Daily Archives: மார்ச் 25, 2008

தமிழ்மணத்தில் இருந்து தமிழச்சி நீக்கம்?

தமிழச்சியின் பதிவுகள் எங்கே?

ஒன்றுமே புரியலே உலகத்திலே… காலையில்தான் ஏதோ பிரச்சினை என்று உணர்ந்தேன். நேரமின்மையால் படிக்க இயலவில்லை. வந்து பார்த்தால் தமிழச்சியின் பதிவுகள் திரட்டியில் காணப்படவில்லை. என்ன நடக்கிறது என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்?

post signature

 

http://osaichella.blogspot.com/2008/03/blog-post_9922.html

உண்மைதான் தமிழச்சியின் பதிவுகள் தமிழ்மணத்திஒல் இருந்து நீக்கப்பட்டு உள்ளது

Subject: Your Blog removed from http://www.thamizmanam.com
MIME-Version: 1.0

Content-type: text/html; charset=utf-8

From: http://www.thamizmanam.com listadmin@thamizmanam.com
Cc: listadmin@thamizmanam.com

Dear ,Your blog is Removed from listing by http://www.thamizmanam.com Administrator due to follwing reason,பதிவர் தமிழச்சி
உங்கள் பதிவு தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படுகின்றது.

தொடர்ந்தும் நீங்கள் தமிழ்மணத்தின் எல்லைகளை மீறும் வகையிலே செயற்படுவதினாலே இப்பதிவு நீக்கப்படுகின்றது.

க. இரமணிதரன்

தமிழ்மணம், நிர்வாகி
http://www.www.thamizmanam.com.

4 பின்னூட்டங்கள்

Filed under ஓசை செல்லா, தமிழச்சி, தமிழ் மணம், நீக்கம்

தமிழ் மணத்தை கேள்வி கேக்காதிங்க மடிப்பாக்கம் அப்புறமா நீக்கிறுவாங்கோ


தமிழ் வலையுலக மக்களே தமிழ் மணத்தின் முன்னோடி பதிவர் மடிப்பாக்கம் அவர்கள் இன்றைக்கு ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.என்ன தெரியுமா?
 
 
அவர்டைய பதிவை நீக்கியதற்கு கண்டண பதிவு.ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் என் பிளக்கரை தமிழ்மணத்தில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது தமிழ்மண நிர்வாகம்.இதற்கு என்ன காரணம் என்றால் தளத்தின் நிபந்தனைகளை மீறினதாக செய்தி வந்தது.சரி எந்த நிபந்தனையை மீறினேன் என்று இது வரை தமிழ்மணம் சார்பில் ஒரு பதிலும் வரவில்லை.நானாகவே என்னை சமாதானம் செய்து ஒரு பதிவை வெளியிட்டேன்.
 
நான் பிண்ணூட்டம் இட்டதை கூட தமிழ்மணம் வெளியிடவில்லை.என் மேல் தமிழ்மணத்துக்கு என்ன கோபம்.
 
என் பதிவு ஏதாவதும் தமிழ்மணத்தின் நிபந்தனைக்கு எதிராக இருன்திருந்தால் உடனடியாக அதை நீக்கி இருக்கலாமே.அதை செய்யாமல் என் பிளக்கரை ஏன் தமிழ்மணத்தில் இருந்து தூக்க வேண்டும்.எனக்கு ஒரு எச்சரிக்கைகூட கொடுக்காமல் தமிழ்மணம் செய்த இந்த போக்கு சர்வாதிகார மனநிலையையே காட்டுகிறது. வீழ்தது நானாக இருந்தாலும் வெல்வது "தமிழ்மணமாக" இருக்கட்டும்.
 
தமிழ்மணம் வாழ்க

4 பின்னூட்டங்கள்

Filed under Uncategorized

ஆங்கில கட்டுரையின் மொழியாக்கம்-1

ஒரு விவாத கருத்தரங்கு

இக்கருத்தரங்கு அமெரிக்காவின் புகழ்பெற்ற 'பிரண்ட்பேஜ் ' பத்திரிகையால் நடத்தப்பட்டது. இன்று மேற்கினை அச்சுறுத்தும் பயங்கரவாதம் சில இஸ்லாமியர்களால் நடத்தப்படுவதால் அது இஸ்லாமிய பயங்கரவாதமா ? அல்லது 'பண்பாடுகளின் மோதலை ' தவிர்க்க இயலாததாக்கும் ஏதோ ஒன்று இஸ்லாமின் அடிப்படை கருத்தியல்பில் உள்ளதா ? என்பதை விவாதிப்பதே மார்ச் 4 2003 இல் நடத்தப்பட்ட இவ் விவாத கருத்தரங்கின் நோக்கம். இதில் பங்கு பெற்றோர்: ஜேமி கிளாசோவ்: வரலாற்றாய்வாளர், மற்றும் பிரண்ட்பேஜ் பதிரிகையின் மேற்பார்வை ஆசிரியர்

 

இஸ்லாம் :
அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ?

ஒரு விவாத கருத்தரங்கு

இக்கருத்தரங்கு அமெரிக்காவின் புகழ்பெற்ற 'பிரண்ட்பேஜ் ' பத்திரிகையால் நடத்தப்பட்டது. இன்று மேற்கினை அச்சுறுத்தும் பயங்கரவாதம் சில இஸ்லாமியர்களால் நடத்தப்படுவதால் அது இஸ்லாமிய பயங்கரவாதமா ? அல்லது 'பண்பாடுகளின் மோதலை ' தவிர்க்க இயலாததாக்கும் ஏதோ ஒன்று இஸ்லாமின் அடிப்படை கருத்தியல்பில் உள்ளதா ? என்பதை விவாதிப்பதே மார்ச் 4 2003 இல் நடத்தப்பட்ட இவ் விவாத கருத்தரங்கின் நோக்கம். இதில் பங்கு பெற்றோர்:

ஜேமி கிளாசோவ்: வரலாற்றாய்வாளர், மற்றும் பிரண்ட்பேஜ் பதிரிகையின் மேற்பார்வை ஆசிரியர். இவரது முக்கிய நூல் Canadian Policy towards Kurushchevாs Soviet Union மற்றும் 15 Tips on How to be a Good Leftist. இவ்விவாதக் கருத்தரங்கை வழிநடத்துபவர் இவரே. அவரும் அதில் பங்கெடுக்கிறார்.

இபின் வாராக்: பகுத்தறிவாளர், மதச்சார்பற்ற மானுடவாதி, 'நான் ஏன் முஸ்லீம் இல்லை ' எனும் நூலின் ஆசிரியர்.

ஹுசாம் அயலூஷ்: தென் கலிபோர்னியாவின் அமெரிக்க இஸ்லாமிய உறவுகள் மையத்தின் (Council on American Islamic Relations CAIR) இயக்குநர்.

ஆசாத் அபு ஹாலில்: ஸ்தனிஸ்தலாஸான் கலிபோர்னிய மாநில பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர். மத்திய கிழக்கு குறித்த பேராசிரியராக இதே பல்கலைக்கழகத்தின் பெர்க்லீ பிரிவில் பணியாற்றுகிறார். ாBin Laden, Islam, and Americaாs New War on Terrorismா எனும் நூலின் ஆசிரியர்.

ராபர்ட் ஸ்பென்ஸர்: Free Congress Foundation அமைப்பின் உறுப்பினர், ா Islam Unveiledா எனும் சர்ச்சைக்குரிய நூலின் ஆசிரியர்.

ஜேமி கிளாசோவ்: கனவான்களே இக்கருத்தரங்கில் நான் பெரிதாக ஏதும் பங்கு பெறப்போவதில்லை. ஒரு வினாவின் மூலம் விவாதத்தை தொடக்கி விட்டு மேடை இறங்கி விடுவதே என் பங்கு. எனவே தொடங்குவோம். மேற்கத்திய நாடுகளின் பார்வையில் ஒரு அபாயமாக கணிக்கப்படும் ஓர் நிகழ்வு இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களில் உள்ளதா அல்லது இஸ்லாமின் அடிப்படையிலேயே உள்ளதா ? இன்று ஜனநாயகம், கருத்து சுதந்திரம் ஆகியவற்றிற்கான ஆபத்துக்கள் சில தீவிரவாதிகள் ஏற்படுத்தக் கூடியதா அல்லது ஜனநாயகம், கருத்து சுதந்திரம் ஆகியவற்றுடன் இணைந்து வாழ முடியாத தன்மை இஸ்லாமின் அடிப்படைகளில் உள்ளதா ? இதுதான் இந்த வன்முறைகளுக் கெல்லாம் காரணமா ?

ராபர்ட் ஸ்பென்ஸர்: எந்த ஒரு தனி நபரும் இஸ்லாம் அனைத்திற்குமாக என்று பேசிவிட முடியாது. முஸ்லீம்களில் ஒரு சாரார் இஸ்லாமின் அடிப்படை என கருதுவது மற்றொரு சாராரால் இஸ்லாமின் அடிப்படைக்கே விரோதமான ஒன்றானதென கருதப்படலாம். சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள பயங்கரவாத ஆலோசகன் ஷேக் ஒமர் அப்துல் ரக்மான் பின்வருமாறு கூறுகிறான், 'புனித போர் கடமை இஸ்லாத்தின் தலையாய கடமை ஆகும். புனிதபோர் இல்லாத இஸ்லாம் தலையில்லாத உடல் போன்றதாகும். ' சிறை தண்டனை

பெறும் முன்னர் ஷேக் ஒமர் நியூயார்க் மசூதிகளில் இமாம் சிராஜ் வகாஜான் அழைப்பின் பேரில் உரைகள் ஆற்றி வந்தான். இமாம் சிராஜ் வகாஜ் அமெரிக்க இஸ்லாமிய உறவுகள் மைய (CAIR) ஆலோசனை குழு உறுப்பினர் என்றாலும் இந்த கருத்தியலை ஹுசாம் அயலூஷ் மறுப்பார் என நம்புகிறேன். எனினும் இத்தகைய வன்முறைக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைப்பவர்கள் தம் கருத்தியலை குர்ரான் மற்றும் இஸ்லாமிய வரலாறு மற்றும் பாரம்பரியம் சார்ந்தே உருவாக்குகிறார்கள் என்பது மறுக்கமுடியாதது. இராணுவவாத இஸ்லாமின் ஆதரவாளர்கள் முகமதுவின் முக்கிய ஹதீஸானை 'அல்லாவையே தங்கள் இறைவனாகவும் என்னை(முகமதுவை) இறுதி நபியாகவும் மக்கள் ஏற்குமளவும் அவர்களுடன் போராடவே எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. அவ்வாறு அவர்கள் ஏற்கும் போதே அவர்களது இரத்தமும் சொத்துக்களும் பாதுகாப்பு பெறும். ' மேற்கோள் காட்டுகின்றனர். எனவே இஸ்லாமிய பயங்கரவாதிகள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து விலகிவிட்டவர்கள் என்பது ஒரு பார்வையில் சரியாகவே இருக்கலாம்.

ஆனால் அவர்களது இஸ்லாம் அமைதியான இஸ்லாம் போன்றே ஒரு வேளை அதைக் காட்டிலும் உண்மையான வரலாற்றுப் பாரம்பரியம் உள்ள இஸ்லாமிய மரபென்பதே உண்மை.

ஆசாத் அபு ஹாலில்: ஸ்பென்ஸர் இஸ்லாம் குறித்த தன் அறியாமையை வெளிக்காட்ட எந்த சந்தர்ப்பத்தையும் தவறவிடுவதில்லை. அவரது இஸ்லாம் குறித்த அறிவினை பறைசாற்றுபவை எல்லாம் ஒன்று மேற்கத்திய பத்திரிகை செய்திகள் அல்லது ஏதாவது அமெரிக்க சிறையில் வசிக்கும் வெறி பிடித்த மெளல்வியுடையவை. டேவிட் க்வாரேஷ் அல்லது டெட் பண்டி ஆகியோரினை கிறிஸ்தவ இறையியலின் உதாரணங்களாக காட்டுவது போன்ற மடத்தனம் இது. இஸ்லாம், கிறிஸ்தவம் யூதம் ஆகிய மூன்று மதங்களின் வரலாறுகளுமே சமயப் பொறுமை மற்றும் மானுட சமத்துவம் ஆகிய விஷயங்களில் கறை படிந்தே விளங்குகின்றன. ஆனால் மறை நூல்களிலும் வரலாற்றிலும் மிகுந்த கொடுமைகளை செய்ததில் கிறிஸ்தவமே முன்னணியில் உள்ளது. இஸ்லாமை திட்டுகிற ஸ்பென்ஸர் அதே நேரத்தில் கிறிஸ்தவத்தின் வரலாற்றை கேள்விக்குள்ளாக்காமல் இருக்க முடியாது. முதலில் கேட்கப்பட்ட கேள்வியை பொறுத்தவரையில் எல்லா மதங்களிலுமே வெறியர்கள், பயங்கரவாதிகள், பித்துக்குளித்தனமானவர்கள் உள்ளனர். அதை வைத்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, கலாச்சாரத்தையோ அல்லது மக்களையோ முத்திரை குத்துகிற போக்கு சரியில்லை.

ஸ்பென்ஸர்: ஒமர் அப்துல் ரக்மான் புகழ் பெற்ற அல் அசார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். ஆனால் டேவிட் க்வாரேஷோ அல்லது டெட் பண்டியோ அந்த அளவு முக்கிய உயர் பொறுப்பினை மேற்கில் என்றும் அடைந்ததில்லை. எனது இஸ்லாமிய அறிவிற்கு ாமேற்கத்திய பத்திரிகை செய்திகள்ாதான் மூலம் என்பதை பொறுத்தவரை எனது இஸ்லாமிய அறிவு இபின் கால்துன், இபின் தாய்மியா,முகமது முஷான் கான், S. K.மாலிக், மற்றும் சாயித் ராஜாய் கோரசானி ஆகியோரது கூற்றுக்களின் அடிப்படையில் அமைந்தது என தெளிவு படுத்துகிறேன். நான் மேற்கூறிய நபர்கள் எல்லாம் எந்த மேற்கத்திய பத்திரிகைகளின் செய்தியாளர்கள் என அபு ஹாலில் தெரியப்படுத்துவார் என கருதுகிறேன். கூறும் மனிதனை குறை கூறி (ad hominem )கருத்துக்களை எதிர்கொள்வது

தன்னிடம் கருத்துக்கள் தீர்ந்துவிட்ட ஒருவரது வாதத்தன்மை. கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலை விவாதிப்பதில் கருத்தை செலுத்தலாம். கிறிஸ்துவத்தின் குறைகளை சுட்டிக்காட்டி இஸ்லாமை பாதுகாக்க நினைப்பதும் அதைப்போலவே சரியான நிலைபாடல்ல. ஹிட்லருக்கோ ஸ்டாலினிக்கோ கிறிஸ்தவம் பொறுப்பேற்க முடியாது. இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்துக்குமான அடிப்படை வேறுபாடு யாதெனில், இஸ்லாம் மட்டுமே நம்பிக்கையற்றோருக்கு எதிரான புனிதப்போரினை கடமையாக முன்வைக்கிறது. இஸ்லாமில் மட்டுமே அதன் செவ்விய நாட்களில் இருந்து இன்று வரை அதன் மிக முக்கிய

இறையிலாளர்களால் நம்பிக்கையற்றோருக்கு எதிரான வன்முறையும் போரும் நிறுவனப்படுத்தப்பட்டு நியாயப்படுத்தப்பட்டுள்ளது. புகழ் பெற்ற மாலிகி நீதிபதி இபின் அபி சாயீத் அல் க்ய்ராவானி கூறுகிறார், ' ஜாகாத் இஸ்லாமியரின் புனித நிறுவனமாகும். முஸ்லீம் அல்லதாவர்கள் இஸ்லாமுக்கு மாறலாம் அல்லது ஜாஸாயா வரியினை பணிவுடன் கட்டலாம். இரண்டும் இல்லையெனில் நம்பிக்கையற்றோர் மீது போர் தொடுப்பது அவசியமாகும். ' அபு ஹாலில் தாங்கள் தயை கூர்ந்து இக்கோட்பாட்டினை மறுக்கும் ஒரு முக்கிய இஸ்லாமிய மரபினை காட்டுவீர்களா ? உதாரணமாக ஏறத்தாழ அனைத்து கிறிஸ்தவ சர்ச்களும் சிலுவைப்போரின் மூல கருத்தியல்களை மறுக்கின்றனர்.

அபு ஹாலில்: மீண்டும் ஸ்பென்ஸர் தன் அறியாமையை வெளிக்காட்ட எந்த சந்தர்ப்பத்தையும் தவறவிடுவதில்லை என நிரூபித்துள்ளார். ஒமர் அப்துல் ரக்மான் என்றென்றும் அல் அசார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றவில்லை. மாறாக அதன் கிளை ஒன்றில் பகுதி நேர விரிவுரைக்கு வரவழைக்கப்பட்டார். அவரது வெறித்தன்மை வெளியானதும் அல் அசார் அதிகாரிகள் அவரை வெளியேற்றினர். ஆக இஸ்லாமிய உலகின் முக்கிய அல் அசார் பல்கலைக்கழகம் ஒமர் அப்துல் ரக்மானின் கருத்துக்களுக்கும் இஸ்லாமுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என வெளீப்படையாக அறிவித்துள்ளது. இஸ்லாமிய உலகில் ஒமர் அப்துல் ரக்மானுக்கு ஆதரவாக எவ்வித ஆர்ப்பாட்டமும் நடைபெறவில்லை. ஆனால் ஸ்பென்ஸரோ எவ்வித இஸ்லாமிய உலகில் எவ்வித முக்கியத்துவமுமற்ற வார்த்தைகளை பிடித்துக்கொண்டு 'ஒமர் அப்துல் ரக்மான் அனைத்து இஸ்லாமின் பிரதிநிதி அனைத்து முஸ்லீம்களாலும் மதிக்கப்படுபவர் ' என கூறுகிறார். முஸ்லீம்களை விட ஸ்பென்ஸருக்குத்தான் ஒமர் அப்துல் ரக்மான் முக்கியமானவராக தோன்றுகிறார்.

ஸ்டாலின் வேண்டுமானால் கிறிஸ்தவத்துடன் உறவற்றவராக இருக்கலாம். ஆனால் ஹிட்லர் ? ஹிட்லர் தன்னை முழுக்க முழுக்க கிறிஸ்தவராகவே கருதியவர். ஆனால் ஸ்பென்ஸர் இதைவிடவும் ஒருபடி மேலே போகிறார், சிலுவைப்போர்களுக்கும் போப்களுக்குமான தொடர்பு, நிறுவனப்படுத்தப்பட்ட யூத வெறுப்பு, 3 லிருந்து 9 மில்லியன் பெண்களை சூனியக்காரிகளென எரித்தது, நீதியின் தோமிய கோட்பாடு ஆகிய அனைத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் தொடர்பு கிடையாது என கூறுகிறார் போலும். நம்பிக்கையற்றவர்களுக்கு எதிரான புனிதப்போர் இஸ்லாமில் மட்டுமே உள்ளது என ஸ்பென்ஸர் கூறுவது அறியாமையும் நேர்மையின்மையும் கலந்தது. தாமஸ் அகினாஸ் எழுதுயிருப்பதை படியுங்கள் பின் வாதத்திற்கு வாருங்கள்.

ஸ்பென்ஸர்: அல் அசார் பல்கலைக்கழக முன்னாள் மாணவன் ஒருவரின் வார்த்தைகள், 'ஷேக் ஒமர் அப்துல் ரக்மான் எனக்கு அல் அசார் பல்கலைக்கழகத்தில் குர்ரான் குறித்த விளக்கங்கள் என விரிவுரைகளாற்றினார். பின்னர் தன் பணியிலிருந்து விலகி 'ஜாகாத் ' மற்றும் 'கமா அல் இஸ்லாமியா ' எனும் இயக்கங்களில் பணியாற்றினார். ' 'அப்துல் ரக்மான் அனைத்து இஸ்லாமின் பிரதிநிதி அனைத்து முஸ்லீம்களாலும் மதிக்கப்படுபவர் ' என நான்கூறியதாக கூறுவது என் வார்த்தைகளை கவனிக்காததால் எழுந்த பிழை. நான் அவ்வாறு எவ்விடமும் கூறவில்லை.மாறாக நான் என்ன கூறுகிறேன் என்றால் அப்துல் ரக்மான் இஸ்லாமின் பாரம்பரியமிக்க செல்வாக்குள்ள ஒரு மரபினைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். பல குற்றமற்றவர்களை கொல்லும் மானுட வெடிக்குண்டு தாக்குதல் 'இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் நியாயமானதோர் விஷயமாகும் ' என அண்மையில் கூறினார் அல் அசார் பல்கலைக்கழக முதன்மை ஷேக் முகமது சாயீத் தந்தாவி. ஏதோ ஓரிரு தீவிரவாதிகளின் குரலா இது ஆசாத் ? மாறாக அண்மையில் அலெக்சாண்டிரியா பல்கலைக்கழகத்தில் மானுட வெடிக்குண்டுகளுக்கான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கத்தில் 2000 பல்கலைக்கழக மாணவர்கள் மானுட வெடிகுண்டுகளாக முன்வந்தனர். கத்தோலிக்க திருச்சபை குறித்த அவரது மடத்தனமான மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை. திருச்சபையின் பாவங்களுக்கு மதம் காரணமில்லை என நான் கூறியதாக ஒரு பொய்யனோ அல்லது மடையனோ தான் கருத முடியும்.இஸ்லாமை பாதுகாக்க கிறிஸ்தவத்தை கீழ்மைப்படுத்த வேண்டும் என்கிற நிலையே மோசமானது. இதோ இன்றைய நிலையில் கிறிஸ்தவ வெறித்தன்மைக்கும் இஸ்லாமிய வெறித்தன்மைக்குமான வேறுபாடு. கனடாவைச் சார்ந்த ஜெரி பால்வெல் முகமதுவை பயங்கரவாதி என்கிறார். அதனால் இந்தியாவில் வெடிக்கும் கலவரத்தில் 8 பேர் மரணம் 90 பேர் படுகாயம். ஈரான் ஜெரி பால்வெல்லுக்கு மரண தண்டனை விதிக்கிறது. இந்த எதிர்வினைகள் அனைத்துமே இஸ்லாமிய அடிப்படை கொண்டவை.அதைப்போலவே ஹிட்லருக்கும் ஒசாமாவுக்குமான வேறுபாடு என்னவென்றால் ஹிட்லரின் சித்தாந்தத்திற்கு ஆதரவாக அவன் கிறிஸ்தவ விவிலிய மேற்கோள்களை காட்டவில்லை. மாறாக இஸ்லாமிய பயங்கரவாதிகள் தம் செயல்களை குர்ரானையும் ஹதீசையும் இஸ்லாமிய இறையியலையும் கொண்டு நியாயப்படுத்த முடிகிறது. ஈரானின் ஐ நா துதெராக விளங்கும் ஒருவரான சாயித் ராஜாய் கோரசானி 'மானுட உரிமைகள் என்பதே கிறிஸ்தவ யூதேய கருத்தமைப்புதான், அது இஸ்லாமுக்கு அந்நியமானது ' என கூறும் போது அதை ஒரு கணிசமான இஸ்லாமியரின் கருத்தியல் இல்லை என எப்படி கூறு முடியும் ?

ஹுசாம் அயலூஷ்: இத்தருணத்தில் நான் ஒன்றினை தெளிவாக்க விரும்புகிறேன். மற்ற மதத்தினரை அவர்களது நம்பிக்கைகளை இழிவாக பேசுவதென்பது இஸ்லாமுக்கு விரோதமான ஒன்று. உலகின் அனைத்து தீவிரவாதிகளும் தம் வெறுப்பினை பரப்ப மதங்களை தவறாக பயன்படுதியுள்ளனர். ஆம் ஹிட்லர் கிறிஸ்தவ மத நம்பிக்கையை அவ்வாறு பயன்படுத்தியுள்ளான். இதோ அவனது பேச்சிலிருந்தே, 'ஒரு கிறிஸ்தவன் என்னும் முறையில் என் உணர்ச்சிகள் என் தேவரை என் மீட்பரை ஒரு போர் வீரராகவே காட்டுகிறது. ஒரு தனி மனிதனாக தனிமையில் உண்மையை உணர்ந்து யூதர்களுக்கு எதிராக போராட அழைப்பு விடுத்த போராளியாக நான் அவரை காண்கிறேன். ' (ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிடி பிரஸ் வெளீயீடு) ஒரு இஸ்லாமியன் என்ற முறையில் வெறுப்பைத் துணெ¢டும் இவ்வார்த்தைகளுக்கும் நாங்கள் நேசிக்கும் இயேசு (அவருக்கு அமைதி உண்டாகட்டும்) வின் போதனைகளுக்கும் தொடர்பில்லை என நான் அறிவேன். ஆனால் எந்த மதமும் மனிதனின் தவறான பயன்பாட்டுக்கு விதிவிலக்கல்ல என்பதனை இது காட்டுகிறது . இஸ்லாம் கிறிஸ்தவம் மற்றும் உலகின் அனைத்து மதங்களும் அமைதியுடன் வாழ முடியும். அதற்கு உண்மையான மத நம்பிக்கையாளர்கள் தங்களுள் இருக்கும் சில வெறியர்களை சகிக்கும் போக்கை கைவிட வேண்டும். நம்மிடம் இருந்து வேறுபடும் மக்களின் நற்குணத்தை நிராகரிப்பவர்களை நாம் சகிக்ககூடாது. நான் ஒரு முஸ்லீம் எனவே இஸ்லாமை அறிவேன். அதேசமயம் நாம் பயின்ற பிராட்டஸ்டண்ட் பள்ளியிலிருந்தும் மேலும் என் நண்பர்கள் உறவினர்களிடமிருந்தும் நான் யூத கிறிஸ்தவ சமயங்களை அறிந்தேன். எனவே உசாமா பின்லேடனும் ஸ்பென்ஸரும் கருதும் வேறுபாட்டைக் காட்டிலும் நம் அனைவரிடமும் அதிகமான பொதுமை இருப்பதை நான் அறிந்துள்ளேன். தீவிரவாதத்தை பொறுத்தவரையில் அது ஒரு வளரும் அபாயம். மேற்கத்திய நாடுகளுக்கென்றில்லை உலகமனைத்திற்குமே அது ஒரு அபாயம் தான். அந்த அபாயம் மதத்தீவிரவாதம் தலை துகெ¢குவதுதான். இந்தியாவில் ஹாந்து தீவிரவாதம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவில் இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்ரேலில் யூத தீவிரவாதம், செர்பியா ஏன் அமெரிக்காவிலும் கூட கிறிஸ்தவ தீவிரவாதம். ஐநாவில் டிசம்பர் 1999 இல் இப்பிரச்சனை எழுப்பப்பட்டது. 23 பக்க ஐநா அறிக்கை தெரிவிப்பதென்ன ? எந்த மதமும் தீவிரவாதத்திற்கு விதி விலக்கல்ல. மேலும் அந்த அறிக்கை இந்த மத தீவிரவாதங்கள் அவற்றை வளர்க்கும் சமுதாய பொருளாதார காரணிகளின் முழுமைத்தன்மையுடன் பார்க்கப்பட வேண்டுமென தெரிவிக்கிறது. குறிப்பாக அந்த அறிக்கை கூறுகிறது, ' இஸ்லாமை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி வரும் சிறு எண்ணிக்கையிலான பயங்கரவாதிகளையும், இஸ்லாமை மார்க்கமாக பின்பற்றி வரும்

அமைதி, மதச் சகிப்புத்தன்மை மற்றும் பாகுபாடற்ற தன்மையுடன் வாழும் பெரும்பாலான இஸ்லாமியர்களையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டியது அவசியம். ' கொசோவா மற்றும் போஸானியாவிலும் நடைபெற்ற படுகொலைகளுக்கு கிறிஸ்தவம் பொறுப்பினை ஏற்காதது போல் இஸ்லாமும் சில தனிமனிதர்களின் செயலுக்கு பொறுப்பேற்க வேண்டியதில்லை. கொசோவா மற்றும் போஸானியாவிலும் நடைபெற்ற படுகொலைகளை சில மில்லியன் கிறிஸ்தவர்கள் திட்டமிட்டு நடத்தி ஆதரித்திருந்தும் கூட.

இபின் வாராக்: எல்லா மதத்தீவிரவாதங்களும் ஒரே தன்மை கொண்டவைதான். அவை சமுதாய பொருளாதார காரணிகளால் வளர்ந்து வலு பெற்று வருவதும் உண்மைதான். கிறிஸ்தவ ஹாந்து யூத தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபடுகின்றனர். ஆனால் அவை ஒரு நாடு சார்ந்தவை. ஆனால் இஸ்லாமிய தீவிரவாதமோ உலகப்பேரரசு கனவு கொண்டது.

உலகம் முழுவதும் ஒற்றை இறைச்சட்டத்தின் கீழ் ஷரியத்தின் கீழ் வரவேண்டும் எனும் நோக்கம் கொண்டது. யூதர்களும் ஹாந்துக்களும் மதம் மாற்ற நோக்கங்கள் கொண்டவர்களல்ல. கிறிஸ்தவர்கள் மதம் பரப்ப சர்வ தேச பயங்கரவாதத்தை கருவியாக்குவதில்லை.மதம் சார்ந்த வன்முறைக்கு ஏக இறைவணக்கத்தை வலியுறுத்தும் மதங்களே பெரும் காரணமாக இருக்கின்றன. ஆனால் கிறிஸ்தவம் போல இஸ்லாம் தன்னை சுய பரிசோதனைக்கு ஆளாக்கி கொள்ளவில்லை. இரண்டாவதாக வன்முறை இஸ்லாமின் தன்னியல்பில் உள்ள ஒன்று. முகமது நடத்திய போர்கள், குர்ரானில் உறைந்திருக்கும் வாளின் சுராக்கள் இவை அனைத்திலும் அவ்வன்முறை உள்ளது. ஒரு கிறிஸ்தவன் செய்யும் வன்முறை ஏசுவின் மறு கன்னத்தை காட்ட சொன்ன வார்த்தைகளை மீறி செய்யும் வன்முறை. ஆனால் ஒரு இஸ்லாமியனின் வன்முறைக்கு குர்ரான், ஹதீஸ் மற்றும் மதக்குருக்களின் ஆசிர்வாதம் இருக்கிறது. 1992 இல் இருந்து 1,50,000 மக்களை அல்ஜீரியாவில் கொன்று குவித்துள்ள இஸ்லாமிய தீவிரவாதத்திற்கும் அமெரிக்க வெளியுறவு கொள்கைக்கும் என்ன தொடர்பு ? அல்லது அதற்கும் வறுமைக்கும் என்ன தொடர்பு ? இஸ்லாம் அரசியலுக்காக பயன்படுகிறதா ? இல்லை அரசியல், அரசியலற்றது என்கிற பகுப்புக்கள் எல்லாம் இஸ்லாம் அறியாதவை. இஸ்லாம் வாழ்க்கை முழுவதற்கும் ஆணைகள் கொண்டதோர் மார்க்கம்.

முதல் நாள் கருத்தரங்கின் மீதிப்பகுதி அடுத்த வாரம்

நன்றி: www.frontpagemagazine.com

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20303292&format=html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இயேசுகிறிஸ்து, இஸ்லாம், குரான், வன்முறை

தமிழ்மணம் க.இரமணிதரன் அவர்களுக்கு சவால்

அன்பு நண்பர் தமிழ்மணம் க.இரமணிதரன் உங்களின் இந்த பதில் வேடிக்கையாக உள்ளது.நான் சவால் விடுகிறேன் மற்ற பதிவர்களின் பதிவுகளை ஒப்பிடும் போது ஒரு சதவீத தனிமனித தாக்குதல்களை என் பதிவில் இருந்து எனக்கு நீங்கள் பட்டியல் இட்டுக்காட்டுங்கள்.
 
சரி நானும் ஒரு தமிழ்மண பதிவராக இருந்தவன் தானே பின் ஏன் நீங்கள் கீழே உள்ளது போல் ஒரு தனி மடலை எனக்கு இதுவரை அனுப்பவில்லை.என் பதிவுகள் தனிமனித தாக்குதல்கள் தொடர்ந்து இருந்தது என்று அநியாயமாக குற்றம் சாட்ட உங்களுக்கு எப்படி மனது வந்தது.உங்களை எதாவது திட்டி உள்ளேனா?.அல்லது ஏதாவது தமிழ்மண பதிவர்களை திட்டி உள்ளேனா? என்று சொல்லுங்கள்.நான் எழுதிய அந்த பதிவை நீங்கள் நீக்கி விட்டு இது போல் எனக்கும் எச்சரிக்கை செய்து இருக்கலாம் அல்லவா? அதை ஏன் தமிழ்மணம் செய்யத்தவறியது.என் மேல் உங்களுக்கு ஏன் அவ்வளவு கோபம்.
 
இதற்கு தமிழ்மணம் சொல்லப்போகும் பதில் என்ன?
 
 

 

 

 

 

 

மனிதன் said…

Dear author,Your post தமிழ்மணமும்-ஜனநாயகமும்is removed by www.thamizmanam.com Administrator due to follwing reason,pபதிவர் மனிதன்

உங்களின் இப்பதிவும் தெய்வமகன் போன்றோரின் பதிவுகள் போல தொடர்ச்சியாக தனிமனிதத்தாக்குதலை மேற்கொள்ளப்பயன்படுத்தப்படுமெனில், நீக்கப்படும் என்று அறியத்தருகிறேன்

 
 
லக்கிலுக் said…

தமிழ்மணம் நிர்வாகத்திலிருந்து வந்திருக்கும் கடிதம் :

பதிவர் லக்கி லுக் உங்களின் இவ்விடுகையும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படுகின்றது. தொடர்ச்சியான தனிமனித்தாக்குதல் நிகழ்த்தப்படின், உங்கள் முழுப்பதிவும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படும் என்று இத்தால் அறியத் தருகிறேன். க.இரமணிதரன் தமிழ்மணம்

மாலை 5:05 , மார்ச் 25, 2008  

 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இரமணிதரன், தனிமனிதத் தாக்குதல், தமிழ்மணம், பதிவர்கள், வாசகர்வட்டம்

தமிழ்மணம் க.இரமணிதரன் அவர்களுக்கு சவால்

அன்பு நண்பர் தமிழ்மணம் க.இரமணிதரன் உங்களின் இந்த பதில் வேடிக்கையாக உள்ளது.நான் சவால் விடுகிறேன் மற்ற பதிவர்களின் பதிவுகளை ஒப்பிடும் போது ஒரு சதவீத தனிமனித தாக்குதல்களை எனக்கு நீங்கள் பட்டியல் இட்டுக்காட்டுங்கள்.
 
சரி நானும் ஒரு தமிழ்மண பதிவராக இருந்தவன் தானே பின் ஏன் நீங்கள் கீழே உள்ளது போல் ஒரு தனி மடலை எனக்கு இதுவரை அனுப்பவில்லை.என் பதிவுகள் தனிமனித தாக்குதல்கள் தொடர்ந்து இருந்தது என்று அநியாயமாக குற்றம் சாட்ட உங்களுக்கு எப்படி மனது வந்தது.உங்களை எதாவது திட்டி உள்ளேனா?.அல்லது ஏதாவது தமிழ்மண பதிவர்களை திட்டி உள்ளேனா? என்று சொல்லுங்கள்.நான் எழுதிய அந்த பதிவை நீங்கள் நீக்கி விட்டு இது போல் எனக்கும் எச்சரிக்கை செய்து இருக்கலாம் அல்லவா? அதை ஏன் தமிழ்மணம் செய்யத்தவறியது.என் மேல் உங்களுக்கு ஏன் அவ்வளவு கோபம்.
 
இதற்கு தமிழ்மணம் சொல்லப்போகும் பதில் என்ன?
 
 

 

 

 

 

 

மனிதன் said…

Dear author,Your post தமிழ்மணமும்-ஜனநாயகமும்is removed by www.thamizmanam.com Administrator due to follwing reason,pபதிவர் மனிதன்

உங்களின் இப்பதிவும் தெய்வமகன் போன்றோரின் பதிவுகள் போல தொடர்ச்சியாக தனிமனிதத்தாக்குதலை மேற்கொள்ளப்பயன்படுத்தப்படுமெனில், நீக்கப்படும் என்று அறியத்தருகிறேன்

 
 
லக்கிலுக் said…

தமிழ்மணம் நிர்வாகத்திலிருந்து வந்திருக்கும் கடிதம் :

பதிவர் லக்கி லுக் உங்களின் இவ்விடுகையும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படுகின்றது. தொடர்ச்சியான தனிமனித்தாக்குதல் நிகழ்த்தப்படின், உங்கள் முழுப்பதிவும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படும் என்று இத்தால் அறியத் தருகிறேன். க.இரமணிதரன் தமிழ்மணம்

மாலை 5:05 , மார்ச் 25, 2008  

பின்னூட்டமொன்றை இடுக

Filed under க.இரமணிதரன், தமிழ்மணம், மடிப்பாக்கம், மனிதன்

தமிழ்மணமும்-ஜனநாயகமும்

தமிழ்மண நிர்வாகக்குழு கண்டிப்பாக யோசித்து நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புவோம்
 
 
தமிழ்மணமும்-ஜனநாயகமும்

கடந்த ஒருவாரமாக தமிழ்மணத்தை உற்று பார்க்கும் நண்பர்கள் ஏதோ ஒருவித கிலி அடித்தே உள்ளனர்.ஏன் இந்த மாற்றம்.சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை இணையத்தில் உலாவ விட தமிழ்மணமே ஓர் உயர்ந்த அடைக்கலம் என்று இருக்கும் பதிவர்களை தமிழ்மணம் கடந்த நாட்களில் வெளியே தூக்கி எறிந்துள்ளது.

தமிழ்இஸ்லாம்டாட்கோம் என்ற ஒரு பதிவர் பகிரங்க மண்ணிப்புக்கடிதம் எழுதியும் அது நிராகரிக்கப்படுகிறது.இப்பொழுது இன்னொரு பதிவர் தன் பதிவை நீக்கியதற்காக சிலம்போடு வந்து நிற்கிறார்.

தமிழ்மணம் ஒரு ஜனநாயக புகலிடம் என்பது வாசகர்கள் அனைவரு அறிந்தது.பிறகு ஏன் இந்த படுகொலைகள்.

ஒரு பதிவர் தவறு செய்யும் பட்சத்தில் அவருக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவரின் பதிவை நீக்குவது பிறகு எந்த காரணத்திற்கு நீக்கப்பட்டது என்பதை விளக்கி மற்றவர்களும் அவர் போல் பதிந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுவதும் சரியான நடைமுறை.

ஒரு வேளை எச்சரிக்கப்பட்ட அந்த பதிவர் தொடர்ந்து செய்து வந்தால் அவரை தற்காலிகமாக தளத்தில் ஒதுக்கி வைத்தல் இந்த நடைமுறைகளே தமிழ்மணத்தின் ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்காமல் இருக்கும்.

வெளியேற்றப்படும் பதிவருக்கு அவரின் அடிப்படை உரிமைகள் கூட (அவரின் நியாயத்தை சொல்ல)மறுக்கப்படுவது வேதனைக்குரிய விஷயம் தமிழ்மண நிர்வாகிகள் யோசிபார்களா?

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

தமிழ் மணத்தை கேள்வி கேக்காதிங்க மடிப்பாக்கம் அப்புறமா நீக்கிறுவாங்கோ

தமிழ் வலையுலக மக்களே தமிழ் மணத்தின் முன்னோடி பதிவர் மடிப்பாக்கம் அவர்கள் இன்றைக்கு ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.என்ன தெரியுமா?
 
 
அவர்டைய பதிவை நீக்கியதற்கு கண்டண பதிவு.ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் என் பிளக்கரை தமிழ்மணத்தில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது தமிழ்மண நிர்வாகம்.இதற்கு என்ன காரணம் என்றால் தளத்தின் நிபந்தனைகளை மீறினதாக செய்தி வந்தது.சரி எந்த நிபந்தனையை மீறினேன் என்று இது வரை தமிழ்மணம் சார்பில் ஒரு பதிலும் வரவில்லை.நானாகவே என்னை சமாதானம் செய்து ஒரு பதிவை வெளியிட்டேன்.
 
நான் பிண்ணூட்டம் இட்டதை கூட தமிழ்மணம் வெளியிடவில்லை.என் மேல் தமிழ்மணத்துக்கு என்ன கோபம்.
 
என் பதிவு ஏதாவதும் தமிழ்மணத்தின் நிபந்தனைக்கு எதிராக இருன்திருந்தால் உடனடியாக அதை நீக்கி இருக்கலாமே.அதை செய்யாமல் என் பிளக்கரை ஏன் தமிழ்மணத்தில் இருந்து தூக்க வேண்டும்.எனக்கு ஒரு எச்சரிக்கைகூட கொடுக்காமல் தமிழ்மணம் செய்த இந்த போக்கு சர்வாதிகார மனநிலையையே காட்டுகிறது. வீழ்தது நானாக இருந்தாலும் வெல்வது "தமிழ்மணமாக" இருக்கட்டும்.
 
தமிழ்மணம் வாழ்க

5 பின்னூட்டங்கள்

Filed under Uncategorized

தீமையை உண்டாக்கியது கடவுள்-அதனால் கடவுள் இல்லை?

தேவனா தீமையை உண்டாக்கினார்?

கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசுவதில் பேர்வாங்கின(பேர்போன) ஒரு பேராசிரியர் ஒரு கல்லூரியில் இருந்தார். அவர் ஒவ்வொரு செமஸ்டரிலும் தனது முதல் வகுப்பில் இங்கு யாராவது கிறிஸ்தவ மாணவர்கள் இருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டு அவர்களை எழுப்பி விட்டு அவர்களை கிண்டல் பண்ணி அவர்களின் கிறிஸ்தவ விசுவாசத்தை எள்ளி நகையாடுவார். இப்படியாக ஒரு செமஸ்டரில் யாராவது கிறிஸ்தவ மாணவர்கள் இருக்கிறீர்களா என்று அவர் கேட்ட போது ஒரு மாணவன் தன் கையை உயர்த்தி எழுந்து நின்றான்.

அவனைப்பார்த்து அந்த பேராசிரியர் 'தேவன் தான் எல்லாவற்றையும் உண்டாக்குகிறாரா?' என்று கேட்டார்.

அவன் அதற்கு' யெஸ் சார். அவரே உண்டாக்குகிறார்' என்றான்.

அப்போது அந்த பேராசிரியர், ' தேவன் தான் எல்லாவற்றையும் உண்டாக்குகிறார் என்றால் தீமையையும் அவர்தான் உண்டாக்கியிருக்க வேண்டும் . அப்படிதானே?' என்று கேட்டார்.

அந்த மாணவன் பதில் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தா. அந்த பேராசிரியர் மீண்டும் ஒரு முறை கிறிஸ்தவ விசுவாசத்தை கேள்விக்குறியாக்கிவிட்ட பெருமிதத்தில் இருந்தார்.

அப்போது வேறொரு மாணவன் எழுந்து நின்று, சார், நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?' என்றான்.

சரி கேள் என்றார் பேராசிரியர்.

சார், குளிர்ச்சி என்று ஒன்று இருக்கிறதா? என்று அந்த மாணவன் கேட்டான்.

ஆம் இருக்கிறது. என்ன மடத்தனமான கேள்வி கேட்கிறாய். நீ ஒரு போதும் குளிர்ச்சியை உணர்ந்ததில்லையா என்று அவர் பதிலளித்தார்.

அந்த மாணவன் பதிலாக, சார், உண்மையில் குளிர் என்று ஒன்று இல்லை. வெப்பம் இல்லாத ஒன்றை தான் நாம் குளிர்ச்சி என்று கருதுகிறோம். முற்றிலும் வெப்பம் இல்லாமல் போகும் போது முற்றிலும் குளிர்ச்சியாகிவிடுகிறது. உண்மையில் குளிர் என்று ஒன்று இல்லை. வெப்பம் இல்லாதபோது நாம் எவ்வாறு உணருகிறோம் என்பதைக் குறிப்பிடுவதற்காகத்தான் நாம் குளிர் என்ற ஒரு பதத்தை உண்டாக்கியிருக்கிறோம் என்று கூறிய அந்த மாணவன் தோடர்ந்து, சார் இருள் என்று ஒன்று இருக்கிறதா? என்று கேட்டான்.

அந்த பேராசிரியர் மீண்டுமாக, ஆம் இருக்கிறது என்றார்.

அதற்கு அந்த மாணவன், சார், உண்மையில் இருள் என்று ஒன்று இல்லவே இல்லை. வெளிச்சமின்மையைதான் நாம் இருள் என்று கூறுகிறோம். வெளிச்சம் இல்லாதபோது என்ன நடக்கிறது என்பதைக் குறிப்பிடுவதற்காக மனிதன் உருவாக்கிய பதமே இருள் என்பதாகும் என்றான்.

கடைசியாக அந்த மாணவன், சார் தீமை என்று ஒன்று இருக்கிறதா? என்று கேட்டான்.

அதற்கு பதிலளித்த பேராசிரியர், ஆம் இருக்கிறது.உலகமெங்கும் கற்பழிப்புகளும் கொலைகளும் மற்றும் வன்முறைகளும் நடக்கிறதே. இது தீமையானது அல்லவா? என்றார்.

இதற்கு பதில் கூறிய மாணவன், சார், உண்மையில் தீமை என்று ஒன்று இல்லை. ஒரு காரியத்தில் தேவனின்மையே தீமை ஆகும். தேவனின்மையைக் குறிப்பிடுவதற்காக மனிதன் உண்டாக்கிய பதமே தீமை ஆகும். தேவன் தீமையை படைக்க வில்லை. எப்படி வெப்பம் இல்லாமையால் குளிர் உண்டாகிறதோ அல்லது ஒளி இல்லாமையால் இருள் உண்டாகிறதோ அது போல தேவன் இல்லாத நிலையே தீமை என்று நாம் கூறலாம் என்று சொல்லி முடித்தான்.

அந்த பேராசிரியர் சொல்லுவதற்கு வகை தெரியாமல் மரமாய் நின்றார்.

 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இயேசு, இஸ்லாம், கடவுள், குரான்

வெவரமான வேலைக்காரி-நடத்திய பாடம்(நகைச்சுவை)

ஒரு வீட்டிலே டெலிபோன் கட்டணம்(Telephone bill) வழக்கத்திற்கு மாறாக மிக அதிகமாக வந்துவிட்டது. எனவே வீட்டில் உள்ள அனைவருமே இதை குறித்து விவாதிக்க குடும்ப மீட்டிங்(meeting) வரும்படி அழைக்கப்பட்டனர்.

(இடம் பெறுவோர்: தந்தை, தாய், மகன், வேலைக்காரி)

தந்தை: இதை பாருங்கள். இது கொஞ்ச கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. நீங்கள் அனைவரும் டெலிபோன் உபயோகிப்பதை குறைக்க வேண்டும். இந்த மாதிரி பில் அதிகமாக வரக்கூடாது என்றுதான் நம்ம வீட்டில் உள்ள போனை உபயோகிப்பதை தவிர்த்து, என் office-இல் இருக்கும் போனை உபயோகிக்கிறேன்.

தாய்: நானும் அப்படித்தான். எப்போவாவதுதான் நம்ம வீட்டு போனை உபயோகிக்கிறேன்.
மற்றபடி office போன் தான் உபயோகிக்கிறேன்.

மகன்: நானும் கூட, நம்ம வீட்டு போனை பயன்படுத்துவதே இல்லை. நான் எப்போதுமே என் கம்பெனி மொபைல் தான் உபயோகிக்கிறேன்.

வேலைக்காரி: அட என்னடா இது ஒரே ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் இருக்கிறது!!! எங்கு தான் பிரச்சனை? என்னதான் பிரச்சனை? ஒன்றும் புரியவில்லை. நாம் அனைவருமே நமது வேலை ஸ்தலங்களில் உள்ள போனை தானே உபயோகிக்கிறோம். அப்புறம் எப்படி இவ்வளவு பில் அதிகமாக வந்துள்ளது???

 

1 பின்னூட்டம்

Filed under இஸ்லாம், நகைச்சுவை, வேலைகாரி

வலைப்பதிவர்களை ஏமாற்ற நல்ல ஸ்லோகம்- நாங்கள் அமைதியை பரப்புவோம்

வலைப்பதிவர்களை ஏமாற்ற நல்ல ஸ்லோகம்- நாங்கள் அமைதியை

வன்முறை மூலம் பரப்புவோம்.இதுவே ஜிஹாதிகள்

மனதில் மனதில் சொல்லிக்கொள்ளுவது.ஆனால் நடைமுறையில் 

வன்முறையை மட்டுமே தங்களின் நிரந்தர ஆயுதமாக வைத்துள்ளனர்  

 

கராச்சி கிறிஸ்து சேவை நிறுவனத்திற்குள் புகுந்த அமைதி மார்க்கத்தினர் சுட்டதில் 7 பேர் பலி

கராச்சி கிறிஸ்து சேவை நிறுவனத்திற்குள் புகுந்த அமைதி மார்க்கத்தினர் சுட்டதில் 7 பேர் பலி

Gunmen raid Christian charity in Karachi
Last Updated: Thursday, September 26, 2002 | 4:33 PM ET
CBC News

Seven people were killed Wednesday when gunmen raided the offices of a Christian welfare organization in Karachi. One person was critically wounded.
Police say all of the dead were Pakistani Christians. The two gunmen escaped.

The shooting took place at the office of the Institute for Peace and Justice. It's a Pakistani Christian charity working with municipal and textile workers in the city.

Body of Pakistani Christian carried from scene

Karachi police say the gunmen tied the workers to their chairs and shot them in the head at close range.

Christian groups in Pakistan are commonly targeted by extremist organizations. The attacks have become more frequent since Pakistan joined on the so-called war on terrorism and began to crack down on Muslim groups. In the last several months, 30 people have died in violent attacks.

In recent days, police in Karachi have arrested 23 members of Harakat ul-Mujahedeen Al-Almi, which is believed to be behind many of the assaults.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், பாக்கிஸ்தான், முகமது