Daily Archives: ஏப்ரல் 19, 2008

உங்கள் மொபைல் போனுக்கு அழகான வால்பேப்பர்

"The size of the mobile wallpapers will look more bigger in computers but it will look very neat in your mobile"

.
.
.
.


_________________
Cheers, Yesudas Solomon, www.christiansmobile.com

 
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கமல்,ரஜினியுடன் நடித்தவரும்,தமிழ் பட கதாநாயகியுமான நடிகைக்கு எய்ட்ஸ் நோய் .

பிரசங்கி: 11:9. வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.10. நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.(பரிசுத்த வேதாகமம்)

ப்படி இருந்த நான்… இப்படி ஆயிட்டேன்!” _ சினிமா நகைச்சுவைக் காட்சியன்றில் எய்ட்ஸ் விளம்பரத்தில் நடிக்கும் நடிகர் விவேக், இப்படி சிரிப்பைச் சிந்த விடுவார். அந்த வசனம், ஒரு சினிமா நடிகைக்கு மிகச் சரியாகப் பொருந்தி விட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகே ஈ, எறும்பு மொய்க்கக் கிடந்த அவரை, யாரும் சரியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அப்படியே ஆறுநாட்கள் அனாதையாகக் கிடந்தார் அந்த நடிகை. எய்ட்ஸ் நோய் அவரது இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்த அந்த நடிகை நிஷா என்கிற நூருன்னிசா.

‘இளமை இதோ இதோ’, ‘முயலுக்கு மூனுகால்,’ ‘மானாமதுரை மல்லி’, ‘எனக்காகக் காத்திரு’ போன்ற பல படங்களில் ஹீரோயினாக நடித்த நிஷாவின் பிறந்த ஊரே நாகூர்தான் என்பது இன்னொரு அதிர்ச்சிச் செய்தி. அவரது அப்பா, பெரியப்பா, அத்தை என ஓர் உறவினர் பட்டாளமே அந்த ஊரில் வசதியுடன் வாழ்ந்து வருவது,
அதைவிட அதிர்ச்சியான செய்தி.

ஒரு முஸ்லிம் அமைப்பு மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நடைப்பிணமாக, ஒரு கட்டிலில் கிடந்த நடிகை நிஷாவை நாம் சந்தித்தோம். இளமைக் காலங்களில் நடித்த நிஷாவா இவர் என திகைக்கும் வண்ணம் காய்ந்த கருவாடாக கட்டிலில் கிடந்தார். நாம் குமுதம் ரிப்போர்ட்டரிலிருந்து வருகிறோம் என்றதும் முகத்தில் மலர்ச்சியை வரவழைத்துக் கொண்ட அவர், ”சார்! சார்! என்னை போட்டோ எடுங்க சார்! என் நிலையைப் பற்றி பத்திரிகையில் எழுதி என்னைக் காப்பாற்றுங்க சார். நான் மறுபடியும் நடிக்கனும்!” என்று கதறினார்.
சினிமா ஸ்பாட் லைட்களின் ஒளிவெள்ளத்தில் குளித்த ஒருவர், இப்படி தன்னை ஒரு போட்டோ எடுக்கும்படி கெஞ்சியது நம்மை உறுத்தியது. நிஷாவிடம் பேசினோம். என்னதான் எலும்பும் தோலுமாக இருந்தாலும் அவரது பேச்சில் ஒரு நடிகைக்குரிய நளினம் குறையவில்லை. கூடவே குரலில் சோகத்தைக் கொட்டிக் குழைத்து நம்மிடம் பேசினார்.
”எனக்குச் சொந்த ஊர் நாகூர்தான். அப்பா பேர் அப்துல் ஜப்பார். அவரது முதல் மனைவி பேபிக்குப் பிறந்த பெண்தான் நான். குழந்தையாக நான் இருந்த போது அப்பாகிட்டே கோவிச்சுக்கிட்டு அம்மா என்னைத் தூக்கிட்டு சென்னைக்கு வந்திட்டாங்க. என்னை வளர்த்து, சினிமாவில் நடிக்க வச்சாங்க. பல படங்களில் ஹீரோயினா நடித்தேன். நடிகர் கமலோடு ‘டிக்…டிக்….டிக்’, ரஜினி சாரோட ‘ஸ்ரீராகவேந்திரர்’, பாலசந்தர் சாரோட ‘கல்யாண அகதிகள்’ இன்னும் விசு சார், சந்திரசேகர் சார் டைரக்ஷனில் கூட நடிச்சிருக்கேன்” என்றவர் தொடர்ந்தார்.

”அம்மா இறந்த பிறகு அந்த துக்கத்தில் சரியாகச் சாப்பிடாமல் மெலிந்து விட்டேன். நடிக்கிறதையும் விட்டுட்டேன். பேங்கில் சேமிச்சு வைச்ச பணமெல்லாம் கரைஞ்சு போச்சி. எனக்கு சென்னையில் உறவுன்னு சொல்லிக்கொள்ள ஒருத்தரும் இல்லை. அனாதையாக இருந்த எனக்கு உதவி செய்யவும் ஆளில்லை. நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்திடம் ஒருமுறை உதவி கேட்டுப் போனேன். ‘உனக்கு
சினிமாவில் சான்ஸ் கிடைக்கலேன்னா, டி.வி.யில் நடிக்க வேண்டியது தானே’ன்னு சொல்லி, என்னை வெறும் கையோட திருப்பியனுப்பிவிட்டார்.

