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளது, மற்றும் எந்த ஒரு மாறுதலும் குர்‍ஆனில் இல்லை என்று முஸ்லீம்கள் பெருமைப்படுவார்கள். குர்‍ஆன் பற்றி ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்த்தால், இப்படி சொல்வதின் மூலமாக, பைபிளின் தனித்தன்மையை தாக்கி, குர்‍ஆன் தான் பைபிளை விட உயர்ந்தது என்று காட்டுவதற்கு இவர்கள் எடுக்கும் முயற்சி தான் இது என்பது புலனாகும். ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மையாக எல்லாரும் பயன்படுத்தும் ஒரு இஸ்லாமிய பதிப்பின் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது, அதனை கவனிக்கவும்.

உலகத்தில் எந்த புத்தகமும் குர்‍ஆனுக்கு ஈடாக முடியாது… அல்லாவின் இந்த புத்தகம் பற்றிய ஒரு ஆச்சரியமான விவரம் என்னவென்றால், கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக குர்‍ஆன் மாறாமல் அப்படியே உள்ளது, அதுவும் ஒரு சின்ன எழுத்தின் ஒரு புள்ளி கூட(even to a dot) மாறவில்லை. … குர்‍ஆனின் வசனங்களில் எந்த ஒரு எழுத்து மாற்றத்தையும்(No variation of Text) நாம் காணமுடியாது. இதனை நீங்களே சோதித்துப்பாருங்கள், அதாவது உலகத்தின் பல பாகங்களில் உள்ள முஸ்லீம்கள் ஓதும் குர்‍ஆன் வசனங்களை கேட்டுப் பாருங்கள், சோதித்துப்பாருங்கள். (Basic Principles of Islam, Abu Dhabi, UAE: The Zayed Bin Sultan Al Nahayan Charitable & Humanitarian Foundation, 1996, p. 4, bold added)

மேலே படித்த விவரங்களின் வாதம் என்னவென்றால், உலகத்தில் இப்போது இருக்கும் குர்‍ஆன்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கிறதாம், அவைகளில் "எந்த ஒரு எழுத்து வித்தியாசத்தையும் காணமுடியாதாம் – No variation of text can be found". மட்டுமல்ல, அந்த பதிப்பின் ஆசிரியர், ஒரு சவாலையும் முன்வைக்கிறார் "இதனை நீங்களே சோதித்துப்பாருங்கள், அதாவது உலகத்தின் பல பாகங்களில் உள்ள முஸ்லீம்கள் ஓதும் குர்‍ஆன் வசனங்களை கேட்டுப் பாருங்கள், சோதித்துப்பாருங்கள் ". இந்த சிறிய கட்டுரையில் நாம் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு, உண்மையில் எல்லா குர்‍ஆன்களும் ஒரே மாதிரியாக இருக்கின்றதா என்பதை சோதித்து பார்க்கப் போகிறோம்.

தேவனுக்குச் சித்தமானால், இந்த ஆராய்ச்சியை நாம் மூன்று பாகங்களாக பிரித்து பார்க்கப் போகிறோம்:

  1. முதலில் சுருக்கமாக, குர்‍ஆனை எப்படி படிக்க(ஓத‌)வேண்டும் என்பதைப் பற்றிய பின்னனியை கவனிக்கப்போகிறோம்.
  2. பிறகு, உலகத்தில் பல பாகங்களில் இருக்கும் இரண்டு அரபி குர்‍ஆன்களை ஒப்பிட்டு ஆராயப்போகிறோம்.
  3. கடைசியாக‌, ஒரு குறிப்பிட்ட அரபிக் குர்‍ஆன் பக்கங்களின் ஓரங்களில்(Margin) "மாறுபட்ட விதத்தில் படிக்கும் படி உள்ள – Variant Readings" விவரங்களைக் காணப்போகிறோம்.

நம்முடைய ஆராய்ச்சியின் துவக்கமாக, அரபிமொழியின் அறிஞரும் குர்‍ஆனை மொழியாக்கம் செய்தவருமான திரு N. J. தாவுத் அவர்கள் தங்கள் மொழியாக்கத்தின் துவக்கத்தில் கொடுத்த முன்னுரையை படிப்போம். அவர் எழுதுகிறார்:

"… முதன் முதலில் குர்‍ஆன் எழுதப்பட்ட கியூஃபிக் எழுத்து வடிவத்தில்(Kufic Script), உயிரெழுத்து சம்மந்தப்பட்ட விவரங்கள் அல்லது உயிரெழுத்து குறியீடுகள் இல்லை என்பதால், வெவ்வேறு விதத்தில் குர்‍ஆனை படிக்கும்(ஓதும்) முறை முஸ்லீம்களால் அதிகார பூர்வமானதாக கருதப்படுகிறது".

… owing to the fact that the kufic script in which the Koran was originally written contained no indication of vowels or diacritical points, variant readings are recognized by Muslims as of equal authority. (N.J. Dawood, The Koran, Middlesex, England: Penguin Books, 1983, p. 10, bold added)

இந்த அரபி அறிஞரின் கருத்துப்படி, குர்‍ஆனை பல விதங்களில் படிக்கலாம் (Varient Readings) என்பதை அறியமுடிகிறது. ஆனால், இப்படி வித்தியாசமாக படிப்பது என்றால் என்ன? இந்த கேள்விக்கு பதில் நாம் கொடுப்பதற்கு முன்பாக, குர்‍ஆன் நமக்கு "ஓதுபவர்கள்– The Readers" என்ற மனிதர்கள் மூலமாக கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை நாம் உணரவேண்டும். இவர்கள் இஸ்லாமின் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற குர்‍ஆனை ஓதுபவர்கள் (Famous Reciters) என்று கருதப்பட்டவர்களாவார்கள். இந்த "குர்‍ஆனை ஓதுபவர்கள் " ஒவ்வொருவரும் எந்த வகையில், எப்படி வாசித்தார்கள் என்பதை எழுத்து வடிவில் பதிவு செய்து எழுதிவைத்தவர்களை நாம் “செய்தியை கடத்துபவர்கள் (Transmitters)” என்கிறோம். இவர்கள் உருவாக்கிய செய்தி தான் குர்‍ஆன் ஆகும்(The text made by a Transmitter is called a "transmission" of the Qur'an). ஆக, ஒவ்வொரு அதிகாரபூர்வமான "குர்‍ஆன் ஓதுபவரும்" ஒரு குர்‍ஆனை நமக்கு கொடுத்துள்ளார். தற்கால குர்‍ஆன்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு "குர்‍ஆன் ஓதுபவரின்" முறைப்படி உருவாக்கப்பட்டு இருக்கும். இந்த முறையில் நமக்கு கிடைத்த "ஓதும் முறைப்படித்தான்" நீங்கள் குர்‍ஆனை படிக்கமுடியும். இவ்விதமாக கிடைக்கப்பெற்ற ஒவ்வொரு "ஓதும் முறையிலும்" ஹதீஸ்கள் போல, செய்தியை அறிவித்தவர்கள் என்ற சங்கிலித் தொடர் உண்டு. இந்த சங்கிலித் தொடர்களில் சில பலவீனமான சங்கிலித் தொடர்கள் உண்டு, சில வலுவான சங்கிலித் தொடர்களும் உண்டு. நம்முடைய ஆராய்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் ஒரு விவரம் என்னவென்றால், உலகமனைத்திலும் இப்போது பலவிதமான "குர்‍ஆன் ஓதும் முறையை" பின்பற்றி குர்‍ஆன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நான் மேலே சொன்ன விவரங்களை இன்னும் சிறிது விவரமாக கீழ் கண்ட விதமாக ஒரு இஸ்லாமிய அறிஞர் விவரிக்கிறார்:

குர்‍ஆனை வெவ்வேறு விதமாக படித்தல் என்பது இருந்தது மற்றும் அது தொடர்ந்து வந்தது மற்றும் குர்‍ஆனை மனப்பாடம் செய்த நபித்தோழர்கள் மரித்த பிறகு இவ்விதமாக வித்தியாசமாக படிப்பது அதிகரித்தது. ஏன் இப்படி என்று பார்த்தால், அடிப்படை அரபி மொழியின் எழுத்துக்களில் உயிர் எழுத்து இல்லாமல் இருந்தது மற்றும் குறிப்பிட்ட மெய் எழுத்துக்களில் உள்ள வித்தியாசத்தை காட்டும் குறியீடுகளும் இல்லாமல் இருந்தது. சிலவேளைகளில் குறியீடுகள் சில இருந்தாலும் அது போதுமானதாக இல்லை. … நான்காவது இஸ்லாமிய நூற்றாண்டில், குர்‍ஆன் வாசிப்பதில் உள்ள வித்தியாசத்தை நீக்கி, பழைய படி கொண்டுவர, ஏழு அதிகார பூர்வமான குர்‍ஆனை வாசிப்பவர்களின் அடிப்படையில்("readers" (qurra')), முடிவு செய்யப்பட்டது; இந்த வேலை பிழையில்லாமல் நடப்பதற்கு, இரண்டு டிரான்ஸ்மிட்டர்களை –Transmitters (rawi, pl. ruwah) அடிப்படையாக கொண்டனர். ஆக, ஏழு விதமாக குர்‍ஆனை ஓதும் முறையை(al-qira'at as-sab', "the seven readings") அடிப்படையாகக் கொண்டு, இரண்டு டிரான்ஸ்மிட்டர்களின்(riwayatan) விவரங்களோடு வேலை ஆரம்பிக்கப்பட்டது. இதன் பயனாக ஒரு சில சின்ன சின்ன வித்தியாசங்கள் வரிகளில் இருந்தது, மிகவும் அதிக எச்சரிக்கையாக உயிரெழுத்துக்கள் மற்றும் இதர சப்தவித்தியாசம் உண்டாக்கும் புள்ளிகள் வைக்கப்பட்டது… அதிகார பூர்வமாக "குர்‍ஆனை ஓதுபவர்களின் பட்டியல் இப்படியாக உள்ளது".

நஃபி (மதினாவிலிருந்து; காலம் 169/785)
இபின் கதிர் (மக்காவிலிருந்து; காலம் 119/737)
அபூ அமர் அல் அலா (டமாஸ்கஸ்ஸிலிருந்து; காலம் 153/770)
இபின் அமர் (பஸ்ராவிலிருந்து; காலம் 118/736)
ஹம்ஜா (குஃபாவிலிருந்து; காலம் 156/772)
அல் கிசய் (குஃபாவிலிருந்து; காலம் 189/804)
அபூ பக்கர் அசிம் (குஃபாவிலிருந்து; காலம் 158/778)

(Cyril Glassé, The Concise Encyclopedia of Islam, San Francisco: Harper & Row, 1989, p. 324, bold added)

மேலே குறிப்பிட்டவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் பல ஓதூபவர்கள் (Readers) மற்றும் எப்படி ஓதவேண்டும் என்று நம்மிடம் சேர்த்தவர்கள் (Transmitters) இருக்கிறார்கள். கீழே தரப்பட்டுள்ள பட்டியலில், பொதுவாக எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓதூபவர்கள்(Readers) மற்றும் அவர்களது Transmistters பதிப்பு மற்றும் அவைகள் தற்போது எந்த நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்குகிறது.

The Reader The Transmitter Current Area of Use
"குர்‍ஆனின் ஏழு வாசிப்பு(ஓதும்) முறை"

நஃபி

The Qur'an according  to the Warsh transmissionவர்ஷ்

அல்ஜீரியா,மொராக்கோ,டுனிசியாவின் சில பகுதிகள்,மேற்கு ஆப்ரிக்கா,மற்றும் சூடான்.

