Daily Archives: ஏப்ரல் 11, 2008
ரசனை உள்ளவர்கள்,மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டு பார்த்து ரசிக்க(சிரிக்க)வேண்டிய படம்
Filed under கார்ட்டூன், கிரிக்கெட், பந்து, மட்டைப் பந்து
மனதை நொறுக்கி கண்களை குழமாக்கிய படங்கள்
ஆழிப்பேரலையின் சுவடுகள் ரணங்களாக
![]() |
|
http://www.dinamani.com/gallery/show.asp?id=DNQ20041228012115&Topic=901
Filed under ஆழிப்பேரலை, சுனாமி அலைகள், போட்டோ
கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுட்டுக்கொலை
நேபாளத்தில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுட்டுக்கொலை
நேபாளத்தில் வியாழக்கிழமை நடைபெற இருக்கும் அரசியல் நிர்ணய சபைத் தேர்தலுக்காக, மாவோயிஸ்டுகளுக்கு அதிக ஆதரவு இருக்கும் ரோல்பா பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச் சாவடியில் புதன்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸôர்.
காத்மாண்டு, ஏப். 9: நேபாளத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (யு.எம்.எல்) கட்சி ஆதரவாளர்களிடையே செவ்வாய்க்கிழமை நடந்த மோதலில் யு.எம்.எல் கட்சி வேட்பாளர் ரிஷி பிரசாத் சர்மா சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வன்முறையில் 5 பேர் காயமடைந்தனர். சர்மா போட்டியிட்ட சுர்கட் -1 தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. வன்முறை நடந்த இரு கிராமங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, சர்மா கொலையில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என் அக் கட்சி கூறியுள்ளது.
7 மாவோயிஸ்டுகள் பலி: இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 33 பேரை மாவோயிஸ்ட் இயக்கத்தினர் பிடித்துச் சென்றனர். அவர்களை விடுவிப்பதற்காக போலீஸôர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 மாவோயிஸ்டுகள் பலியாகினர்.
அரசியல் நிர்ணய சபைத் தேர்தலுக்கான பிரசாரம் 6-ம் தேதி மாலையுடன் முடிவடைந்துவிட்டது. ஆனால், 6-ம் தேதிக்குப் பிறகும் வடக்கு நேபாளத்தில் உள்ள டாங் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறி அந்தக் கட்சியைச் சேர்ந்த 33 பேரை மாவோயிஸ்ட் இளைஞர் அணியினர் பிடித்துச் சென்றனர்.
அவர்களை விடுவிப்பதற்காக போலீஸôர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மாவோயிஸ்டுகள் 5 பேர் பலியாகினர்.
எனினும், படுகாயம் அடைந்த மேலும் 2 பேர் பின்னர் இறந்து விட்டதாக மாவோயிஸ்ட் தலைவர் சாகர் கூறினார்.
அந்தப் பகுதியிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமருடன் பிரசண்டா சந்திப்பு: இதற்கிடையே, பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவை மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என தமது கட்சியினரைக் கேட்டுக்கொண்ட அவர், அமைதியான முறையில் தேர்தல் நடப்பது ஒன்றே இப்போதைக்கு முக்கியம் என்று தெரிவித்தார்.
இதனிடையே, நேபாளத்தின் வேறு சில பகுதிகளிலும் வன்முறை வெடித்துள்ளது. தாடிங் பகுதியில் மர்ம நபர்கள் குண்டு வீசியதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 பேர் காயமடைந்தனர்.
Filed under நேபாளத்தில் கம்யூனி
சூரிய சக்தி அபாரம்
http://www.dinakaran.com/daily/2008/apr/11/jannal_@.jpg
பாங்காக்: சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த லூயிஸ் பால்மர் என்ற இவர், உலக வெப்பமயமாதலுக்கு எதிரான பிரசாரம் செய்து வருகிறார்.
காற்றை மாசுபடுத்தும் பெட்ரோலியப் பொருட்களுக்கு பதிலாக சூரிய சக்திக்கு மாறுமாறு வலியுறுத்தி தனது சோலார் பவர் காரில் உலகை வலம் வருகிறார்.
Filed under Uncategorized
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் ஒ பங்கு பெற்ற அழகுப் போட்டி
அபுதாபியில் ஒட்டகங்களுக்கான அழகுப் போட்டி நேற்று தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் அதில் முதலிடத்தைப் பெறும் ஒட்டகத்தின் உரிமையாளருக்கு ரூ.38 கோடி பரிசு கிடைக்கும்.