நடிகர் சுமன், சந்திரசேகர், நடிகை ராதிகா எல்லோருமே என் மேல் ரொம்பப் பாசமா இருப்பாங்க. நான் இப்படி படுத்த படுக்கையாகக் கிடப்பது அவங்களுக்குத் தெரியுமோ என்னவோ!” என்றார் கண்ணீருடன். ‘உங்கள் அப்பா மற்றும் உறவுகள் உங்களை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?’ என்று கேட்டோம். அதைக் கேட்டதும் சற்று கோபப்பட்ட நிஷா, ”நான் வசதியாக இருந்த காலத்தில் என்னிடம் நிறைய வாங்கிக்கொண்ட அவர்கள், இப்போது என்னைக் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள். என் பெரியப்பா அப்துல் ஹமீதுவின் மகள் நிக்காவின்போது, தாலிக்கு நான் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தேன். அதை அவர்கள் மறந்து விட்டார்கள். சொந்த ஊரில்… பெற்ற தந்தையின்
கண்முன்பே ரோட்டில் ஈ, எறும்பு மொய்க்க அனாதையாகக் கிடந்த நிலைமை என்னைத் தவிர, வேறு யாருக்கும் வராது’ என்றவர் குரல் உடைந்து போய் அழத் தொடங்கினார்.
அதன் பிறகு, ”சார் தப்பா நினைக்காதீங்க. கையில் சுத்தமாக காசே இல்லை. ஒரு முட்டை புரோட்டா சாப்பிடனும்போல ஆசையாக இருக்கு! ஒண்னு வாங்கிக் கொடுத்துட்டுப் போங்களேன், ப்ளீஸ்!” என்று கெஞ்சினார்.
நம்முடன் வந்திருந்த நண்பரொருவர் ஓடிச்சென்று அவர் கேட்டதை வாங்கிக் கொடுத்தார். நிஷா, சென்னை பல்லாவரத்தில் அவரது வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியிருந்த மகியம்மா என்பவரிடம் அலிபாய், ரபீர் என்பவர்கள் மூலமாக நகை மற்றும் பணத்தைக் கொடுத்து வைத்திருப்பதாகவும், நகையன்றை அடகு வைத்து அந்தப் பணத்தில் வாடகைக் கார் பிடித்து அலிபாய் மூலம்தான் நாகூர் வந்து சேர்ந்ததாகவும் நிஷா நம்மிடம் விவரித்தார். தந்தை மற்றும் உறவினர்கள் ஏற்க மறுத்து விட்ட நிலையில், நாகூர் தர்கா அருகே அவர் அனாதையாக விடப்பட்டிருக்கிறார்.
நடிகை நிஷாவிடம் நாம் பேசிக் கொண்டிருந்தபோது, நர்ஸ் ஒருவர் விடுவிடென்று வந்து நம்மை, அப்பால் அழைத்துச் சென்றார். ”அந்தம்மாவுக்கு ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ்னு ரிசல்ட் வந்திருக்கு. அவங்களை தாம்பரத்திலுள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கான ஆஸ்பத்திரிக்கு அனுப்ப நீங்கள் ஏற்பாடு செய்யுங்களேன்!” என்றார்
இரக்கக் குரலில். நடிகை நிஷா தன்னை எய்ட்ஸ் நோய் தாக்கியிருக்கிறது என்பது கூடத் தெரியாமல் இன்னும் இருக்கிறார் என்ற தகவல் நம்மை உலுக்கியது. நாகூரில் வசிக்கும் நிஷாவின் தந்தை அப்துல் ஜப்பாரைச் சந்தித்தோம். ”நிஷா எனக்குப் பிறந்தவள்தான். அவளோட அம்மா பேபியை நான் லவ் பண்ணி திருமணம் செய்ததால், பெற்றோர் என்னை வீட்டை விட்டு விரட்டிட்டாங்க. அப்ப பிறந்தவதான் நிஷா. ‘கொஞ்ச நாள் பொறு’ன்னு நான் சொன்னதைக் கேட்காமல், குழந்தையைத் தூக்கிக்கிட்டு ராவோட ராவா பேபி சென்னைக்கு ஓடிப் போயிட்டா. அதன் பிறகு, பேபியைத் தேடியலைஞ்சு கோடம்பாக்கத்தில் கண்டுபிடித்தேன். எனக்குத் தெரியாமல் அடிக்கடி அவள் வீடு மாற ஆரம்பிச்சா. தான் ஜலீல்னு ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டதாகச்
சொன்னாள். நிஷாவை என் கண்ணில் காட்டாமல் மறைச்சிட்டாள். பேபிக்கு பலபேரோட தவறான தொடர்பிருந்தது. நிஷாவை சினிமாவில் நடிக்க வைத்ததால் பணம் வர ஆரம்பித்தது. அதனால், ”உனக்கு ஊரில் பல பொம்பிளைகளோடு தொடர்பிருக்கு. இனிமே இங்கே வராதேன்னு என்னை விரட்டிட்டா” என்றார்.

‘உங்களுக்கு எத்தனை மனைவிகள்?’ என்று ஜப்பாரிடம் கேட்டோம். ”மனைவி என்றால் அது பேபி மட்டும்தான். ஆனால் நாலைந்து பெண்களோடு தொடர்பு உண்டு. எனக்கும் ஓர் இந்துப் பெண்னுக்கும் பிறந்த பையனை முஸ்லிமாக மாத்தி ஷாகுல் அமீதுன்னு பெயர் வைத்து வளர்க்கிறேன்” என்றார். மீண்டும் தொடர்ந்த அவர், ”பேபி இறந்தபோது எனக்கு தகவல் சொல்லவில்லை. என் அண்ணன் அங்கே போனபோது, ‘எனக்கு அப்பாவே வேண்டாம்னு சொல்லிட்டேன். அப்புறம் பெரியப்பா எதுக்கு?’ன்னு கேட்டு, நிஷா அவரை விரட்டியிருக்கா. இப்ப நோய் வந்து, சொந்தம் கொண்டாட வந்தா அவளை யார் ஏற்பார்கள்? நானே என் தங்கச்சி வீட்டில் ஓசிச் சாப்பாடு சாப்பிடறேன்.

இதில் அவளையும் வச்சி எப்படிக் காப்பாத்த முடியும்?” என்றார் அப்துல் ஜப்பார். நிஷாவின் பெரியப்பா அப்துல் ஹமீதைச் சந்தித்தோம். ”சென்னை சாந்தோமில் மலாக்கா சூப்பர் மார்க்கெட் வச்சிருக்கிற முகமது அலியும், ரபீக்கும் அவளை ஆண்டு அனுபவிச்சிட்டு, இப்போ அவங்க பாட்டுக்கு இங்கே விட்டுட்டுப் போயிட்டாங்க. இதுல நாங்க எதுவும் செய்ய முடியாது’ என்றார் போட்டோவுக்கு மறுத்தபடி.
நாகூர் ஜமாத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நிஜாமுதீனுடன் பேசினோம். ”ஒரு நடிகை எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணம் இந்த நிஷா. இப்போ வருத்தப்பட்டு எந்தப் புண்ணியமும் இல்லை” என்று முடித்துக்கொண்டார்.

அடுத்து நாகை மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகியும், பொதுநல ஆர்வலருமான நாகூர் பாரி, ”நலிந்த கலைஞர்களுக்குக் கிடைக்கும் உதவி நிஷாவுக்குக் கிடைத்தால் நல்லது! திரையுலகைச் சேர்ந்தவர்கள் இதற்கு நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்” என்றார்.
‘சென்னை சாந்தோமில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் அலிபாய் என்கிற முகமது அலியை கடைசியாகத் தொடர்பு கொண்டு கேட்டோம். ”அந்தப் பொண்னும் அவங்க அம்மாவும் இங்கே அனாதைகளாக இருந்தபோது உதவினோம். நிஷாவின் அம்மா இறந்தபோது கூட உறவுக்காரங்க யாரும் வரவில்லை. இவர்களுக்கு
உதவப்போய் இப்போது எங்களுக்குக் கெட்ட பெயர். உடல்நிலை சரியில்லாத நிஷா, அவரது நகை ஒன்றை அடகு வைத்தார். அந்தப் பணத்தில்தான் கார் ஒன்றை வைத்து அவரைக் கொண்டு போய் நாகூரில் விட்டுவரச் சொல்லி ஏற்பாடு செய்தோம்.நிஷாவை உறவினர்கள் ஏற்க மறுத்ததால், நாகூர் தர்காவில் தன்னை விடச்சொல்லி நிஷாவே சொன்னதால்தான் அங்கே விட்டு விட்டு வந்தோம். நிஷா பல்லாவரத்தில் அவரது எதிர் வீட்டில் குடியிருந்த மகியம்மாவிடம்தான் மீதி நகைகளைக்
கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்’ என்றவர், அதைத் தொடர்ந்து நாம் கேட்ட சில கேள்விகளால் கோபமடைந்து மிரட்டலுடன் போன் தொடர்பைத் துண்டித்துக்கொண்டார்.

அடுத்த சில மணி நேரத்தில் முகமது அலியின் செல்போன் மூலம் மகியம்மா என்பவர் நம்மிடம் பேசினார்.
”என்னிடம் மொத்தம் மூனு பவுன் நகையைத்தான் நிஷா கொடுத்தார். அதற்கு பதினான்காயிரம் ரூபாய் பணம் கொடுத்துவிட்டேன். நகைக்கு அது சரியாப் போச்சு. நிஷா இருபத்து நான்கு புடைவை கொடுத்தார். அதில் இருபது புடைவைகளை தலா நூறு ரூபாய்க்கு விற்று அவரிடம் காசு கொடுத்துவிட்டேன். மீதமிருப்பது நான்கு புடைவைகள்தான்” என்றார்.

”முகமது அலிக்கும் நிஷாவுக்கும் நீண்டகாலமாகத் தொடர்புண்டு’ என்று அவர் ஏதோ சொல்ல ஆரம்பிக்க, அந்த செல்போனைப் பிடுங்கிய முகமது அலி, ”நிஷா இந்தப் பகுதிக்கு வந்த பிறகுதான் அவரை எனக்குத் தெரியும். அவரோடு எனக்கு முப்பது வருஷப் பழக்கம் என்பதெல்லாம் பொய்!” என்றார் கோபத்தோடு. கடைசியாகக் கிடைத்த தகவலின்படி அப்துல் ஜப்பாரின் மகன் ஷாகுல்அமீது, ஒரு முஸ்லிம் அமைப்பின் உதவியுடன் நிஷாவை சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய் அட்மிட் செய்ததாக நமக்குத் தெரிய வந்தது.

நிஷா குறித்து ஃபிலிம்நியூஸ் ஆனந்தனிடம் பேசினோம். அவரது நிலை பற்றி மிகவும் வருத்தப்பட்ட அவர், ”அவ தைரியமான பொண்னு. ஒருமுறை இன்கம்டாக்ஸ் ஆபீஸர்னு சொல்லி போலி ரெய்டுக்கு வந்து பிளாக்மெயில் செய்ய முயன்ற ஒரு படத் தயாரிப்பாளரை, அவளே போலீஸ§க்கு போன் பண்ணிப் பிடித்துக்கொடுத்தாள். அப்படிப்பட்டவளுக்கா இப்படியரு நிலைமை?” என்றார் நிஜமான வருத்தத்தோடு.

http://chittarkottai.com/general/nisha.htm

பின்னூட்டமொன்றை இடுக

Filed under எய்ட்ஸ் நோய், நடிகை நிஷா, நடிகை ராதிகா, நாகூர் தர்கா

The size of the mobile wallpapers will look more bigger in computers but it will look very neat in your mobile

"The size of the mobile wallpapers will look more bigger in computers but it will look very neat in your mobile"

.
.
.
.


_________________
Cheers, Yesudas Solomon, www.christiansmobile.com

 
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under கிறிஸ்தவம், மொபைல் வால் பேப்பர்

தமிழர்கள் மீதான பண்பாட்டுப் படையெடுப்பு – 9

 

ஆரியநஞ்சு கலந்த குறள் உரை

தமிழ் மன்னர்கள் ஆரியப் பண்பாட்டுக்கு அடிமைப் படுத்தப்பட்டதுபோல, நம்முடைய பழக்க வழக்கங்கள் எப்படி அதற்கு வயப்பட்டு மாறின என்பதை முந்தையக் கட்டுரையில் கண்டோம்.
நமது இலக்கியங்கள் கூட, பார்ப்பனப் பண்பாட்டுக்கு ஆளாக்கப்பட்டது; அந்த பழைய நூல்களுக்கு உரையெழுதிய பல பார்ப்பனர்கள் அதற்கு அவர்களது இன உணர்வுக்கு ஏற்ப உரைகளையும், விளக்கங்-களையும் எழுதி உலா வரச் செய்தனர்.
திருவள்ளுவரின் திருக்குறள் என்ற அறநூல் உலக மாந்தர் அனைவருக்கும் உரிய வாழ்க்-கைக்கு வழிகாட்டிடும் ஒரு நூல்.
என்றாலும் இதனையும் ஆரியமயமாக்கிட – ஆரியக் கருத்து என்னும் வட்டம் வளையத்-திற்குள் கொணர பார்ப்பனப் புலவர்கள் தமிழாய்ந்தவர்கள் – அதனை மிக இலாவகமாகச் செய்துள்ளனர்.
திருக்குறள் எழுதப்பெற்று ஆயிரம் ஆண்டு-களுக்குப் பின்னர் வந்து அதற்கு உரை எழுதியவர் பரிமேலழகர் என்ற பார்ப்பனர்.
இவரது குறளுக்கு ஆரியப் பூச்சுப் பூசும் பல்வேறு முயற்சிகளை, குறளுக்கு இவர் எழுதிய உரைகள் மூலம் காணலாம்!
பரிமேலழகர் எழுதிய நுழைவு வாயிலான உரைப்பாயிரத்திலேயே திருக்குறளில் உள்ள அறம், பொருள், இன்பம் என்பதில், அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செயலும், விலக்கியன ஒழிதலுமாம் என்று மனுதர்மத்தைப் பின்-பற்றித்தான் வள்ளுவர் குறள் எழுதினார் என்று கூறிய விஷமம் எளிதாக ஒதுக்கி விட முடியாத ஒன்று!
தொடக்கத்திலேயே ஆரிய நஞ்சு கலந்த நிலை அது!
வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி? என்று கேட்டார். மனோன்மணியம் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள்!
மனுவின் மொழி அறமான-தொரு நாள் அதை மாற்றிய-மைக்கும் நாளே தமிழர் திருநாள் என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