The Qur'an according  to the Qalun transmissionகலுன்

லிபியா,டுனிசியா மற்றும் கத்தரின் சில பாகங்கள்.

இபின் கதிர்

அல் பஜ்ஜி

குன்புல்

அபூ அமர் அல்-அலா

The Qur'an according  to the al-Duri transmissionஅல்துரி

சூடானின் சில பாகங்கள்,மற்றும் மேற்கு ஆப்ரிக்கா.

அல்சுரி

இபின் அமிர்

ஹிஷம்

யெமன் நாட்டின் சில பகுதிகள்

இபின் தக்வான்

ஹம்ஜா

கலஃப்

கல்லத்

அல்கிசய்

அல்துரி

அபுல் ஹரித்

அபூ பக்கர் அசிம்

The Qur'an according  to the Hafs transmissionஹஃப்ஸ்

உலக‌ முஸ்லீம்கள் பொதுவாக பயன்படுத்துகிறார்கள்

இபின் அய்யஷ்

"குர்‍ஆனின் மூன்று வாசிப்பு முறை"

அபூ ஜப்பர்

இபின் வர்தன்

இபின் ஜமஜ்

யாகூப் அல்- ஹஸிமி

ருவய்ஸ்

ரவ்

கலஃப் அல்- பஜ்ஜர்

இஷாக்

இத்ரிஷ் அல் ஹட்டட்

Abu Ammaar Yasir Qadhi, An Introduction to the Sciences of the Qur'aan, United Kingdom: Al-Hidaayah, 1999, p. 199.

மேலே உள்ள விவரங்கள் நமக்கு, குர்‍ஆன் பல்வேறு மனிதர்களின் பதிப்புக்கள்(Transmitted Version) மூலமாக நமக்கு கிடைத்துள்ளது என்பதை விளக்குகிறது. மேலே உள்ள பதிப்புக்கள் (Versions) மட்டுமல்லாமல், இன்னும் பல பதிப்புக்கள்(Versions) உள்ளன, ஆனால், அவைகள் அதிகாரபூர்வமானதாக கருதப்படுவதில்லை. இந்த பல்வேறு பதிப்புக்கள் பலவகைகளில் மதிப்பிடப்படுகிறது, அதாவது, எப்படி ஹதீஸ்கள் மதிப்பிடப்படுகிறதோ அதுபோல இவைகளும் பலவீனமான பதிப்பு அல்லது பலமான பதிப்பு என்று மதிப்பிடப்படுகிறது. இந்த மேலே உள்ள பட்டியலில் உள்ள அனைத்து குர்‍ஆன்களும் அச்சடித்து பயன்படுத்தப்படுவதில்லை, ஆனால், பலவற்றை மட்டும் அச்சடித்து மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

இந்த விவரங்கள் அனைத்தையும் முதன் முதலில் நீங்கள் படிக்கும்போது, சிறிது குழப்பமாக உங்களுக்கு இருக்கலாம். இப்படி உங்களுக்கு குழப்பமாக இருந்தால், கவலைப்படவேண்டாம்; இது எல்லாருக்கும் பொதுவாக வரும் குழப்பம் தான். இந்த விவரங்கள் சுலபமாக புரியவேண்டும் என்பதற்காக, இப்போது உலகத்தில் அச்சடித்து மக்கள் பயன்படுத்தும் இரண்டு விதமான குர்‍ஆன் பதிப்புக்களை நாம் பார்க்கப்போகிறோம். இந்த இரண்டு குர்‍ஆன்களையும் நாம் ஒப்பிட்டு, இவை இரண்டும் ஒன்று போல மற்றொன்று இருக்கின்றனதா என்பதை பார்க்கப்போகிறோம். இக்கட்டுரையின் ஆரம்பத்தில் முஸ்லீம்கள் முன்வைக்கும் வாதங்களை நாம் குறிப்பிட்டு இருந்தோம், அது உண்மையா என்பதை பார்க்கப்போகிறோம். கீழே இட‌து ப‌க்க‌த்தில் இருக்கும் குர்‍ஆன் பொதுமாக‌ ம‌க்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தும் குர்‍ஆன் ஆகும், இது "Hafs Transmission" ஹஃப்ஸ் டிரான்ஸ்மிஷ‌ம் முறையில் வந்த ப‌திப்பாகும். வ‌ல‌து ப‌க்க‌த்தில் இருக்கும் குர்‍ஆன் “Warsh Transmission” வ‌ர்ஷ் டிரான்ஸ்மிஷ‌ம் முறையில் வ‌ந்த‌ ப‌திப்பாகும். இந்த‌ குர்‍ஆன் முக்கிய‌மாக‌ வ‌ட‌ ஆஃப்ரிக்காவில் ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌னர்.

இந்த இரண்டு குர்‍ஆன்களையும் நீங்கள் ஒப்பிடும் போது, இவைகள் இரண்டும் ஒன்று போல மற்றொன்று இல்லை என்பது கண்கூடாக காணும் உண்மையாகும். இந்த இரண்டு குர்‍ஆன்களுக்கும் இடையில் மூன்று விதமான வித்தியாசங்கள் உள்ளன.

The Qur'an according  to the Hafs transmission

1. அடிப்படை எழுத்துவடிவ வித்தியாசங்கள்(Graphical/Basic letter differences)

2. வெவ்வேறு சப்த புள்ளி எழுத்துக்களின் வித்தியாசங்கள்(Diacritical differences)

3. உயிர் எழுத்து வித்தியாசங்கள்(Vowel differences)

The Qur'an according  to the Warsh transmission

இந்த மேலே குறிப்பிட்ட வித்தியாசங்கள் பற்றி சில எடுத்துக் காட்டுக்களைக் காணலாம். கீழே தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள், ஒரே வார்த்தை மற்றும் ஒரே வசனத்திலிருந்து எடுத்ததாகும். இருந்தாலும், இரண்டு குர்‍ஆன்களிலும் சில நேரங்களில் வசன எண் மட்டும் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும். இப்படி ஏன் வசன எண் மாறுபடுகிறது என்றால், இந்த இரண்டு குர்‍ஆன்களிலும் வசனத்திற்கு எண்கள் கொடுக்கும் முறை வித்தியாசமாக இருப்பதினால், மாறுபடுகிறது. ஆக, ஹஃப்ஸ் குர்‍ஆனில்(Hafs Quran) சூரா 2:132 வசனமானது, வர்ஷ் குர்‍ஆனில்(Warsh Quran) சூரா 2:131 வசனமாக இருக்கிறது.

அடிப்படை எழுத்துவடிவ வித்தியாசங்கள் GRAPHICAL/BASIC LETTER DIFFERENCES: இந்த இரண்டு குர்‍ஆன்களின் எழுத்துக்களின் வடிவத்தில் வித்தியாசங்கள் உள்ளன. இந்த எழுத்து வித்தியாசத்திற்காகத் தான் உத்மான் அவர்கள் குர்‍ஆனுக்கு ஒரு அதிகாரபூர்வமான பிரதியை உண்டாக்கினார் (It was these letters that Uthman standardized in his recension of the Qur'an [1]).

இமாம் ஹஃப்ஸ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM HAFS

இமாம் வர்ஷ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM WARSH


சூரா 2:132 (wawassaa)


சூரா 2:131 (wa'awsaa)


சூரா 91:15 (wa laa yakhaafu)


சூரா 91:15 (fa laa yakhaafu)


சூரா 2:132 (himu)


சூரா 2:131 (hiimu)


சூரா 3:133 (wasaari'uu)


சூரா 3:133 (saari'uu)


சூரா 5:54 (yartadda)


சூரா 5:56 (yartadid)

மேலே உள்ள எடுத்துக்காட்டுக்கள், இந்த இரண்டு குர்‍ஆன்களின் அடிப்படை எழுத்துக்களில் வித்தியாசம் உள்ளது என்பதை காட்டுகின்றது.

வெவ்வேறு சப்த புள்ளி எழுத்துக்களின் வித்தியாசங்கள் (Diacritical differences): அரபியில் சில எழுத்துக்கள் ஒரே மாதிரியாக இருக்கும், இந்த வித எழுத்துக்களில் சில புள்ளிகளை இட்டால், வித்தியாசமான உச்சரிப்பை உண்டாக்கலாம். உதாரணத்திற்கு, அடிப்படை உருப்பாகிய இந்த குறியீட்டை ஐந்து வித்தியாசமான எழுத்துக்களாக மாற்றலாம். அதாவது அரபி மொழியில் இந்த எழுத்தில் எந்த இடத்தில் புள்ளிகள் வைக்கப்படுமோ அதன் படி இதன் எழுத்தும் சப்தமும் மாறும். மேலே குறிப்பிட்ட அந்த குறீயீட்டுக்கு புள்ளிகள் வைக்கும் போது, கீழ் கண்ட ஐந்து எழுத்துக்கள் உருவாகும்:

baa', taa', thaa', nuun, yaa'.

இருந்தபோதிலும், இந்த புள்ளிகள் வைத்து எழுதுவது என்பது, அரபி மொழியில் ஏற்பட்ட பிந்தைய வளர்ச்சி அல்லது மாறுதல் ஆகும். உத்மான் அவர்கள் குர்‍ஆனை ஒரு அதிகார பூர்வமான பிரதியாக அறிவித்த காலத்தில் இருந்த அரபி மொழி எழுத்துக்களுக்கு இந்த புள்ளி வைப்பது என்பது இல்லாமல் இருந்தது. ஆக, உத்மான் அவர்களின் "அதிகார பூர்வமான குர்‍ஆன் பிரதியில்" இருக்கும் குர்‍ஆன் வசனங்களுக்கு இந்த புள்ளிகள் இல்லை, மற்றும் ஒவ்வொரு எழுத்தையும், எப்படி உச்சரிக்கவேண்டும் என்கின்ற விவரம் அதில் இல்லை. எனவே, அந்த குர்‍ஆனில் இருக்கும் வசனங்களை பல விதங்களில் படிக்கமுடியும், மற்றும் சில இடங்களில் குழப்பமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

குர்‍ஆனை வித்தியாசமாக படிப்பவர்கள்(Readers) இருந்தார்கள், இவர்கள் குர்‍ஆனை எப்படி உச்சரிக்கவேண்டும் என்று சொன்னார்கள், ஆனாலும், இன்னும் புள்ளிகள் வைத்து சரியாக உச்சரிப்பது அந்த நேரத்திலும் பயன்பாட்டில் இல்லை. நாம் இப்போது ஆராய்ந்துக்கொண்டு இருக்கும் இரண்டு குர்‍ஆன்களும் இரண்டு வித்தியாசமான ரீடர்கள் மூலமாக வந்த குர்‍ஆன்கள், இவர்களுகென்று தனியாக வாய்வழி பாரம்பரியமும்(Oral Tradition) உண்டு. இந்த பாரம்பரியங்கள் தங்களுக்கென்று வெவ்வேறான வழிமுறையை வகுத்துள்ளனர், அதாவது, எந்த இடத்தில் புள்ளிகள் வைக்கவேண்டும், எந்த இடத்தில் வைக்கக்கூடாது என்று. இந்த இரண்டு குர்‍ஆன்களுக்கு இடையிலும் இன்னொரு வித்தியாசத்தை நாம் காணமுடியும், அதாவது, இவைகளின் வசனங்களில் ஒரே இடத்தில் இரு குர்‍ஆன்களிலும் அந்த புள்ளிகள் வைக்கப்படவில்லை. இந்த இரண்டு குர்‍ஆன்களிலும், ஒரே வார்த்தைக்கு வித்தியாசமான இடத்தில் புள்ளிகள் வைத்துள்ளார்கள், அதனால், எழுத்துக்கள் வித்தியாசமாக உச்சரிக்கப்படுகின்றன (இந்த இரண்டு குர்‍ஆன்களிலும் வசனங்களுக்கு எண்கள் கொடுப்பது வித்தியாசமாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்)

இமாம் ஹஃப்ஸ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM HAFS

இமாம் வர்ஷ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM WARSH


சூரா 2:140 (taquluna)


சூரா 2:139 (yaquluna)


சூரா 3:81 (ataytukum)


சூரா 3:80 (ataynakum)


சூரா 2:259 (nunshizuhaa)


சூரா 2:258 (nunshiruhaa)

மேலே நாம் பார்த்த எடுத்துக்காட்டுகளில், இரண்டு குர்‍ஆன்களிலும் பல புள்ளிகள் பல இடங்களில் வித்தியாசமாக வைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் பார்க்கலாம். இவை இரண்டிற்கும் வாய் வழி பாரம்பரியம்(Oral Tradition) வெவ்வேறாக இருக்கிறது.

உயிர் எழுத்துக்களில் வித்தியாசங்கள்(VOWEL DIFFERENCES): தற்காலத்தில் நாம் காணும் அரபி மொழி குர்‍ஆனில், உயிர் எழுத்துக்களை குறிப்பதற்கு சிறிய குறியீடுகளை அடிப்படை எழுத்துக்களின் மீதும், அல்லது கீழேயும் கொடுத்துள்ளனர். நாம் மேலே பார்த்த புள்ளிகளைப் போல(Diacritical Dots) இந்த உயிர் எழுத்து குறீயீடுகளும், அரபி மொழியில் பின்னாலில் ஏற்பட்ட வளர்ச்சியாகும். இந்த உயிரெழுத்து குறியீடுகளும், உத்மான் அவர்கள் அதிகாரபூரவமான குர்‍ஆன் பிரதியை உண்டாக்கும் போது, அரபி மொழியில் இல்லாமல் இருந்தது. ஆக, உத்மான் அவர்களின் குர்‍ஆன் பிரதியில் இந்த உயிர் எழுத்துக்களும் இல்லாமல் இருந்தது. நாம் இப்போது ஆய்வு செய்துக்கொண்டு இருக்கும் இந்த இரண்டு குர்‍ஆன்களிலும், பல இடங்களில் ஒரே வார்த்தைக்கு ஒரே உயிரெழுத்து இல்லாமல் இருக்கிறது, அவைகள் வித்தியாசமாக இருக்கின்றன. இந்த இரண்டு குர்‍ஆன்களின் உயிர் எழுத்துக்களில் எவ்வளவு வித்தியாசங்கள் உள்ளது என்பதை நீங்களே கவனித்துப் பாருங்கள்.

இமாம் ஹஃப்ஸ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM HAFS

இமாம் வர்ஷ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM WARSH


சூரா 2:214 (yaquula)


சூரா 2:212 (yaquulu)


சூரா 2:10 (yakdhibuuna)


சூரா 2:9 (yukadhdhibuuna)


சூரா 2:184 (ta'aamu miskiinin)


சூரா 2:183 (ta'aami masakiina)


சூரா 28:48 (sihraani)


சூரா 28:48 (saahiraani)

சில முஸ்லீம்கள் இவ்விதமாக வாதம் புரிவார்கள், அதாவது, இந்த புள்ளிகளின் மாற்றங்கள், மற்றும் உயிர் எழுத்து குறீயிடுகளில் உள்ள வித்தியாசங்கள் என்பது உத்மான் அவர்களின் குர்‍ஆன் பிரதியில் உள்ள குழப்பங்கள் அல்ல, அதற்கு பதிலாக, இப்படி குர்‍ஆனை வித்தியாசமாக படிப்பது என்பது, "அங்கீகரிக்கப்பட்ட குர்‍ஆனை படிக்கும் விதங்களாகும் – accepted variants" என்பார்கள். இதன்படி பார்த்தால், குர்‍ஆன் படிக்கும் முறை ஒன்று அல்ல, அதற்கு பதிலாக ஒவ்வொருவரும் வித்தியாசமாக தங்கள் வாய்வழி பாரம்பரியத்தின் படி பல வகைகளில் குர்‍ஆனை படிக்கிறார்கள் என்பது உண்மை. அதனால் தான் சொல்கிறேன், குர்‍ஆனுக்கு ஒரு "அதிகார பூர்வமான ஒரு பதிப்பு இல்லை" இதற்கு பதிலாக பல பதிப்புக்கள் உள்ளன. முஸ்லீம்களில் சிலர் இதனை மறுத்தாலும், குர்‍ஆனை படிப்பதற்கு ஒரே ஒரு முறை தான் உண்டு, ஆனால், இந்த வெவ்வேறாக குர்‍ஆனை படிப்பது என்பது ரீடர்கள் மூலமாக வந்தது என்பார்கள்[2]. இந்த கேள்விக்கு பலவிதமான பதில்கள் சொன்னாலும், ஒன்று மட்டும் பதில் அளிக்கமுடியாமல் அப்படியே உள்ளது, அதாவது, நாம் இப்போது பார்த்துக்கொண்டு இருக்கும் இரண்டு குர்‍ஆன்களுக்கும் இடையே உண்மையிலேயே பல வித்தியாசங்கள் உள்ளன. அடிப்ப‌டை எழுத்துக்க‌ளில், சப்த வித்தியாசத்திற்காக வைக்கப்படும் புள்ளிகளில், மற்றும் உயிரெழுத்துக்களில் வித்தியாச‌ங்க‌ள் உள்ள‌ன‌. இந்த‌ வித்தியாச‌ங்க‌ள் மிக‌வும் சிறிய‌தாக‌ இருந்தாலும், அவைக‌ள் வ‌ச‌ன‌ங்க‌ளின் பொருளை/அர்த்தத்தை மாற்றிவிடும் அபாய‌ம் உள்ள‌து.

இந்த விவரங்கள் குறித்து நான் செய்த ஆய்வை விட மிகவும் தீர்க்கமாக ஆய்வு செய்த ஒரு அறிஞரின் சொற்களை நான் கீழே தருகிறேன். இந்த அறிஞரும் இரண்டு குர்‍ஆன்களை(two of the many transmissions) மட்டுமே ஒப்பிட்டுள்ளார் என்பதை கருத்தில் கொள்ளவும்.

இந்த‌ இர‌ண்டு குர்‍ஆன்க‌ளுக்கு(transmissions) இடையே இருக்கும் வித்தியாச‌ங்களின் பட்டியல் மிக‌வும் அதிக‌ எண்ணிக்கையில் இருக்கின்ற‌து. … (இருந்தாலும்) இந்த‌ வித்தியாச‌ங்க‌ளாகிய ஒலி வடிவ வித்தியாசங்கள் (உயிரெழுத்து, ம‌ற்றும் சப்த மாற்று புள்ளிக‌ள் வைத்த‌ல்) அல்லது அடிப்படை எழுத்து வித்தியாசங்களாகிய இவைகள், இமாம் ஹஃப்ஸ் மற்றும் இமாம் வர்ஷ் மூலமாக கிடைத்த குர்‍ஆன்களில் இருக்கும் இவைகளால் அதிகமாக ஒன்றும் பாதிப்பு இல்லை. இவைகளில் பல வித்தியாசங்கள் வசனத்தின் பொருளை மாற்றுவதில்லை, அதே போல மீதமுள்ள வித்தியாசங்கள் அந்த வசனம் சொல்லப்பட்ட இடத்தில் சிலவற்றின் மீது பாதிப்பை உண்டாக்கும், ஆனால், இந்த பாதிப்பு முஸ்லீம்களின் எண்ணங்களை மாற்றி அமைக்கும் அளவிற்கு வித்தியாசத்தை கொடுத்து விடுவதில்லை. ஒரு வித்தியாசம் மட்டும் தான் (குர்‍ஆன் 2/184) வசனத்தின் பொருளை அதிகமாக பாதிக்கக் கூடியதாக இருக்கிறது-One difference (Q. 2/184) has an effect on the meaning that might conceivably be argued to have wider ramifications.. (Adrian Brockett, `The Value of the Hafs and Warsh transmissions for the Textual History of the Qur'an', Approaches to the History of the Interpretation of the Qur'an, ed. Andrew Rippin; Oxford: Clarendon Press, 1988, pp. 34 & 37, bold added)

நாம் நம் ஆய்விற்காக இரண்டு குர்‍ஆன்களை மட்டுமே எடுத்துக்கொண்டோம். ஆனால், இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் படித்தவண்ணமாக, பல குர்‍ஆன் டிரான்ஸ்மிஷன்கள் உள்ளது, அவைகளிலும் நாம் வித்தியாசங்களை கண்டுக்கொள்ளமுடியும். நாம் அடுத்து பார்க்கப் போகின்ற புத்தகம் அதைத் தான் செய்துள்ளது. இதுவும் ஒரு குர்‍ஆன் தான், இதில் அதிகார பூர்வமான வித்தியாசமான 10 ரீடர்கள்/டிரான்ஸ்மிஷன்(The Ten Accepted Readers/Transmissions) மூலமாக உள்ள விவரங்களை பட்டியல் இட்டு தரப்பட்டுள்ளது.

Translation

Making Easy the Readings of What Has Been Sent Down

Author
Muhammad Fahd Khaaruun
The Collector of the 10 Readings
From al-Shaatebeiah and al-Dorraah and al-Taiabah

Revised by
Muhammad Kareem Ragheh
The Chief Reader of Damascus

Daar al-Beirut

இந்த புத்தகத்தின் பதிப்புரிமை பக்கம் கீழ்கண்டவாறு சொல்கிறது

Copyright is for the publisher.
First Print
1420 – 1999

Can be acquired from Daar al-Beirut Bookshop.
Halabouny, Damascus, Ph: 221 3966
PO Box 25414

(இந்த குர்‍ஆன் மிகப் பெரிய மத்திய கிழக்கு பதிப்பாளர் மூலமாக வெளியிடப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால், எந்த ஒரு இஸ்லாமிய புத்தக கடைக்காரர்களும் உங்களுக்காக பெற்றுத் தரமுடியும்)

இந்த குர்‍ஆன் பதிப்பில், முஹம்மத் பஹ் காரூன் அவர்கள் 10 விதமான வித்தியாசமான அங்கீகரிக்கப்பட்ட பதிப்புக்கள்(Ten Accepted Readers) கொண்ட விவரங்களை தொகுத்து, குர்‍ஆன்(Hafs' transmission) பக்கங்களில் ஓரப்பகுதியில்(margin) சேர்த்து பதித்துள்ளார். இந்த‌ வித்தியாச‌ ப‌திப்புக்க‌ள் அனைத்தும் தெரிந்த‌ வேறுபாடுக‌ள் அல்ல‌. இந்த‌ புத்த‌க‌த்தின் ஆசிரிய‌ர், 10 வெவ்வேறான‌ ப‌திப்புக்க‌ளை ம‌ட்டுமே ப‌தித்துள்ளார், ம‌ற்ற மாற்ற‌ங்க‌ளை விட்டுவிட்டுள்ளார். இந்த‌ புத்த‌க‌த்தின் த‌லைப்பு சொல்லும் வ‌ண்ண‌மாக‌, வித்தியாசமான குர்‍ஆன்களின் வசனங்களை எப்ப‌டி ப‌டிப்ப‌து என்ப‌தை சுல‌ப‌மாக்கிக் கொடுத்துள்ளது, அவைகளை குர்‍ஆன் வசனங்கள் இருக்கும் பக்கங்களின் ஓரங்களில் தெளிவாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த குர்‍ஆனிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பக்கத்தை கீழே காணலாம். இந்த பக்கத்தில் வித்தியாசமான படிக்கவேண்டிய வசனங்களை பக்கத்தின் ஓரங்களில் கொடுக்கப்பட்டு இருப்பதை நீங்கள் காணலாம். குர்‍ஆனின் மூன்றில் இரண்டு பாகத்தில், ஏதோ ஒரு வகையான வித்தியாசங்கள் இருக்கின்றன(About two thirds of the ayat (verses) of the Qur'an have some type of variant).

எனக்கு அடிக்கடி முஸ்லீம்கள் சொல்வார்கள், அதாவது பல குர்‍ஆன்களில் இருக்கும் இந்த வித்தியாசங்கள் வெறும் சப்தங்களில் இருக்கும் வித்தியாசமே(dialect or pronunciation) அன்று வேறில்லை என்பார்கள். ஆனால், உண்மையில் இது வெறும் சப்தங்களில் இருக்கும் வித்தியாசம் இல்லை. இதைப் பற்றி ஆய்வு செய்தவர் இஸ்லாமிய அறிஞராகிய சுபி அல்-சாலிஹ் என்பவராவார். அவர் இந்த வித்தியாசங்களை ஏழு வகைகளாக பிரிக்கிறார்[3].

1. இலக்கண குறியீடுகளில் இருக்கும் வித்தியாசங்கள்.

2. மெய் எழுத்துக்களில் இருக்கும் வித்தியாசங்கள்.

3. பெயர்ச் சொற்களில் இருக்கும் வித்தியாசங்கள், அதாவது அவைகள் ஒருமையா, இரட்டையா அல்லது பன்மையா, ஆண்பாலா அல்லது பெண்பாலா போன்றவைகளில் இருக்கும் வித்தியாசங்கள்.

4. ஒரு வார்த்தைக்கு பதிலாக இன்னொரு வார்த்தையை பயன்படுத்துமிடத்தில் இருக்கும் வித்தியாசங்கள்.

5. ஒரு வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளை இடம் மாற்றும் விதத்தில் உள்ள வித்தியாசங்கள். அரபி மொழியில் பொதுவாக இப்படி வார்த்தைகளை எதிரமறையான ஒழுங்கில் அமைப்பது உள்ளது.

6. அரபியர்களின் பழக்கவழக்கங்களினால், சில சிறிய எழுத்துக்களை கூட்டுதல் மற்றும் குறைத்தலில் உள்ள வித்தியாசங்கள்.

7. எழுத்துக்களில் வைக்கும் புள்ளிகளினால் மாறும் சப்தங்களில் உள்ள வித்தியாசங்கள்.

மேலே நாம் பார்த்த பட்டியல் வெறும் சப்தங்களில் வரும் வித்தியாசங்களைச் சொல்லவில்லை, அதற்கும் மேலே இன்னும் பல வித்தியாசங்கள் குர்‍ஆனில் இருப்பதை தெளிவாக காட்டுகிறது.

முடிவுரை: குர்‍ஆன் பற்றி ஒரு இஸ்லாமிய நிறுவனம் முன்வைத்த கீழ் கண்ட வாதத்தை மேற்கோள் காட்டி நாம் இந்த கட்டுரையை ஆரம்பித்தோம்:

உலகத்தில் எந்த புத்தகமும் குர்‍ஆனுக்கு ஈடாக முடியாது… இந்த அல்லாவின் புத்தகம் பற்றிய ஒரு ஆச்சரியமான விவரம் என்னவென்றால், கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக குர்‍ஆன் மாறாமல் அப்படியே உள்ளது, அதுவும் ஒரு சின்ன எழுத்தின் ஒரு புள்ளி கூட(even to a dot) மாறவில்லை. … குர்‍ஆனின் வசனங்களில் எந்த ஒரு எழுத்து மாற்றத்தையும்(No variation of Text) நாம் காணமுடியாது. இதனை நீங்களே சோதித்துப்பாருங்கள், அதாவது உலகத்தின் பல பாகங்களில் உள்ள முஸ்லீம்கள் படிக்கும் குர்‍ஆன் வசனங்களை கேட்டுப் பாருங்கள், சோதித்துப்பாருங்கள். (Basic Principles of Islam, Abu Dhabi, UAE: The Zayed Bin Sultan Al Nahayan Charitable & Humanitarian Foundation, 1996, p. 4, bold added)

நான் உலகத்தின் பல பாகங்களிலிருந்து குர்‍ஆன்களை வரவழைத்து, அவர்கள் சொல்வது போல உலகத்தில் இருக்கும் குர்‍ஆன்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கின்றதா? என்பதை என் சுயமாக பரிசோதித்துப் பார்த்தேன். என்னுடைய இந்த ஆய்வுவின் முடிவு என்னவென்றால், முஸ்லீம்களின் இந்த வாதம் தவறானது எனபது நிரூபனமாகி விட்டது. உலகத்தில் இருக்கும் குர்‍ஆன்களை அனைத்தும் ஒன்று போல மற்றொன்று இருக்கவில்லை என்பது உண்மை. அவைகளில் பல சிறிய வித்தியாசங்கள் அடிப்படை எழுத்துக்களிலும், சப்தங்களை மாற்றும் புள்ளிகளிலும் மற்றும் உயிரெழுத்துக்களிலும் உண்டு. உண்மையில் சொல்லப்போனால், பல குர்‍ஆன்களில் இந்த வித்தியாசங்களை தங்கள் பக்கங்களில் குறிப்பிட்டும் இருக்கின்றனர். இதன் பொருள் என்னவென்றால், உலகமைத்திலும் உள்ள குர்‍ஆன்களை முஸ்லீம்கள் ஒரே மாதிரியாக நிச்சயமாக ஓதுவது இல்லை என்பது தெளிவு. எனவே, இஸ்லாமிய அறிஞர்கள், தலைவர்கள் இனி குர்‍ஆன் பற்றி அளவிற்கு அதிகமாக இப்படி புகழ்வதை விட்டு விடவேண்டும். எனவே, குர்‍ஆனில் பல வித்தியாசமாக ஓதுவதும், எழுத்துக்களில் வேறுபாடுகளும் இருப்பதனால், குர்‍ஆன் ஒன்றும் பைபிளை விட உயர்ந்தது இல்லை.


பின் குறிப்புக்கள்:
[1] How and Why Uthman Standardized the Qur'an.
[2] The Origin of the Different Readings of the Qur'an.
[3] Subhii al-Saalih, Muhaahith fii `Ulum al-Qur'aan , Beirut: Daar al-`Ilm li al-Malaayiin, 1967, pp. 109ff.


இந்த தலைப்பு பற்றிய இதர கட்டுரைகள்: 

மூல குர்‍ஆன் சமர்கண்ட வுடன், இன்றைய அரபிக் குர்‍ஆன்  ஒரு ஒப்பீடு – பாகம் 1
Grammatical errors in the Hafs transmission of the Qur'an.
Sunan Abu-Dawud Book 30: Dialects and Readings of the Qur'an


ஆசிரியர் உங்கள் கருத்துக்களை அன்புடன் வரவேற்கிறார், தொடர்பு கொள்க:
Copyright © Samuel Green 2005.
சாமுவேல் கிரீன் அவர்களின் இதர கட்டுரைகள்
 

1 பின்னூட்டம்

Filed under அல்லா, அல்லாஹ், இஸ்லாம், கிறிஸ்தவம், குரான், முகமது, முஸ்லீம், Uncategorized

ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! – Quran or Qurans?!

ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! 

Quran or Qurans?!

இக்கட்டுரையை அரபியில் படிக்க: النسخة العربية  

 
இந்த கட்டுரைக்கான விவரங்கள் கீழ் கண்ட புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது:

The reading ways of Quran dictionary: (moa’agim alqera’at alqura’nia):

இது ஒரு அரபி மொழியில் எழுதப்பட்ட புத்தகம் மற்றும் இதனை இஸ்லாமிய அறிஞர்கள் எழுதினார்கள். குவைத் பல்கலைக்கழகம்(Kuwait University) இதனை 8 பாகங்களாக வெளியிட்டது. இதன் முதல் பதிப்பு 1982ம் ஆண்டு (அரபியில்) வெளியிடப்பட்டது, இதன் ஆசிரியர்கள்:

 

 
டாக்டர். அப்துல் அல் சலாம் மக்ரெம் (Dr. Abdal’al Salem Makrem)
டாக்டர். அஹமத் மொக்தார் ஒமர் (Dr. Ahmed Mokhtar Omar)

இவர்கள் இருவரும் குவைத் பல்கலைக் கழகத்தில் அரபி மொழி பேராசிரியர்களாக இருக்கிறார்கள்.
புத்தக பதிப்பாளர்: ஜத் அல்சலாசல்-குவைத் (Zat Alsalasel – Kuwait)
 
முன்னுரை:

உத்மான் இபின் அஃபான் காலம் வரைக்கும் பல குர்‍ஆன்கள் [massahif] எழுதப்பட்டது. இவர் இதர குர்‍ஆன்களை எரித்துவிட்டார் மற்றும் ஒரு குர்‍ஆனை ஆதிகாரபூர்வமான பிரதி என்று வைத்துக்கொண்டார்.

உதாரணத்திற்கு, கீழ்கண்ட குர்‍ஆன் வகைகள்:

 

 
1. அலி பின் அபி தலிப் என்பவரின் படி குர்‍ஆன் (Quran according to Ali bin abi talib)

2. இபின் மஸூத் என்பவரின் படி குர்‍ஆன் (According to Ibn Mass’oud)

3. அபி பின் கப் என்பவரின் படி குர்‍ஆன் (According to Aobi bin ka’ab)

 

 
இதன் பொருள் இவர்கள் குர்‍ஆனை எழுதினார்கள் என்று பொருளில்லை; இதன் பொருள் அவர்கள் குர்‍ஆனை எப்படி படிக்கவேண்டும் என்ற விவரங்களை கொண்டு இருந்தனர்.

குர்‍ஆனை 7 வகையில் படிக்கலாம்(ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்‍ஆன் வசனத்தின் படி [alssib’ ailmithani]) + 3 இதர வழிகள் (mokimila) + 4 கூடுதலான வழிகள், இதை இயல்புக்கு மாறான முறை[shaza] என்பார்கள்.

ஏழு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:

1. நஃபா: கலன் + வர்ஷ் (Nafaa’: Qalon + Warsh)
2. இபின் கதிர்: அல்பிஜி + கோன்பில் (Ibn Kathir: Albizi + Qonbil)
3. அபி அம்ரொ: அல்தோரி + அல்சோசி (Abi amro: Aldori + Alsosi)
4. இபின் அமிர்: இபின் அபன் + இபின் த்வான் (Ibn Amer: Ibn Aban + Ibn Thkwan)
5. அச்செம்: அபோ பைகர் + ஹஃபஸ் (Assemm: Abo Biker + Hafas)
6. அல் கெஸ்ஸய்: அலித் + அல்தோரி (Alkessa’i: Allith + Aldori)
7. ஹம்ஜா: அல்பிஜாஜ் + அபோ ஈஸா அல்சிர்பி (Hamza: Albizaz + Abo Isa Alsirfi)

 
 
 
மூன்று வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:
 
1. அபோ ஜிபார்: இபின் வர்தன் + இபின் ஜ்மஜ் (Abo Ji’faar: Ibn Wardan + Ibn Jmaz)
2. யாக்கோப்: ரோயிஸ் + ரோஹ் (Yaccob: Rois + Roh)
3. கலிஃப்: அலம்ரோஜி + இத்ரஸ் (Khalif: Almrozi + Iddres)
 
 
 
நான்கு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:
 
 
1. இபின் மொஹிச‌ம்: அல்பிஜி + இபின் ஷின்போஜ் (Ibn Mohisn: Albizi + Ibn Shinboz)

2. அல்யாஜிதி: சொலைமான் இபின் அல்ஹ‌க‌ம் + அஹ்ம‌த் பின் ஃப‌ரா (Alyazidi: Soliman Ibn Alhakam + Ahmed Bin Farah)

3. அல்ஹ‌ஸ‌ன் அல்ப‌ஸ்ஸ‌ரி: அபோ ந‌யிம் அல்ப‌ல்கி + அல்தொரி (Alhassan Albassry: Abo Na’im Albalkhi + Aldori)

4. அலாம‌ஷ்: அமோடோடி + அல்ஷின்ப்ஜி அல்ஷ‌ட்டாய் (Ala’mash: Amotodi + Alshinbzi Alshttaoi)
 

 
 
வித்தியாசம் இப்படியாக உள்ளது:
 
 
1. எழுத்துக்களில் வித்தியாசம் (spelling)

2. தொனியில் வித்தியாசம் (tone – harkat)

3. அரபிக் இலக்கணத்தில் வித்தியாசம் (A’rab – Arabic grammar)

4. ஒரே பொருள் வரும் வெவ்வேறு வார்த்தைகளை பயன்படுத்துதல் (உதாரணத்திற்கு, சண்டை, கொல்) – using a similar word but different (like FIGHT, KILL)

5. வார்த்தைகளின் இடங்களை மாற்றுதல் (changing place of words)

6. வார்த்தைக‌ளை சேர்த்தல் அல்லது எடுத்துவிடுத‌ல்(adding or removing words)

 
 
நான் இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்பது மிகவும் தெளிவாக உள்ளது; அதாவது ஒரே ஒரு குர்‍ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்லமுடியாது.

 
முஸ்லீம்களின் கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால், “filohen mahfouz” or “in saved plates” என்றுச் சொல்லக்கூடிய “தாய் குர்‍ஆன்” என்று ஒன்று இல்லை என்பது தான் உண்மை.

 
“தாய் குர்‍ஆன் ஒன்று உண்டு” என்று சொன்னால், ஏன் இப்படி பல வித்தியாசங்கள் அவைகளில் உள்ளன‌? அதிகாரபூர்வமான இயேசுவின் நற்செய்தி நூல்கள் நான்கு இருப்பதினால், முஸ்லீம்கள் அவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுக்கு ஒரே ஒரு நற்செய்தி நூல் வேண்டும் என்றுச் சொல்கிறார்கள்.

 
முஸ்லீம்கள் “மத்தேயு/மாற்கு/லூக்கா என்பவரின் படி…” என்று எழுதப்பட்டுள்ளதை அங்கீகரிக்கமாட்டார்கள், ஆனால், தங்களிடம் அப்படி உள்ளதை அங்கீகரிக்கிறார்கள். இன்று நம்மிடம் உள்ள குர்‍ஆன் அனைத்தும் ஒபி இபின் கனப் என்பவரின் படி உள்ள குர்‍ஆன் தான் (They not accept the word “according to …” but they have it. Today’s Quran which all we use is according to Obi IBM Kanab.)
 
 
நான் என்ன சொல்லவருகிறேன்?

 
சூரா மர்யம் என்ற குர்‍ஆன் சூராவிலிருந்து மூன்று எடுத்துக் காட்டுக்களைக் காணலாம் வாருங்கள்.
 
 
1. எடுத்துக்காட்டு ஒன்று: சூரா மர்யம் 19:19
[English translation based on the one done by Rashad Khalifa]

 
* ஹஃப்ச் இவ்விதமாக படிக்கிறார்:
 
He said, “I am the messenger of your Lord, to GRANT (who does grant?: the angel) you a pure son.”

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: li’ahiba

 
 
* நஃபா, அபோம்ரோ, கலன், வர்ஷ்… படிக்கிறார்கள்:
 
 
He said, “I am the messenger of your Lord, to GRANT (who does grant?: Lord) you a pure son.”

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: liyihiba

 
 
* அல்பஹர் அல்மொஹித், “Alkishaf” a book for Alzimikhshiry:
 
 
He said, “I am the messenger of your Lord, HE ORDERED ME TO GRANT YOU a pure son.”

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: amarani ‘n ‘hiba

 
 
2. எடுத்துக்காட்டு இரண்டு: சூரா மர்யம் 19:25
[English translation based on the one done by Yusuf Ali.]

 

* ஹஃப் வார்த்தைகளை இப்படியாக படிக்கிறார்:

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL LET FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: toosaqit

 

* ஹம்ஜா, அல்மிஷ்:

 

And shake towards thyself the trunk of the palm-tree: FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tasaaqat

 

* அஸ்ஸெம், அல்கிஸய், அல்மிஷ்:

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL fresh ripe dates upon thee.

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yassaqat

 

* அபோ அம்ரொ, அஸ்ஸெம், நஃபி:

 

And shake towards thyself the trunk of the palm-tree: WILL FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tassaqat

 

* அபோ நஹிக், அபோ ஹை:

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tosqt

 

* அலேரப் a book for Alnahas:

 

And shake towards thyself the trunk of the palm-tree: WE WILL FALL fresh ripe dates upon thee.

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: nosaqit

 

* மஸ்ரோக்

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL [someone unknown will let fall] fresh ripe dates upon thee.

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yosaqit

 

* அபோ ஹையா:

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tasqwt

 

* அபோ ஹையா

 

And shake towards thyself the trunk of the palm-tree: FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yasqwt

 

* அபோ ஹையா

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL one by one] fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tatasaqat

 

* அபோ அல்ஸ்மல்:

 

And shake towards thyself the trunk of the palm-tree: FALLING fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yosqt

 

3. எடுத்துக்காட்டு மூன்று: சூரா மர்யம்: 19:26
[English translation based on the one done by Yusuf Ali.]

 

* ஜித் பின் அலி:

 

So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, ‘I have vowed a FAST to (Allah) Most Gracious, and this day will I enter into no talk with any human being’

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: syaman

 

* அபெத் அல்லா பின் மஸூத், அனிஸ் பின் மலேக்:

 

So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, “I have vowed a SILENCE to (Allah) Most Gracious, and this day will I enter into not talk with any human being.”

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: samten

 

* அபோ பின் கப், அனிஸ் பின் மலேக்:

 

So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, “I have vowed a SILENT FAST to (Allah) Most Gracious, and this day will I enter into not talk with any human being.”

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: swmen samten

 

* அனிஸ் பின் மலேக்:

 

So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, “I have vowed a FAST AND SILENCE to (Allah) Most Gracious, and this day will I enter into not talk with any human being.”

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: swmen wa samten

 

எனக்கு மெயில் அனுப்பி என்னோடு தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்: khaled@exmuslim.com

 

ஆங்கில‌ மூலம்: http://www.answering-islam.org/Quran/Text/var1.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, அல்லாஹ், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், குரான், பெண்கள், முகமது, முஸ்லீம்

மகா அலெக்ஸாண்டர் முஸ்லீமா?குரானின் சரித்திர ஜோக்

1. அலேக்ஜாண்டர் த கிரேட் (Alexandar the Great) – ஓர் இறைகொள்கையாளரா (முஸ்லீமா) ? (குர்-ஆன் 18:83-97)

பதில்: குர்-ஆனில் அல்லா, அலேக்ஜாண்டர் ஒரு “ஓர் இறைக்கொள்கையாளன்”( பல தெய்வங்களை வணங்காதவன்) என்றும், அல்லாவின் வழியிலே நடப்பவன் என்றும் சொல்கிறான். ஆனால் சரித்திரம் நமக்குச் சொல்கிறது, அவன் பல தெய்வங்களை வணங்கியவன். அந்த தெய்வங்களுக்காக சென்ற இடமெல்லாம் பலிபீடங்களை நிறுவியவன்.

இந்தியாவில் படையெடுத்து வரும்போது “ஹைபாஸிஸ்” நதிக்கரையில் அவன் தன் நாட்டு தெய்வங்களுக்கு (ஒலிம்பியன்) 12 பலிபீடங்களை நிறுவினான். Click for Details

குர்-ஆன் 18: 83-98 – அலேக்ஜாண்டர் ஓர் இறைக்கொள்கையாளன்

18:83 (நபியே!) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; ‘அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்” என்று நீர் கூறுவீராக.

18:84 நிச்சயமாக நாம் அவருக்கு பூமியில் (தம் ஆட்சியை நிறுவ) வசதிகள் அளித்தோம்; இன்னும் ஒவ்வொரு பொருளிலிருந்தும் (தக்க பலனடையும்) வழியையும் அவருக்குக் (காண்பித்துக்) கொடுத்தோம்.

18:85 ஆகவே (அவர்) ஒரு வழியைப் பின் பற்றினார்.

18:86 சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; ‘துல்கர்னைனே! நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்” என்று நாம் கூறினோம்.

18:87 (ஆகவே அம்மக்களிடம் அவர்) கூறினார்: ‘எவன் ஒருவன் அநியாயம் செய்கிறானோ அவனை நாம் வேதனை செய்வோம்.” பின்னர் அ(த்தகைய)வன் தன் இறைவனிடத்தில் மீள்விக்கப்பட்டு, (இறைவனும்) அவனைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வான்.

18:88 ஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நல்ல – செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது; இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்.

18:89 பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.

18:90 அவர் சூரியன் உதயமாகும் (கிழக்குத்) திசையை எத்திய போது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதைக் கண்டார்; அவர்களுக்கும் சூரியனுக்குமிடையே நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை.

18:91 (வெப்பத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளாத அவர்களுடைய நிலை) அவ்வாறுதான் இருந்தது; இன்னும் என்னென்ன அவருடன் இருந்தது என்பதை நாம் நன்கறிந்திருக்கிறோம்.

18:92 பின்னர், அவர் (வேறொரு) வழியைப் பின்பற்றிச் சென்றார்.

18:93 இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை;

18:94 அவர்கள் ‘துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது – குழப்பம் – செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள்.

18:95 அதற்கவர்: ‘என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்”‘என்றுகூறினார்.

18:96 ‘நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் ‘உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்” (என்றார்).

18:97 எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.

சில இஸ்லாமிய அறிஞர்கள் இதனை மறுக்கின்றனர். ஆனால் குர்-ஆன் “துல்கர்னைன்” என்று இந்த அரசனுக்குப் பெயர் உள்ளதாகச் சொல்கிறது. சரித்திர நூல்கள்படி அலேக்ஜாண்டருக்கு “துல்கர்னைன்” என்ற பெயர் உள்ளது.
1) See here for Dulkarnain at Wikipedia
2) And here

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இஸ்லாம், குரான், சரித்திரம், முகமது, முஸ்லீம்

மூட நம்பிக்கைகளின் அடிப்படை பயம்

மூட நம்பிக்கைகளின் அடிப்படை பயம்

November 13, 2005

மூட நம்பிக்கைகளின் அடிப்படையான பயம்

தீர்க்கதரிசிகள் அரேபியாவில் மலிந்து கிடந்தார்கள். இப்படிப்பட்ட பொய் தீர்க்கதரிசிகளைப் பற்றிய குறிப்புகள் ஹதீஸ்களிலேயே நிறைய இருக்கின்றன. அந்த பொய் தீர்க்கதரிசிகளோடு போட்டி போட்டு தன்னுடைய மதத்தை ஸ்தாபிக்க அலைந்த இன்னொரு பொய் தீர்க்கதரிசிதான் முகம்மது.

முகம்மது ஒரு பொய்யன், கடவுளுக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அல்லாவின் தூதரும் இல்லை, ஒன்றும் இல்லை, அவனிடம் கடவுள் எதையும் சொல்லவில்லை. அவன் தொடர்ந்து ரீல் விட்டு, மக்களை பயமுறுத்தி ஏமாற்றி தனது கல்ட்டை நிர்மாணம் செய்தான் என்பதற்கான சாட்சிகள் ஏராளம். அவற்றில் சிலவற்றையே முந்தைய பதிவுகளில் பதிந்திருந்தேன்.

தன்னுடைய ரீல் சுற்றல்களுக்கு மற்றவர்கள் பயப்பட வேண்டும், அவர்களை பயமுறுத்தி தன்னுடைய மதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இல்லாத ரீல்களை சுற்றியிருக்கிறான். இதனை அந்த காலத்திலிருந்தவர்கள் எதிர்த்தபோதும், இவனது முட்டாள்தனங்களையும், இவன் பின்னால் செல்பவர்களின் முட்டாள்தனங்களையும் கிண்டல் செய்தவர்களை கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள் இவனும் இவனது கூலிப்படையும்.

தன்னிடம் கடவுள் பேசுகிறார் என்று மக்களை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக தனக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்றுகூட ரீல் சுற்றியிருக்கிறான். எனக்கு இவற்றை சொன்னதெல்லாம் அல்லாதான் என்று சுற்றியிருக்கிறான். ஆனால், முகம்மதுக்கு எழுதப்படிக்க தெரியும் என்பதை இன்றைய இஸ்லாமிய அறிஞர்களில் பலர் ஒப்புக்கொள்கிறார்கள். மேலும், இவன் கதீஜா என்ற பணக்கார விதவையை கல்யாணம் பண்ணி அவளுடைய பிரதிநிதியாக பல இடங்களில் சென்று வேலை செய்திருக்கிறான். எழுதப்படிக்கத்தெரியாத ஒரு முட்டாளிடம் ஒரு பணக்கார வியாபாரி தன் வேலைகள் அனைத்தையும் ஒப்படைப்பாரா?
http://www.quran.org/ap28.htm

கதீஜா இறந்ததும், இவன் செய்யும் அட்டூழியங்களால் மெக்கா பகுதியிலிருந்து விரட்டப்பட்ட முகம்மது, மெதீனாவுக்கு சென்று அங்கிருக்கும் அன்சார் என்ற ஜாதியின் துணையுடன் வியாபார காரவான்களை கொள்ளையடித்து பங்கு போட்டு வாழ்க்கை நடத்தியிருக்கிறான். இந்த கொள்ளையில் பணம் சேர சேர அந்த பணத்தை வைத்துக்கொண்டு தன்னுடைய ஆள் பலத்தை அதிகரித்திருக்கிறான். தன்னை எதிர்த்தவர்களை தீர்த்துககட்டுவதன் மூலம் தனக்கு எதிர்ப்பு இல்லாமல் செய்து கொண்ட இவன், நல்ல ஆள் பலம் சேர்ந்ததும், மெக்காவை ஆக்கிரமித்து தன்னை முன்பு அவமரியாதை செய்தவர்களை எல்லாம் தீர்த்துக்கட்டினான்.

இவனுக்கு எதிரிகள் யாரேனும் இருந்தால் உடனே “அல்லாவையும் அல்லாவின் தூதரையும் இவன் காயப்படுத்திவிட்டான். இவனைக் கொல்லவேண்டும்” என்றுதான் ஆணையிடுவான்.

நான் கேட்கிறேன். அல்லா என்பது கடவுளாக இருந்தால், கடவுளை யாரேனும் காயப்படுத்த முடியுமா? கடவுள் அளப்பரிய கருணை மிக்கவர் என்று எல்லா மதங்களிலும் உள்ள மக்கள் நம்புகிறார்கள். அதனால்தான் எல்லா நாடுகளிலும் கடவுள் முதலில் தாய் வடிவத்தில் கற்பனை செய்யப்பட்டார். உங்கள் தாயை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எவ்வளவு தன் குழந்தைகளிடம் பாசம் கொண்டவர். என்ன தவறுகள் செய்தாலும், ஏன் தாயையே கவனிக்காமல் சுயநலமாக இருந்தால் கூட தன் மகன்கள் மீது மாறாத பாசம் கொண்டதாய்களைத்தான் நாம் பார்த்திருக்கிறோம்.

ஒரு மனிதத் தாய்க்கே இவ்வளவு பாசம் இருக்குமேயானால், இந்த எல்லையற்ற பிரபஞ்சத்தையும் கோடானுகோடி நட்சத்திரங்களையும் படைக்கக்கூடிய கடவுளுக்கு எவ்வளவு பாசம் இருக்க வேண்டும்? அவரை ஒரு சிறு மனிதன் காயப்படுத்த முடியுமா? முகம்மது இப்படி “அல்லாவையும் அல்லாவின் தூதரையும் காயப்படுத்திவிட்டான்” என்று உளறி, தன்னுடைய குரூரத்துக்கு கடவுளையும் இழுத்து வந்து, கடவுளின் பெயரால் கவிஞர்களையும், பெண்களையும் முதியவர்களையும் கொலை செய்ய ஆணையிட்டு, கடவுளை அவமரியாதை செய்கிறான்.

இஸ்லாமின் அடிப்படையே பயம்தான். மூட நம்பிக்கைகளின் அடிப்படை பயம்தான். மூட நம்பிக்கைகள் இதனாலேயே விளைகின்றன.

இருந்து கிருந்து தொலைத்து விட்டால் என்ன செய்வது என்ற பயத்தை முதலில் உருவாக்குவது. அந்த பயத்தை உருவேற்றி பல முறை திருப்பித் திருப்பி சொல்லி, அந்த பயத்தை மனதில் நிலைத்து வைக்க வேண்டியது.

இப்படி இருந்து கிருந்து தொலைத்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தை உருவாக்கத்தான் குரானில் அறிவியல் என்ற மடத்தனங்கள். குரானில் அறிவியல் செய்திகள் இருக்கின்றன என்று சொல்லி இதையெல்லாம் அப்பவே முகம்மது சொல்லியிருக்கார் என்றால், கடவுள்தானே சொல்லியிருக்க வேண்டும் என்ற வாதம்.

அதனை நான் பொய் என்று நிரூபிக்கும்போது வரும் வன்முறை எதிர்வினைகள், முஸ்லீம் முல்லாக்களின் நடுக்கத்தையே காட்டுகின்றன. இதுவரை சொன்னது பொய் என்று தெரிந்துவிட்டது என்று உளற ஆரம்பிக்கிறார்கள்.

குரானில் அறிவியல் என்று பேச ஆரம்பித்ததும், அவர்கள் காட்டிய வசனங்களையே எடுத்துக்கொண்டு எவ்வாறு அவை ஹிப்போக்ரட்ஸ், கேலன் ஆகியோரிடமிருந்து காப்பி அடிக்கப்பட்டது. அவை எப்படி இந்த கால அறிவியல் படி தவறானவை என்று நிரூபித்தேன்.

தவறான விஷயங்களை காப்பி அடித்து சொல்லிவிட்டு அதனை அல்லா சொன்னார் என்று ரீல் விட்ட முகம்மதுவை நோக்கி பாயாத கோபம் அதனை காண்பித்த என் மீது பாய்கிறது.

இன்று அறிவியல் துணை கொண்டு குரானை நிரூபிக்க முனைபவர்கள் எந்த அளவுக்கு அயோக்கியர்கள் என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை. அறிவியல் துணை கொண்டு குரானை நிரூபிக்க முனைந்தால், அறிவியல் வழிமுறைகள் சரி என்று ஒப்புக்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், இந்த அயோக்கிய முல்லாக்கள் அறிவியல் வழிமுறைகளை ஒப்புக்கொள்பவர்கள் அல்லர். தேவையான விஷயங்களை அறிவியல் மூலம் கண்டறிந்தவை குரானை நிரூபிக்கின்றன என்று அப்பாவிகளை ஆச்சரியப்படுத்தி “குரானை அல்லா சொன்னார்” என்று மக்களை நம்ப வைப்பதுதான் முதல் நோக்கம்.

அறிவியல் வழிமுறைகளை ஒப்புக்கொண்டால், பூமி தன்னைத்தானே சுற்றுகிறது சூரியனையும் சுற்றி வருகிறது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஆனால் சவூதி அரேபியாவில் இருக்கும் மெக்காவின் தலைமை முஃப்டி ஷேக் இபின் பாஸ் அப்படி பூமி தன்னைத்தானே சுற்றுகிறது என்று சொல்பவனும், சூரியனை சுற்றி வருகிறது என்று சொல்பவனும் காஃபிர் என்று பட்வா கொடுத்திருக்கிறார். முஸ்லீம்கள் அப்படிச்சொன்னால், அவர்கள் முஸ்லீம்கள் அல்ல காபிர்கள், அதனால் கொல்லப்படவேண்டியவர்கள் என்று பொருள். இந்த லட்சணத்தில் குரானில் இருக்கும் சிவப்பு நெபுலா, பிக் பேங் தியரி என்று ஆங்கிலப்புத்தகம் எழுதி இன்று முஸ்லீம்களை அடிமைகளாக வைத்திருக்க முனையும் அயோக்கியர்களை என்னவென்று சொல்வது? இவர்கள் நேராக அந்த சவூதி அரேபியாவின் தலைமை முஃப்டியை அல்லவா அணுகி விளக்க வேண்டும்?

இந்த மாதிரி முயற்சிகளுக்கும், இதற்கு முன்னால் சுபி மூலம் மதமாற்றம் செய்யப்பட்டதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. சுபி என்னவோ, மந்திரங்கள் தந்திரங்கள், நல்ல போதனை, சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் இந்தியாவில் இருக்கும் சாமியார்களில் ஒரு சாமியார் போல ஆட்களை கவர்ந்திருப்பார். சரி இவர் நல்ல விஷயங்களை சொல்கிறார் என்று ஒரு சிலர் மதம் மாறி இருப்பார்கள். ஆனால் அவர்களது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்? உதாரணத்துக்கு பாகிஸ்தானையே எடுத்துக்கொள்ளலாமே? என்ன செய்கிறார்கள். ஈராகில் அமெரிக்கா ஆட்சி செய்ய முனைகிறது என்று லண்டனில் குண்டு வைக்கிறார்கள். ஜிகாதி வெறி கொண்டு அலைகிறார்கள். காஷ்மீரில் இந்துக்களைக் கொன்று அங்கிருந்து துரத்துகிறார்கள். உத்தர பிரதேசத்தில் ரயிலில் குண்டு வைக்கிறார்கள். அப்பாவிகளை கொல்கிறார்கள். பங்களாதேஷில் நாடெங்கும் குண்டு வெடித்து அப்பாவிகளை கொல்கிறார்கள்.