அழகுப் போட்டியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் ஒட்டகங்கள் பங்கேற்கின்றன. அதில் பரிசு பெற்ற ஒரு ஒட்டகத்துடன் அதன் உரிமையாளர்.
http://www.dinakaran.com/daily/2008/apr/11/jannal.asp
Filed under Uncategorized
பெண்கள் ஆண்களைவிட குறைவானவர்கள்,பெண்களுக்கு அறிவு குறைவு,
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டு இருக்கும் பட்டியல், குற்றப்படுத்தும் தோரணையில் அல்லாமல், சொல்லப்படும் எல்லா காரணங்களுக்கும் தேவையான எல்லா ஆதாரங்களையும் தருகிறது. இந்தக் கட்டுரை சில காரணங்களை சுருக்கமாக விளக்குகிறது, முழுவிவரங்களையும் தெரிந்துக்கொள்ள கொடுக்கப்பட்ட தொடுப்புக்களில் சென்று படிக்கவும்.
ஒரு பெண்ணின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதியாகும்
ஒரு ஆண் பல மனைவிகளை திருமணம் செய்யலாம், ஆனால், பெண்ணுக்கு ஒரு கணவன் தான்.
ஆண்களைப் போல ஒரு பெண் மிகவும் சுலபமாக விவாகரத்து செய்யமுடியாது.
மனைவி என்பவள் வீட்டிலேயே இருக்கவேண்டும்
ஒரு பெண் தன் தலையை மூடிக்கொண்டே இருக்கவேண்டும்
ஆண்கள் மட்டும் தான் வெள்ளிக்கிழமை நாட்களில், மற்றும் பண்டியை நாட்களில் மட்டும் சவ அடக்கத்திற்கு ஆஜராகவேண்டும்.
ஒரு பெண் "ஒரு நீதிபதியாகவோ" அல்லது "ஒரு ஆட்சி செய்யும் தலைவியாகவோ இருக்கக்கூடாது".
மேலும் அறிய படிக்க: http://www.muslimhope.com/WomenInIslam.htm
14. முஸ்தஹில் மற்றும் முடா அருவருப்பான செயல்கள் (Mustahil and Mu'tah – they sound disgusting)
ஒரு முஸ்லீம் திரும்பப்பெறாத விவாகரத்தை செய்துவிட்டால், அந்தப்பெண் மறுபடியும் அந்த பழைய கணவனோடு சேர்ந்து வாழவேண்டுமானால், இந்தப் பெண் வேறு ஒரு ஆணோடு திருமணம் செய்யவேண்டும், பிறகு தான் தன் பழைய கணவனோடு சேர்ந்து வாழவேண்டும். இப்படிப்பட்ட வேலைக்காக உள்ள மனிதனைத் தான் முஸ்தஹில் என்பார்கள். முடா என்றுச் சொல்வது "தற்காலிகமான திருமணமாகும்", அதாவது, ஒரு முஸ்லீம் ஒரு பெண்ணை சில மணித்துளிகளுக்காக அல்லது அதற்கும் அதிகமாக காலத்திற்காக திருமணம் செய்துக்கொள்வதாகும், ஆனால், இது விபச்சாரம் என்று எண்ணப்படாது. சுன்னி முஸ்லீம்கள் "முகமது இதை ஒரு குறிப்பிட்ட காலத்திற்காகத் தான் அனுமதித்தார்" என்றுச் சொல்கிறார்கள். ஆனால், ஷிய முஸ்லீம்கள் இந்த "தற்காலிகமான திருமணம்" என்பது இன்று கூட பின்பற்றத்தகுந்தது என்றுச் சொல்கிறார்கள், மற்றும் இன்று கூட இதை ஈரான் மற்றும் இதர இடங்களில் பின்பற்றுகிறார்கள். மேலும் அறிய படிக்க: http://www.muslimhope.com/WomenInIslam.htm
15. ஏன் முகமது 8 லிருந்து 9 வயது உள்ள சிறுமியை திருமணம் செய்துக்கொண்டார்? முகமதுவின் இந்த செயல், ஆப்ரிக்காவில் மற்றும் இதர இடங்களில் உள்ள வாலிப முஸ்லீம் பெண்களுக்கு சொல்லமுடியாத வேதனையையும், உடல் சம்மந்தப்பட்ட பிரச்சனையையும் கொடுத்துள்ளது. மேலும் அறிய படிக்க http://www.muslimhope.com/AishaNine.htm
இயற்கைக்கு மாறான நடத்தையுள்ள முகமது
THE UNUSUAL CHARACTER OF MOHAMMED
16. ஏன் முகமதுவிற்கு இத்தனை மனைவிகள் தேவைப்பட்டது?