இராவண காவியம் இயற்றிய இனமானப் பெரும் புலவர் குழந்தை அவர்கள், திருவள்ளுவரும், பரிமேலழ-கரும் என்ற ஓர் ஆய்வு நூலையே இது குறித்து மிக விளக்கமாக எழுதியுள்ளார்!
ஆரியக் கருத்துகளுக்கு மறுப்பு நூலே வள்ளுவரின் குறள் என்பது குறள் பற்றிய கருத்துகள் எழுதிய பல்வேறு புலவர்களின் – குறள் பற்றி பாடியவர்களின் தொகுப்பு மாலையில் காணலாம்.
வள்ளுவர் குறளை பரிமேலழகர் எப்படி அவர் என்னதான் சிறந்த புலவர் ஆயினும் – ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புக் குரித்தாக்கிக் காட்ட முயன்றார் என்பதற்கு ஏராளமான குறள் உரைகள் ஆதாரங்கள் உண்டு.
வள்ளுவர் குறளில், கடவுள், கோயில், ஜாதி, ஆத்மா போன்ற சொற்களை 1330 பாக்களில் எங்கு தேடினாலும் கண்டறியவே முடியாது.
(குறளில் கோயில் இல்லை என்பதை குடும்ப விளக்கு நூலில் முதியோர் காதல் என்ற அய்ந்தாம் பாகத்தில் புரட்சிக் கவிஞர் ஒரு தாத்தா, தன் பெயரனுக்குக் கூறுவது போல் அமைத்துள்ள நயமான கதை சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.)
ஒல்காப்புகழ் படைத்த தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய உச்சி மேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர் (இவர் பார்ப்பனர் என்பது முடிபு) எழுதுவதை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தனது தொல்காப்பியப் பூங்கா நூலில் (294ஆம் பக்கத்தில்).
… களவொழுக்க முறையை ஒட்டி காதலர்கள் கூடிப் பேச வாய்ப்பு வந்த வேளை ஓரையும் நாளும் உத்தமமாயில்லை யென்று ஒத்திப்போடும் வழக்கம் மட்டும் உண்டாம் என்று; நச்சினார்க்கினியர் என்னும் உரையாளர் நவிலுகின்றார். நாளும் ஓரையும் பார்த்தல் நலமே என்று இன்னொரு உரையாளர் இளம் பூரணர் என்பார் இதற்கு அதே உரை கூறியுள்ளார் ஏறத்தாழ! ஆய்வுரை எழுதியுள்ள அறிஞர் வெள்ளை வாரணனார், ஓரை எனில் விழாவும் விளை-யாட்டும் என்கின்றார் ….
காப்பியர் நூற்பாவில் ஓரையென்ற சொல்லுக்கு கால நேரமெனும் பொருள் தவிர்த்து விழாவெனவும் ஒரு பொருள் கொள்வதானால், அக்கால வழக்கத்தில் நாள்கோள் பார்ப்பதில்லை எனும் செய்தி நிலைநாட்டப்படும்! இல்லை இல்லை பார்ப்பதுண்டு என்று சொன்னால்; இடையில் புகுந்த கொள்கையினால் நாளும் கோளும் நம்மினத்தில் தேளும் பாம்புமாய் வந்து சேர்ந்தன என்போம்!
(தொல்காப்பியப் பூங்கா, பக்கம் 295)

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டிய பெரும் ஆய்வாளரான புலவர் கா.வெள்ளைவாரணன் அவர்கள் (அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் யான் பயின்ற காலத்தில் அவர் என் தமிழாசிரியர் என்பது மகிழத்தக்க பெருவாய்ப்பு ஆகும்).
அவர் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு – தொல்காப்பியம் என்ற நூலில் (1957) (அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு) பண்பாட்டுப் படையெடுப்பு களவியலையும் விட்டு வைக்கவில்லை என்று எழுதுவதை அடுத்த இதழில் காண்போம்.

(வளரும்)