முதலில் பயத்தை உருவாக்க நிகழ்காலத்தில் நடப்பில் பயத்தை உருவாக்க வேண்டும். லண்டனில் குண்டு வெடிப்புகள் நடந்து பலர் இறந்ததும், அங்கே ஒரு மௌன ஊர்வலம் நடந்தது. அந்த ஊர்வலத்தில் ஒருவர் “அல்லா லண்டனை நேசிக்கிறார்” என்று எழுதிய அட்டையை எடுத்துக்கொண்டு சென்றார்.

ஏதேனும் ஒரு வழியில் தங்கள் வாழ்க்கையை இப்படியே நடத்திக்கொண்டு சென்று விடுகிற ஆர்வம் இது போன்ற சாதாரண மக்களிடம் இருக்கிறது. அதைத்தான் முகம்மதுவும் பயன்படுத்திக்கொண்டான். அதனைத்தான் “முகம்மது செய்த கொலைகள்” என்ற பதிவில் எழுதினேன். கொலை செய்துவிடுவேன் என்று சொல்வது மட்டுமல்ல, அதனை செய்து காட்டிவிடும்போது, சாதாரண மக்கள் பலர், “நமக்கெதுக்கு வம்பு. இவன் நம்மை இஸ்லாத்தில் சேரச்சொல்கிறான். சேர்ந்திவிட்டால் நம்மை தொந்தரவு பண்ணமாட்டான்” என்று கருதி இஸ்லாத்தில் சேர்ந்து விடுவார்கள். இதனைத்தான் இஸ்லாம் அன்றும் இன்றும் செய்து வருகிறது. ஒரு சிலர் சுபிக்களால் மாறியிருந்தாலும், இன்று தமிழ்நாட்டில் இருக்கும் முஸ்லீம்களில் பெரும்பாலோனோரது மூதாதையர் இப்படி கத்திமுனையில் மதம் மாறவைக்கப்பட்டவர்கள்தான். அதனை இன்று மறுப்பார்கள். நாங்கள் சுபியால் மாறினோம், தலித்துகளாக இருந்தோம், இந்துக்கள் எங்களை கேவலமாக நடத்தினார்கள் அதனால்மாறினோம், குரானை முழுவதுமாக படித்துப்பார்த்து, எல்லா ஹதீசையும் படித்துப்பார்த்து அறிவியலில் தேய்த்து தேய்த்து தேய்த்து பார்த்து மாறினோம் என்று ரீல் விடுவார்கள். உண்மை என்ன? இவர்களில் பெரும்பாலோனோர் கட்டாயமாக கத்தி முனையில் மதம் மாறவைக்கப்பட்டவர்கள்தான். ஒருமுறை அப்படி மாறிவிட்டால், அந்த இஸ்லாமின் சங்கிலிகள் இவர்களை இறுக்க பிணித்துவிடும். அதன் பின்னர், மூக்கறுபட்டவன், மூக்கறுந்தால் சொர்க்கம் தெரியும் என்று சொல்லி ஊரில் உள்ள அனைவரின் மூக்கையும் அறுத்துவிட்ட கதைதான்.

இந்த பூலோகத்தில் முதலில் பயங்கரவாதம் மூலமாக பயத்தை உருவாக்க வேண்டும். பங்களாதேஷில் நாடெங்கும் ஒரே நேரத்தில் 400 குண்டுகள் வெடித்திருக்கின்றன. இப்படிப்பட்ட பயங்கரவாதம் அல்லாவின் ஷாரியா சட்டத்தை பங்களாதேஷில் கொண்டுவருவதற்காக செய்யப்படுகிறதாம்! இத்தனைக்கும் பங்களாதேஷ் முஸ்லீம் பெரும்பான்மை நாடு! அப்படி பயங்கரவாதத்தின் மூலமாக ஆள் சேர்த்த பின்னால், அவர்களிடம் செத்த பின்னால் நெருப்பில் போட்டு வாட்டுவேன், எண்ணெயில் போட்டு வறுப்பேன் என்று பயமுறுத்த வேண்டும். இதுபோல பயத்தின் அடிப்படையில் உருவாக்கிய கல்ட்தான் இந்த இஸ்லாம்.

இதில் ஒரு முக்கியமான விஷயம், இறுதித்தீர்ப்பு நாள் 2000 வருடங்களுக்குப்பின்னால் நடக்கப்போகிறது என்று சொன்னால், அப்ப பாத்துக்கலாம் என்று போய்விடுவார்கள். அதனால், இப்படி கூட்டம் சேர்ப்பவர்களின் உத்தி, இதோ இப்ப வரப்போகிறது, நீ சாகறத்துக்குள்ள கடைசி தீர்ப்பு நாள் வந்துவிடும் என்று பயமுறுத்துவது.

அதைத்தான் முகம்மதுவும் வெட்கமின்றி, கடவுளின் பெயரை பயன்படுத்தி பொய் மேல் பொய் சொல்கிறான். இந்த கேடு கெட்டவனை இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்துவிட்ட ஒரே காரணத்துக்காக தூக்கிப்பிடிக்கிறார்கள். முகம்மதுவின் பெயரை இழிவு படுத்தினால், அவனைக்கொல் என்று அலைகிறார்கள். வெட்கமாக இல்லை?

Book 041, Number 7050:
அயீஷா கூறியதாவது: ஒரு முறை பாலைவனத்தில் இருக்கும் அரபியர்கள் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதி தீர்ப்பு நாள் வரும் என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் இருப்பவர்களிலேயே இளைய சிறுவனைப் பார்த்து “இஇறுதித் தீர்ப்பு நேரம் வரும்போது இந்த சிறுவன் உயிரோடு இருப்பானேயாகில், இந்த சிறுவன் முதியவனாகியிருக்க மாட்டான்.”

Book 041, Number 7050:
‘A’isha reported that when the desert Arabs came to Allable Messenger (may peace be upon him) they asked about the Last Hour as to when that would come. And he looked towards the youngest amongst them and said: If he lives he would not grow very old that he would find your Last Hour coming to you the would see you dying).

——————————————————————————–

அனாஸ் கூறியதாவது: ஒருவன் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதித்தீர்ப்பு நேரம் வரும் என்று கேட்டான். அன்சார் ஜாதியைச் சார்ந்த ஒரு சிறுவன் அங்கிருந்தான். அவன் பெயரும் முகம்மது. அல்லாவின் தூதர் சொன்னார், “இந்த சிறுவன் வாழ்ந்திருந்தால், இறுதித்தீர்ப்பு நேரம் இவன் வயதாவதற்குள் வந்துவிடும்”

Book 041, Number 7051:
Anas reported that a person asked Allah’s Messenger (may peace be upon him) as to when the Last Hour would come. He had in his presence a young boy of the Ansar who was called Mabammad. Allah’s Messenger (may peace be upon bion) said: If this young boy lives. he may not grow very old till (he would see) the Last Hour coming to you.

——————————————————————————–

Book 041, Number 7052:
Anas b. Malik reported that a person asked Allah’s Apostle (may peace be upon him): When would the Last Hour come? Thereupon Allah’s Messenger (way peace be upon him) kept quiet for a while. then looked at a young boy in his presence belonging to the tribe of Azd Shanilwa and he said: If this boy lives he would not grow very old till the Last Hour would come to you. Anas said that this young boy was of our age daring those days.

——————————————————————————–
Book 041, Number 7053:
Anas reported: A young boy of Mughira b. Shu’ba happened to pass by (the Holy Prophet) and he was of my age Thereupon Allah’s Apostle (may peace be apon him) said: If he lives long he would not grow very old till the Last Hour would come (to the old People of this generation).

——————————————————————————–
Book 041, Number 7054:
Abu Huraira reported Allah’s Messenger (may peace be upon him) as saying: The Last Hour would come (so sudden) that a person would be milking the she- camel and the (milk) would not reach the brim of the vessel that the Last Hour would come, and the two persons would be engaged in buying and selling of the clothes and their bargain would not be struck before the Last Hour would come. And someone would be setting his tank in order and he would have hardly set it right when the Last Hour would come.

சிந்திக்கும் திறனுள்ள மனிதர்களே! கேளுங்கள் முல்லாக்களிடம்! அந்த சிறுவர்கள் வயது முதிர்வதற்குள் இறுதித்தீர்ப்பு நாள் வந்துவிட்டதா? 1400 வருடங்களாகி இந்த இஸ்லாமே பொய் என்று தெரியவில்லையா? முகம்மது பொய் சொன்னான் என்பதற்கு இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்? அதுவும் கடவுள் சொன்னதாக சொல்லி பொய்களை சொல்லியிருக்கிறான் என்பதை உணர முடியவில்லையா? ஏன் உங்களால் இந்த பொய்யை விட்டு வர முடியவில்லை? ஏன்?

காரணத்தையும் முன்னால் எழுதிவிட்டேன். இஸ்லாம் என்பது ஒருவழிப்பாதை. உள்ளே நுழைந்தால் வெளியே செல்ல முடியாது. இஸ்லாமை விட்டு வெளியேறியவனை கொல் என்று முகம்மது சொல்லிவிட்டு சென்றிருக்கிறான். அதுதான் காரணம். வேறு வழியின்றி இந்த சிறைக்குள் மாட்டிக்கொண்டு விழிக்கிறீர்கள்.

முதலில் பயத்தை போக்குங்கள். கருணையுள்ள கடவுள் என்று ஒன்றிருந்தால், முகம்மது நிச்சயம் அவரது தூதராக இருக்கவே முடியாது. முகம்மதின் குரூரத்தையும், கொலைவெறியையும். பொய்களையும் பட்டியலிட்டிருக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு கேவலமான பொய்யான மதத்தில் இருப்பதற்கு வெட்கப்பட வேண்டியவர்கள் இஸ்லாமிய மதத்தில் பிறந்து இன்னும் அங்கேயே இருப்பவர்கள்.

இன்று நீங்கள் நல்லவராக இருக்கலாம். உங்களுக்கும் வன்முறைக்கும் சம்பந்தமில்லாதவராக இருக்கலாம். குரானில் இருக்கும் முகம்மதின் கொலைவெறி கொண்ட போதனைகளை பூசி மொழுகி விளக்கம் சொல்லி தப்பிக்கலாம். ஆனால் அதே போல உங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அமைதி வழியில் இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இஸ்லாம் அப்படிப்பட்ட மதம். உள்ளே வரும்போது இனிக்கப்பேசும். உள்ளே சென்றதும் கொடூரம் பல்லை இளிக்கும்.

பாகிஸ்தானிலும் மலேசியாவிலும் பங்களாதேஷிலும் எப்படிப்பட்ட போதனைகள் பத்திரிக்கைகளில் வருகின்றன என்று தெரியுமா? இந்து அல்லது கிரிஸ்துவர்களை கொன்றால் நேராக சொர்க்கம் என்று போதிக்கின்றன. அங்கு இவற்றை யாரும் எதிர்த்து எழுதுவதில்லை. எத்தனை முஸ்லீம்களுக்கு எதிர்த்து எழுத தைரியம் இருக்கும்? இதுதான் இஸ்லாமிய பெரும்பான்மையின் கொடூர முகம். உங்கள் பெண் ஏதோ ஒரு கொடுமைக்கார கணவனுக்கு நாலாந்தாரமாகவோ அல்லது உங்கள் மகன் ஜிகாதியாக ஆகி இடுப்பில் பெல்ட் பாம் கட்டிக்கொண்டு பின் லாடனுக்காக சாவதையோதான் விரும்புகிறீர்களா? இப்போதைக்கு மகன் மகளை அந்த வழியில் செல்லாமல் ஆக்கிவிடலாம். உங்கள் பேரப்பிள்ளைகளின் கதி? அதற்காக்த்தான் உண்மையான அமைதி மார்க்கமான பௌத்தம் போன்றவற்றை தேர்ந்தெடுக்க கோருகிறேன். அடையாள சிக்கலில் நீங்கள் மாட்டிக்கொண்டிருப்பது போலவே உங்கள் குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் அடையாளச் சிக்கலில் மாட்டி இஸ்லாமிய கொடூர சிந்தனைகளை நியாயப்படுத்தி பேசவோ எழுதவோ வேண்டுமா? பேசுவது எழுதுவது என்பது உங்களோடு இருக்கிறது. உங்களது பேரப்பிள்ளைகள் செயல்முறையில் நடத்த ஆரம்பித்தால் என்ன செய்வீர்கள்?

http://ennamopo.blogsome.com/2005/11/13/29-blinded/

1 பின்னூட்டம்

Filed under இஸ்லாம், குரான், முகமது, முஸ்லீம், ஹதீஸ்

ஆன்மீகம் என்றால் என்ன என்று கூட அறியாத மண்ணாங்கட்டிகள்

"திடமான மார்பகங்கள்( SWELLING BREAST) உள்ள" பெண்கள்

குர்‍ஆனும் பெண்களும்:

அல்லா முஸ்லீம் ஆண்களுக்கு கீழ் கண்டவற்றை கொடுக்கிறாராம்:

தோட்டங்களும், திராட்சைப் பழங்களும். (78:32) ஒரே வயதுள்ள கன்னிகளும். (78:33) பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன). (78:34)

வசனம் 78:33ஐ கவனியுங்கள், தமிழில் அழகாக "ஒரே வயதுடைய கன்னிகள்" என்று மொழிபெயர்த்துள்ளார்கள். ஆனால், இந்த கீழ் கண்ட மொழிபெயர்ப்பை பாருங்கள்:

Surely for the godfearing awaits a place of security, gardens and vineyards and maidens with swelling breasts, like of age, and a cup overflowing.

http://arthursclassicnovels.com/arthurs/koran/koran-arberry10.html

Enclosed gardens and vineyards;

And damsels with swelling breasts, their peers in age,

And a full cup:

http://www.sacred-texts.com/isl/qr/078.htm

குர்‍ஆனில் இந்த வசனங்களில் அல்லா சொல்கிறார், முஸ்லீம்களுக்கு அவர் சொர்க்கத்தில் "திடமான மார்பகங்கள்( SWELLING BREAST) உள்ள" பெண்களை தருவாராம். இதை இஸ்லாமிய மொழிபெயர்ப்பாளர்கள், சிறிது மறைத்து எழுதுகிறார்கள்.

இல்லை, இல்லை இது தவறான மொழிபெயர்ப்பு, அரபியில் அப்படி இல்லை, என்று சொல்வீர்களானால், இஸ்லாமிய காமண்டரி இபின் கதிர் என்ன சொல்கிறார் என்றுப்பாருங்கள். அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வீர்கள் அல்லவா?

" Kawa`ib" என்ற அரபி வார்த்தைக்கு அவர் குறிப்பிடும் பொருள் என்னவென்றுப்பாருங்கள்: கீழே ஆங்கிலத்தில் இபின் கதிரின் காமண்டரி சொல்வதை நான் தமிழில் எழுதவேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகின்றேன்.

(And vineyards, and Kawa`ib Atrab,) meaning, wide-eyed maidens with fully developed breasts. Ibn `Abbas, Mujahid and others have said,

(Kawa`ib)
"This means round breasts. They meant by this that the breasts of these girls will be fully rounded and not sagging, because they will be virgins, equal in age. This means that they will only have one age.'' The explanation of this has already been mentioned in Surat Al-Waqi`ah. Concerning Allah's statement,

Source: http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=1404&Itemid=134

எசேக்கியேலில் சொல்லப்பட்டது ஒரு உவமேயம் அல்லது உருவகப்படுத்தி ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்டது. இங்கு அல்லா நேரடியாகவே சொல்கிறார், இதை ஏகத்துவம் சகோதரர்கள் அவர்களின் பிள்ளைகளுக்கு படித்துக்காட்டமுடியுமா கேளுங்கள்? ஓகோ அதனால் தான் குர்‍ஆனை அரபியில் படிக்க அதிகமாக உட்சாகப்படுத்துகிறீர்களா?

எங்கும் ஆபாசம் எதிலும் ஆபாசம், அது தான் இஸ்லாம்:

முகமது சொல்கிறாராம், சொர்கத்தில் மனைவி இல்லாமல் ஒருவரும் இருக்கமாட்டார்களாம், மற்றும் உலகத்தில் அவரது இரண்டு மனைவிகள் அவருக்கு கொடுக்கப்படுமாம். இபின் கதிர் சொல்லும் போது, இந்த உலக மனைவிகள் இரண்டு பேரோடு, இன்னும் 70 மனைவிகளை அல்லா கொடுப்பாராம். மொத்தம் 72 மனைவிகள். ஒவ்வொரு ஆணுக்கும் 100 ஆண்களின் சக்தியை அல்லா கொடுப்பானாம், எதற்காக சமுதாயத்திற்கு சேவை செய்வதற்காக என்று நினைத்தீர்களா? இல்லை, இல்லை, சொர்க்கத்தில் பெண்களோடு உறவு கொள்வதற்காம். ஏன் அல்லாவிற்கு இதை விட்டால் வேறு வேலை சொர்க்கத்தில் இல்லையா?

ஒரு முறை உறவு கொண்டவுடன், அப்பெண்களை மறுபடியும் அல்லா "கன்னிகளாக" மாற்றிவிடுவானாம். என்ன இஸ்லாமியர்களே, இது தேவையா அல்லாவிற்கு… அப்படி பெண்களை கன்னிகளாக மாற்றும் வேலையை இந்த உலகத்திலாவது செய்தால், கற்பழிக்கபப்ட்டவர்களுக்கு ஒரு புது வாழ்வு கொடுத்தவராக அல்லா இருப்பார், கோர்ட்டு வழக்கு என்றுச் சொல்லி பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கை நாசனமாகாமல் இருக்குமில்லையா? இன்னும் முஸ்லீம்கள் பல ஆண்டுகள் தங்கள் மனைவிகளோடு வாழ்ந்து விவாகரத்து செய்துவிடும் போது, அந்தப்பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள், இப்படிப்பட்டவர்களை கன்னிகளாக அல்லா மாற்றினால், மற்ற முஸ்லீம்களாவது அவர்களை திருமணம் செய்துக்கொள்ள இது உதவியாக இருக்குமல்லவா? அந்தப்பெண்கள் மறுபடியும் கன்னிகளாக மாற்றப்பட்டதால், அவர்களுக்கும் நல்ல கணவர்கள் கிடைக்க வாய்ப்பு இருக்குமல்லவா?

இதையெல்லாம் உங்கள் பிள்ளைகளுக்கு எங்கும் எல்லாருக்கும் முன்பு உட்கார்ந்து உங்கள் பெற்றோருக்கும் முன்புன் உட்கார்ந்து, உங்கள் நபி இப்படிச் சொன்னார், அல்லா இப்படி செய்வார் என்று செய்திகளை பரிமாறிக்கொள்வீர்களா? சொல்லுங்கள்.

The idea of having sexual relations in Paradise has led some Muslims to interpret these passages metaphorically. This in turn has prompted the assumption that the description is merely a poetic attempt to describe that which is indescribable.

Unfortunately for these scholars, Muhammad will not allow for such an interpretation. In Sahih Muslim, no. 6793 and 6794, we are told:

"In Paradise… every person would have two wives (so beautiful) that the marrow of their shanks would glimmer beneath the flesh and there would be none without a wife in Paradise."

According to Ibn Kathir's commentary on S. 56:35-37, a Muslim will be given seventy specially created females with two of his earthly wives, for a total of seventy-two maidens in Paradise.

In Mishkat Al-Masabih, Muhammad indicates:

"The believer will be given such and such strength in Paradise for sexual intercourse. It was questioned: O prophet of Allah! Can he do that? He said: 'He will be given the strength of one hundred persons.'" (Bk. IV, chp. XLII, Hadith no. 24; transmitted by Tirmizi who classified this Hadith as sound)

Even more amazing is this statement from Muhammad:

"The Prophet was asked: 'Do we have sex in Paradise?' He answered: 'Yes, by him who holds my soul in his hand, and it will be done dahman, dahman. And when it is finished she will return pure and virgin again.'" (Ibn Kathir's commentary on S. 56:35-37)

An editorial footnote to Ibn Kathir's translation indicates that the word dahman means intercourse done with such "shove and disturbance." (Ibid.)

Source: http://www.answering-islam.org/Shamoun/shabir-d.htm And

Wikipedia: http://en.wikipedia.org/wiki/Houri

மேலும் படிக்க:

1. Muhammad, Islam, and Sex – (The Prophet of Allah liked three worldly objects – perfume, women and food)

2. Muhammad's Sexual Prowess.

3. MUHAMMAD AND THE FEMALE CAPTIVES

4. All About Mohammad

5. Questionable Language Of The Quran

6. அபாச ஹதீஸ்களின் பட்டியல்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஆன்மீகம், ஆபாசம், இஸ்லாம், பெண்கள், முஸ்லீம்

முகமது:பொம்பள வெளியே வருவான்னு காத்து நிற்கும் ஷைத்தான் கூட்டங்கள்

பொம்பள வெளியே வருவான்னு காத்து நிற்கும் ஷைத்தான் கூட்டங்கள்

''பெண் மறைவாக இருக்க வேண்டியவள். அவள் வெளியே வருவதை எதிர்நோக்கி ஷெய்த்தான் (அவள் வீட்டு வாசலில்) காத்துக் கொண்டிருக்கிறான். வீட்டில் இருப்பவளோ இறைக் கருணையை நெருங்கியவளாக இருக்கிறாள்"" (திர்மீதி) என்று நபிகள் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இஸ்லாம், முஸ்லீம்

மனிதர்களை கொல்வதற்கு மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.ஆப்கானிஸ்தான் அதிபர் சொல்கிறார்

மனிதர்களை கொல்வதற்கு மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது
ஆப்கானிஸ்தான் அதிபர் சொல்கிறார்

குவைத், ஏப்.30-

ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாயை கொல்ல நடந்த முயற்சியில் அவர் தப்பி பிழைத்தார். அவர் நேற்று குவைத் நாட்டுக்கு சென்றார். அந்த நாட்டில் இஸ்லாமிய பொருளாதார பேரவையின் சார்பில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நமக்குள்ளேயே எதிரிகள் இருக்கிறார்கள். சிலர் மதத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். மனிதர்களை கொல்வதற்கு துன்புறுத்துவதற்கும் நம் மதத்தை பயன்படுத்துகிறார்கள். கல்வி அறிவு பெறுவதற்கு பதிலாக அவர்கள் அழிவு வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்காக முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட்டு போராடவேண்டும்.

இவ்வாறு கர்சாய் கூறினார்.

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=409627&disdate=4/30/2008

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், ஆப்கான், இஸ்லாம், மதம், முஸ்லீம்