முகமதுவின் வளர்ப்பு மகன் தன் மனைவியை(ஜைனப் பின்ட் ஜஷ்) விவாகரத்து செய்துவிட்டபிறகு, முகமது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். முகமதுவின் மற்ற மனைவிகளான "ஷஃபியா" மற்றும் "ஜுவர்ரியா பின்ட் ஹரித்" என்பவர்கள் விதவைகளானார்கள் ஏனென்றால், முகமது தான் இப்பெண்களின் கணவர்களை இதற்கு முன்பே கொன்றார். சில பெண்கள் முகமதுவின் திருமண விண்ணப்பத்தை நிராகரித்தனர், முகமது விவாகரத்து செய்த விவரங்களையும் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள் எழுதியுள்ளார்கள். முகமதுவிற்கு வைப்பாட்டிகளும் இருந்தனர். மேலும் அறிய படியுங்கள்: http://www.muslimhope.com/WhyDidMohammedGetSoManyWives.htm
17. தீய சக்தியால் பீடிக்கப்பட்டு இருந்தார் (Bewitched):
இறைவனின் உண்மையான தீர்க்கதரிசி எப்படி ஒரு தீயசக்தியின் சக்திக்கு (பில்லி சூன்யம் கட்டுக்கு உட்பட்டார்) கட்டுப்படமுடியும்? இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஹதீஸ்களில் 11 இடங்களில் சொல்லப்பட்டு உள்ளது, இந்த ஹதீஸ்கள் தான் சுன்னி இஸ்லாமின் ஷரியா சட்டத்தொகுப்பிற்கு அடிப்படை. மேலும் அறிய படியுங்கள்: http://www.muslimhope.com/IslamAndScience.htm
18. வித்தியாசமான மூட பழக்கவழக்கங்கள் (Odd Superstitions):
முகமது சொன்னதாக ஹதீஸ்கள் பல விவரங்களைச் சொல்கின்றன, அதாவது "கண் திருஷ்டி" உண்மை என்று முகமது சொன்னதாக ஹதீஸ் உள்ளது. எப்போதெல்லாம் மலம் கழிக்கிறோமோ அப்போதெல்லாம் ஒற்றைப்படை எண்களில் கற்களை பயன்படுத்துங்கள் என்றும், உங்கள் மூக்கை ஒற்றைப்படை எண்களில் கழுவுங்கள் என்றும், தொழுகை செய்யும்போது ஒற்றைப்படை எண்களில் தொழுவுங்கள் என்றும், கண்களுக்கு மருந்துபோடும்போது(கழுவும் போது) ஒற்றைப்படை எண்களில் கழுவவேண்டும் என்றும் முகமது சொன்னதாக ஹதீஸ்கள் உள்ளன. நீங்கள் கால்களில் செருப்புக்களை போடும்போது, முதலில் வலது கால் செருப்பை போடவேண்டும், அதே போல செருப்பை கழற்றும்போது, இடது கால் செருப்பை முதலில் கழற்றவேண்டும் என்றும் முகமது சொல்லியுள்ளார். நீங்கள் சாப்பிடும் போது "வலது கையினால் சாப்பிடுங்கள்", ஏனென்றால், இடது கையினால் "சாத்தான்" சாப்பிடுகிறான் என்று சொல்லியுள்ளார். இதைப்பற்றி மேலும் அறிய படியுங்கள்: http://muslimhope.com/IslamAndScience.htm and http://muslimhope.com/IslamAndMedicine.htm
19. கல்லரைக்குள்(சமாதிக்குள்) சித்திரவதை (Torment of the grave):
முகமதுவே பயந்த ஒரு விஷயம் இருக்குமானால், அது "சமாதிக்குள் சித்திரவதை அனுபவிப்பது" என்பதைப் பற்றித் தான். இதன் பொருள் "நரகத்தில் அனுபவிக்கும் சித்திரவதைப் பற்றியது அல்ல, இது சமாதி செய்யப்பட்ட இடத்திலேயே(மண்ணுக்குள்) அனுபவிக்கும் சித்திரவதை பற்றியதாகும்". முகமது, இந்த சித்திரவதையை மற்றவர்கள், மற்றும் தன்னை பின்பற்றுகிறவர்கள், ஏன் தானே அனுபவிக்கக்கூடாது என்று பயந்து இருந்தார். இதைப்பற்றி மேலும் அறிய படியுங்கள்: http://www.muslimhope.com/TormentOfTheGrave.htm
மூலம்: http://www.muslimhope.com/19ReasonsWhyManyHonorablePeopleDontWantToBeMuslims.htm
மேலும் விவரங்களுக்கு இங்கு சொடுக்கவும்: http://www.muslimhope.com
Isa Koran Home Page | Articles Index |
Filed under Uncategorized
முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்பது இதுதானா?நண்பர்களே!!!!!!!!!!!
முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்பது இதுதானா?நண்பர்களே!!!!!!!!!!!
table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}
ஏகத்துவத்திற்கு பதில்: யாகாவா ராயினும் "நா" காக்க
முன்னுரை: கிறிஸ்தவர்கள் இஸ்லாமுக்கு அவதூறை பரப்புகிறார்கள் என்று இப்ராஹிம் அவர்கள் மிகவும் காரசாரமாக பதில் (http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_19.html) அளித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட கட்டுரைக்கு பதில் என்றுச் சொல்லாமல், ஒட்டு மொத்தமாக ஒரு பெரிய சத்தத்தோடு பதில் அளித்துள்ளார். இஸ்லாமுக்கே உரித்தான பாணியில் கிறிஸ்தவர்களைத் திட்டியும் எழுதியுள்ளார், அல்லாவின் நல்லடியார் இபரஹிம் அவர்கள். சரி, அவர் என்ன எழுதியுள்ளார்? என்பதை இந்த கட்டுரையில் காணலாம். இவர்களது இந்த கட்டுரைக்கு என் முதல் பதிலை இங்கு படிக்கலாம்:
ஏகத்துவத்திற்கு பதில் : உவமைக்கு உண்மைக்கும் வித்தியாசம் அறியா அறிஞர்கள் : பாகம் – 2
1. யாகாவா ராயினும் "நா" காக்க:
இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள், இஸ்லாமில் சகிப்புத்தன்மை அதிகம் என்று மேடையில் முழங்கும் இஸ்லாமியர்கள், மேடையில் மட்டும் தான் "அமைதி" காக்கிறார்கள், மேடையை விட்டு இறங்கிவந்துவிட்டால், சுனாமி தான்.
"இஸ்லாமியர்களுக்கு கேள்விகளையும், பதில்களையும் முன்வைக்கும்" நபர்களுக்கு முக்கியமாக கிறிஸ்தவர்களுக்கு இவர்கள் சூட்டும் புகழாரங்கள் என்னவென்று சிறிது பார்ப்போம். கீழே உள்ள புகழாரங்கள் அனைத்தும் பல கட்டுரைகளிலிருந்து எடுத்தது அல்ல, இவைகள் அனைத்தும் ஒரே கட்டுரையிலிருந்து எடுத்தது. இஸ்லாமுக்கு சகிப்புத்தன்மை அதிகம் என்றுச் சொல்லும் அமைதி புறாக்கள் எழுதியதை படியுங்கள்.
1) சமீபகாலமாக இணையத்தளங்கள் மூலம் சில விஷமிகள், குறிப்பாக கிறஸ்தவர்கள் –
2) அவர்கள் அதை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு விடக்கூடாது என்ற குறுகிய நோக்கத்துடன் தங்களது விஷமப்பிரச்சாரத்தை இணையத்தளங்களின் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர்.
3) நாம் எழுதிய கட்டுரையை – அறிவுப்பூர்வமான காரணங்களைக்கொண்டு மறுக்கத் திராணியற்றவர்கள்,
4) எந்த முகத்தைவைத்து இதை எழுதினார்கள்? பதில் பற்றி பேச இவர்களுக்கு என்ன அறுகதை இருக்கின்றது?
5) இவாகள் எந்தக்கட்டுரையில் எமக்கோ அல்லது எமது சகோதரர்களுக்கோ அறிவுப்பூர்வமான – ஆதாரப்பூர்வமான பதில் எழுதிவிட்டார்கள்? இதைச் சொல்ல இவர்களுக்கு வெட்கமாக இல்லையா?
6) இவரகள் எழுதிய பதிலின் லட்சனங்களை நாம் பார்ப்பதற்கு முன்பாக
7) சில நபிமொழிகளுக்குரிய விளக்கங்களைத் திரித்தும் – பொய்யானத் தகவல்களைக் கூறியும் சில விஷமக்கட்டுரைகளை வெளியிட்டார்கள்.
8) இந்த விவாத அழைப்பை ஏற்க திரானியற்ற இந்தக் கயவக் கும்பல் ஒழிந்துக்கொண்டு
9) நீங்கள் பதில் என்றப்பெயரில் – யார் எடுத்த வாந்தியைத் திருப்பி எடுக்கின்றீர்களோ,
10) அந்த நோயாளிகளை அழைத்து வந்தாளும்
11) நீங்கள் எந்த வெளிநாட்டு கைக்கூலிக்கு ஆசைப்பட்டு இப்படிப்பட்ட விஷமப்பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றீர்களோ
12) அந்த வெளிநாட்டு விஷமிகளை அழைத்து வந்தாலும்
13) இப்படி எமது சகோதரர்களின் அரைகூவலுக்கு பயந்து ஓடி ஒழிந்த இந்தக் கயவர்கள்கூட்டம்
14) அதற்கு திரானியற்ற இந்தக் கயவர்கள்தான் ஜாகிர் நாயக்கிற்கு பதில் என்று தங்கள் தளத்தில் எழுதினர். இது தான் இவர்கள் எழுத்தின் – நமக்கு கொடுக்கக்கூடிய பதிலின் – லட்சனம்.
15) இவர்கள் நம்மவர்களுக்கு அளித்த பதிலின் லட்சனம். அடுத்து இவரின் பதிலின் லட்சனத்திற்கு வருவோம்.
16) எவரோ ஒருவர் எடுத்த வாந்தியை அப்படியே திருப்பி எடுத்துள்ளார்கள்
17) 'இதோ எழுதிட்டோம்ல மறுப்பு' என்று கூத்தட்டித்துக்கொண்டால் தான் உண்டு.
18) அது போக இதற்கு முன் நீங்கள் எழுதின வேறு சில மறுப்பக்கட்டுரைகளின் லட்சனம் என்ன?
19) ஏனெனில் இந்த உன்மையடியான் – ஈசா குர்ஆன் அன் கோவிற்கு இது பற்று ஒன்றும் தெரியாது.
20) அடுத்து இவர்கள், நமது சகோதரர்கள் எழுதிய இன்னும் பல கட்டுரைகளுக்கு மறுப்பு என்றப் பெயரில் எதை எதையோ உளறித் தள்ளியுள்ளார்கள்.
21) நாளுக்கு நாள் எதையாவது உளரிக்கொட்டிக்கொண்டு இருப்பார்கள்
2. அன்பான இஸ்லாமிய நண்பர்களே! "சகிப்புத்தன்மை என்றால் என்ன?" :
ஒரு இந்துவோ, கிறிஸ்தவனோ இஸ்லாமுக்கு மாறும் போது, அவனோடு நாங்கள் தோலோடு தோல் சேர்த்து அல்லாவை தொழுதுக்கொள்கிறோம்,நாங்கள் வேறுபாடு பார்ப்பதில்லை ஏனென்றால், இஸ்லாம் சகிப்புத்தன்மையுள்ளது என்றுச் சொல்லும் இஸ்லாமியர்களே!
ஒரு முஸ்லீமிடம் நீங்கள் சகிப்புத்தன்மையோடு இருப்பது என்பது சுலபம், ஒரு கிறிஸ்தவன் இன்னொரு கிறிஸ்தவனிடம் சகிப்புத்தன்மையோடு இருப்பது என்பது சுலபம். அதே போல ஒரு இந்துவை இன்னொரு இந்து சகித்துக்கொள்வது என்பது சுலபம். இவர்கள் இருவரின் அடிப்படை நம்பிக்கையும் ஒன்று தானே.
