Daily Archives: மார்ச் 22, 2008

அக்பர் அரண்மனையில் நடந்த சம்பவங்கள் ஒளி படங்களாக

1,[youtube=http://www.youtube.com/watch?v=5DGZHs3PhAI&hl=en”>

2,

3,

4,

1 பின்னூட்டம்

Filed under அக்பர், குழந்தைகள், பீர்பால், பொழுதுபோக்கு, விளையாட்டு

உருவானதன் ஆபாசக் காரணங்கள்!

புராணங்கள் உருவானதன் ஆபாசக் காரணங்கள்!

பார்ப்பன மதக் கோட்பாடுகளில் ஆண் – பெண் வக்கரித்த உறவுகள்! – 2

இன்றைய இந்துமத கடவுள்களில் சில முன்கூட்டியே சிறுவழிபாட்டுத் தெய்வங்களாக இருந்து பின்னால் இந்துமயமானவை.. சில இந்துமதத்தின் தெய்வங்களாகவும் இருக்கின்றன.

உதாரணமாக நற்றிணையில், (பாடல்-82)
"முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல…
காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடுகாளின்"

காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடுகாளின் மகன் முருகு (முருகன்), மற்றொரு தாய்த்தெய்வமான வள்ளியை மனைவியாக்கினான். இங்கு முக்கியமாக முருகுவின் தாய் மட்டும் கூறப்படுகின்றது தந்தை பற்றித் தெரியாதநிலை காணப்படுகின்றது.

இதுபோல அப்பருடைய தேவார வரிகள், இதற்குச் சான்று தருகின்றது.
"செல்வியைப் பாகங்கொண்டார் சேந்தனை மகனாய்க் கொண்டார்
மண்ணினை உண்ட மாயன் தன்னையோர் பாகங் கொண்டார்"

தாய்த் தெய்வமான செல்வி, முருகன், சேந்தன் (அய்யார்), மாயோன் போன்றவர்களுக்கிடையில் உறவுமுறையை இந்து மதம் ஏற்படுத்தியதைக் காட்டுகின்றது. எப்படி இந்துமதம் பின்னால் வளர்ச்சி பெற்றது என்பதை இது காட்டுகின்றது.

நாம் இனி இந்த வளர்ச்சியின் ஆபாசத்தையும், வக்கிரத்தையும் புராண மற்றும் இந்து வரலாற்று இலக்கியம் மூலம் ஆராய்வோம்.

இராமாயணத்தின் கதாநாயகன் இராமனின் பெயரில் ஒரு வானரக்கூட்டம் இன்று இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றும், கற்பழித்தும் போடும் கூத்தின் பின்னால், இராமாயணப் புராண இலக்கிய வரலாறு மண்டிக்கிடக்கின்றது. இந்த இராமாயணம் உருவாகக் காரணம், விஷ்ணு தனது மனைவி இலட்சுமியைப் புணர்ந்ததால் ஏற்பட்டதாம். இதுபோல் கந்த புராணம் ஏற்பட காரணம் சிவன் உமாதேவியாருடன் நூறு வருடம் விடாமல் புணர்ந்து கொண்டிருந்ததால், வீரியமும் கர்ப்பமும் கொடுமை செய்துவிடும் என்று தேவர்கள் அஞ்சி முறையிட்டதால், கலவி முற்றுப்பெறுமுன் சிவன் நிறுத்தியதால் இந்திரியம் நிலத்தில் விழுந்து நிறைய ஆபாசமாகி இறுதியாகச் சுப்பிரமணியன் தோன்றவும், கந்தபுராணம் உருவாகவும் காரணமாகி விடுகின்றது. இந்த மாதிரி இந்து மத வக்கிரத்தை நாம் போற்றுகின்றோம்;?!

இனி நாம் இராமாயணத்தைப் பார்ப்போம்;. இந்த இராமாயணம் இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்த இராமனின் சொந்தத் தந்தை தசரதன் அல்ல. தசரதன் மூன்று பெண்டாட்டியையும், 60 ஆயிரம் வைப்பாட்டிகளையும் வைத்திருந்தவன். மூன்று பெண்ணுக்கும் குழந்தை பிறக்காததால், சிரங்கன் இடம் மூன்று பெண்ணையும் ஒப்படைத்து யாகம் செய்தான். இந்த யாகத்தில் மூன்று பிண்டங்களைப் பிடித்து உண்ணக் கொடுத்ததால் மூவரும் கர்ப்பமாகிக் குழந்தை பெற்றனர் என்கிறது, இராமாயணம்.

