Category Archives: சாதிகள்

வன்னிய கிறித்தவர்களும்,தலித் கிறித்தவர்களும் இயேசுவை மறுபடியும் சிலுவையில் அறையும் காட்சி.

இந்தியாவெங்கிலும் ஏராளமான இந்து கோவில்கள் பூட்டப்பட்டு பாழடைந்து கிடப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.காரணம் என்ன என்று நாம் ஆராய்ந்தால் மேல் சாதிக்காரர்களுக்கும்,கீழ் சாதிக்காரர்களுக்கும் இடையே நடந்த சண்டையால் அந்த கோவிலை பூட்டி இருப்பார்கள்.இந்துக் கோவில்க இப்படி பூட்டப்படுவது ஒரு பெரிய பிரச்சனை இல்லை.

ஏன் என்றால் இந்து கடவுள்களே இந்த சாதிப் பிரிவுகளை உண்டாக்கி இருப்பதால் சாதி சண்டை வரத்தான் செய்யும் ஆனால் இதில் நாம் கவனிங்க வேண்டியது இதே பிரச்சனைகள் கிறிஸ்தவத்தின் பெயரில் அரங்கேறுவதை பார்க்கும் போது தான் இயேசுவை இவர்கள் மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துவதாகவே நினைக்கத்தோன்றுகிறது.

இதில் சண்டையில் ஈடுபட்ட இரண்டு பேறுமே சொல்லப்போனால் கீழ் சாதிகள் தான்.வன்னியன் என்றால் என்ன பாப்பான் என்று நினைப்போ?பாப்பானுங்க்கு முன்னால் எல்லாமே அடிமைகள் தான்.இதை புரிந்து கொள்ளாமல் மற்றவனை கீழ் சாதியாக நினைப்பதை என்ன கொடுமை என்று நினைப்பது?நான் கீழ் சாதியாக இருந்தால் பரவாயில்லை.எனக்கு கீழ ஒரு சாதி இருக்குல்ல என்று அடிமைத்தனத்தில் சுகம் காண்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.


ஆனால் இந்து மதத்தில் இருக்கும் போது நீ என்ன சாதியாவோ இருந்துட்டு போ.ஆனால் கிறிஸ்தவத்துக்கும் சாதிக்கு என்ன சம்மந்தம்.இயேசு கிறிஸ்து யூதர்களால் கீழ் சாதிகள் என்று சொல்லப்பட்ட சமாரியர்கள் வாழ்ந்த கிராமத்தில் தங்குவது மட்டும் அல்லாமல் அவர்களை மிகவும் நேசிக்கவும் செய்தார்.http://www.tamilchristians.com/modules.php?name=Bible&bno=43&cho=4 யோவான் நான்காம் அதிகாரத்தில் இந்த சம்பவத்தை நீங்கள் காணலாம்.


அவரிடத்தில் அநேக கிரேக்கர்கள் கூட விரும்பி வந்தனர்.இப்படி இருக்க கிறித்தவத்துக்கும் ,சாதிக்கும் என்ன சம்மந்தம்.

கீழே உள்ள விவிலிய வார்த்தைகளை பாருங்கள்

யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.கலாத்தியர் 3:28

அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார். கொலோசெயர் 3:11

யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். ரோமர் 10:12

ஆனால் விவிலியம்(பைபிள்) இப்படிச்சொல்லும் போது தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லும் இவர்களை எப்படி தங்களை வன்னிய கிறித்தவர்கள் என்றோ,அல்லது நாடார் கிறித்தவர்கள் என்று அழைத்துக்கொள்ள முடியும்.கண்டிப்பாக முடியாது.அரசாங்க அற்ப உதவி பெற்றுக்கொள்ள தங்களை தலித்துகள் என்ற அடையாளத்தை கழைந்து எரியக்கூட இவர்கள் தயங்கி நின்று தங்களை தலித் கிறித்தவர்கள் என்று அடையாளப்படுத்தக் கூட இவர்கள் வெட்கப்படுவது இல்லை.