 http://unmaionline.com/20080401/pa-12.html

 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

உலக வங்கி – இந்தியா – அயல் உறவு-உலகப் பார்வை

உலகப் பார்வை

உலக வங்கி – இந்தியா – அயல் உறவு

– செ. முகிலன்

அமெரிக்காவின் நோக்கம்
வெனிசுலா குடியரசுத் தலைவர் ஹியூகோ சாவேஸ். அமெரிக்கா கடந்த காலம் என்ற ஒன்றே நமக்கு இல்லாதது போல் ஆக்கும் நோக்கத்துடன் இளைஞர்கள், குழந்தைகள் மனங்களை ஆக்கிரமிக்க முயல்கிறது. நம் மக்களை வருங்காலம் என்ற ஒன்றே இல்லாதாதவர்களாக ஆக்கிவிடத் தூண்டுகிறது என்று கூறியுள்ளார்.
உலக மயம்
எல்லை வகுத்துக் கொள்கிற உரிமையை நம் அரசிடம் இருந்து பறிப்பதற்காகவே அது எல்லைகளை உடைக்கிறது. தேசக்கோடுகள் என்பதும் ஆளுமைக்குரிய பகுதி என்பதும் பெயருக்குத்தான் எல்லா தேசங்களையும் பன்னாட்டு மூலதனங்களின் குசயஉளைந ஆக மாற்ற முயற்சிக்கிறது என்பதே உண்மை..
வளர்ச்சி
சென்செக்ஸ் புள்ளிகளையும் அன்னியச் செலாவணி இருப்பையும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியையும் (ஜி.டி.பி.) உலக வங்கி தரும் புள்ளி விவரங்களையும் கதைக்காமல் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அறிக்கைகளையும் ஆட்சி செய்பவர்-கள் படிக்க வேண்டும். நியூயார்க் நகரக் குப்பை-களையும், மருத்துவமனைக் கழிவுகளையும் சரக்குப் பெட்டகங்களில் போட்டு இந்தியாவுக்கு அனுப்பியுள்-ளார்-கள். இது நாம் வளர அமெரிக்கா அளிக்கும் உதவியாகுமா?
உலக வங்கி பன்னாட்டு நிதியத்தின் கூட்டத்தில் நிதியமைச்சர் கிராமங்களில் விவசாயத்தை நம்பி 60 கோடி மக்கள். வளர்ச்சி விகிதம் 4 சதவிகிதம் குறைவே. பன்னாட்டு நிதியம் வளர்ந்த நாடுகளின் தலைமையில் மட்டுமே தொடர்வது சரியல்ல என்று விளக்கமளித்துள்ளார்.
அணிசாரா இயக்கம்
எகிப்து, இந்தோனேசியா, யுகோஸ்-லாவி-யாவுடன் இணைந்து இந்தியா ஏற்படுத்தியது. இன்று 118 நாடுகள் அடங்கியது அணிசாரா இயக்கம். காமன்வெல்த் மாநாட்டில் அத்தனை சிறிய நாடுகளும் இந்திய வேட்பாளரை ஆதரித்ததன் மூலம் அணி சாரா இயக்கத்துக்கு மீண்டும் உயிர் கொடுத்து இந்தியா இழந்த மரியாதையை பெற வேண்டும், ஈராக்கை நிர்மூலமாக்கிய பின், ஈரானையும் நிர்பந்தப்படுத்த, அமெரிக்காவுக்கு இந்தியாவும் அடிபணிந்தது. ஈரான் மீதான குற்றச்சாட்டு பொய் என்றாகிவிட்ட பின்பாவது நாம் சுயசிந்தனை பெற்று அணிசாரா அயல்துறை கொள்கையை மீட்டு எடுக்க வேண்டும். என் வீட்டிற்குள் எல்லா நடுகளின் பண்பாடும் இயல்பாய் பரவ வேணடும், எதுவும் என்னை அடிமைகொள்ள அனுமதியேன் . – காந்தி
மகாத்மாவும், பெரியாரும் கட்சியையோ, பணத்தையோ கொண்டு மாற்றங்கள் நிகழ்த்த-வில்லை. மக்களை திரட்டியே மாற்றங்கள் கொண்டு வந்தார்கள்.
அயல் உறவு
அய்.நா. அவையின் அறிவுக்கு எட்டிய இலங்கை மனித உரிமை மீறல்கள் தொப்புள் கொடி உறவான இந்தியாவுக்கு எட்டவில்லை. சிங்கள அரசு எந்த நேரத்திலும் நமக்கு நட்பு நாடாக இருந்ததில்லை. இந்திராகாந்தியிடம் இருந்த தைரியம் இன்று இல்லை. பாகிஸ்தானில் நெருக்கடி நிலை. இந்தியா வருந்தியது. ஆனால் எதிர்க்கவில்லை. மியான்மரில் புத்த பிக்குகளை ராணுவ அரசு கொன்று குவித்தபோது, அமைதி திரும்ப அனைவரும் முயல்க என்றதே தவிர, கண்டனமோ, போராட்டத்திற்கு ஆதரவோ தெரிவிக்கவில்லை. அமெரிக்காவே தலாய்லா-மாவை கவுரவிக்கும் போது அதில் இந்தியா கலந்து கொள்ளவில்லை.
இலங்கைப் பிரச்சினையிலும் இதுவரை எந்த வித திடமான வெளிப்படையான முயற்சியும் எடுக்கவில்லை. வங்க தேசத்திலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழைவதைத் தடுக்க முடியவில்லை. தென் ஆசியாவில் மக்கள் தொகையிலும் பொருளாதாரத்திலும் ராணுவ பலத்திலும் நாம்தான் வல்லரசு என்று இந்தியாவிற்குத் தோணுவதே இல்லை.
அன்னிய செலாவணி