இங்கு மூன்று பெண்களின் தந்தை சிரங்கன் என்பது, இன்று மரத்தைச் சுற்றி பிள்ளை பெறும் பக்தியின் பின்னால் வேறு ஆண்களுடன் புணர்ச்சி நடப்பதும், கர்ப்பம் தரிப்பதுமே நிகழ்கின்றது. தசரதன் அல்லாத சிரங்கனுக்குப் பிறந்த இராமனை, இராவணன் தங்கை சூர்ப்பநகை தன்னைத் திருமணம் செய்யும்படி கேட்டதால், அவளின் மூக்கு, முலை, முடி போன்றவற்றை வெட்ட உத்தரவிட்டதன் மூலம் இராமன், பெண்களைக் கொச்சைப் படுத்துகின்றான்.

நன்றி: http://www.tamilcircle.net/

 

http://unmaiudaiyaan.blogspot.com/2008/03/blog-post_21.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்து மதம், கிறிஸ்தவம், புராணம்

கொஞ்ச நேரம் ஓய்வாக திண்ணையில் உட்கார்ந்தபோது ஒரு நண்பர் உருக்கமாக பேசிக்கொண்டிருந்தார்.அதை உங்களிடம் அவரே சொல்லுகிறார் படியுங்கள்

கொஞ்ச நேரம் ஓய்வாக திண்ணையில் உட்கார்ந்தபோது ஒரு நண்பர் உருக்கமாக பேசிக்கொண்டிருந்தார்.அதை உங்களிடம் அவரே சொல்லுகிறார் படியுங்கள்
திண்ணையில் படித்தது
 
 
இஸ்லாத்தில் பிரிவினை

அ.முஹம்மது இஸ்மாயில்

முஸ்லிம்களிடையே பிணைப்பை ஏற்படுத்தியவன் அல்லாஹ்- முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியவன் நிச்சயமாக ஒரு முஸ்லிமாகத்தான் இருப்பான் என்று எண்ணுகிறேன்.

ஒன்றாயிருந்த சமுதாயம் இன்று இரண்டாக தோன்றுவதன் பல காரணங்களில் மிக முக்கிய காரணம் என்னவெனில் முஸ்லிம்களில் சி(ப)லர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்கள் என்பதேயாகும்.

அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் என்றால் என்ன ?

படைக்கப்பட்ட மனிதர்களும் படைத்த அல்லாஹ்வும் சரிசமமென நம்புவதும் அல்லாஹ்வுக்கு இணையான அந்தஸ்த்தில் மனிதர்களை வைப்பதும் தான் பொதுவாக இணை வைத்தலாகும்- உதாரணமாக-

ரசூலுல்லாஹ் பெயரால் மெளலுது ஓதுவது, அவ்லியாக்கள் பெயரால் பாத்திஹா ஓதுவது, அவ்லியாக்களிடத்திலே துஆ கேட்பது இவைகளையே முக்கியமாக இணைவைத்தல் என்று கூறுகிறார்கள்- மேற்கண்டவைகளை ஒரு முஸ்லிமாகப்பட்டவன் ஒருக்காலும் செய்யக் கூடாது என்ற தங்களது கூற்றுக்கு ஆதாரமாக புகாரி ஷரீஃப் மற்றும் பல ஹதீஸ் தொகுப்புகளிலிருந்தும் ஏராளமான ஹதீஸ்களை எடுத்துக் கூறுவது மற்றுமின்றி அவர்கள் அப்படி சொல்வது தவறு என்று யாரேனும் கூறினால் நேரிலேயே விவாதம் செய்ய தயார் என்று அறைகூவல் விடுகிறார்கள்- குரான் மற்றும் ஹதீஸில் என்ன இருக்கிறதோ அதை தவிர வேறு எதனையும் ஆதாரமாக ஏற்க மாட்டோம் என்று அடித்து கூறுகிறார்கள்-

தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் விரலை ஆட்ட சொல்லி வருவதும், ரமலான் மாதத்தில் தராவீஹ் தொழுகை 8 ரகாத் தொழுதால் போதும் ஏனெனில் அது தான் ரசூலுல்லாஹ் தொழுதது என்று கூறி வருவவதும் இவர்கள் தான்.

அவர்களது வாதத்தின் திறமையாலும், பேச்சின் இனிமையாலும் கவரப்படாதவர்கள் எவருமில்லை. அவர்களின் கூற்று உண்மையென இருக்கும் பட்சத்தில் பொய்யர்களைத் தவிர வேறு யார் தான் ஏற்க மறுப்பார்கள் என்று கேள்வி எழலாம்- ஆனால் எனக்கு கொடுக்கப்பட்டுள்ள சிற்றறிவை வைத்து சிந்தித்து பார்த்ததில் என்னால் ஏற்க முடியவில்லை.

அப்படியானால் உங்களது விவாதத்தை எடுத்து வையுங்கள் அது சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களை ஏற்க வைப்போம் அல்லது பதில் கொடுக்க சொல்வோம் என்று கூறுகிறீர்களா ?

நான் விவாதம் செய்ய விரும்பவில்லை என்பது ஒரு புறமிருக்க என் சிந்தனைகளை நான் தெரிவிக்க துணியத்தான் போகிறேன்- என் கருத்து மேலும் குழப்பத்தை தூண்டி விடாமல் இருக்க வேண்டும்- நாம் எல்லோரும் சேர்ந்து சிந்திக்கலாம் என்ற அடிப்படையில் இங்கே எழுதப்படுகிறதே தவிர என் கருத்தை தவிர வேறு எல்லா கருத்தும் பொய்யானவை என்றோ வேறு யாரும் சரியாக சிந்திக்காமல் இருக்கிறார்கள் என்ற தலைகனத்திலோ எழுதவில்லை.

முதலில் ஒரு கருத்தை பார்ப்போம்,

பெருமானார் ரசூல்(ஸல்) அவர்கள் சொன்னார்கள் மக்களிடம் பேசும் போது அவர்களின் அறிவுக்கு தக்கவாறு பேசுங்கள் என்று-

என்ன அர்த்தம் ? ஒரு நன்மையை நாடி ஒருவரிடம் ஒரு செய்தியை சொல்ல நினைக்கிறோம் என்று வையுங்கள்- அந்த நன்மை கிடைக்கும் அதே நேரத்தில் அந்த நன்மையை சொல்வதனாலேயே பல கெடுதிகள் விளையுமானால் அந்த நன்மையை சொல்ல வேண்டுமா ? கூடாதா ? சற்று ஆழமாக சிந்திப்போம்-

உதாரணமாக பெருமானார் இஸ்லாத்தை போதிப்பதால் சமுதாயத்துக்கு நன்மை இருந்தது ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்களது உயிருக்கே ஆபத்து இருந்தது- பெருமானார் அவர்கள் உயிருக்கு பயப்படாமல் ஊருக்கு நன்மையை தேடி தந்தார்கள்- இது வந்து ஒரு சமுதாயத்துக்கு நன்மை நடக்குமென்றால் தனக்கு வரும் தீமையை பொருட்படுத்தக் கூடாது என்று உணர்த்துகிறது-

ஆனால் சமுதாயத்துக்கே தீங்கு ஏற்படும் எனில், அந்த நன்மையை கருதி நன்மையை சொல்லாமல் இருப்பதே சாலச் சிறந்தது- காரணம்,

தாயிப் நகர மக்கள் பெருமானாரிடம், நாங்கள் இஸ்லாத்திற்கு வருவோம் ஆனால் வட்டி வாங்குவதை நிறுத்த மாட்டோம் என்று சொன்ன போது கூட பெருமானார் அவர்கள் பரவாயில்லை முதலில் இஸ்லாத்திற்கு வாருங்கள் என்று அழைத்ததை பார்க்கிறோம் (இஸ்லாத்திற்கு வந்த பிறகு வட்டி வாங்குவதை நிறுத்தி விட்டார்கள் அல்லது நிறுத்தி விட வைத்தார்கள் பெருமானார் அவர்கள் என்பது வேறு விஷயம்)- இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால்

அவர்கள் இஸ்லாத்திற்கு அழைத்த போது கூட ஒரு அழகு இருந்தது அதாவது சமுதாயாத கூட்டை குழைக்காமல் கொண்டு சென்றுள்ளார்கள் என்பது தெளிவாக விளங்குகிறது அதாவது அவர்கள் நினைத்து இருந்தால் அதெல்லாம் முடியாது நீங்க வட்டி வாங்கக் கூடாது இல்லையென்றால் இஸ்லாத்திற்கு வரவே வேண்டாம் என்று கூறியிருந்திருக்கலாம்- சத்தியத்தை எடுத்துச் சொன்ன போது கூட கேட்கும் நபர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் சொன்னது அவர்களது வெற்றியென விளங்குகிறது-

இதற்கிடையில் வட்டியை பற்றி அல்லாஹ் குரானில் கடுமையாக அல்லாஹ் விமர்ச்சித்துள்ளான். இருந்தும், பெருமானார் அவர்கள் எப்போதுமே எடுத்தோம் கவுத்தினோம் என்று பேசியது கிடையாது- அவர்கள் மக்காவில் உள்ள சிலைகளை உடைத்தது கூட மக்கா வெற்றிக்கு பிறகு தான்- மானமிகு தந்தை பெரியார் அவர்கள் கூட அவர் காசு கொடுத்து வாங்கின பிள்ளையார் சிலையை தான் உடைத்தார் ஆனால் பெருமானார் அவர்களோ மக்காவில் காலம் காலமாக தொழப்பட்டு வந்த 360 சிலைகளை உடைத்தார்கள்- ஆரம்ப கட்டத்தில் யாரையும் பார்த்து,போய் சிலைகளை உடையுங்கள் என்று பெருமானார் அவர்கள் சொன்னதே கிடையாது-

வரலாறை விவாதத்தில் வெற்றி பெற வேண்டுமெனும் நோக்கமில்லாமல் நன்கு படித்து உணற வேண்டுமென நினைப்பவர்களுக்கு மேற்கூறிய விளக்கங்கள் போதுமென்றே தோன்றுகிறது-

மக்களிடம் பேசும் போது அவர்களுக்குள் குழப்பம் விளைவிக்காமல், சண்டையை மூட்டிவிடாமல், மனதை கலைக்காமல் அவர்களது போக்கிலேயே போய் நன்மையானவற்றை தகுந்த நேரம் பார்த்து புகுத்த வேண்டும் என்றே நான் பெருமானாரின் வரலாறிலிருந்து விளங்கியிருக்கிறேன்.

தங்களை ஏகத்துவவாதிகள் என்று கூறி கொள்ளும் இவர்கள் நன்மையையே சொன்னார்கள் என்று வைத்து கொண்டாலும் அதனால் நன்மைக்கு பதிலாக குழப்பமே விளைந்தது- உதாரணமாக, தொப்பி அணியாமலும் தொழலாம் என்று அவர்கள் சொல்லப் போக தொப்பி அணிவதே பாவம் என்று அவர்களை பின்ப்ற்றும் நம்மவர்கள் நினைத்து தொப்பி போடாமல் தொழ ஊரில் சண்டை, பள்ளியில் நிர்வாகிகளும் தொப்பி போடாமல் தொழ வர வேண்டாம் என்று கூற பெரிய குழப்பம்- யார் மீது தவறு என்பது ஒரு புறமிருக்க குழப்பம் விளைந்தது உண்மை தானே! மறுக்க முடியாதே! இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம்-

