Daily Archives: ஏப்ரல் 7, 2008

சூத்திரன் என்றால் யார்?

சூத்திரன் என்றால் யார்? இந்து மதத்திற்கும், வருணாசிரமத்திற்கும் ஆதாரமான மனுதர்ம சாஸ்திரம், எட்டாம் அத்தியாயம் 415, 417 -வது சுலோகங்களில் சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்றும், வைப்பாட்டி மகன் என்றும் எழுதியிருப்பதோடு இவர்கள் வசமுள்ள பொருள்களை பலாத்காரமாகவும் பார்ப்பனர் எடுத்துக் கொள்ளலாம் என்றும், நமது பின் சந்ததிகளையும் கட்டுப்படுத்தும்படி எழுதி வைத்திருக்கிறார்கள்
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

சிறுமியை பலாத்காரம் செய்த போலி சாமியாருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமியை பலாத்காரம் செய்த போலி சாமியாருக்கு 10 ஆண்டு சிறை

திருவண்ணாமலை: செய்யாறு அருகே சிறுமியை பலாத்காரம் செய்த போலி சாமியாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

செய்யாறு அடுத்த புதுப்பாளையம் நெமிலி பகுதியை சேர்ந்தவர் ராமு (40). இவர் தன்னை சாமியார் என்று சொல்லி கொண்டு பிழைப்பு நடத்தி வந்தார்.

கடந்தாண்டு மார்ச் 10ம் தேதி இவர் அங்குள்ள திருநல்லூர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி பிரேமா (சிறுமியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாலியல் பலாத்காரம் செய்தார்.

செய்யாறு மகளிர் போலீஸார் விசாரித்து, போலி சாமியார் ராமுவை கைது செய்தனர். இந்த வழக்கு செய்யாறு நீதிமன்றத்தில், நீதிபதி சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி, போலி சாமியார் ராமுவுக்கு 10 ஆண்டு தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

http://www.dinamalar.com/2008MAR21/district/thiru.asp

பின்னூட்டமொன்றை இடுக

Filed under சிறுமி, நீதிமன்றம், போலி சாமியார்

சீதையை ஸ்ரீராமன் தொடவே இல்லையா?

சீதையை ஸ்ரீராமன் தொடவே இல்லையா?

லட்சுமண பகவான் ஒருநாள்….
அய்யர்: ஆகாயம் படைச்சார் பூமியும் படைச்சார்வாயு அக்கினி ஜலமும் படைச்சுட்டு…கடைசியாகத்தானே மனுஷாளப் படைச்சார் கடவுள் உலகத்தப் படைச்சார்

ராமசாமி(பெரியார்): இருக்கட்டும். கடவுள யாரு ஓய் படைச்சார்?
லட்சுமணன்: கடவுள யாரு படைக்கமுடியும் ஓய். அவா சுயம்பு தானா உண்டானவா – தான்தோன்றி
ராமசாமி: கண்காணா உன் கடவுள்தான் தோன்றி ஆகிறப்போ -கண் கண்ட பேரண்டம் தான் தோன்றி ஆகாதோ?

லட்சுமணன்: அசுரகுணம் உள்ளவாதான் – இப்படி அபஸ்வரமாக் கேள்வி கேப்பா…தேவகுணம் இருந்தா இப்படிக் குதர்க்கமாப் பேசமாட்டா ஒம்ம அசுர குணம் அழிகநீர் தேவகுணம் பெறுக…

ராமசாமி: இந்திரன் யாரு ஓய்…
லட்சுமணன்: தேவர்குலத் தலைவன்
ராமசாமி: இராவணன் யாரு ஓய்
லட்சுமணன்: அசுரர் குல அரசன்

ராமசாமி: காட்டில் இருந்த முனிவன் மனைவியின் கற்பைக் கெடுத்தவன் இந்திரன்.கவர்ந்து சென்ற மாற்றான் மனைவியைக் கற்போடு விட்டவன் இராவணன் இப்பச் சொல்லும் குணத்தில் உயர்ந்தவன் யார்?தேவனா?அசுரனா?

லட்சுமணன்: அசுரகுலத்திலயும் அப்பப்போ நல்லவா இருந்திருக்காளே!நந்தனுக்கு மோட்சம் கொடுக்கலியோ நடராஜப் பெருமான்?

ராமசாமி: நந்தனுக்கு மோட்சம் கொடுத்தீரோ தீயிட்டு எரிமூட்டி மோசம் புரிந்தீரா? மோட்சம் தந்தது மோட்சம் தந்தது முற்றிலும் உண்மையென்றால் – அவன்சந்ததியெல்லாம் சந்நிதி இழந்து சந்தியிலே ஏன் நின்றான்?

லட்சுமணன்: மனுஷாளா இருந்தாமடியா இருக்கணுமோ இல்லியோ? தீட்டுன்னு பெரியவா தெரியாமலா சொன்னா?

ராமசாமி: தீட்டு என்னய்யா தீட்டு… குடிக்கிற தண்ணியத் தொடப்படாது குளத்துலயும் கால் படப்படாது எப்படிய்யா வரும் சுத்தம்? ஒங்க மேலதான் குத்தம் குளிக்காத பசுவக் கும்புடுறீங்க – அதக் குளிப்பாட்டும் மனுசன ஏனய்யா கொல்றீங்க?

ராமசாமி: புராணம் இதிகாசம் – வெறும் பொய் மோசம் பொய் பேசிப் பேசியே பொய்யாப் போச்சே தேசம்!!

லட்சுமணன்: புராணம் இதிகாசம் பொய்யில்லேங்காணும்

ராமசாமி: அப்படியாங்காணும் ஆதாரம் கூறும்!
லட்சுமணன்: அணில் முதுகில் ஸ்ரீராமர் போட்டகோடு மூணும் அப்படியே இருக்குது ஓய் அழியலையே பாரும்
ராமசாமி: ஓகோ! முதுகத் தொட்டதும் மூணுகோடு விழுந்திருச்சோ? ஏங்காணும்! சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா – இல்ல சீதையை ஸ்ரீராமன் தொடவே இல்லையா? http://unmaionline.com/20070101/20.htm

1 பின்னூட்டம்

Filed under இராவணன், சீதையை ஸ்ரீராமன், மனைவி, ராமசாமி

கொக்கு எப்படி இருக்கும்?

கொக்கு எப்படி இருக்கும்?

ஒரு ஊர் கோடியில் மக்கள் கூட்டம் அழுகுரலோடு அலைமோதிக்கொண்டிருந்தது.அந்த வழியே போன குருடன் ஒருவன் ஒரு மனிதனை அழைத்து இந்த அழுகையின் சத்தத்துக்கு காரணம் என்ன என்று வினவினான்.

அந்த மனிதன் சொன்னான் ஐயா ஒரு குழந்தை செத்து போய்விட்டது அது தான் இந்த சத்தத்துக்கு காரணம் என்ரு சொன்னான்.

உடனே குருடன் கேட்டான் எப்படி குழந்தை செத்தது என்று?

அந்த மனிதர்:பால் குடிக்கும் போது விக்கி செத்துப்போனது என்றான்.

குருடன்:ஐயா பால் குடிக்கும் போதா?அப்படின்னா அந்த பால் எப்படி இருக்கும்.?

அந்த மனிதர்:யோவ் பால் வெள்ளையாய் இருக்கும்

குருடன்:ஐயா மண்ணிச்சுக்குங்க,வெள்ளை எப்படி ஐயா இருக்கும்?

அந்த மனிதர்<img (மிகவும் சலித்துக்கொண்டு)கொக்கு மாதிரி இருக்கும்யா.

குருடன்:ஐயா மண்ணிச்சுக்குங்க நான் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுக்கறேன்.

அந்த மனிதர்:சரி கேட்டுத் தொலையா.

குருடன் :ஐயா அந்த கொக்கு எப்படி ஐயா இருக்கும்?

அந்த மனிதர்:மிகவும் கோபமாக தன் கையை வளைத்து இந்த இப்படித்தான் இருக்கும் என்று சொன்னார்.

அந்த குருடன் அந்த மனிதரின் கையை தடவிபார்த்து விட்டு ஐயா இவ்வளவு பெரிசு குழந்தை வாயில் போனா குழந்தை சாகாமல் இருக்குமா என்று கேட்டுவிட்டு நடையை கட்டினான்

பதில் சொன்ன மனிதர் தலையில் அடித்துக்கொண்டார்.

 

http://aanthaiyaar.blogspot.com/2008/03/blog-post_7971.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under குழந்தை, கொக்கு, சிறு கதை

எல்லாக் குழந்தைகளும் முஸ்லிமாய்ப் பிறக்கிறதா?

இந்த வார திண்ணை இதழில், திண்ணை ஆசிரியர் கோபால் ராஜாராம் சிறப்பானதொரு கட்டுரையை திண்ணைப் பேச்சில் எழுதியுள்ளார்.

இக்கட்டுரையின் மூலம் மிகவும் வலுவான அடியை கோ.ராஜாராம் அவர்கள் இஸ்லாமிஸ்டுகளுக்கு கொடுத்துள்ளார். காரணம், கோ.ராஜாராம் வஹ்ஹாபியை எதிர்கொள்ளவில்லை, ‘பிறக்கும் குழந்தைகளை கிறித்துவர்களாகவோ யூதர்களாகவோ மாற்றிவிடுகிறார்கள், அவர்களின் இயல்பான மதம் இஸ்லாமே, உலகில் எல்லாமே இஸ்லாமாகவே (அதாவது கல், மண், மரம், செடி, கொடிகள், விலங்குகள்) கடவுளுக்கு கட்டுப்பட்டு (அதன் நீட்சியாக கடவுளின் தூதர்களுக்கு, அவர்கள் நியமித்த ஆட்சியாளர்களுக்கு) இயங்குகின்றனஎன்பது முஹம்மதுவின் கருத்து, இஸ்லாத்தின் மிகவும் முக்கியக் கோட்பாடு‘. எனவே இது இஸ்லாமியர்களுக்கு பெரும் அவமதிப்பாக தென்படும் (ஆனால், அவர்களது கருத்துக்கள் எப்படி மற்றவர்களை அவமதிக்கிறது என்பது என்றும் அவர்களுக்கு புரிவதில்லை).

எப்படியோ, நல்ல விஷயங்கள் தமிழில் நடைபெறுகின்றன. எனது மலையாளி நண்பர் ஒருவர் (தமிழ் தெரிந்தவர்) இந்த விவாதங்களையெல்லாம் பார்த்துவிட்டு அயர்ந்துபோனார்இந்த நிலை மலையாளத்தில் என்று வரும் என்ற வேட்கையோடு.

ஆங்கிலத்தில் மட்டுமே இஸ்லாம் பற்றிய இப்படியான விவாதங்கள் நடைபெறுகின்றன (குறைந்தபட்சம் நான் காணும் வரையில், மற்ற மொழிகளிலும் நடைபெறலாம்எனக்கு தெரியவில்லை). இந்திய மொழிகளில் தமிழில் இந்த அளவுக்கு ஆழமாக இஸ்லாத்தின் அடிப்படை குறித்த விழிப்புணர்வு பரவுவதை நினைத்தால் மகிழ்சியாக இருக்கிறது.

நே.கு

***

Thursday March 27, 2008

திண்ணைப் பேச்சுஅன்புள்ள வஹாபி

கோபால் ராஜாராம்

எல்லாக் குழந்தைகளும் முஸ்லிமாய்ப் பிறக்கிறது என்று எனக்குத் தெரியாத அரபி மொழியில் ஏதோ, சொல்லியிருக்கிற வஹாபியின் கடிதம் கண்டு நான் மனமாரச் சிரித்தேன். நான் பிறந்தது நிர்வாணமாக. அம்மாஅப்பா குரொமோசோம்களின் கலவையும், முன்னோர்களின் மரபணுப் பதிவின் கலவையுமாகப் பிறந்த நான் ஒரு எழுதப் படாத சிலேட் தான். அதற்குப் பின்பு என் பெற்றோர், என் சூழல், என் ஆசிரியர்கள், படித்தது, கேட்டது என்று ஐயப் பாடுகளும், சிந்தனைகளும் பெற்று வளர்ந்து நிற்கிற ஒருவன் நான். எல்லோருமே அப்படித்தான், வஹாபி உட்பட. பிறக்கும்போதே சாதி, மதம், சொல்லப்போனால் பாலின உணர்வு கூடப் பெறுவதில்லை என்று அறிவியல் சொல்கிறது. எனவே தான் கிருஸ்துவ மதத்தில் ஓரளவு சிறுவர் சிறுமியர் வளர்ந்த பிறகு அவர்களுக்கு ஞானஸ்நானம் வழங்கப் படுகிறது. யூத மதத்திலும் அவ்வாறே. இப்படி வஹாபி எழுதுவது இஸ்லாமியராய் அல்லாத 400 கோடி மக்களை அவமதிப்பது மட்டுமல்ல, இஸ்லாம் என்ற மதத்தையும் அவமதிப்பது போலத்தான். அறிவு பெற்றபிறகு பகுத்தறிவால் ஆய்ந்து உணர்ந்து தேர்வு செய்துகொள்கிற நம்பிக்கை தான் உண்மையானதாய் , ஒரு மனிதனின் இயல்பிற்குத் தக்கதாய் இருக்க முடியும். மிரட்டலாலும், இப்படி பிறக்கும்போதே இஸ்லாமியனாய்ப் பிறந்தாய் என்றெல்லாம் பொய் சொல்லி ஆள் சேர்க்கிற அளவு இஸ்லாம் பலவீனமானது என்று நான் நம்பவில்லை.

இஸ்லாம் பற்றிய புகழுரையை வழங்கியுள்ள அநேகம் பேரை மேற்கோள் காட்டுவதன் மூலம் வஹாபி என்ன சொல்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. இஸ்லாம் பற்றி விமர்சனங்களை முன்வைத்த பலநூறு பேரையும் என்னால் மேற்கோள் காட்ட முடியும். ஆனால் வஹாபி காட்டும் மேற்கோள்களும் சரி, இஸ்லாமை விமர்சனம் செய்பவர்களின் மேற்கோள்களும் சரி எதனுடைய நிரூபணமும் அல்ல. ஒரு குறிப்பிட்ட பார்வையிலிருந்து செய்யப் படுகிற பாராட்டு அல்லது விமர்சனம், அதன் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ளத் தக்கதே தவிர சீர்தூக்கிய முடிவல்ல. அதை வேதவாக்காய்க் கொண்டு இஸ்லாமைப் புகழ்வதோ, இகழ்வதோ தவறு. இது இஸ்லாமிற்கு மட்டுமல்ல, எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.

அமெரிக்காவில் மிக வேகமாக வளர்கிற மதம் இஸ்லாம் என்ற புள்ளி விவரம் தவறு என்று சொல்கிறார்கள். அப்படி இருந்தால் கூட அது இஸ்லாமின் தகுதியைக் காட்டிலும், அமெரிக்காவின் பல்கலாசாரப் பண்பிற்கு ஒரு பாராட்டாகத் தான் அமையுமே தவிர வேறில்லை. இதே சுதந்திரம் இஸ்லாமியர் பெரும்பான்மையாய் உள்ள நாடுகளிலும் வழங்கப் படவேண்டும் என்று வஹாபி பிரார்த்தனை செய்யட்டும். பெரும்பான்மை வாதத்தால் மற்ற மதங்களின் உரிமைகள் நசுக்கப்படாத அமெரிக்கா போன்றே இரான், அரேபியா , எகிப்து போன்ற நாடுகளிலும் மதச்சுதந்திரம் வழங்கப் படவேண்டும் என்பது நம் கோரிக்கையாய் இருக்கட்டும். வஹாபி இதற்குப் பாடுபடுவார் குரல் கொடுப்பார் என்று நம்புவோம்.

****

பிறக்கும்போதே ஒரு மதத்தைப் பச்சை குத்திக் கொண்டு எல்லோரும் பிறக்கிறார்கள் என்ற வாதம் ஒரு தத்துவப் பிரசினையின் தொடக்கம். மனிதனின் இருப்பு முன் கூட்டியே நிர்ணயிக்கப் பட்டுவிட்டால், அவனுடைய சுயம் என்பது என்ன? சுதந்திரத் தேர்வு என்பது என்ன? அப்படித் தேர்வு இல்லையென்றால் அவன் செயல்களுக்கு அவன் எப்படி பொறுப்பாவான்? சொர்க்கம் நரகம் என்ற கருத்தாக்கம் எப்படி பொருள் கொள்ளும் என்பது ஒரு தத்துவப் பிரசினை. கிருஸ்துவ தத்துவத்தில் சுதந்திரத் தேர்வு மனிதனுக்கு உண்டா இல்லையா என்பது பற்றி பெரும் தத்துவ விசாரங்கள் நடந்து வந்திருக்கின்றன.

ஆனால் வஹாபி போன்றவர்களுக்கு இந்தத் தத்துவப் பிரசினையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. தயாராக உள்ள பதில்களைப் பதிவு செய்தால் போதும்.

****

1400 வருடங்கள் முன்பு இஸ்லாம் தோன்றவில்லை என்று வஹாபி சொல்வதும் எனக்கு விளங்கவில்லை. முகம்மது கார்ட்டூன்களுக்குத் தானே முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். மோசஸ், ஏசு பற்றி காமெடியும், கார்ட்டூன்களும் வழமையாய் எல்லா மேற்கு நாடுகளிலும் உண்டே அதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையே. முகம்மது தோன்றியிராவிட்டால் எப்படி இஸ்லாம் என்ற மதம் தோன்றியிருக்கும்?

****

திண்ணையில் கோபால் ராஜாராம்

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20803272&format=html

http://islaamicinfo.blogspot.com/2008/03/blog-post.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இஸ்லாம், கோபால் ராஜாராம், திண்ணை இதழில், வஹ்ஹாபி

வாயைத் திறக்காமல் பாட்டு பாட முடியுமா?இதோ இவர் பாடுகிறார்

 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

அழகிய பெண்ணா? கம்ப்யூட்டர் சொல்லி விடும்


கணவனின் பொய் கருத்து எடுபடாது

அழகிய பெண்ணா? கம்ப்யூட்டர் சொல்லி விடும்

வாஷிங்டன், ஏப். 7: மனைவியையோ, காதலியையோ பார்த்து Ôபொய் சொல்லப் போறேன்… நீ ரொம்ப அழகியடிÕ என்றெல்லாம் இனி நக்கல் அடிக்க முடியாது. ஆம். ஒருவரது தோலின் தன்மை, அணியும் உடை ஆகியவற்றைப் பொறுத்து அவர்களது அழகை இனி கம்ப்யூட்டர் சொல்லி விடும்.
இப்படி ஆண்களின் அடாவடி Ôதீர்ப்புகளில்Õ இருந்து பெண்களைக் காப்பாற்றும் தொழில்நுட்பத்தை இஸ்ரேலிய விஞ்ஞானிகள் கம்ப்யூட்டருக்குச் சொல்லிக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளனர்.
அதன்படி, ஒவ்வொரு பெண்ணின் மேக்கப், நடை, உடை பாவனைகளை வைத்து அழகை கம்ப்யூட்டர் மதிப்பிடும்.
கம்ப்யூட்டரை மனிதனின் தனிப்பட்ட பயன்களுக்குக் கொண்டு செல்லும் ஆராய்ச்சியின் ஒரு கட்டமாக இதை விஞ்ஞானிகள் செய்து காட்டியுள்ளனர். செயற்கையான அறிவுத் திறனை கம்ப்யூட்டரில் பெற இது உதவும்.
ÔÔஇதுவரை ஒருவரது அடிப்படை முக அமைப்பை அடையாளம் காண்பதற்கு கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படுகிறது. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. புதிய சாப்ட்வேரில் உளவியல்ரீதியான தீர்ப்புகளை கம்ப்யூட்டர் அளிக்கும்ÕÕ என்றார் இஸ்ரேலிய இந்தியரும் டெல் அவிவ் பல்கலைக்கழக விஞ்ஞானியுமான அமித் காகைன்.
ÔÔமுதல் கட்டமாக 30 ஆண்கள், பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அதே வயதுடைய 100 முகங்களைக் காட்டி அழகைப் பட்டியலிடக் கேட்டு குறித்துக் கொண்டு ரேட்டிங் தரப்பட்டது.
அதே முகங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து முகத்துக்கு கூடுதல் மென்மை, தோல் பளபளப்பு, தலைமுடி வண்ண மாற்றம் செய்து கம்ப்யூட்டரிடம் ரேங்கிங் பெறப்பட்டது. மனித உளவியல் மற்றும் கம்ப்யூட்டரின் கணிப்பு இரண்டின் முடிவுகளும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன.
அதில் மனிதர்களின் தீர்ப்பைப் போலவே கம்ப்யூட்டரின் முடிவுகளும் அமைந்திருந்தது ஆச்சரியம்.
அழகை தனது மொழியில் கிரகித்து ஏற்கனவே பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பொருத்திப் பார்த்து தீர்ப்பளிக்கும் வகையில் இந்த சாப்ட்வேர் உள்ளது என்றும் அமித் தெரிவித்தார்.
எனவே, Ôசே… இந்த டிரஸ் உனக்கு எடுப்பா இல்லை, தலைமுடி கலர் சகிக்கல என்றெல்லாம் இனி சொல்லி அழகியைத் தீர்மானித்து விட முடியாது. கம்ப்யூட்டரில் படத்தை பதிவு செய்து மவுசைக் கிளிக்கினால் உங்கள் பொய்க் கருத்து அம்பேல் ஆகி, உதை பட வாய்ப்பு அதிகம், எச்சரிக்கை!
http://dkn.dinakaran.co.in/firstpage.aspx?global.eid=Dinakaran%20E1#

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அழகிய பெண்ணா, கம்ப்யூட்டர், மனைவி, வாஷிங்டன்

கன்னடர்களை இழிவாக ரஜினி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்-கன்னட பட தயாரிப்பாளர் சா.ரா.கோவிந்து, நடிகை ஜெயமாலா

கன்னடர்களை நான் தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன்

பெங்களூர், ஏப். 7: ஒகனேக்கல் விவகாரத்தில் சென்னையில் நடைபெற்ற தமிழ் திரையலகினரின் உண்ணாவிரத போராட்டத்தின் போது, கன்னடர்களின் மனது புண்படும்படியாக பேசவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
கன்னட தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், கன்னடர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. கன்னடர்களை இழிவாக பேசும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. ஒகேனக்கல் விவகாரத்தில் அரசியல் லாபம் அடைய முயற்சிப்பவர்களை நீங்களே உதையுங்கள் என்றுதான் கூறினேன். இதையும், திரையரங்குளை தாக்குவது, பஸ்களை எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை மனதில் வைத்துதான் கூறினேன்.
மன்னிப்பு கேட்கவில்லை என்றால், நான் நடித்த படங்களை திரையிடவிடமாட்டோம் என்று சிலர் கூறி வருகின்றனர். இதனால் எனக்கு எந்த இழப்பும் இல்லை. நான் நடிக்கும் படங்களை தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மக்களும் ரசிக்கின்றனர். கர்நாடகத்தில் நான் நடித்த படங்களை திரையிடாவிட்டால், கன்னட ரசிகர்கள்தான் வேதனையடைவார்கள். நான் தவறிழைத்தாக கன்னட திரையுலகின் அம்பரீஷ், விஷ்ணுவர்த்தன், அஸ்வத் போன்ற மூத்த நடிகர்கள் மனசாட்சியுடன் கூறினால் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன். 5 கோடி கன்னடர்களை உதைப்பேன் என்று நான் கூறியதாக, சிலர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் எனது மனம் புண்பட்டுள்ளது.
இவ்வாறு பேட்டியில் ரஜினிகாந்த் கூறினார்.
கன்னட பட தயாரிப்பாளர் சா.ரா.கோவிந்து, நடிகை ஜெயமாலா ஆகியோர் கூறுகையில்,Ô ரஜினிகாந்த் மீது மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளோம்.
அதே சமயம் அவர் கன்னடர்களை இழிவாக பேசியதால் கன்னடர்களின் மனம் புண்பட்டுள்ளது. கன்னடர்களை தாக்கி பேசவில்லை என்று கூறி மறுபடியும் தவறிழைக்க வேண்டாம். தேவையானால், அவர் பேசிய காட்சிகள் அடங்கிய வீடியோ கிளிப்பிங்சை வரவழைத்து மறுபடியும் பார்க்கட்டும். கன்னடர்களை இழிவாக பேசியது உண்மை. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால், ரஜினி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்Õ என்றனர்.

http://dkn.dinakaran.co.in/firstpage.aspx?global.eid=Dinakaran%20E1#

பின்னூட்டமொன்றை இடுக

Filed under கன்னடர், சா.ரா.கோவிந்து, நடிகை ஜெயமாலா, ரஜினி

ஈமச்சடங்கு செய்த போது பிணம் உயிர்தெழுந்தது

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஈமச்சடங்கு, உயிர்தெழுந்தது, பிணம்

கைக்குழந்தகளை கற்பழிக்க முஸ்லீம் இளைஞர்கள் ஆர்வம்?

கைக்குழந்தகளை கற்பழிக்க முஸ்லீம் இளைஞர்கள் ஆர்வம்?இந்த மாதிரியான கட்டுரைகள் எழுதுவதில் ஜிஹாதி நண்பர்கள் முதலிடம் பிடிப்பார்கள்.ஆனால் இந்த கட்டுரையின் நோக்கம் அதுவல்ல.கேவலமான இந்த முஸ்லீம் இளைஞரின் செயலை பொருக்க முடியாத தகப்பனே அவனை பிடித்துக்கொடுத்த சம்பவம் நடந்துள்ளது

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், கைக்குழந்தகளை, முஸ்லீம்