இஸ்லாம் சகிப்புத்தன்மை உள்ளது என்று நீங்கள் சொல்லவேண்டுமானால், உங்கள் சகிப்புத்தன்மையை முஸ்லீமிடம் அல்ல, மற்றவர்களிடம் காட்டவேண்டும். இஸ்லாமுக்கு கேள்விகள் கேட்டு, பதில்கள் தருகிறோம் என்ற காரணத்தால், இப்படி தரம் குறைவாக திட்டுகின்றீர்களே, உங்களிடம் எங்கே சகிப்புத்தன்மை உள்ளது? நீங்களும் தான் பைபிளில் உள்ள அனைத்தும் கற்பனை என்றுச் சொல்கிறீர்கள்,யூதர்களும், கிறிஸ்தவர்களும் அல்லாவின் வார்த்தைகளாகிய அவரது முந்தைய வேதத்தை திருத்திவிட்டார்கள் என்று (முஸ்லிம்கள் தான் அவர்கள் திருத்தும் போது, பக்கத்தில் இருந்து பார்த்தது போல) சொல்லுகின்றீர்கள். அதற்காக நாங்கள் உங்களை திட்டுகின்றோமா? திட்டுவதற்கு பதிலாக எங்களால் முடிந்த மற்றும் எங்களுக்கு (முக்கியமான எனக்கு) தெரிந்த பதிலை தருகிறோம்.
ஒரே கட்டுரையில் கிறிஸ்தவர்களை நீங்கள் சொன்ன புகழாரங்கள்:
விஷமிகள்,
விஷமப்பிரச்சாரம்,
மறுக்கத் திராணியற்றவர்கள்,
எந்த முகத்தைவைத்து இதை எழுதினார்கள்?
சொல்ல இவர்களுக்கு வெட்கமாக இல்லையா?,
இவரகள் எழுதிய பதிலின் லட்சனங்களை,
விஷமக்கட்டுரைகளை,
கயவக் கும்பல்,
யார் எடுத்த வாந்தியைத் திருப்பி எடுக்கின்றீர்களோ,
நோயாளிகள்,
வெளிநாட்டு கைக்கூலிக்கு,
வெளிநாட்டு விஷமிகளை,
பயந்து ஓடி ஒழிந்த இந்தக் கயவர்கள்கூட்டம் ,
திரானியற்ற இந்தக் கயவர்கள்தான்,
கூத்தட்டித்துக்கொண்டால் தான் உண்டு,
இந்த உன்மையடியான் – ஈசா குர்ஆன் அன் கோவிற்கு,
எதை எதையோ உளறித் தள்ளியுள்ளார்கள்.
இந்த மேலே உள்ள எல்லா வார்த்தைகளையும் உங்களுக்குச் சொல்ல எங்களுக்கு அதிக நேரம் பிடிக்காது, இருந்தாலும், நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம், உங்களை திட்டுவதில்லை. காரணம் என்ன தெரியுமா? எங்களுக்கு வழி காட்டியவர் சென்று வந்த பாதையில் தான் நாங்களும் செல்கிறோம். நீங்கள் உங்களுக்கு வழிகாட்டியாக இருந்தவரை பின்பற்றுகிறீர்கள். இஸ்லாம் சகிப்புத்தன்மை உள்ளது என்பது உண்மையாக இருக்குமானால், இப்படி எல்லாம் நீங்கள் எழுதமாட்டீர்கள். இயேசு சொன்ன வார்த்தைகள் எப்படி உண்மையாக இருக்கிறது என்றுப்பாருங்கள்:
மத்தேயு 7:16-20:
அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?
அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.
நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.
நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.
ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
3. இஸ்லாமை சகிப்புத்தன்மையற்ற மார்க்கமாக நீங்கள் அடையாளம் காட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்:
ஏதோ மேடையில் பேசினால், கேட்பவர்கள் சில நாட்களுக்குள் மறந்துப்போய் விடுவார்கள் என்ற எண்ணத்தில் நீங்கள் "எழுத்துக்களை, கட்டுரைகளை" பயன்படுத்துகிறீர்கள். ஆனால், இது தவறு. உங்கள் கட்டுரைகள் பல தளங்களில் பதிக்கப்பட்டு, ஆயிரமாயிரமான பேர், பல ஆண்டுகள் படிப்பார்கள். படிப்பவர்கள் எல்லாரும், இஸ்லாமியர்களாக மட்டுமே இருப்பார்கள் என்றும், அப்படி இஸ்லாமியர்களாக இருந்தாலும், நீங்கள் மற்றவர்களை திட்டுவதை அங்கீகரிப்பார்கள் என்று நினைத்துவிடவேண்டாம். வன்முறையை எதிர்ப்பவன் இஸ்லாமிலும் உண்டு, வன்முறையை ஆதரிக்கிறவன் கிறிஸ்தவத்திலும் உண்டு. எல்லா மார்க்க மக்களில் இப்படி பல கருத்துக்கள் கொண்ட மக்கள் உண்டு என்பதை கவனத்தில் கொள்ளவும்.
நம் எழுத்துக்கள் நாம் யார்? நம் மனநிலை என்ன? என்பதை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டிவிடும், உங்கள் கட்டுரைகளை படிப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, இஸ்லாம் ஒரு அமைதியான மதம் என்பதை ஏற்றுக்கொள்வதற்கு தயக்கம் காட்டுவார்கள். உங்களின் இந்த வார்த்தைகளினால், இஸ்லாமுக்கு ஒரு அவதூறு பெயரை நீங்களே கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள். இதை மனதில் வைத்துக்கொண்டு எழுதவும்.
நாங்கள் ஆரோக்கியமான விவாதங்கள், ஆதாரத்தோடு கருத்து பரிமாற்றங்கள் நடைபெறவேண்டும் என்று விரும்புகிறோம். நீங்கள் முன்வைத்த பைபிள் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு நாங்கள் பதில் தருவது போல, நீங்களும் பதில் தாருங்கள், நீங்கள் தான் ஆதாரபூர்வமாக, அறிவு பூர்வமாக ஆதாரங்களை முன்வைத்து பதில் தருபவர்கள் என்றுச் சொல்லிக்கொள்கிறீர்களே, பின் ஏன் இவ்விதம் கோபப்பட்டு எழுதுகிறீர்கள்?
இஸ்லாம் சகிப்புத் தன்மையுள்ளது என்றுச் சொல்வது மட்டுமல்ல, அதை நிரூபிப்பதும் உங்கள் கையில் தான் உள்ளது. எதிர்ப்பே இல்லாத போது, நாங்கள் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் என்று முழங்குவது சுலபம், ஆனால், உண்மையான எதிர்ப்பு இருக்கும்போது, "சகிப்புத்தன்மையை", இஸ்லாமின் அமைதி முகத்தை காட்டும் சமயம் இது தான் என்று கருதி செயல்படவேண்டும்.
முடிவுரை: ஏகத்துவம் எழுதிய இந்த கட்டுரையின் மற்ற பகுதிகளுக்கு என் பதிலை அடுத்த கட்டுரையில் தருகிறேன். ஒவ்வொரு தலைப்பாக எடுத்து பதில் சொல்வது தான் சிறந்தது என்று நான் கருதுகிறேன். ஏன் நேரடி மேடை விவாதத்திற்கு வரமறுக்கிறீர்கள்? ஜாகிர் நாயக்கிடம், பிஜே அவர்களிடம் மேடையில் கேள்விகள் கேட்கலாம் அல்லவா? மாற்கு 16ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டது போல, விசுவாசிப்பவர்களால் நடக்கும் அடையாளம் பற்றி என்ன பதில்? விஷத்தை குடிக்க தயாரா? போன்ற கேள்விகளை அவர் கேட்டுள்ளார். ஒவ்வொன்றிற்கும் பதில் கூடிய சீக்கிரமே தரமுயற்சி செய்கின்றேன். எனக்கு கிடைக்கும் சமயத்தில் முடிந்த அளவிற்கு வாரம் ஒரு கட்டுரை அல்லது பதிலை தர நான் முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறேன்.
இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களை எப்படி திட்டினாலும் நாங்கள் நிதானம் இழக்கமாட்டோம். அதற்கு பதிலாக, எங்கள் மறுப்புக்களை இன்னும் ஆழமாகவும், பிழையில்லாமலும் எழுத முயற்சி செய்வோம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாங்கள் செய்யவேண்டியவைகள்:
என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்;
சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்;… (மத்தேயு 5:11-12)
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்(மத்தேயு 5:44)
உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்(லூக்கா 6:28).
உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றிச் சபியாதிருங்கள்(ரோமர் 12:14).
தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்(1 பேதுரு 3:9).
http://unmaiadiyann.blogspot.com/2008/04/blog-post_10.html
Filed under Uncategorized