ஏன் இந்த மாய்மாலம்.இந்து மதத்தை தூக்கி எரிந்துவிட்டு வந்த இவர்களால் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஏன் உதறிவிட்டு வர முடியவில்லை.கிறித்தவ மதத்துக்கு மாறிவிட்டோம் என்று பீத்திக்கொள்ளும் இவர்களால் ஏன் கிறித்தவ மதத்தின் அடிப்படைக்கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கிறித்தவ மதத்தில் எல்லா பிரிவுகளிலும் சாதி உண்டா என்பதை யோசித்து பார்க்க வேண்டியது தானே.ஒரு வேளை சாதியை பிடித்து தொங்கும் கிறித்தவப் பிரிவுகளை உதறித்தள்ளி விட்டு வேறு சாதியை காரணம் காட்டாத எத்தனையோ பிரிவுகளுக்கு மாறி போகவேண்டியதுதானே.

தனியாக கோவில் கட்டியதாக சொல்லும் தலித் கிறித்தவர்கள் ஏன் உங்கள் பழைய பிரிவிடத்தில் சென்று குருவானவரை கேட்டீர்கள்.நீங்களே உங்களில் ஒருவரை குருவாக்கி வேறு பிரிவாக அந்த கோவிலை மற்றி இருக்கலாமே.ஆனால் இதை செய்யாமல் ஏன் இப்படி கிறித்துவுக்கு அவமானச்சின்னங்களாக வாழ்கிறீர்கள்.

கடைசியாக

கத்தோலிக்க,சி எஸ் ஐ ,பெந்தேகோஸ்தே திருச்சபை மக்களே நான் கடைசியாக சொல்ல விரும்புவது நீங்களும் உங்கள் திருச்சபைகளும் கிறித்துவுக்கு அடையாளங்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளீர்கள் என்று மறந்து அவருக்கு அவமானத்தை உண்டாக்குபவர்களாக மாறாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

உங்கள் சபைக்கு வரும் ஏந்த சாதியினரையும் முதலில் அவர்கள் சாதியை மறக்க போதியுங்கள்.அவர்கள் என்ன சாதி என்பதே அவர்கள் மற்ந்து போக செய்யுங்கள்.கிறித்துவின் அன்பில் மட்டும் அவர்கள் இணைந்து கொள்ள செய்யுங்கள்.

இப்படி நீங்கள் செய்ய ஆரம்பித்தால் எத்தனை கைகள் மறைத்தாலும் ஆதவனை மறைக்க முடியாது என்பது போல் எவ்வளவு கோடி பேர் எழுந்து எதிர்த்தாலும் கிறித்துவின் அன்பை மக்கள் ஏற்றுக்கொள்ளுவதை ஒருவனும் தடுக்க முடியாது.இது நிச்சயம்

1 பின்னூட்டம்

Filed under அல்லாஹ், இந்து, இயேசு, இஸ்லாம், கிறிஸதவம், சாதிகள், முஸ்லீம்

சாதிகள் இல்லையடி பாப்பா

சாதிமுறை பற்றி கீதை!

பகவான் கண்ணனின் கதையை படக்கதையாக படித்தும், “பிருந்தாவனத்தின் நந்தகுமாரன் யாவருக்கும்…”, “ஆயப்பாடி மாளிகையில்…”, “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…” என பாடல்களில் கண்ணனுடன் பயணித்து வெண்ணை திருடி, கோபியர்களுடன் ஆடல் பாடல் என கற்பனையில் பயணித்து உருகியிருக்கிறேன். அந்த கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை.

அர்சுனனுக்கு வந்த கடமையின் குழப்பத்தை நீக்க கிருஸ்ண பரமாத்மா நிகழ்த்திய நீண்ட பிரசங்கம் தான் கீதை. இன்று கீதையை இந்துக்களின் புனித நூலாக பார்ப்பனீயம் திணித்திருக்கிறது. கண்ணன் பற்றியும் அவன் அருளியதாக சொல்லப்படுகிற பகவத்கீதை பற்றியும் அறியும் ஆவல் அதிகமானது. 2002 ஆம் ஆண்டு முதல் இந்த அறிவுத்தேடலை துவங்கினேன். அந்த தேடல் தற்போதைய காலத்தில் வளர்ச்சி பெறுகிறது. அறிவுக்கண் திறந்து கண்ணனை ஒரு அரசியல் சூத்திரத்தில் இயங்கியவனாக பார்க்க துவங்கிய போது, குறும்பான கண்ணனின் வேடம் கலைந்து, அவனது புல்லாங்குழல் உடைந்து கொடிய வில்லாக மாறுகிறது. கீதையை மேலோட்டமாக பார்க்கையில் நல்லவையாக தென்படுகிறது. ஆழ்ந்த சிந்தனைக்கு பின்னர், அதே வார்த்தைகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியல் சூத்திரத்தை கொண்டுள்ளதை அறிய முடிகிறது. அதன் தொடர்ச்சியாக கீதையின் அடிமைக் கட்டுகள் என்ற பதிவை தொடர்ந்த பதிவு இது.

பார்ப்பனீய மதத்தின் தத்துவங்கள் குலவழிபாடு, நாட்டார் தெய்வங்கள் என வழிபடும் மக்களையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் வேதங்கள் பெயரில் அடக்கி வைத்திருக்கிறது. இந்த வேதங்கள் கர்மா, தர்மம் என மக்கள் மனதில் விதைத்துள்ள நம்பிக்கைகள் ஆழமானது. அவற்றிலிருந்து விடுபட இயலாத அளவு கடவுளை முன்னிறுத்தி பார்ப்பனீயவாதிகள் தங்களுக்கு சாதகமான கதைகளை, புராணங்களை புனைந்துள்ளனர். பகவத்கீதையும் இதற்கு விதிவிலக்கல்ல. சாதியாதிக்க அடக்குமுறையான வர்ணாஸ்ரம தர்மத்தை கீதை மிக அழுத்தமாக போதிக்கிறது. இந்த கருத்தை விவாதங்களில் முன் வைக்கிற வேளைகளில் பார்ப்பனீய சிந்தனையாளர்கள் கீதையில் எந்த இடத்திலும் சாதி இல்லை என்று சாதிக்க முனைகிறார்கள்.

கீதைக்கு திராவிடர் கழகத்தின் வீரமணி அவர்களது பொருளுரையை சொன்னால் விடுவார்களா இன்றைய வலையுலக பார்ப்பனீய சிந்தனையாளர்கள்? ஆகவே, காஞ்சி மகாப்பெரியவரின் விளக்கவுரையிலிருந்து சில பகுதிகள்… (மேற்கோள் காட்டப்படுகிற பகுதி (தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகம்) என்ற புத்தகத்திலிருந்து, வேதம், பிராம்மணரல்லாதார் விஷயம் என்ற தலைப்பிலிருந்து எடுக்கப்பட்டவை) . இனி மகாப்பெரியவர் பேசுகிறார்…

பிராம்மணன் தவிர மற்றவர்கள் பரிசுத்தியாக வேண்டாமா?அவர்களுக்கு இந்தக் கர்மாநுஷ்டானம் அத்யயனம், இவை இல்லையே என்றால், அவரவருக்கும் அவரவர் செய்கின்ற தொழிலே சித்தசுத்தியைத் தருகிறது. எந்த ஜாதியானாலும், தங்களுக்கு ஏற்பட்ட கர்மாவை (தொழிலை)ச் செய்து அதை ஈச்வரார்ப்பணம் பண்ணினால் ஸித்தி அடைந்து விடுகிறார்கள்.

பார்ப்பனீய மதத்தின் படி சூத்திரர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தொழிலை (கர்மாவை) செய்தால் அவர்களுக்கு ஸித்தி கிடைக்குமாம். அதை மீறி வேறு வேலை செய்தால் அவர்களுக்கு ஸித்தி இல்லையா? வேதனையுடன் “இது என் கர்மா(ம்)” என நொந்தபடியே மலம் அள்ளியும், பிணங்களை புதைத்தும், அழுக்கு துவைத்தும், முடிவெட்டியும், கழை பிடுங்கியும் வேலை செய்பவன் காலங்காலமாக அதே அவலத்தில் வாழவேண்டுமா? சமூகத்தில் அனைவரும் உடல்நலமுடன் வாழ தங்களை வருத்தி உழைக்கிற மக்கள் மனித மரியாதை இல்லாமல் நாயை விட கேவலமாக நடத்தப்படுவதை பொறுத்து அதே தொழிலை தொடர்ந்து செய்யவேண்டுமா? கர்மாவை மீறுவது கூடாதது என சங்கராச்சாரியார் சாதிக்கிற வர்ணாஸ்ரம முயற்சி இங்கு அம்பலமாகிறது.

இன்னும் கேளுங்கள் மகாபெரியவரின் வார்த்தைகளில்…

இந்த விஷயத்தை பகவான் கீதையில் (xviii.46) தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

ஸ்வகர்மணா தம் அப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மானவ

யுத்தம் செய்வது, காவல் காப்பது முதலான தொழில் ஒருத்தனுக்கு ஏற்பட்டிருக்கிறது. இன்னொருவன் வியாபாரம் செய்கிறான், பசுவை ரக்ஷிக்கிறான். வேறொருவன் இந்த நாளில் தொழிலாளர்கள் என்று சொல்கிற labour force ஆக இருக்கிறான். பிராம்மணன் சமூகத்துக்காகச் செய்ய வேண்டிய தொழில் என்ன? இந்த லோக ரீதியில் மற்றவர்கள் தொழில் செய்கிறார்கள். ஆனால் நம்முடைய பரமாத்மாவின் அநுக்ரஹந்தானே எல்லாவற்றுக்கும் முக்யமாக வேண்டியிருக்கிறது? அதை ஸகல ஜாதியாருக்கும் ஸம்பாதித்துக் கொடுப்பதற்கான காரியங்களே பிராம்மணனுக்கு ஏற்பட்டவை….

…லோகரீதியிலேயே இவன்தான் (பிராமணன்) எல்லா வித்யைகளையும், சாஸ்திரங்களையும், மற்ற எல்லார் செய்கிற தொழில் முறைகளையும் நன்றாகப் படித்து, அவரவர்க்கும் உரிய தொழிலை அவரவர்களுக்குச் சொல்லி கொடுக்க வேண்டும். Teaching (கற்றுக் கொடுப்பதே) இவன் (பிராமணன்) தொழில். மற்ற தொழில்களை இவனே (பிராமணனே) செய்யாமல், அவற்றைப் பற்றிய நூல்களைப் பயில மட்டும் செய்து, அததற்கு உரியவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதோடு நிற்கவேண்டும். மற்றவர்களின் சரீரத்தைக் காப்பாற்றுகிற காவல் காரியம், வியாபாரம், உடலுழைப்பு முதலியவற்றைவிட, அவர்களுடைய தொழில் முறை, வாழ்க்கை நெறி இவற்றையே காப்பாற்றிக் கொடுப்பதன் மூலம், அவர்களுடைய மனஸையும், அறிவையும் ரக்ஷித்துக் கொடுப்பதான இந்தத் தொழில் ரொம்பவும் பொறுப்பு வாய்ந்ததாக இருக்கிறது….

சூத்திரன் உடலுழைப்பு செய்வதற்கும், பிராமணர்கள் கற்றுக்கொடுக்கவும் என்ற சாதி அடிமை முறையை கீதை வலியுறுத்துகிறது என்பது இதிலிருந்து விளங்குகிறது. பிராமணர்களுக்கு என தனி வேலை, சத்திரிய சாதியினருக்கு தனி வேலை, வைசியனுக்கு தனி வேலை, சூத்திரனுக்கு தனி வேலை என கீதை சொல்லுகிற கர்மாவை (தொழிலை) மேற்கோள் காட்டி இறந்து போன மகாபெரியவர் சங்கராச்சாரியார் (தி.க.வீரமணி அல்ல) சொல்லியிருக்கிறார். கர்மாவை மீறுவது சித்தியடைய தடையாகும் என்பது பார்ப்பனீய மத கோட்பாடு. நம் மக்கள் மத நம்பிக்கையில் ஊறியவர்கள், தெய்வகுற்றம் என எல்லாவற்றிற்கும் பணிந்து அடக்குமுறையான இந்த வர்ணமுறையை ஏற்று வாழ்க்கையில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் தலைமுறைகள் பல தொலைத்தவர்கள்.

BadNewsIndia என்ற வலைப்பூவில் சாக்கடையில் இறங்கி கழிவை அள்ளி எடுக்கிற ஒரு இளைஞனின் படமும், கழிவறையிலிருந்து மனித மலத்தை அள்ளி எடுக்கிற ஒரு முது வயது பெண்மணியின் படமும் போட்ட மனிதர்களா நாமெல்லாம்? தூ!!! என்ற பதிவை படித்தேன். சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட அந்த பதிவில் சம்பந்தபட்ட பேரூராட்சியின் தலைவரையும், அரசையும் இந்த நிலைக்கு கடிந்திருந்தார். இந்த சமூக அக்கறை பாரட்டப்படக்கூடியது. ஆனால் சம்பந்தப்பட்ட பதிவர் இப்படிப்பட்ட கொடுமைகளுக்கான அடிப்படை காரணத்தை புரிந்து கொள்கிறாரா தெரியவில்லை.

அந்த பதிவில் சங்கராச்சாரியின் வரிகளை பிரதிபலிக்கிற சில வரிகள்…

மனித கழிவை சுத்தப்படுத்தும் வேலை செய்வது ஒடுக்கப்பட்டவனோ இல்லை ‘உயர்’ ஜாதிக்காரனோ, அதை விடுங்கள். யாராவது செஞ்சுதான ஆவணும். என்ன இயந்திரம் வந்தாலும், மனிதனின் தயவு இல்லாமல் எந்த வேலையும் நடக்காது.

இந்த வேலையை ஏன் ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே செய்ய வேண்டும்? இதே கருத்தைத் தானே கீதையும் வேதங்களும் கூட வலியுறுத்துகிறது? இயந்திரங்கள் வந்தால் கூட இந்த வேலையை குறிப்பிட்ட மக்கள் மட்டுமே செய்ய வைக்கப்படுவார்கள். ஏன் மற்றவர்கள் இந்த வேலையை செய்யக்கூடாது அல்லது செய்ய முன் வரவில்லை? இந்த வேலைக்கான தொழில் நுட்பம் அவசியமானது அதில் மாறுபாடில்லை. இயந்திரம் வந்தால் எல்லா சாதியினரும் இந்த தொழிலை செய்ய முன் வருவார்களா? இதை பார்ப்பனீய மதம் அனுமதிக்குமா? ஒடுக்கப்பட்ட மக்கள் பூசை செய்ய அனுமதிக்காத பார்ப்பனீயவாதிகள், அதே தொழிலை செய்யுங்கள் உங்களுக்கு வாளியும், கூடைக்கும் பதிலாக தொழில்நுட்பம் தருகிறோம் என்பதன் பொருள் என்ன? ஒடுக்கப்பட்ட மக்கள் இப்படிப்பட்ட சலுகைகளை/உதவிகளை எதிர்பார்க்கவில்லை. சகமனிதனாக முழு விடுதலையே ஒடுக்கப்பட்ட மக்களின் தாகம்.

மனித கழிவை மனிதனே சுமக்கும் இந்த அவலம் தென்தமிழகம் முதல் பார்ப்பனீயவாதிகளின் கோட்டையான வட இந்தியா வரை இன்றும் நடைபெறுகிறது.

கீதை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான புனித நூலல்ல. பார்ப்பனீயத்தின் அரசியல் சூத்திரம். என் மாயக்கண்ணனின் வேடம் கலைகிறது…

(கலைவது இன்னும் தொடரும்)

2 பின்னூட்டங்கள்

Filed under இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், கீதை, சாதிகள், முஸ்லீம்