1990–91-ல் இறக்குமதி 50,086 கோடி, ஏற்றுமதி 3,31,152 கோடி, பற்றாக்குறை ரூ. 16,934 கோடி, 2005-06-ல் பற்றாக்குறை ரூ. 2,29,000 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 16 ஆண்டு-களில் இதுவரை ஏற்றுமதியை கூடுதலாக்கி எந்த ஆண்டும் நேர் செய்ததில்லை. ஆனால், அன்னியச் செலாவணி கையிருப்பு உயர்ந்துள்ளது.
அன்னிய முதலீடு, புதிய தொழிலில் போட்ட மூலதனத்தை விட உள்நாட்டு தொழிலை கபளீகரம் செய்ததே அதிகமாகும். அதைவிட அதிகம் பங்குச் சந்தை வர்த்தகத்தில் போட்டது பல மடங்கு. 2007 மார்ச்சி-ல் 5200 கோடி டாலராக பங்குச் சந்தையில் அன்னிய முதலீடு விசுவரூபம் எடுத்துள்ளது. இதற்காக நாம் கொடுத்த விலை ஏராளம். அன்னிய மூலதன வரவுக்கு கட்டுப்பாடு, நிபந்தனை போட்டது யார் என்று எதுவும் தேவையில்லை. லாபத்திற்கு வரி இல்லை பங்கு வர்த்தகம் சில நேரங்களில் வியப்பாகவும், சில நேரங்களில் கவலையளிப்பதாகவும் இருக்கிறது -ப. சிதம்பரம். இந்த மாயாபஜார் சூதாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர அரசு சிந்திக்க மறுக்கிறது.
உலகவங்கி, பன்னாட்டு நிதியத்தின் கட்டளைகள்
1)நியாய விலைக் கடைகள் மூடப்பட-வேண்டும்.
2) உணவு தானியங்களை மத்திய மாநில அரசுகள் கொள்முதல் செய்யவேண்டாம்.
3) உணவுத் தேவை ஏற்படின் உலக டெண்டர் மூலம் வாங்க வேண்டும்.
4) தானியக் கையிருப்பு இனி வேண்டாம்.
5) பொதுத்துறை நிறுவனங்களை விற்றுவிட வேண்டும்.
6) நியாய விலைக் கடைகளை மூட முடியாத நிலையில் அந்த பொருட்களுக்கான மானியத்தை வெட்டவேண்டும்.
7). தொலைத்தொடர்பு துறையில் 74 சதவிகித அந்நிய முதலீட்டை அனுமதிக்கவேண்டும்.
8) தேசிய வங்கிகள் 67 சதவிகிதப் பங்குகளை விற்கவேண்டும். மானியம் வேண்டியவர்களுக்கு சென்று சேர்வதில்லை. அதனால் மானியத்தை நிறுத்தவேண்டும் என்கிறார் அன்புள்ளம் கொண்ட பிரதமர்.
பாதுகாப்புக் கட்டமைப்பு உடன்பாடு
இப்படி ஒரு ஒப்பந்தம் அமெரிக்காவுடன் கையெழுத்தாகியுள்ளது. இனி இந்தியா அமெரிக்காவின் ராணுவக் கூட்டாளியாகிவிடும்.
1) ஈராக் பிரச்சினையில் மக்களின் எதிர்ப்பை தாங்கமாட்டாமல் இங்கிலாந்து பிரதமர் டோனிபிளேர் பதவி விலகினார்.
2) இந்தியத் துறைமுகங்கள், விமானத் தளங்கள் அமெரிக்காவுக்கு பயன்படும் படைகள் வந்து தங்கும், எண்ணெய் நிரப்பிக் கொள்ளும், சூட்டைத் தணிக்க பெண்கள் விருந்து கேட்டுப் பெறும்.
3) அமெரிக்கா வியட்நாம் யுத்தத்திலும் ஆப்கான் மீது குண்டு போடவும் ஜப்பான் தளங்களை பயன்படுத்தியது. இந்த ரத்த வெறியை மக்கள் எதிர்த்ததால் பதவி விலகினார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே.
4) ஈராக்கில் இருந்து பிரிட்டிஷ் படைகள் வெளியேறின. தென்கொரியப் படைகள் வெளியேறுகின்றன.
5) இனி அமெரிக்காவின் சண்டியர் தனத்திற்கு இந்தியா படைகளை அனுப்பவேண்டும். அமெரிக்காவின் ராணுவ தளவாடங்களுடன்.
அணுசக்தி ஒப்பந்தம்
இனி நடுநிலை அணிசேரா என்று இந்தியா வாய் வேதாந்தம் பேசக் கூடாது -கண்ட லிசாரைஸ், அமெரிக்க வெளியுறவு அமைச்சர். அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே மிக மோசனவர் புஷ் –அமெரிக்க மக்கள். புஷ் இருக்கும் வரை எந்த உடன்பாடும் கூடாது. ஆஸ்திரேலிய மக்கள் புஷ் ஒரு சைத்தான் -போப் ஆண்டவர் இந்தியாமீது பரிவும் அக்கறையும் கொண்டவர் இது நமது பிரதமர் நட்ட நடுநிசியில் 60 ஆண்டு மரபை உடைத்து புஷ்ஷை விமான நிலையம் சென்று வரவேற்றார் பிரதமர்.
அமெரிக்கா அதன் தீவில் அணு உலை விபத்தால் ஏற்பட்ட காரியத்தை தடுக்க 7 ஆண்டுகளாக போராடி 100 கோடி டாலர் செலவு செய்துள்ளது. கான்கிரீட் கலவையை மீறியும் கதிரியக்கம் பரவும் என்பது உண்மை என்று ஆகியுள்ளது.
ஜப்பானில் ஓர் அணு உலை உடைந்தது. கதிரியக்கம் கடலுக்குள் திருப்பிவிடப்பட்டது. பிரிட்டன் ஒவ்வொரு அணு உலையாக இழுத்து மூடுகிறது. நியூயார்க் அருகில் லாங்அய்லாண்டு தீவில் அமைத்த அணு உலையை நியூயார்க் மக்களின் எதிர்ப்பால் இன்றுவரை இயக்கவில். ஒரு அணு உலையின் ஆயுட்காலம் 40 ஆண்டு ஆனால், உயிரினங்களை அழிக்கும், ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் நீடிக்கும். கதிர் இயக்கக் கழிவுகளை எங்கே கொட்டுவது?
50 ஆண்டுக்கால இந்திய அணு சக்தி சரித்திரத்தை புரட்டிப்போட்டு விடும்இந்த ஒப்பந்தம் -ஏ.என். பிரசாத் முன்னாள் தலைவர் பாபா அணுசக்தி ஆய்வுமையம்.
இந்தியாவில் அபரிமிதமாக கிடைக்கக் கூடிய தோரியத்தை பயன்படுத்தி அணுமின் உற்பத்தி செய்து தன்னிறைவை எட்ட முடியும் -அப்துல்கலாம் இந்த விவகாரத்தில் இப்பொழுதே அமெரிக்கா மிரட்டல் விடுவது இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படாதா?
ரஷ்யா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடிமை ஒப்பந்தம் இல்லாமல் 400 கோடி ரூபாய் அணுசக்தி பொருட்களைத்தரத் தயாராக இருக்கின்றன. தொழில் நுட்பத்தைத் தர பிரான்ஸ் தயார் என்கிறது.
மீண்டும் ரஷ்யாவுடன் நாம் கூட்டு சேருவதைக் தடுப்பது, பொருளாதாரப் போட்டியாக இருக்கும் சீனாவை எதிர்கொள்வது குடியரசு கட்சியை வீழ்ச்சியிலிருந்து மீட்பது, இந்த ஒப்பந்தத்தால் சாதித்து விட்டதாக விளம்பரப்படுத்திக் கொள்வது – இதுவே புஷ்ஷின் நோக்கம். உலக வங்கி
டில்லியில் செப்டம்பர் மாதம் உலகப் பட்டிமன்றம் நடத்தியது. மக்கள் தீர்ப்பாயம் உலக வங்கிக் கடனால் லாபம் யாருக்கு? தீர்ப்பு – லாபம் உலக வங்கிக்குத்தான். பாலம், சாலை, வாய்க்கால் என்ற 60 பணிகளுக்கு கடனளிக்கிறது.
1) உலக வங்கி வளர்ச்சியடைகிறது. 2) இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்கள் வளர்கின்றன.
3) அரசியல்வாதிகள், மேல்தட்டு அதிகாரிகள் வளர்கிறார்கள்.
4) ஏழைகளுக்காக என்று ஏழ்மையைக் காட்டி கடன் பெறப்படுகிறது.
5) 2001-07 வரை 1.37,000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்
6) கடற்கரைப் பகுதிகளில் மீனவர்கள் தொழிலை இழந்துள்ளனர்.
7) தண்ணீர் உரிமை (டில்லி, கர்நாடகம்) தனியார் வசம் ஆகிவிட்டது.
8) உலக வங்கிக் கடனால் கோடியை ஒருவரும், கோமணத்தைக் கோடி மக்களும் பயனடைகிறார்கள்.
9) எல்லாம் வளர்ச்சிதான் என்று பேசாமல் யார் யார் வளர்ந்துள்ளார்கள் என்று சிந்திக்கத் தெரிந்தவர்கள் யோசித்தால் போதும்.
10) உலக வங்கியில் கடன்பெற்ற மெக்சிகோ, சிலி, தென்கிழக்கு ஆசிய நாடுகள் பாடம் கற்று இன்று மீள முயற்சிக்கின்றன.
11) உலக வங்கிக் கடனில் அகப்பட்டு மீள முடியாத ஆப்பிரிக்க நாடுகள் இன்று சீன உதவியை நாடியுள்ளன.
12) தமிழகம் ஏரி, குளம் தூர்வார 2000 கோடி வாங்கியதாக பெருமைப்படுகிறார் சிதம்பரம்
14) லாலு பிரசாத்திடம் உனக்கு எவ்வளவு வேண்டும் என்று உலக வங்கி கேட்க, உனது கடனும் வேண்டாம், தூக்குக் கயிறும் வேண்டாம் என்றார் லாலு.
விவசாயம்
ரஷியப் பொருளாதாரச் சீர் குலைவுக்குக் காரணம் விவசாயத்தைப் புறக்கணித்ததுதான். சீன அரசு வேளாண் வளர்ச்சியை பெரிய அளவில் முன்னேற்றிவிட்ட பின்பே தொழில் வளர்ச்சி, அன்னிய முதலீடு என்று முக்கியப்-படுத்துகின்றனர். அமெரிக்கா தொழில், விஞ்ஞான வளர்ச்சியுடன் விவசாய உற்பத்தியும் குறைந்துவிடாமல் கவனமாக இருக்கிறது. இந்தியாவின் பலம் விவசாயிகளிடமும் வேளாண் சார்ந்த தொழில் வளர்ச்சியிலும்தான் இருக்கிறது – அப்துல் கலாம்.
விளைபொருள்களுக்கு உள்ளூரிலே விலை இல்லை. நல்ல விலை பெற்றுத்தராத அரசு அந்நியர்களை அழைத்துக் கடை போட கூறுகிறது. விளைபொருள் விலை உயரும்போது அதிக விலையில் இறக்குமதி செய்து விலைகளை வீழ்த்தி, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தி விட்டோம் என்கிறார் நிதியமைச்சர்.
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized