Daily Archives: மே 26, 2010

ஈழ விடுதலை கிடைக்கும் வரை ஓய்வில்லை ராம் நேர்காணல்

ஈழ விடுதலை கிடைக்கும் வரை என் பேச்சுக்கு ஓய்வில்லை
இயக்குநர் ராம் நேர்காணல்

Ram%2013.jpg

ற்று தமிழ் திரைப்படம் மூலமாக தமிழகத்தில் அறிமுகமான இயக்குநர் ராம் தன் படத்தில் தமிழ் படித்தால் என்ன நிலை என்பதை மக்களிடம் கொண்டு சென்றவர். சமீப காலமாக திரை நட்சத்திரங்களும் ஈழ விடுதலைக்காகவும் ஈழமக்களின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லும் நபர்களாகவும் இருந்து வருகின்றனர். அந்த வரிசையில் தான் இப்போது கற்றது தமிழ் இயக்குநர் ராம் ஈழ உணர்வாளர்களின் கூட்ட மேடைகளில் உணர்ச்சி கொந்தளிப்பாக காணப்பட்டு வருகிறார்.

தஞ்சை செங்கிப்பட்டியில் ஈழ விடுதலைக்காகவும், ஈழ தமிழர்களை கொல்லப்படுவதை தடுக்க கோரியும் தீ குளித்து உயிர் நீத்த முத்துக்குமாருக்கு முதல் சிலை அமைக்கும் இளந்தமிழர் இயக்கம் நடத்திய சிலை திறப்பு, முள்ளிவாய்க்கால் நினைவு தின பொது கூட்டத்தில் கலந்து கொண்டு ஈழத்தில் தமிழர்களுக்கு, தமிழ் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை சொல்லி கூடியிருந்த கூட்டத்தினையும் கண்ணீர் சிந்த வைத்தார். இந்த உணர்ச்சிகள் அடங்கும் முன்பாக அவரை நக்கீரன் இணைய தளத்திற்காக சந்தித்தோம்.

Ram%2011.jpg

நக்கீரன் : உங்கள் திரைப்பணி எப்படி உள்ளது. அடுத்த திரைப்படப்பணி என்ன ?

ராம் : என் திரைப்பணிகள் நன்றாக போகிறது. அடுத்து இரண்டு படங்களுக்கான வேலைகள் நடக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் எடுக்கப்படும். மக்களிடம் நல்ல கருத்துக்களை சொல்லக்கூடிய படமாகத்தான் அந்த படங்கள் இருக்கும். வசூல் அதிகமானால் வர்த்தக ரீதியாக படம்ன்னு சொல்றாங்க. ஆனா எல்லா படங்களுமே வர்த்தக நோக்கில் தான் எடுக்கப்படுகிறது.

நக்கீரன் : திரைத் துறையில் உள்ளவர்கள் பலர் இப்போது மேடை ஏறி பேசத் தொடங்கிட்டாங்களே? அந்த வரிசையில் தான் நீங்களுமா ?

ராம் : திரைக் கலைஞர்களும் உணர்வுள்ள தமிழர்கள் தானே. அவர்களுக்குள்ளும் உணர்ச்சிகள் இல்லாமலா இருக்கும். அந்த வகையில் தான் நானும் என் ஈழ சொந்தங்களுக்காக பேச வாய்ப்பு ஏற்பட்டுள்ளதை நினைத்து மேடை ஏறியிருக்கிறேன் .என் சின்ன வயசுல இருந்தே ஈழ உணர்வாளன் நான். அப்போது அதை வெளிக்காட்ட முடியல உள்ளுக்குள்ளேயேயும், நண்பர்கள்கிட்டயும் பேசி வேதனைப்படத்தான் முடிந்தது. ஆனால் இப்ப இது போன்ற மேடைகள் கிடைக்காததால நமக்கு தெரிந்த உண்மைகளை மக்களிடம் சொல்றேன். நானும் தமிழன் தானே எனக்கும் உணர்வுகள் இருக்கும் தானே. சகோதரர் முத்துக்குமார் தீக் குளித்தது தான் என்னை மேடை ஏற வைத்தது.

நக்கீரன் : இப்படி சொல்லிக் கொண்டு திரையிலிருந்து வந்தவர்கள் பலரை இன்று காண முடியவில்லையே?

ராம்: அவர்களின் சூழ்நிலை என்னவோ இப்போது வெளிவராமல் இருந்தாலும் அவர்களின் உணர்வுகள் வெளிவர வைக்கும். சூழ்நிலைக்காக அவர்கள் அமைதி காக்கலாம். அடுத்து தங்கள் பிழைப்பையும் பார்க்கனுமே.

நக்கீரன் : வழக்கு என்று வந்தால் நீங்களும் மறைந்து விடுவீர்களா ?

ராம் : ஏன் என்மீது வழக்குகள் வரப்போகிறது. என் இன மக்களுக்காக நான் பேசும் போது ஏன் என் மீது வழக்கு வரும். நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லையே அதனால நான் வழக்கில் சிக்கி கைதாகமாட்டேன். அடுத்து நடக்கும் கொடுமைகளை நாட்டின் இறையான்மைக்கு உட்பட்டே தான் என் பேச்சுகள் இருக்கும். இதுவரை அப்படித்தான் பேசி வருகிறேன்.

Ram%2010.jpg

நக்கீரன் : முத்துக்குமார் சிலை திறக்க வந்தீர்கள். சிலை திறக்கவிட வில்லையே ?

ராம் : ஆமாங்க ரொம்ப வேதனையா இருக்குது. ரொம்ப ஆர்வத்தோட வந்தேன். உலகின் முதல் சிலையை இளந்தமிழர் இயக்கம் திறக்குதுன்னு சொல்லித்தான் அதன் ஒருங்கிணைப்பாளர் நண்பர் செந்தமிழன், அருணபாரதி என்னை அழைத்தார்கள். வந்தேன் ஆனா கடைசி நேரத்துல இப்படி திறக்கவிடாம செஞ்சுட்டாங்க. ரொம்ப வேதனையா இருக்கு. அதே மேடையில வச்சு வீட்டுக்கொரு சிலை கொடுப்போம்னு சொன்னது கொஞ்சம் ஆறுதலாவும் இருக்கு.

நக்கீரன் : உங்களின் இந்த ஈழ உணர்வு பேச்சு எவ்வளவு நாள் வரை நீடிக்கும்?

ராம் : உணர்வுள்ள தமிழன் நான் என் இனம் ஈழ விடுதலை அடையும் வரை என் பேச்சுக்கு ஓய்வில்லை. நான் யாரையும் புண்படுத்தி பேசினால் தானே வழக்கு, புகார் வந்து தடைவரும் யாரையும் புண்படுத்தலயே ! புண்பட்ட என் இனத்திற்காகத்தானே பேசுறேன் என்று முடித்தார்.

நேர்காணல்: இரா.பகத்சிங்

source:nakkheeran

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பல் பாதுகாப்பு…

பல் பாதுகாப்பு…
Dr. A. ஆர்த்தி பிரகாஷ்

சென்ற இதழில் பற்குச்சி கொண்டு பல் துலக்கும் பல நல் வழி முறைகளை நாம் அலசினோம்.

இதற்கு நீங்கள் அனைவரும் சரியான பல் துலக்கும் முறையினை அறிந்து, தெளிந்து, கடைப்பிடித்து, நற்பயனை அடைய ஆரம்பித்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.

சரி…

dentalsafety.jpg பற்குச்சி உங்கள் பற்களில் உள்ள பிளேக்சை (Plaques) அகற்றிவிடும் என்று தப்போது நம்புகிறீர்களா?

அப்படி நீங்கள் நினைத்திருப் பீர்களேயாயின், தெரிந்துகொள்ளுங்கள். பற்குச்சியால் மட்டுமே பிளேக்சை முழுமையாக அகற்றிவிட முடியாது. வெளிப்புறங்களில் உள்ள பற்குச்சுகளால் தொடக் கூடிய பிளேக்சை மட்டுமே அகற்ற அது மிக மிக சரியான வழியாகும். பற்களுக்கு இடையே யுள்ள இடைவெளி களிலுள்ள பிளேக்சை பற்குச்சுகளால் தொடவும் முடியாது, முழுவதுமாக அகற்றவும் முடியாது.

எனவே, இந்த இடுக்குகளில் உள்ள பிளேக்குகளை அகற்ற, சிறப்பு சாதனங்கள் உள்ளன

தற்போது பலராலும் வாங்க முடிந்த, வாங்கி உபயோகிகக்கூடிய, சாதனமான இதை, சரியாக உபயோகிக்கும் முறைகளை பற்றி பார்ப்போமா..

அத்தகைய ஓர் எளிய, சிறிய, சீரிய சாதனமே பிளாசிங் (Flossing) எனப்படும். இது உலகெங்கும் பரவலாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்ற ஒன்றாகும். இதற்கு பயன்படுத்தப் படும் பொருளை (Dental floss) டென்டல் பிளாஸ் என்பர்.

சில நாடுகளில் இம்முறையினை பற்கள் துலக்கும்போதே உபயோகிக்கப் பழகியுள்ளனர்.

இதனை உபயோகிக்க, சின்னஞ்சிறு சிறார்களை சிறு வயது முதலே பழக்கிவிடுகிறார்கள். அது என்ன பார்ப்போமா?

பிளாசிங் செய்யும் செம்மையான வழிகள்

மிக சிறிய நாடா போன்ற பொருளே டெண்டல் பிளாஸ் ஆகும். இது இன்று அனைத்து அங்காடி மற்றும் மருந்துக் கடைகளிலும் தாரளமாக கிடைக்கிறது. இதனைக்கொண்டு எப்படி நாம் நல்ல முறையில் பிளாசிங் செய்ய ஆரம்பிக்கலாம் என்பதை அறிவோம்.

ஒரு 45 செ.மீ. அல்லது 18 இஞ்ச் நீளம் கொண்ட பிளாசை எடுத்துக்கொண்டு அதனை 10 செ.மீ. அல்லது 4 இஞ்ச் நீளத்தில் இரு முனைகளிலும் நடு விரலில்சுற்றிக் கொண்டு கடைசி மூன்று விரல்களால் மடித்துப் பிடித்துக்கொண்டு 2 இஞ்ச் நீளத்தில் பிளாசை இரு ஆள்காட்டி விரல் கொண்டு பிடித்துக்கொண்டு பற்களின் இடையே செலுத்தி பற்களிலிருந்து ஈறுகளை நோக்கி நகர்த்தி தேய்க்கவேண்டும். மேலும் கீழும் மெதுவாக இம்முறையில் பிளாசை ஒவ்வொரு பல்லையும் சுற்றி மெல்ல வளைத்து மெதுவாக தேய்த்து விடவேண்டும். வேகமாகவோ, பலமாகவோ தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல் அது மெல்லிய ஈறுகளை அறுத்து ஊறு விளைவிக்கும்.

பிளாசினை உபயோகித்துக் கொண்டே மெதுவாக நகர்த்தி, ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு சுற்றி சுற்றி நகர்த்ததிக் கொள்ள வேண்டும். இது போல் அனைத்து பற்களின் இடுக்குகளிலும் பிளாசிங் செய்ய வேண்டும். நன்றாக தேய்த்தப் பின் பிளாசை முன்னும் பின்னும் நகர்த்திக்கொண்டே ஈறுகளுக்கு எதிர்புறமாக நகர்த்தி வெளியே எடுத்து விடலாம்.

பிளாசிங் செய்யாவிடில் என்ன நேரிடும்

பிளாசிங் செய்யாவிடில் இரு பற்களின் இடுக்குகளிலும் பிளேக்குகள் தங்கி கெட்டிப்பட்டுவிடும். இந்நிலையில் பல் மருத்துவரால் மட்டுமே அகற்ற முடியும் என்ற நிலைக்கு அதனை தள்ளியிருப்போம். நாளடைவில் பாக்டீரியாக்கள் இங்கு தங்கி ஈறுகளை உறுத்தி, ஊறுவிளைவித்து, பற்கள் வலுவிழந்து ஆடவும், எலும்புகள் தேயவும், வாய் நாற்றம் வீசவும் காரணமாகிவிடும்.

பற்களைத் தேய்ப்பதாலும், பிளாசிங் செய்வதாலும், பற்களுக்கு ஊறுவிளைவிக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றி வாய் நாற்றம், ஈறு உபாதைகள், மற்றும் பல் இழப்பு இவைகளை தவிர்த்து, இனிய புன்னகையை வாழ்நாள் முழுதும் நமதாக்கிக்கொண்டு இன்புற்று வாழ்வோம்.

குறிப்பு

நிறைந்த முழு பயனை அடைய பற்களை முதலில் துலக்கி, பின்னர் உடனே பிளாசிங் செய்து முடித்து, அதன்பின் வாயினை நன்றாக கொப்பளித்து விடவேண்டும்.

உங்களின் வினாக்களுக்கு விடை தெரிய தொடர்பு கொள்ள விலாசம்.

aarthiprakashdentalcare.

source:nakkheeran

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized