Daily Archives: ஏப்ரல் 4, 2011

தர்காவில் தற்கொலை தாக்குதல்; 41 பேர் பலி

பாகிஸ்தானில் தர்காவில் தற்கொலை தாக்குதல்; 41 பேர் பலி
தர்காவில் தற்கொலை தாக்குதல்; 41 பேர் பலி
இஸ்லாமாபாத். ஏப்.14-

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் தேரா காஷிகான் மாவட்டத்தில் 13-ம் நூற்றாண்டின் பழமையான அகமது சுல்தான் தர்கா உள்ளது. நேற்று அங்கு விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது மக்கள் கூட்டத்துக்குள் தற்கொலை படை தீவிரவாதிகள் புகுந்தனர்.

அவர்களை புலனாய்வு பிரிவு போலீசார் அடையாளம் கண்டு கொண்டனர். இதற்கிடையே அவர்கள் தர்காவுக்குள் நுழைய முயன்றனர். எனவே, உள்ளே செல்ல விடாமல் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அதற்குள் தற்கொலை படை தீவிரவாதிகள் 2 பேர் தர்கா வாசல் அருகே தங்கள் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தனர்.

இதனால் அங்கு பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. எங்கும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதை தொடர்ந்து பிதி அடைந்த மக்கள் அங்குமிங்கும் சிதறி ஓடினார்கள்.இந்த தாக்குதலில் 41 பேர் அதே இடத்தில் பலியானார்கள். 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் தேரா காஷிகானில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக பிதா ஹூசைன் (15) என்ற சிறுவன் கைது செய்யப்பட்டான். இத்தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஆக வில்லை. ஆனால் இந்த தர்காவுக்கு ஏற்கனவே தாக்குதல் மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன.

எனவே சன்னி பிரிவு அல்லது தலிபான் தீவிரவாதிகள் இந்த தாக்கு தலை நடத்தியிருக்கலாம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் யுசுப் ரசா கிலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்கள் மனித உயிர்களின் மதிப்பு தெரியாதவர்கள் என கூறியுள்ளார்.
source:maalaimalar

2 பின்னூட்டங்கள்

Filed under Uncategorized

தோனிக்கு பாரத்ரத்னா விருது!?

MS_Dhoni_300.jpg
பத்தாவது உலக கோப்பை தொடரின் பைனலில் தோனியின் தலைமையிலான இந்திய அணி, இலங்கையை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது. இது கடந்த 1983ல் கபில்தேவ் தலைமையில் பெற்ற வெற்றிக்குப் பின் கிடைத்த வெற்றி. அதுவும், இந்திய மண்ணில் கிடைத்த வெற்றி. தோனி தலைமையில் "டீம் ஒர்க்’காக கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்தியா முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இந்தியா கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஜனாதிபதி பிரதீபாபாட்டில் நேற்று ராஜ்பவனில் விருந்து அளித்தார். இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் பிருதிவ்ராஜ்சவான், கவர்னர் சங்கரநராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் பிரதீபாட்டீலுடன் அனைவரும் ஒன்றாக குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். இந்நிலையில் அணியின் கேப்டன் தோனிக்கு ஜார்க்கண்டில் உள்ள டேராடூன் மைதானத்திற்கு தோனியின் பெயர் வைக்க அரசு முடிவு செய்துள்ளது.மேலும் ஜார்க்கண்ட் முதல்வர் அர்ஜூன்முண்டா, கவர்னர் பரூக் ஆகியோர் ‌,தோனிக்கு பாரத்ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் பரிந்துரைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதுதவிர உலகக்கோப்பையில் இந்திய அணி இடம் பிடித்த வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ. 1 கோடிபரிசுத்தொகையும், விருதும் வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized