Daily Archives: ஏப்ரல் 2, 2008

கொஞ்ச ரிலக்சா ஜோக் படிங்க

 

 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ‌பிரேக் இ‌ல்லை, க‌ண்ட‌க்ட‌ர், சிரிப்பு, ஜோக், jok, tamil.webdunia

கிறிஸ்தவ போதகரான எஸ். பயாசுதீன்

கிறிஸ்தவ போதகரான எஸ். பயாசுதீன்

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

எஸ். பயாசுதீன்(மொழிபெயர்ப்பு முழுமை அல்ல)

என் பெயர் பயாசுதீன் நான் ஒரு கட்டுக் கோப்பான முஸ்லீம் குடும்பத்தில், தமிழ் நாட்டில் பிறந்தேன். இஸ்லாமின் எல்லா மதச்சடங்குகளும் எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. நான் ஆறு வயதாக இருந்தபோது என் தகப்பனார் எம். சர்தார் ஹூசைன் காலமானார். இதன் பிறகு நாங்கள் வேறு நகரத்துக்கு சென்று குடியேறினோம். முழுக்குடும்பத்தையும் என் தாயார் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது.புதிய இடத்தில் குடியேறின கொஞ்ச நாட்களிலேயே மக்களின் பல்வேறு நிறங்களை கண்டுகொண்டோம். குறிப்பாக எங்கள் உறவினர்கள் உலகத்தில் பணத்துக்கு என்ன மதிப்பு இருக்கிறது அதன்பின் ஓடுகிற மக்கள் எப்படி என்றெல்லாம் கற்றுக் கொடுத்தார்கள். எல்லாரும் எங்களை விட்டு கடந்து போனபோதும் நாங்கள் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை வாழவேண்டும் என்பதில் குறியாக இருந்தோம். ஆனால் அதுவும் எங்களுக்கு மிகவும் கடினமாயிருந்தது. ஏனென்றால் என் தாயார் செய்வினையால் மனரீதியாகவும் , உடல்ரீதியாகவும் மிகவும் பாதிப்புக்குள்ளானார். பின்னர் கொஞ்ச நாட்களில் என்னுடைய சகோதரியையும் பாதித்தது. இந்த நாட்களில் எங்களுக்கு உலகத்தின் ஆவி அல்லது செய்வினைப் பற்றித் தெரியாது எனவே நாங்கள் பெரும் பணத்தை ஆஸ்பத்திரிகளுக்கும், கோவில்களுக்கும் மந்திரவாதிகளுக்கும் செலவழித்தோம் ஆனால் ஒரு பயனும் இல்லை.

எங்கள் முழுக்குடும்பமும் மிகுந்த குழப்பத்திற்குள் தவித்தது பல நேரங்களில் குடும்பமாக தற்கொலை செய்ய முயற்சி செய்தோம். அதிர்ஷ்டவசமாக அப்படிநடக்கவில்லை. இதை நான் உங்களுக்கு எழுதும்போதே என் வாழ்க்கையில் இருந்த வெறுமையையும்,நம்பிக்கையற்ற சூழ்நிலைகள் மற்றும் என் மேல் இருந்த அன்பு இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் அற்புதம் செய்யும் கரத்தையும் நினைவு கூறுகிறேன். அந்த நாட்கள் பெரும் துயரத்தின் காரிருளினால் மூடப்பட்ட கொடிய நாட்களாய் கடந்தது. அதைப்பற்றி சொல்லவேண்டுமென்றால் நாங்கள் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தோம் ஆனால் வாழ்க்கையற்றவர்களாய். 1993 ம் வருடம் என் தாயுடைய நிலைமை மிகவும் மோசமானது இதுதான் பில்லிசூனியத்தின் உச்சக் கூட்டம் என்று அறிந்து கொண்டோம். முழுவதும் உதவியற்ற நம்பிக்கையற்ற நிலையில் இருந்தபோதும் எங்களுக்கு உதவிசெய்யும்படி இயேசுவின் கரம் இருந்ததை பார்க்க முடிந்தது. கிறிஸ்தவ சபைக்கு போக ஆரம்பித்திருந்த பாண்டி என்ற சகோதரன் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்கள் மற்றும் சந்தோஷம், உள்ளத்தில் உள்ள சமாதானம் பற்றியும் எங்களோடு பகிர்ந்துகொண்டார். ஒரு நாள் எங்களையும் சபைக்கு அழைத்தார். நாங்கள் ஒரு ஞாயிற்றுக் கிழமை சபைக்கு போனோம் . அந்த உயிர்த்தெழுந்த கிறிஸ்து உலகத்தை விடுதலையாக்கினது போல எங்களையும் எல்லா செய்வினை கட்டுகளிலிருந்தும் விடுதலையாக்கினார். தேவ ஊழியனுடைய ஜெபத்தின் மூலம் இயேசு கிறிஸ்து எங்களுடைய எல்லாக் கட்டுகளையும் உடைத்துப் போட்டார், எங்களுடைய சொந்தக் கண்களினால் கண்டு உயிர்த்தெழுந்த அவருடைய உன்னத வல்லமையை உணர்ந்தோம்.

நான் தேவனுடைய வல்லமையை பார்த்தபோது ஆச்சரியப்பட்டேன் ஏனென்றால் இதுதான் முதல்முறையாக எல்லா ஆவிகளும் தேவனுடைய வல்லமைக்கு முன்பாக அடிபணிபவதை நான் பார்க்கிறேன். அந்த நபர் செய்வினையை முறிப்பதற்கு எதையும் உபயோகப்படுத்தவில்லை வெறும் வார்த்தைகள் அடங்கிய ஜெபம் மாத்திரம்தான் செய்தார். ஆனால் அந்த வார்த்தைகளில் அத்தனை வல்லமையிருந்தது. அப்போதும் நான் இயேசுவை முழுவதும் ஏற்றுக் கொள்ளவில்லை அவருக்கு ஆவிகளின் மீது அதிகாரம் உள்ளது என்று மட்டும் தான் நம்பினேன். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சபைக்குத் தொடர்ந்து போக ஆரம்பித்தப் பிறகு. தேவன் என்னோடு பேச ஆரம்பித்தார். என்னுடைய பாவங்களை மன்னித்து என்னைத் தேவனோடு இணைக்க கூடிய இயேசுவை என் வாழ்க்கையி;ல் ஏற்றுக்கொண்டேன். மரிக்கும் ஆத்துமாக்களைக் குறித்த பாரம் எனக்குள் உண்டானது தேவ அழைப்பை உணர்ந்து என்னை ஒப்புக்கொடுத்தேன். இறையியல் கல்வியை முடித்துவிட்டு இப்போது ஒரு சிறிய கிராமத்தில் பாஸ்டராக உள்ளேன். எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.
 
 
 

S.FAYAZUDDIN

I , S.FAYAZUDDIN born and brought up in a orthodoxy Islamic family in tamil nadu of India. I was taught by all Islamic rituals and ceremonials. My father M.Sardar Hussain passed this world when I was six years old. After his departure our family moved other city and settled there. The whole family was ran after by my mother. As we settled life in this city, soon we came to know about the different colors of the people. Especially about our relatives who taught us to know about the importance of money in this world and the people who are behind it. Even though everyone left us to be alone. We aimed to live a happy and peaceful life as of a human do think. But that too became very hard for us to have. Because my mother was badly affected by the witchcraft which made her physically and mentally so weak. Later it sometimes also affected my sister. During this days, we does not know about the spirit world or Witchcraft. So we spend all our money for hospitals and for many sorcerers, magicians and also for temples. But all left us in vain.

Our family was on so dilemma that we went to suicide as a whole family for many times. But unfortunately it did not happened. When I am writing this I do remember the emptiness in everything and the hopeless condition we had and above all the wonder working hand of loving Savior Jesus Christ. That days went on with tragic sorrows and a gloomy dark covered all over. I would say on those days even though we had our lives in this world but we were life-less. My mother become so severe sick in the year 1993 which was the final move of the witchcraft that we understood. As we were in the hopeless and helpless condition from this world and worldly power. We were able to see the helping hand of Jesus which was above us, since our being in this world. Yes, as we looking our final chapter of the life a Christian brother named Pandi who had started to go to church, shared about his joy and peace in Christ and

 

 

called us to come to church. As we want to see the life. We want to the near by church for a Sunday service. Yes we went near to God who called us. On that Sunday, as Christ resurrected and set free the world, we were also set free from the bondage of the witchcraft. By the prayer of servant of God, Jesus Christ broke all our chains and with our own eyes, we can able to see and feel the magnificent power of resurrected Christ.

As I saw the power of Christ. I was amazed. Because it was for the first time, I have seen that a spirit is subjecting to the high power of God. And also it was for the first time in my whole life I saw that a person is not using anything to remove the witchcraft only a prayer, (the mere words) in which there is power. But still on that time I did not accept Jesus Christ as My personal Savior. Because I accepted Jesus Christ only as God of Power to whom all things are subjected. Later as I began to go to church God's word spoke to me. Yes, I began to look for savior who could wash away my sin, who could make me to have fellowship with God. When I accepted Jesus Christ as My Savior, my inner – being totally become to change and the burden of dying Souls came to me. On a particular Sunday service, I heard the call of God to me for his ministry. By the Grace of God I dedicated to His ministry and able to finish my theological studies and to be in His ministry. I have been pastoring a small village church and reaching Non-Christian Society. I request you pray for the church Ministry and my marriage which will be hell on 09-09-2005 at tamil nadu. All glory be to God.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இயேசு, இஸ்லாம், குரான், பைபிள்

பார்பன தூதுவர் எழில் அவர்களுக்கு அழைப்பு

நண்பர் எழில் அவர்களுக்கு ஓர் அழகிய அழைப்பு

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}


நண்பர் எழில் அவர்களுக்கு முதலாவது நண்பர் உமர் அவர்கள் கட்டுரைக்கு நீங்கள் பதிலாக ஒரு கட்டுரை பதித்துள்ளீர்கள்

அதன் பிறகு நான் எழுதிய கட்டுரைக்கும்,என் பதிவில் வெளியிடப்பட்ட கட்டுரைக்கும் நீங்கள் பதிலாக இரண்டு பதிவுகளை வெளியிட்டு உள்ளீர்கள்.முதலாவது எத்தனையோ இந்து மத பதிவர்கள் எழுத்துலகில் இருந்தாலும் நீங்கள் பதில் எழுத முன் வந்தது பாராட்டத்தக்கது.

சரி நீங்கள் வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் நாங்கள் ஆதாரத்தோடு பதில் தருவதற்கு தயார்.

ஆனால் ஒரு சின்ன விஷயம் நாங்களும் இந்து மதத்தின் நான்கு வேதங்கள்,உபநிஷத்கள்,பகவத்கீதை,இராமாயணம்,மஹாபாரதம்,சிவ புராணம்,விஷ்னு புராணம்,கந்த புராணம்,பவிஷ்ய புராணம்,சைவ சித்தாந்தங்கள்,வைணவ நாலாயிர திவ்ய பிரபந்தம்,மற்று இருக்கும் இந்துக்களின் அனைத்து புத்தகங்களில் இருந்து நாங்கள் கேள்வி கேட்கிறோம்.அதற்கான பதிலை நீங்கள் தருவதற்கு தயாரா?

 

 உமர் அவர்கள் எழுதிய கட்டுரை
 
 
 
நான் எழுதிய கட்டுரை
 
 
 

 

 

எழில் எழுதிய கட்டுரைகள்
 
 
 
 
 
 

3,யூதர்களின் பழங்குடி மதத்துக்காக பாடுபடும் சகோதரர்களே, சற்று படித்து பார்க்கக்கூடாதா?

 

 
 
 
 மற்றும் நாங்கள் இந்துத்துவம் பற்றி அறிந்துக்கொள்ள எந்த புத்தகங்களை (வேதங்களை) படிக்கவேண்டும் என்பதையும் நீங்கள் தெளிவு படுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்ளுகிறோம்
 
 
சிறுகுறிப்பு;இணையத்தில் வரும் கட்டுரைகளை யார் வேண்டுமானாலும் எடுத்துப் பதிப்பார்கள்.அது நான்கு பேரல்ல நாற்பது பேர் வேண்டுமானாலும் பதிக்கலாம்.அந்த பதிவின் மூலத்தொடுப்பு யாருடையது என்று பாத்தால் தெரிந்துவிடும் கட்டுரையை யார் எழுதினது என்று.இதற்கு போய் நண்பர் எழில் மிகவும் வருத்தம் அடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்.
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்து, இஸ்லாம், எழில், பிராமணர்கள்

முட்டை வேக வைக்க புது கருவி

லண்டன் :மேற்கு லண்டனை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவர், முட்டை வேக வைக்க, புது கருவி கண்டுபிடித்துள்ளார். ஒரே ஒரு முட்டை மட்டுமே கொள்ளும் அளவுக்கான இந்த கருவியினுள், முட்டையை வைத்து, இயக்கினால், தண்ணீர் தேவை இன்றி, தானாகவே வெந்து விடுகிறது. "சாண்ட்விட்ச் டோஸ்டர்' போல இது செயல்படுகிறது. இக்கருவி எப்படி செயல்படுகிறது என்பது குறித்து, பி.பி.சி., "டிவி'யில் ஜேம்ஸ் விளக்கம் அளித்தார். ஆனால், கருவியினுள் வைத்த முட்டை உடைந்து, நிகழ்ச்சியை "சொதப்பி' விட்டது. எனினும், இவரது கண்டுபிடிப்பைப் பாராட்டி, வாழ்நாள் சாதனை விருதான, ரூ. எட்டு லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
 
 
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஜேம்ஸ், தண்ணீர், புது கருவி, முட்டை, லண்டன்

பழி தீர்ப்பதற்காக கொடூரம் பெண் குழந்தைகளுக்கு திருமணம்

பழி தீர்ப்பதற்காக கொடூரம் பெண் குழந்தைகளுக்கு திருமணம்

இஸ்லாமாபாத் :தந்தை இன்னொரு திருமணம் செய்து கொண்டதால், குடும்பப்பகை ஏற்பட்டது. இதற்கு பழி தீர்ப்பதற்காக, அவரது இரு பெண் குழந்தைகள், சித்தியின் சகோதரர்களுக்கு, திருமணம் செய்து வைக்கப்பட்ட கொடுமை பாகிஸ்தானில் அரங்கேறியது.

பாகிஸ்தானில், பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர் நவாஸ். இவரது மனைவி அன்வர் பீவி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தனது மனைவியின், ஒன்று விட்ட சகோதரியை திடீரென்று திருமணம் செய்து கொண்டார் நவாஸ். இதனால், கிராம பஞ்சாயத்து கூட்டப்பட்டது. கிராம வழக்கப்படி, இது போன்ற செயலில் ஈடுபடுவோரின், சிறிய குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும். இதன் அடிப்படையில், நவாசின் ஒன்பது வயது மற்றும் ஏழு வயது பெண் குழந்தைகளுக்கு, சித்தியின் சகோதரர்கள் கலித் மற்றும் முகமது யாசின் ஆகியோருக்கு திருமணம் செய்து வைக்க, பஞ்சாயத்து கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது. பஞ்சாயத்துக் கூட்டத்திலேயே, திருமணமும் செய்து வைக்கப்பட்டது.திருமணத்துக்குப் பின், பெண் குழந்தைகளை அழைத்துச் செல்ல மணமகன்கள் முயன்றனர். இதை, அன்வர் பீவியின் குடும்பத்தார் தடுத்து நிறுத்திவிட்டனர். இப்பிரச்னையை, இப்போது போலீசார் விசாரித்து வருகின்றனர்.

http://www.dinamalar.com/2008MAR31/world12.asp

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், பெண், பெண்கள்

மிகப்பெரிய ஷாப்பிங் வளாகம் படத்தை பாருங்கள்.பிரமிக்க வைக்கும் காட்சி

 
 
துபாய்: c… மிகப் பெரிய ஷாப்பிங் வளாகம்… அதுதான் புர்ஜ் துபாய். அந்நாட்டின் மத்திய பகுதியில் எழுந்துள்ள பிரம்மாண்டம் அது. எம்மார் பிராப்பர்டீஸ் கட்டி முடித்துள்ள இந்த வானுயர்ந்த கட்டிடத்தின் இறுதிக் கட்டப் பணிகள் மட்டுமே பாக்கி. இந்த ஆண்டு இறுதியில் திறப்பு விழா காண இருக்கும் புர்ஜ் துபாயின் மதிப்பு ரூ.800 கோடி. அதன் வணிக வளாகத்தில் 1,200 ஸ்டோர்கள் இடம்பெறும். நீர் அருங்காட்சியகம், ஒலிம்பிக் மைதானம் அளவிலான செயற்கைப் பனி சறுக்குமிடமும் உண்டு. அதிக பொழுதுபோக்கு, ஷாப்பிங் அனுபவத்துக்காக உருவாகியுள்ள புர்ஜ் துபாய், மற்ற கட்டிடங்களுக்கு இடையே உயர்ந்து நிற்கிறது இங்கே.
 

http://dkn.dinakaran.co.in

பின்னூட்டமொன்றை இடுக

Filed under புர்ஜ் துபாய், மிகப் பெரிய ஷாப்பிங, ஷாப்பிங் வளாகம்

காய்கறிகள் விலைவாசி ஏற்றமும்,வித்தியாசமான போராட்டமும்(போட்டோவுடன்)

விலைவாசி ஏற்றத்தைக் கண்டித்து பல்வேறு கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. விலைவாசி உயர்வை விளக்கும் வகையில் சண்டிகரில் நூதன போராட்டம் நடந்தது. காய்கறிகள் விலைமதிப்பு மிக்கவை என்றும் அவற்றை வங்கி லாக்கரில் வைக்கப் போவது போலவும் பிரபல நகைச்சுவை எழுத்தாளர் ஜஸ்பால் பட்டியின் மனைவி சவிதா போராட்டம் நடத்தினார். காய்கறிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக கறுப்பு பூனைப் படையைப் போல வேடமணிந்தவர்கள் அருகில் உள்ளனர்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under காய்கறிகள், நூதன போராட்டம், விலைவாசி

அகமதாபாத் இளைஞர் 21 வயதில் 215 கிலோ எடை



அகமதாபாத், ஏப்.2: ஓர் இளைஞர் தனது 21 வயதிலேயே 215 கிலோ உடல் எடையுடன் இந்தியாவின் குண்டு மனிதர்கள் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர் இரும்பு வியாபாரியின் மகன் ரோமில் ஷா. பட்டதாரியான இவர் 21 வயதில் 215 கிலோ எடை இருந்தார். அதன் மூலம் இந்தியாவின் குண்டு மனிதர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். இவருக்கு 10 வயது இருக்கும்போது டைபாய்டு மற்றும் மலேரியா காய்ச்சல் தாக்கியது. அதன் பிறகு தான் ஷாவின் உடல் எடை அபரிமிதமாக அதிகரிக்கத் தொடங்கியது. இதன்பின் ஆண்டுக்கு 15 கிலோ வீதம் எடை அதிகரித்தது. கடந்த ஆண்டு மட்டும் 55 கிலோ எடை கூடியது. அதனால் வேறு வழி இல்லாமல் எடையை குறைக்க கடந்த திங்கள்கிழமை ஆபரேஷன் செய்யப்பட்டது.

அவரது வயிற்று பகுதி பத்தில் ஒரு பங்காக குறைக்கப்பட்டது. சிறு குடலின் பெரும் பகுதி வெட்டி எறியப்பட்டது. இப்போது மாதம் 20 கிலோ வீதம் அவரது எடை குறையத் தொடங்கி இருக்கிறது. அதற்காக பெரும்பாலும் திரவ உணவுதான் சாப்பிடுகிறார். இது பற்றி அவருக்கு ஆபரேஷன் செய்த டாக்டர் மகேந்திர நர்வாரியா கூறும்போது, “ரோமில் ஷாவின் வயதை பொறுத்தவரை அவரது எடை 75 கிலோதான் இருக்க வேண்டும். ஆனால், 215 கிலோ இருந்தார். இப்போது ஆபரேஷன் செய்து கொண்டதால் இன்னும் ஓர் ஆண்டில் அவரது கூடுதல் எடை குறைந்து விடும். அதே சமயம் அவருக்கு வைட்டமின் போன்ற சத்துக்கள் சரியாக கிடைக்கிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்றார்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அகமதாபாத், இளைஞர், ரோமில் ஷா

ஒகேனக்கல் திட்டத்துக்கு எதிராக கன்னடர்கள் வன்முறை சட்டசபையில் அனைத்துக்கட்சிகள் கண்டனம்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எதிராக கன்னடர்கள் வன்முறை சட்டசபையில் அனைத்துக்கட்சிகள் கண்டனம்

சென்னை, ஏப்.2-

"ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எதிராக கன்னடர்கள் நடத்தும் வன்முறை போராட்டத்துக்கு தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

சிறப்பு கவன ஈர்ப்பு

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக கர்நாடகா மாநிலத்துடன் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து சட்டசபையில் பேசுவதற்காக அனைத்து கட்சிகளும் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொடுத்திருந்தன.

நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், இதை சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானமாக எடுத்துக் கொண்ட சபாநாயகர் ஆவுடையப்பன், அந்தந்தக் கட்சி சார்பாக எம்.எல்.ஏ. ஒருவரை பேச அனுமதித்தார். அவர்கள் பேசியதாவது:-

வேதனை

ஓ.பன்னீர்செல்வம் (எதிர்கட்சித் துணைத் தலைவர், அ.தி.மு.க.):- ஜப்பான் நிதியுதவியுடன் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தைக் கொண்டு வர அம்மா முயற்சி செய்தார். ஆனால் நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை அதற்கு அனுமதி தராத மத்திய அரசு, தற்போது அனுமதி அளித்துள்ளது.

தற்போது சில கன்னட அமைப்புகள் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கிளப்பி விட்டுள்ளன. இதனால் மொழிவாரியாக மக்கள் பிரிந்து விட்டனர். கர்நாடகாவில் உள்ள தமிழர்கள், அவர்கள் வர்த்தக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன. தமிழக மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை அங்கு உருவாகி இருக்கிறது. குடிக்கக் கூட தண்ணீர் பெற விடமாட்டோம் என்று சகோதர மாநிலமே இறையாண்மையை கெடுப்பது வேதனை. குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி, அங்குள்ள மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கியாக வேண்டும்.

இரும்புக் கரம் கொண்டு

ஞானசேகரன் (காங்கிரஸ்):- தமிழர்களைத் தாக்கி கர்நாடகாவில் நடத்தப்பட்ட சம்பவங்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். அங்கு நடக்க இருக்கும் தேர்தலை முன்னிட்டு ஓட்டுக்களை குறிவைத்து குறுகிய நோக்கத்தில் ஒரு கூட்டம் செயல்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தை மத்திய அரசு இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும். எடிïரப்பா இங்கு வந்து இடைïறு செய்துள்ளார். காவிரியில் குடிநீருக்கான தண்ணீர் எடுப்பதற்கு எந்தக் கோர்ட்டும் தடை செய்ய முடியாது. நாராயண கவுடா போன்ற சிலர் இந்தத் திட்டத்துக்கு எதிராக இருப்பதை சுட்டிக் காட்டி பிரதமருக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி கடிதம் எழுத வேண்டும்.

பெங்களூரு எங்களூரு

ஜி.கே.மணி (சட்டமன்ற பா.ம.க. கட்சித் தலைவர்):- இது காமராஜர் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம். ஆனால் 1996-2001-ம் ஆண்டில் முதல் கட்டப் பணிகள் தொடங்கின. அந்த நேரத்தில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியதால், ஜப்பான் நிதியுதவி கிடைக்காமல் போய்விட்டது. தற்போது மக்களை திசை திருப்புவதற்காக எடிïரப்பாவின் வஞ்சக வலையில் கன்னட வெறியர்கள் ஆட்டம் போடுகின்றனர்.

சகோதர நல்லுறவு கெடக் கூடாது என்பதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதி நிதானமாக அடி எடுத்து வைக்கிறார். 40 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்து விட்ட எல்லைப் பிரச்சினையையும் இப்போது கிளப்புகின்றனர். தேவையில்லாமல் எல்லைப் பிரச்சினையை கிளப்பினால் நாங்களும், பெங்களூரை எங்களூரு என்போம்; கோலார், கொள்ளேகாலை எங்கள் பகுதி என்று கூறுவோம்.

நடிகர் வீட்டுக்கு காவல்

இங்கு கன்னட நடிகர்கள் வீட்டுக்கு சேதம் வரக்கூடாது என்பதற்காக போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் பெருந்தன்மை கொண்டவர் முதல்-அமைச்சர் கருணாநிதி. இந்த விவகாரத்தில் நடுநிலைமையோடு இருக்கும் மத்திய அரசு கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். ஒகேனக்கலுக்கு பிரச்சினையை கிளப்ப வந்த எடிïரப்பாவை அனுமதித்தது வேதனை. இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி எடுக்கும் நடவடிக்கைக்கு, அ.தி.மு.க. உட்பட அனைத்து கட்சிகளும் பின்னால் நிற்கின்றன.

கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி):- அரசியல் ஆதாயத்துக்காக நடத்தப்படும் இந்த சம்பவத்தை மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல், உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். முதல்-அமைச்சர் கருணாநிதி எடுக்கும் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சி துணை நிற்கும்.

பந்த் நடத்த வேண்டும்

சிவபுண்ணியம் (இந்திய கம்ïனிஸ்டு):- தமிழகத்தை மிரட்டும் இந்தப் போக்குக்கு நாம் அஞ்சப் போகிறோமா? அவர்கள் இங்கு வந்து உரிமை கொண்டாடுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? நமது மன உணர்வுகளை தெரிவிக்கும் விதத்தில் தமிழகத்தில் பந்த் நடத்த வேண்டும். எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்திருப்பதை அவர்களுக்கு இது உணர்த்தும்.

செல்வம் (விடுதலைச் சிறுத்தைகள்):- கர்நாடகா அரசுக்கு எதிராக தமிழ் நடிகர்-நடிகைகள் குரல் கொடுக்க வேண்டும்.

ஆடுகிற மாடு

விஜயகாந்த் (தே.மு.தி.க.):- கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படும் நிகழ்ச்சி அதிகமாக நடக்கிறது. நமக்கு ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கவும் தெரியும், பாடுகிற மாட்டை பாடிக் கறக்கவும் தெரியும். நாம் இப்படி இருப்பதை பயம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பதை அவர்கள் அறியவில்லை.

காங்கிரஸ், கம்ïனிஸ்டு கட்சிகள் கூட்டணி வைத்திருந்தாலும், அணுசக்தி விவகாரத்தில் மத்திய அரசுக்கு கம்ïனிஸ்டு கட்சிகள் புள்ளி வைத்து செயல்படுவது போல், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு புள்ளி வைத்து செயல்பட வேண்டும். அப்படி என்றால்தான், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நமக்குக் கிடைக்கும்.

இவ்வாறு எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள். ம.தி.மு.க. சார்பில் கம்பம் ராமகிருஷ்ணன் பேசினார். இவர்களுக்கு பதிலளித்து பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

இதே பாசப் பிணைப்பு

உரிமைக்கான அனைவருமே ஓங்கி குரல் கொடுத்து இருக்கிறோம். நாம் இருக்கும் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுமே ஓரணியில் நிற்பதை வரவேற்று, தமிழக அரசின் சார்பில் நன்றி கூறுகிறேன். இதே ஒற்றுமை, பாசப் பிணைப்பு இருந்தால் பல பிரச்சினைகளில் நாம் வெற்றி காணமுடியும்.

இங்கு பேசிய அனைவருமே, நமது உரிமையை நிலைநாட்ட வேண்டுமென்றும், மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் கேட்டிருக்கிறீர்கள். இந்தப் பிரச்சினை குறித்து பிரதமருக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி 17-ந் தேதி கடிதம் எழுதி இருக்கிறார் (கடிதத்தை படித்துக் காட்டினார்). கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 30 முதல் 40 லட்சம் பேர் குடிப்பதற்கான நீரை எடுப்பதற்காகத்தான் அந்தத் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோமே தவிர, பாசனத்துக்கு தண்ணீர் எடுக்கத் திட்டமிடவில்லை.

குடிநீருக்கா சண்டை?

குடிநீருக்குத்தான் முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதை தேசிய நீர்க் கொள்கை வலியுறுத்துகிறது. அதைத்தான் கேட்கிறோம். அதுமட்டுமல்ல, காவிரியில் நமக்குத் தரப்படும் பங்கில் 1.4 டி.எம்.சி. நீரைத்தான் கேட்கிறோமே தவிர, அவர்கள் பங்கில் இருந்து யாசகம் கேட்கவில்லை. இந்த 1.4 டி.எம்.சி.யை நீர் அளக்கும் இடத்தில் இருந்து குறைத்துக் கொள்ளலாம் என்று கூறி இருக்கிறோம்.

மொழிவாரியாக மாநிலம் அமைந்த போது காவிரி ஆற்றின் நடுவே கோடு போடப்பட்டு பிரிக்கப்பட்டது. நாம் அவர்கள் கரைக்குச் சென்று நீர் எடுக்கப் போவதில்லை. நமக்கு பாத்தியப்பட்ட நமது கரையில் இருந்து நீர் எடுக்கக் கூடாதா? இதற்கு உரிமை இல்லையா? உரிமையை விடுங்கள்; இது மக்களுக்குத் தேவையான குடிநீர்த் திட்டமல்லவா? மனிதாபிமானமும் இல்லையா? குடிநீருக்கா சண்டை போடுவது?

கலந்து பேசிய முடிவு

நமக்கு உரிமை இருந்தாலும் கூட, அந்த வழியில் நாம் போகவில்லை. முறைப்படி மத்திய அரசின் அனுமதி பெற்று, 2 மாநில அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்பட்டது. நாம் எல்லை மீறவில்லை. ஆனால் அவர்கள் வேகம் காட்டியுள்ளனர்.

முதல்-அமைச்சர் கருணாநிதி பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவர். அப்போது காவிரி பிரச்சினைக்காக கர்நாடகா முதல்-மந்திரியாக இருந்த வீரேந்திர பட்டீலுடன் வாதிட்டவர். அவருக்கு இந்தப் பிரச்சினை பற்றி நேரடியாகத் தெரியும். அப்படிப்பட்ட முதல்-அமைச்சர் கருணாநிதி, அண்டை மாநிலத்துடன் நல்லுறவு வேண்டும் என்பதை விரும்புகிறார். முன்பு மனக்கசப்பு ஏற்பட்டு, அங்குள்ள தமிழர்கள் பலர் ஜோலார்பேட்டை, அரக்கோணம் போன்ற இடங்களுக்கு வந்த சம்பவங்களும் நடந்துள்ளன.

வன்முறை நல்ல பாதையல்ல

வன்முறை என்பது சரியான பாதையல்ல. நமது முதல்-அமைச்சரைப் போன்ற அனுபவம் பெறாத சிலரால் இதுபோன்ற தவறுகள் நடக்கின்றன. அவர்கள் திருந்துவார்கள் என்பதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதி காட்டும் பொறுமையை பலவீனம் என்று கருதாதீர்கள். அண்டை மாநிலத்துடன் பிரச்சினை இருந்தாலும், அவர்கள் உதவி கேட்டும் போது நிபந்தனை இல்லாமல் உதவிக் கரம் நீட்டும் பெருந்தன்மைக்குச் சொந்தக்காரர் நமது முதல்-அமைச்சர்.

அதனால்தான், `எங்கள் எலும்புகளை உடைத்தாலும், கண்ணீர் விட்டுக் கேட்கிறோம்; இந்திய இறையாண்மையை கெடுத்து விடாதீர்கள்' என்று கூறினார். இதுதான் தேச நலனில் அக்கரையோடு நடக்கும் பணி. ஆனால் கர்நாடகாவில் அண்டை மாநிலத்தையோ, சுப்ரீம் கோட்டையோ மதிக்க மாட்டோம் என்ற போக்கு காணப்படுகிறது.

எள்ளளவும் விட மாட்டோம்

பெருந்தன்மை காட்டுவதோடு இதை விட்டுவிட முடியாது. எனவே, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். பொக்ரான் அணுகுண்டு பரிசோதனையால்தான் அன்று ஜப்பான் நிதி தராமல் முறுக்கிக் கொண்டு இருந்தது. தற்போது அந்த முறுக்கு நீங்கி விட்டதால், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு சென்று ஆயிரம் கோடிக்கும் மேலாக நிதியை பெற்று வந்துள்ளார்.

தற்போது இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் ஒரே நிலையில் நிற்கின்றனர். அதை கர்நாடகா மக்களும், கவர்னர் ஆட்சியும் உணர வேண்டும். மத்திய அரசும் காலம் தாழ்த்தாமல், இந்தப் பிரச்சினையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு ஆடிக் கறக்கவும், பாடிக் கறக்கவும் தெரியும். தமிழர்களின் உரிமை எள்ளளவும் விடப்படாது.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

 

http://www.dailythanthi.com/article.asp?NewsID=403871&disdate=4/2/2008

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அனைத்துக்கட்சிகள், ஒகேனக்கல், கன்னடர்கள்

நன்றி: ஆனந்த விகடன்

இந்த வார விகடனில் 02-04-08 வெளிவந்த ஒரு கட்டுரை

சத்தமில்லாமல் ஒரு கிறிஸ்துவப் புரட்சி!

‘சபையில் பெண்கள் பேசக் கூடாது!’

(1.கொரி.14.34)

சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் செயின்ட் மேரிஸ் தேவாலயம். வெள்ளை அங்கியில் கைகளை உயர்த்தியபடி, ஆர்கனின் இசைப் பின்னணியில் பிரசங்கம் செய்கிறார் டெபோரா. கி.பி.1680ல் இருந்து ஆண் பாதிரியாரின் குரல் மட்டுமே கேட்டு வந்த அந்த ஆலயத்தில் இப்போது பெண் குரல் ஒலிக்கிறது.

சி.எஸ்.ஐ. என்று அழைக்கப்படும் தென்னிந்திய திருச்சபையில், இப்போது பெண் பாதிரியார்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ‘சபையில் பெண்கள் பேசவே கூடாது!’, ‘பெண்கள் கற்றுக் கொடுக்கவோ, ஆண்களைக் கட்டுப்படுத்தவோ கூடாது’ என்கிற வழக்கம் எல்லாம் மறையத் தொடங்கிவிட்டன.

இந்தியாவில் தோன்றிய சமயங்கள் மட்டுமல்ல, உலக சமயங்கள் எதுவுமே பெண்களை கடவுளுக்கு மிக அருகில் விடவில்லை. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவப் பிரிவில் கன்னியாஸ்திரீ கள் உண்டு; ஆனால், முழு உரிமை பெற்ற பெண் பாதிரியார்கள் கிடையாது. இந்தச் சூழலில்தான் தென்னிந்திய திருச்சபை பெண்களைப் பாதிரியார்களாக நியமித்து சத்தமில்லாமல் ஒரு புரட்சியை நடத்தியிருக்கிறது. முன்னாள் பிஷப் சுந்தர் கிளார்க்தான் இந்த மாற்றத்துக்குக் காரணமானவர்.

சூளை தேவாலயத்தில் ரெவரென்ட் இந்திரா, எண்ணூர் தேவாலயத்தில் ரெவ.லீலாபாய் மெர்ஸி, தண்டுறை குருசேகரத்தில் ரெவ.செலீன் சந்திரா என சென்னை பேராயத்தில் மட்டும் 25 பெண்கள் பாதிரியார்களாக இருக்கிறார்கள். பெண் பாதிரியார்கள் ஆசீர்வதிப்பதைப் பார்க்கவே அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.

ஒரு பெண் பாதிரியார் ஆசீர்வதிப்பதை ஆண்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? பாதிரியார் ரெவ.டெபோரா பிரேம்ராஜிடம் கேட்டோம்.

”என் தந்தை, தாத்தா இருவருமே பாதிரியார்கள். என்னுடன் பிறந்தவர்கள் ஏழு பேர். அனைவருமே இறையியல் கல்வி படித்தோம். அதனால் இயல்பாகவே பாதிரியார் ஆகி இறைப்பணியில் ஈடுபட ஆசை ஏற்பட்டது. 1997ல் முழுப் பாதிரியாராகும் தகுதியை பேரா. அசரையா எனக்குக் கொடுத்தார். ‘வேடல்’ என்ற ஊரில் உதவி பாதிரியாராக முதலில் நியமிக்கப்பட்டேன். அங்கு என் கணவர் பாதிரியாராக இருந்தார்.

ஆண்களைவிடப் பெண்கள் தான் என்னை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டினார்கள். ஆனால், போகப்போகப் புரிந்துகொண்டார்கள். ஆண் பாதிரியார்களிடம் சொல்ல முடியாத விஷயங்களை என்னிடம் தயக்கமில்லாமல் சொல்ல முடியும் என்கிற நிலை, பெண் பாதிரியார்களின் தேவையை அனைவரும் உணர்ந்துகொள்ளச் செய்தது.

ஆரம்ப காலத்தில் இறையியல் கல்வி கற்ற பெண்களை உதவி ஆயர்கள் என்ற நிலையில்தான் வைத்திருந்தார்கள். இப்போது நிலைமை முழுக்க மாறிவிட்டது. ஓர் ஆலயத்தின் எல்லா பொறுப்புகளையும் பெண் பாதிரியார்களுக்குத் தந்துவிடுகிறார்கள். நாங்கள் ஆண் பாதிரியார்கள் அணியும் அங்கியைத்தான் அணிகிறோம்.

லண்டனில் உள்ள ‘ஸ்டோக் நியூக்டன்’ தேவாலயத்தில் என் பிரசங்கத்தைக் கேட்ட ஒருவர், ‘பெண்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு இருந் தேன். உங்கள் உரையைக் கேட்ட பின்பு, என் கருத்தை மாற்றிக் கொண்டுவிட்டேன்’ என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார். இது பெண் சமூகத்துக்கே பெரு மையான விஷயம் என்றுதான் நான் கருதுகிறேன்.

பெண்களுக்கு இயல்பாக வரும் மாதவிலக்கை ‘தீட்டு’ என கிறிஸ்துவம் கருதுவது இல்லை. 12 ஆண்டுகள் ரத்தப்போக்குடன் இருந்த பெண்ணை இயேசு குணமாக்கி, ‘அவள் தொட்டால் தீட்டு ஏற்படாது’ என்று கூறியிருக்கிறார். ஞானமோ அல்லது வேறு எதுவோ ஆண்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. கடவுளின் படைப்பில் எல்லா உயிர்களும் சமமான தகுதி உடையவைதான்!” அழுத்தம்திருத்தமாகப் பேசி முடித்துவிட்டுத் தன் பிரசங்கத்தைத் தொடர்கிறார் டெபோரா.

இதமாகப் பரவ ஆரம்பிக்கிறது ஆர்கன் இசை!

நன்றி: ஆனந்த விகடன்

http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=13046#13046

பின்னூட்டமொன்றை இடுக

Filed under உலக சமயங்கள், கிறிஸ்தவ பெண்கள், பெண் பாதிரியார்