Category Archives: தினமலர்

தினமலர் பரப்பும் மூட நம்பிக்கை கதைகள்

http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/03/109/03_05_2008_109_002.jpg

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்து மதம், தினமலர், போலிகள், மூட நம்பிக்கை

தினமலர் பத்திரிக்கையின் ஆதிக்க வெறி

“டிக்’ அதிகாரி விடுப்பில் சென்றார்: அரசு அலுவலகத்தில் அழகருக்கு தடைநீங்கியது

மதுரை: மதுரை மாவட்ட தொழில் மையத்தில்”டிக்’ கள்ளழகருக்கு மண்டகப்படி வைக்க மறுத்த அதிகாரி விடுப்பில் சென்றதால் வழக்கம்போல இந்த ஆண்டும் மண்டகப்படி நடைபெற உள்ளது. மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக அழகர்கோயிலில் இருந்து பல்லக்கில் புறப்பாடாகி ஒவ்வொரு சமுதாய, அரசு அலுவலகங்கள், மாவட்ட உயரதிகாரிகளின் இல்லங்கள் என பல இடங்களில் தங்கிச் செல்வார். மதுரை அழகர்கோயில் ரோட்டில் தமிழ்நாடு ஓட்டல் அருகேயுள்ள மாவட்ட தொழில் மையத்திலும் “மண்டகப்படியாகி’ தங்கிச் செல்வது வழக்கம். அன்னதானமும் நடைபெறும். இங்கு ஓய்வு பெற்ற அலுவலர்கள், மாறுதல் பெற்ற அலுவலர்கள், ஊழியர்கள், பக்தர்கள் தொகை வசூலித்து இந்நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு பொதுமேலாளர் ஆண்ட்ரூஸ் பொன்ராஜ் வைரமணி, “அரசு அலுவலகத்திற்குள் பூஜை, அன்னதானம் நடத்தக் கூடாது. வெளியில் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று எதிர்ப்பு தெரிவித்தார்.(சரியாகத்தான் செய்து இருக்கிறார். இதேபோல் மதுரை புதூரில் கிறிஸ்தவர்கள் ஊர்வலம் நடத்தும் போது அரசாங்க இடத்தை கேட்டால் கொடுப்பார்களா?) இதனால் அதிகாரிகள், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். “28 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கத்துக்கு இந்த ஆண்டு தடைவிதிக்கப்படுகிறதே’ என மனம் புழுங்கினர். மண்டகப்படிக்காக செலுத்த வேண்டிய ரூ. 6 ஆயிரம் செலுத்தி இந்த ஆண்டு நடத்தாவிடில், வரும்ஆண்டுகளில் மண்டகப்படிக்கு புதிதாக அனுமதி பெற ரூ. 50 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்ய வேண்டும், வாய்ப்பு கிடைப்பதும் கஷ்டம் என்பதால் ஊழியர்களிடையே சர்ச்சை கிளம்பியது. இதுகுறித்து கலெக்டர் ஜவஹரிடமும் தெரிவிக்கப்பட்டது. அதிகாரி வைரமணியிடம் கேட்டபோது, “முன்னாள் அதிகாரிகள் சிலர் இங்கு மாற்றலாகி வர முயற்சித்து பிரச்னையை பெரிதாக்குகின்றனர். இந்நிகழ்ச்சி அரசு அலுவலக செலவில் நடைபெறுவதில்லை. ஓய்வு பெற்ற ஊழியர்கள், அலுவலர்கள் வசூல் செய்து நடத்துவதால் வெளியே வைத்துக் கொள்ளும்படி கூறியுள்ளேன். இதுகுறித்து கலெக்டரிடமும் விளக்கம் தெரிவித்து விட்டேன்’ என்றார். இந்நிலையில் பொதுமேலாளர் வைரமணியை விடுப்பில் செல்லும்படி சென்னையில் உள்ள இயக்குனரகம் உத்தரவிட்டதால், அவர் 2 மாத விடுப்பில் சென்றுவிட்டார். தற்போது பொதுமேலாளராக ராமநாதபுரம் மாவட்ட பொதுமேலாளர் அரங்கண்ணல் கூடுதல் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இந்த ஆண்டு தடையின்றி கள்ளழகர் அங்கு தங்கிச் செல்ல உள்ளார். காலங்காலமாக நடந்து வரும் பொதுவான கலாச்சார நிகழ்ச்சி அதிகாரியால் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பது வேதனைக்குரியதே. (தினமலர் தனக்கு பிடிக்காத எந்த அதிகாரியும் விட்டுவைக்காது, சமீபத்திய உதாரணம் காமராஜர் பல்கலைக்கழக துனைவேந்தர் திரு.மருதமுத்து)

நன்றி: தினமலர்

முதலில் எல்லா அரசாங்க அலுவலகங்களில் இருந்தும் கடவுள் என்று சொல்லப்படுகிறன்றவர்களின் படங்கள் அகற்றப்படவேண்டும். மேலும் பண்டிகையை சாக்காகவைத்து பணம் வசூலித்து கொண்டுவதை தவிர்க்க வேண்டும், அதிலும் குறிப்பாக இந்த ஆயுபூஜையை சாக்க வைத்து இவர்கள் எல்லாரிடமும் பணம் வசூலித்து அதை [b]டாஸ்மார்கில் கொடுக்கும் இவர்கள் எல்லாம் பக்தர்களா? கொடுமை!!! இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்பதை சொன்னால் மட்டும் போதாது செயலிலும் காண்பிக்க வேண்டும்

http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=13589#13589

பின்னூட்டமொன்றை இடுக

Filed under கள்ளழகர், தினமலர், பக்தர்கள், மதுரை

குட்டீஸ் கார்னர்

1. அமெரிக்காவிலுள்ள இண்டியானா பல்கலைக் கழகத்திலுள்ள முதன்மை நூலகம் ஆண்டுதோறும் மூழ்கிக் கொண்டே இருக்கிறது. ஏனென்றால், இதை கட்டும் பொழுது இன்ஜினியர்கள் அங்கு வைக்கும் புத்தகங்களின் எடை மற்றும் அவை ஆக்கிரமிக்கும் இடம் இவற்றை கணக்கிடுவதில் தவறு செய்துவிட்டனர். அதனால்தான் இந்த நிலமை.

2. நைஜீரியாவின் தென் மேற்கு பகுதியிலுள்ள விவசாய நகரத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒரு ஜோடி இரட்டையர்கள் இருந்தனர். பல குடும்பத்தில் இரண்டு ஜோடி இரட்டையர்கள் இருந்தனர். அவ்வூர் தலைவரான 71 வயதுடைய ஒலைடி அகின்யமிக்கு மூன்று ஜோடி இரட்டையர்கள் பிறந்தனர். அவருடைய தந்தைக்கு பத்து ஜோடி இரட்டையர் பிறந்தனராம்!

3. பிரான்ஸ் நாட்டில் லாப்லுõ என்ற இடத்தில் 1968ம் ஆண்டு இடியுடன் கூடிய புயல் ஏற்பட்டது. அப்போது மின்னல் ஒன்று ஆட்டு மந்தையை தாக்கியது. அதில் இருந்த கறுப்பு ஆடுகள் அனைத்தும் இறந்தன. ஆனால், வெள்ளை ஆடுகளை மட்டும் மின்னல் தாக்கவில்லை. மின்னலே நீ கூட கறுப்பு, வெள்ளை வித்தியாசம் பார்ப்பியா?

4. ஜெர்மென் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருத்தி தன் செல்ல நாயின் முடிகளை கொண்டு சில ஆடைகளை தயாரித்து வியாபாரம் செய்தார். தன் செல்ல நாயின் முடியை தொடர்ந்து எடுத்து உரிய முறையில் பாதுகாத்து பிறகு இவைகளைக் கொண்டு ஸ்கார்ப், ஸ்வெட்டர், க்ளவ்ஸ் தயாரிக்கிறார்.


http://www.dinamalar.com/

பின்னூட்டமொன்றை இடுக

Filed under குட்டீஸ் கார்னர், சிறுவர் மலர், தினமலர்

தினமலர் இணைய தள வாசகர்களுக்கு தமிழ்ப்புத்தாண்டு பரிசு

தினமலர் இணைய தளத்தை கடந்த 10 ஆண்டுகளாக பார்த்து வரும் அனைத்து வாசகர்களுக்கும் எங்களுடைய இதயப்பூர்வ நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்ப் புத்தாண்டு முதல் தினமலர் இணைய தளம் புதிய வடிவமைப்பில் பொலிவான தோற்றத்துடன் வெளி வர இருக்கிறது. தோற்றத்தில் மட்டுமல்லாமல் வாசகர்களுக்கு அளித்து வரும் விஷயங்களிலும் மாறுதல்கள் செய்யப்பட்டு, பல புதிய தகவல்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

Launch Date Of New Site: 13- 04- 2008

Count Down Starts:

சில முக்கிய புதிய பகுதிகள் :

  • இணையதளம் முழுவதும் யுனிகோடு எழுத்துருவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

     

  • தமிழர்களுக்கான இணைய தளம் என்பதை உறுதி செய்யும் வகையில் தமிழ் மறையாம் திருக்குறளை நீங்கள் முழுமையாக பார்க்கவும் படிக்கவும் 3 பெரிய தமிழ் அறிஞர்களின் உரையுடன் முழுமையாக அளித்திருக்கிறோம். நீங்கள் விரும்பும் குறளைத் தேடிக் கண்டுபிடித்து பார்க்கவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

     

  • தமிழகத்தில் உள்ள சில முக்கிய நகரங்கள் தொடர்பான வரலாறு , சுற்றுலா உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சேர்ககப்பட்டுள்ளன. இந்த பகுதியில் மேலும் பல நகரங்களின் தகவல்கள் அணி வகுக்க இருக்கின்றன.

     

  • தினமலர் இணைய தளத்தில் வெளியாகும் செய்திகளை, உங்கள் நண்பர்களுக்கு இ- மெயில் மூலம் அனுப்பவும், அந்த செய்திகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை இதர வாசகர்களும் அறிந்து கொள்ளவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் செய்திகளை பிரிண்ட் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

     

  • உலக நாடுகளின் வானிலைகளை தமிழிலே அறிந்து கொள்ளலாம்

     

  • சினி வாசகர்களுக்காக சினிமா பகுதி புதிய வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது

  • RSS Feed வசதி செய்யப்பட்டுள்ளது

     

  • வாசகர்களை ஆச்சரியப்படுத்த இதுபோன்ற மேலும் பல புதிய பகுதிகளுடன் உங்களைத் தேடி வரும் தினமலர் இணைய தளத்தில் காணப்படும் புதுமைகள் குறித்து வாசகர்களின் மேலான விமர்சனங்களை வரவேற்கிறோம். உங்கள் கருத்துக்கள் அடிப்படையில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.
  • http://www.dinamalar.com/

    பின்னூட்டமொன்றை இடுக

    Filed under இணைய தளம், தினமலர்

    தினகரன் பத்திரிக்கை எந்த செய்தியை போடுகிறார்களோ இல்லையோ?இதை மட்டும் போட்டோவோட பெரிசா போட்டுருவாங்கோ?

    தினகரன் பத்திரிக்கை எந்த செய்தியை போடுகிறார்களோ இல்லையோ?இதை மட்டும் பெரிசா போட்டுருவாங்கோ?(சூடான இடுகையில் பங்கு பெற ஏக்கம் இருந்தாலும் வழியில்லாமல் போனதாக கூட இருக்கலாம்)

    தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி

    தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதி
    பொய்ச் செய்தி வெளியிட்டதற்காக

    தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கு 3 மாதம் சிறை

    வெளியீட்டாளர் லட்சுமிபதிக்கும் ஜெயில்

    சென்னை, மார்ச் 28-
    பொய்ச் செய்தி வெளியிட்ட வழக்கில் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கும் வெளியீட்டாளர் லட்சுமிபதிக்கும் 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
    கடந்த 2001ம் ஆண்டு ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் பிட் அடிக்க தலைமை ஆசிரியர் சேதுராமன் உதவி செய்ததாகவும், அதனால் அவர் சஸ்பெண்ட்செய்யப்பட்டதாகவும் அந்த பத்திரிகையில் வெளியான செய்தி பொய்யானது என்று கூறி தலைமை ஆசிரியர் வழக்கு தொடர்ந்திருந்தார். எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் பாக்கியஜோதி முன்பு தாக்கல் செய்த மனுவில் அவர் கூறியதாவது:
    தினமலர் வெளியிட்ட பொய்ச்செய்தி, என்னை பெரிதும் பாதித்துவிட்டது. அது பொய்ச் செய்தி என்பதை சுட்டிக்காட்டி 2001 ஏப்ரலில் பதிவுத் தபால் மூலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால், தினமலர் ஆசிரியர் பதிலே சொல்லவில்லை.
    செய்தி முழுவதும் பொய்யானது. என்னை யாரும் தற்காலிக பணிநீக்கம் செய்யவில்லை. பொதுமக்களிடம் எனக்கு இருந்த மரியாதையை குலைக்க உள்நோக்கத்துடன் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
    வழக்கு விசாரணை முடிந்து செவ்வாயன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தினமலர் பத்திரிகையின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோர் எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இருவருக்கும் தலா 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.
    “தினமலர் பத்திரிகை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோர் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் மேல்முறையீடு செய்ய அவகாசம்அளிக்கப்பட்டுள்ளதால் கிருஷ்ணமூர்த்தியும் லட்சுமிபதியும் இப்போது கைது செய்யப்பட வேண்டியதில்லை” என்று மனுதாரரின் வக்கீல்கள் சரவணன், ஏகாம்பரம் ஆகியோர் குறிப்பிட்டனர்.

    http://tm.dinakaran.co.in/firstpage.aspx?global.eid=Tamil%20Murasu%20E1#

    பின்னூட்டமொன்றை இடுக

    Filed under சூடான இடுகை, செய்தி, தினகரன், தினமலர்

    தினகரன் பத்திரிக்கை எந்த செய்தியை போடுகிறார்களோ இல்லையோ?இதை மட்டும் போட்டோவோட பெரிசா போட்டுருவாங்கோ?

    தினகரன் பத்திரிக்கை எந்த செய்தியை போடுகிறார்களோ இல்லையோ?இதை மட்டும் பெரிசா போட்டுருவாங்கோ?(சூடான இடுகையில் பங்கு பெற ஏக்கம் இருந்தாலும் வழியில்லாமல் போனதாக கூட இருக்கலாம்)

    தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி

    தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதி

    பொய்ச் செய்தி வெளியிட்டதற்காக

    தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கு 3 மாதம் சிறை

    வெளியீட்டாளர் லட்சுமிபதிக்கும் ஜெயில்

    சென்னை, மார்ச் 28-
    பொய்ச் செய்தி வெளியிட்ட வழக்கில் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கும் வெளியீட்டாளர் லட்சுமிபதிக்கும் 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
    கடந்த 2001ம் ஆண்டு ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் பிட் அடிக்க தலைமை ஆசிரியர் சேதுராமன் உதவி செய்ததாகவும், அதனால் அவர் சஸ்பெண்ட்செய்யப்பட்டதாகவும் அந்த பத்திரிகையில் வெளியான செய்தி பொய்யானது என்று கூறி தலைமை ஆசிரியர் வழக்கு தொடர்ந்திருந்தார். எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் பாக்கியஜோதி முன்பு தாக்கல் செய்த மனுவில் அவர் கூறியதாவது:
    தினமலர் வெளியிட்ட பொய்ச்செய்தி, என்னை பெரிதும் பாதித்துவிட்டது. அது பொய்ச் செய்தி என்பதை சுட்டிக்காட்டி 2001 ஏப்ரலில் பதிவுத் தபால் மூலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால், தினமலர் ஆசிரியர் பதிலே சொல்லவில்லை.
    செய்தி முழுவதும் பொய்யானது. என்னை யாரும் தற்காலிக பணிநீக்கம் செய்யவில்லை. பொதுமக்களிடம் எனக்கு இருந்த மரியாதையை குலைக்க உள்நோக்கத்துடன் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
    வழக்கு விசாரணை முடிந்து செவ்வாயன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தினமலர் பத்திரிகையின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோர் எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இருவருக்கும் தலா 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.
    “தினமலர் பத்திரிகை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோர் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் மேல்முறையீடு செய்ய அவகாசம்அளிக்கப்பட்டுள்ளதால் கிருஷ்ணமூர்த்தியும் லட்சுமிபதியும் இப்போது கைது செய்யப்பட வேண்டியதில்லை” என்று மனுதாரரின் வக்கீல்கள் சரவணன், ஏகாம்பரம் ஆகியோர் குறிப்பிட்டனர்.

    http://tm.dinakaran.co.in/firstpage.aspx?global.eid=Tamil%20Murasu%20E1#

    2 பின்னூட்டங்கள்

    Filed under சூடான இடுகை, செய்தி, தினகரன், தினமலர்

    தினமலரின் நடுநிலை முகமூடி போட்டோவுடன் கிழிப்பு

     
    பீகார் மாநிலத்தில் ஒரு பெண்ணை பிடித்து மரத்தில் கட்டிவைத்து சித்தரவைதை செய்த கொடுமை நடந்துள்ளது.இதன் காரணத்தை எழுதும் தினமலர் அந்த பெண்ணுக்கு பேய் பிடித்துவிட்டதாக கூறி ஊர்மக்கள் அடித்ததாக வேளியிட்டு உள்ளது.
     
    ஆனால் ஹிந்து பத்திரிக்கை இது ஒரு தலித் பெண் மீது நடத்தப்பட்ட கொடுமை என்று விளக்கி உள்ளது
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    Torture of Dalit woman rocks Bihar Assembly

    K. Balchand

    PATNA: The Opposition parties created a furore in the Bihar Assembly on Wednesday raising the issue of the manner in which a Dalit woman was tortured and subjected to disgrace in a village in Patna district on Thursday.

    The Opposition accused the Nitish Kumar government of failing to protect even women in the State. They alleged that Dalits were being subjected to torture and disgrace by the feudal elements in the absence of fear of the law. The Chief Minister agreed to make a statement on the incident after having it investigated.

    The incident

    Ramayodhya Rai of Adalchak Dumaria village had tied 45-year-old Lalpari Devi, a Dalit, to a tree, beat her up mercilessly and sheared her hair. The arrival of the police saved her life.

    Rai had called Lalpari Devi from a neighbouring village to treat his mentally ill wife.

    When his wife’s condition deteriorated, Rai vented his anger against Lalpari Devi accusing her of misusing her witchcraft.

    FIR filed

    His neighbours turned the scene into a frenzy. The police rescued her, filed an FIR and arrested six persons including Rai.

    Lalpari Devi was admitted to a hospital and released after treatment on Friday.
     

    பின்னூட்டமொன்றை இடுக

    Filed under அல்லாஹ், இந்து, இஸ்லாம், செய்தி, தினமலர், ஹிந்து

    ஆஹா தினமலருக்கு என்ன ஒரு மத சகிப்புத்தன்மை

    ஆஹா தினமலருக்கு என்ன ஒரு மத சகிப்புத்தன்மை என்று வியற்கும் அளவுக்கு இன்று மூன்று மதங்களின் செய்தியையும் தினமலர் வெளியிட்டு இருந்தது.அதில் இரண்டு உங்கள் பார்வைக்கு
     
     
     
     
     
     
     
     
    இன்று புனித வெள்ளி: சிலுவையின் மகிமை

    ஏழைக்கோலத்தில் உலகில் பிறந்த இயேசு, கொடூர சிலுவை மரணத்தை சந்தித்தார்.

    சிலுவை மரணம் என்பது சமூகத்தில் மிகவும் கடுமையான குற்றம் புரிந்தவர்களுக்கு வழங்கப்படுவது. ஆனால் குற்றமற்ற பரிசுத்தராக விளங்கிய இயேசுவின் மூலம் சிலுவை தற்போது புனித சின்னமாக விளங்கியது. பாவம் போக்க ரத்தப்பலி தேவை என்பது பழங்காலத்திலிருந்து இன்றுவரை மனுக்குலத்தில் தேவையாக இருக்கிறது. எனவே தன்னையே பாவ நிவாரணப்பலியாக கொடுத்து சிலுவை மரணத்தை ஏற்றார் இயேசுபிரான். அவர் உயிர்த்தெழுந்த பிறகும், அவரை நம்பினவர்களை ரோம அரசாங்கமும், யூத மதக்குருக்களும் மிகவும் கொடுமை படுத்தி வந்தனர். இந்நிலையில் கி.பி.306ல் ரோமப்பேரரசராக ஆட்சி செய்த கான்ஸ்டன்டைன், ஸ்பானியா தேசத்துடன் போர் புரியச் சென்றான். அப்போது வானத்தில் சிலுவை காட்சியைக் கண்டான். "நீ வெற்றி பெறுவாய்' என்ற சத்தமும் கேட்டது.

    அந்த போரில் எதிர்பாராத விதத்தில் அற்புதமாக வெற்றி பெற்றான். உடனே தன் தேசத்தில் வெற்றி விழா கொண்டாடியதுடன், சிலுவைக்கு சொந்தமான இயேசுவையும், கிறிஸ்தவர்களையும் அறிந்து விசாரித்தான். அன்று முதல் மனம் மாறியவன், கிறிஸ்தவர்களிடத்தில் அன்பாக நடந்து கொண்டதுடன், இயேசுவை தன் சொந்த தெய்வமாக ஏற்று கொண்டான். கி.பி.313ல், ரோம் நகரம் முழுவதும் இயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொள்ளவும், உலக வரலாற்றில் இயேசுவை மையப்படுத்த வேண்டும் என்ற கட்டளையையும் பிறப்பித்தான். உடனே இயேசுவை மையமாக வைத்து, ஆதாமிலிருந்து கிறிஸ்து வரை கி.மு.என்றும், இயேசுவுக்கு பின் கி.பி.என்றும் வரலாறு எழுத கட்டளையிட்டான். இயேசுவின் பிறப்பின் ஆண்டை கி.பி.1 ஆக வைத்து, கிறிஸ்து இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்வை ஆதாரமாக நம்பி, உலகில் பெரும்பாலான நாடுகளில் கிறிஸ்துவை தெய்வமாக ஏற்றுள்ளனர்.
     

    இன்று மிலாடி நபி: சரித்திர நாயகர் நபிகள் நாயகம்குமார்

    மனிதர்கள் மிருக குணத்துடன் வாழ்ந்த வேளையில், அவர்களை நல்வழிப்படுத் துவதற்காக இறைவனால் அனுப்பப்படும் துõதுவர்களாக நபிமார்கள் விளங்கினர்.

    இவ்வுலகிற்கு இறைவனால் 24 நபிமார்கள் அருளப்பட்டுள்ளனர். இவர்களில் இருபத்தி மூன்றாவதாக பூமிக்கு வந்த ஹஜ்ரத் ஈஸா (அலை) அவர்கள் கி.பி.33ம் ஆண்டு ஏப்ரல் 3ல் விண்ணகத்திற்கு உயர்த்தப்பட்டார்கள். அதன்பிறகு சுமார் 500 ஆண்டுகள் வரை எந்த ஒரு நபியும் பூமிக்கு வரவில்லை. இதன் காரணமாக உலகமக்கள், கிட்டத்தட்ட மிருகங்களாகவே மாறிவிட்டனர். அவர்களது வாழ்க்கை முறை மிகவும் மோசமாக இருந்தது. குறிப்பாக அரபுநாட்டில் வாழ்ந்தவர்களின் நிலைமை படுமோசமாக இருந்தது. அங்கே குடிப்பதும், பெண் குழந்தைகள் பிறந்தால் கொன்று புதைப்பதும், சமூக விரோத செயல்களும் ஆக்கிரமித்திருந்தது. ஒவ்வொரு சக்திக்கும் ஒவ்வொரு தெய்வம் என்ற முறையில் இன்றுள்ள காஃபாவில் 360 விக்ரகங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய பாவகரமான வாழ்க்கையை மேற்கொண்டிருந்த மக்களை சீர்திருத்த அல்லாஹ்வால் பூமிக்கு அனுப்பப்பட்ட மாமணிதான் நபிகள் நாயகம்.

    நபிகள் நாயகம் கி.பி.570, ரபியுல் அவ்வல் மாதம் 12ம் தேதி மெக்கா நகரில் அவதரித்தார். இவரது தந்தை ஹஜ்ரத் அப்துல்லாஹ். தாய் ஹஜ்ரத் ஆமீனா. நாயகத்தின் முழுப்பெயர் "ஹஜ்ரத் முஹம்மத் முஸ்தபா அஹ்மத் முஸ்தபா ரஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' என்பதாகும். இவர் பிறப்பதற்கு முன்னதாகவே தந்தை அப்துல்லாஹ் இறந்துவிட்டார். தாயார் ஆமீனா இவர் பிறந்த 6ம் ஆண்டில் காலமாகிவிட்டார். எனவே ஹஜ்ரத் அப்துல் முத்தலிப் என்று அழைக்கப்பட்ட இவரது பாட்டனார் நாயகத்தை வளர்த்துவந்தார். பிறகு அவரும் காலமாகிவிடவே சிறியதந்தை ஹஜ்ரத் அபுதாலிப் என்பவரின் பராமரிப்பில் வளர்ந்துவந்தார். நபிகள் நாயகம் இளமையிலேயே செல்வாக்குடனும், நற்குணத்துடனும் திகழ்ந்தவர். இதன் காரணமாக மக்கள் அவரை "அல்மீன்' (நம்பிக்கையாளர்), என்றும், "அஸ் ஸாதிக்' (உண்மையாளர்) என்றும் பாராட்டினர்.

    23ம் வயதில் இவர் கதீஜா (ரலி) அம்மையாரை திருமணம் செய்துகொண்டார். 40ம் வயதில் இவரை தனது தராக அல்லாஹ் அறிவித்தான். நாயகத்திற்கு 11 மனைவிமார்கள் இருந்தனர். இவர்கள் மூலம் 7 குழந்தைகள் பிறந்தார்கள். ஆண்மக்கள் மூவரும் குழந்தையாக இருந்தபோதே இறந்துவிட்டனர். பெண்களில் நான்காவதாக பிறந்த பாத்திமா (ரலி) அம்மையார் இவருக்கு இரண்டு பேரன்மாரை பெற்றுத்தந்தார். அவர்களுக்கு ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) என பெயரிடப்பட்டது. பாத்திமா அம்மையாரை "சுவர்க்கத்து பெண்களின் தலைவி' என இஸ்லாமிய மக்கள் போற்றுகின்றனர். நபிகள் நாயகம் இறைவனால் துõதராக அறிவிக்கப்பட்டதும், ""நமது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே. நான் அவனுடைய துõதனாக இருக்கிறேன்,'' என்று சொன்னார். இதைக்கேட்ட மெக்காவாசிகள் அவரை கொடுமை செய்தனர். 53ம் வயது வரை அவர் இந்த கொடுமையை கடுமையாக அனு பவித்தார். இதன் காரணமாக மெக்காவிலிருந்து 450 கி.மீ. துõரத்திலுள்ள மெதீனாவுக்கு அவர் குடிபெயர வேண்டியதாயிற்று. மெதீனாவில்தான் நாயகத்தை ஆதரித்த மக்களின் எண்ணிக்கை பெருகியது. இதன்பிறகு பல யுத்தங்கள் செய்து மெக்கா நகர மக்களையும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளச் செய்தார் நாயகம். நபிகள் நாயகம் மிகுந்த பணிவுடையவர். பிறரது துன்பத்தை நீக்குவதில் இவருக்கு இணை இவர்தான். அவர் இவ்வுலகில் தனது 63ம் வயதுவரை வாழ்ந்தார். கி.பி.632, ரபியுல் அவ்வல் மாதம் 12ம் தேதியில் இவ்வுலகை துறந்தார். அவர் பிறந்ததும் மறைந்ததும் ஒரே நாளில்தான். இந்த நாளையே "மிலாடி நபி' என்னும் பெயரில் விழாவாக கொண்டாடுகிறார்கள்.

    http://www.dinamalar.com/2008Mar21/general_tn49.asp

    1 பின்னூட்டம்

    Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், தினமலர், முகமது