நாயகம்(ஸல்) அவரகளை திருக்குரான் பலவாறு புகழ்ந்துள்ளது, முஹம்மது என்றாலே புகழப்பட்டவர் என்று தானே அர்த்தம். திருக்குரான் ஓரிடத்தில் நாயகம்(ஸல்) அவர்களை அழகிய முன்மாதிரி என்று வர்ணிக்கிறது. இங்கே தான் ஆழ்ந்து கவனிக்க வேண்டும்- நாம் செய்யும் அனைத்து இபாதத்துகளுக்கும் நல்ல அமல்களுக்கும் நாயகம்(ஸல்) அவர்கள் தான் முன்மாதிரி என்றால் நாயகம்(ஸல்) அவர்கள் மீது நாம் ஸலவாத்து சொல்கிறோமே அதற்கு யார் முன் மாதிரி ? நாயகம்(ஸல்) அவர்களா ? திருக்குரானை உணர்ந்து படியுங்கள்- அல்லாஹ் தான் முன் மாதிரி- திருக்குரானில் முஃமீன்களை நாயகம்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்ல சொல்லும் போது யாரை முன் மாதிரியாக சொல்கிறான் தெரியுமா ? அல்லாஹ் அவனைத் தான் முன் மாதிரியாக சொல்கிறான். அல்லாஹ், மலாயிகத்மார்கள் யாவரும் இந்த நபியின் மீது ஸலவாத்து சொல்கிறார்கள், ஆகவே முஃமீன்களே நீங்களும் இந்த நபியின் மீது ஸலவாத் சொல்லுங்கள் என்று கட்டளையிடுகிறான். சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம். நாயகம்(ஸல்) அவர்களுக்கு நாம் சொல்லும் ஸலவாத்து என்பது ஒரு நல்ல இபாதத், ஆனால் அதற்கு முன் மாதிரி நாயகம்(ஸல்) அவர்கள் அல்ல- அல்லாஹ் தான் முன் மாதிரி. மெளலுது ஷரீஃப் ஓதுவதை கூட நான் இந்த அடிப்படையில் தான் நான் சிந்தித்து பார்க்கிறேன்.

? ஜிப்ரீல்(அலை) அவர்கள் அன்னை மர்யத்திடம் ஈஸா நபி பற்றி நற்செய்தி சொன்ன போது கூட "நான் உங்களுக்கு ஒரு குழந்தையை பரிசளிக்க வந்துள்ளேன்" என்று தான் சொன்னார்கள்(சூரா மர்யம்)- அதற்காக ஜிப்ரீயில்(அலை) அப்படி சொல்லியிருக்க கூடாது "அல்லாஹ் உங்களுக்கு ஒரு குழந்தையை பரிசளிக்க இருக்கிறான், அந்த நற்செய்தியை என் மூலமாக சொல்ல நாடினான் அதை சொல்லவே நான் வந்தேன்" என்றல்லவா கூறியிருக்க வேண்டும்- மாற்றி கூறியதால் ஜிப்ரீல்(அலை) அவர்கள் இணை வைத்து விட்டார்கள்(அல்லாஹ்(ஜல்),ஜிப்ரீல்(அலை) மன்னிக்கனும்) என்று கூற முடியுமா ? சிந்திக்கிறோம்.. ஜிப்ரீல்(அலை) ஈஸா நபியை பரிசாக கொடுத்தார்கள் என்றால் அல்லாஹ்விடமிருந்து தான் வாங்கி கொடுத்தார்கள்.

தொழுகையை பற்றி பேச எவ்வளவோ செய்தி இருக்கிறது.. அதையெல்லாம் பேசாமல் விரலை ஆட்டுவதில் தான் அதிக கவனம் எடுத்து கொள்கிறோம்- சிந்திக்க வேண்டும்- சில தொழுகையை அல்லாஹ் குப்பையை போல் எரிந்து விடுவதாக திருக்குரானில் அச்சுறுத்துகிறான், அது எந்த தொழுகை ? விரலை ஆட்டாத தொழுகையா ? நிச்சயமாக இல்லை- மனதை அலைய விட்ட தொழுகையை பிறருக்கு காண்பிக்க எண்ணி தொழுத தொழுகையை- நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள், அல்லாஹ்வை பார்ப்பது போல் தொழுங்கள் என்று- இது வரை நீங்கள் ஒரு முறையாவது அல்லாஹ்வை பார்ப்பது போல் தொழுதுள்ளீர்களா ? அல்லாஹ்வை எப்படி பார்ப்பது ? அது வேறு அடுத்த கேள்வி- அல்லாஹ்வை தவிர வேறு யாருடைய

எண்ணமும் உங்களுக்கு தொழுகையில் வந்தால் நீங்கள் இணை வைத்து விட்டார்கள் என்று அர்த்தம்.. ஆமாம் அல்லாஹ்வை பார்ப்பது போல் தொழுங்கள் என்று நாயகம்(ஸல்) அவர்கள் சொன்ன பிறகு உங்கள் மனதில் வேறு யாருடைய உருவமும் வந்தால் அவரை நீங்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்து விட்டார்கள் என்று தான் அர்த்தம்(அல்லாஹ்(ஜல்) காப்பாத்தணும்)-

மனதை தூய்மைப் படுத்துவது பற்றி பேசுங்கள், மனதை கட்டுப்படுத்துவது பற்றி கற்றுக் கொடுங்கள், அழுக்கை சுத்தம் செய்த பிறகு தான் சுத்தமான பொருளை அங்கு நிரப்ப வேண்டும்-

தொழுகை ஒரு பயிற்சி, தொழுகை ஒரு சுத்தப்படுத்துதல்- இவையெல்லாம் பேசலாமே- ஆதாரத்தோடு பேசுவதை விட அவசியமானதை பேசுவது ரொம்பவும் முக்கியம்- தொழுகை பற்றி மேலும் அவசியமானதை தெரிந்துக் கொள்ள கண்ணியத்திற்குறிய இறைஞானி ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள் எழுதிய இறை வணக்கம் படிக்கலாம்- உங்களுக்கு நீங்கள் சொல்ல இருப்பதோ ஏராளம்- ஊருக்கு சொல்ல ஏனிந்த அவசரம் ?- எல்லோருக்கும் வாழ்வில் வெற்றி முக்கியம். மனதை தூய்மை படுத்தியவன் வெற்றியடைந்து விட்டதாக நபிக்கருத்து உள்ளது – தொழுகைக்கு அழைக்கும் போதோ வெற்றி பெற வாருங்கள் என்று பாங்கு சொல்கிறார்கள்- தொழுகையில் மனதை தூய்மை படுத்தி வெற்றி பெறுவதை பற்றி நாம் ஏன் அதிகம் சிந்திக்க கூடாது ஏன் அதிகம் பேசக் கூடாது- தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிந்தவன் போலாவான் என்ற நபிமொழியும் சிந்தனைக்குறியதாக உள்ளது- தொழுகையில் தன்னை அறிந்து கொள்ள ப்யிற்சி எடுத்தால் என்ன ?

இப்படியாக பேசி சிந்தித்து இறை நெருக்கத்தை பெற்று இறை நேசர்கள் அதை செய்ய முடியுமா ? எதை செய்ய முடியுமா ? என்ற ஆராய்ச்சியை விட்டு விலகி எல்லோருமே இறை நேசர்களாக மாறி என்ன செய்ய முடியும் என்று சொந்த அனுபவத்தின் மூலமாக தெரிந்து கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்வின் துணையுடன் முயற்சிப்போமாக..

பெருமானார் அவர்களின் கடைசி காலத்தில் வெளி வந்த ஹதீஸ் ஒன்றும் நாம் எங்கே நினைவு கூற தகுந்தது- அதாவது, பெருமானார் கூறினார்கள், எனக்கு பிறகு நீங்கள் இணை வைப்பீர்கள் என்று நான் பயப்படவில்லை, ஆனால் நீங்கள் எங்கே தர்க்கித்து பிரிந்து விடுவீர்களோ என்று தான் நான் பயப்படுகிறேன்' என்றார்கள்-

சகோதர மார்க்கத்தில் பிரிவு ஏது ?

சாந்தி மார்க்கத்தில் சண்டை எதற்கு ?

dul_fiqar@yahoo.com.sg

திண்ணையில் அ.முஹம்மது இஸ்மாயில்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இயேசு, இஸ்லாம், குரான், சூபி, ச்ன்னி, வஹாபி, ஷியா

தமிழ்மணத்தை மேம்படுத்த என்னுடைய சில யோசனைகள்

தமிழ்மணத்தை மேம்படுத்த, மேலும் பல தமிழர்களுக்கு கொண்டு சேர்க்க எனக்கு தோன்றிய சில யோசனைகளை இந்த வீடியோ பதிவில் தெரிவித்துள்ளேன், பார்க்கவும்.

தமிழ்மணத்தை மேம்படுத்த வசந்தம்ரவியின் சில யோசனைகள் – “வீடியோ-ஆடியோ-பதிவு”

by வசந்தம்ரவி

2 பின்னூட்டங்கள்

Filed under கிறிஸ்தவம், தமிழ்மணம், வசந்தம்ரவி

பெண்கள் உடலிலும் கைய வச்சுட்டாண்யா இந்த படு பா பயல்

காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறக்கமுடியுமா?

கூகிள் புடைவையும், மாடல் அழகியும் மறக்கமுடியுமா?

http://tamizh2000.blogspot.com/2008/02/blog-post_20.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இஸ்லாம், கூக்ளி, ஜிமெயில், பெண்கள்

உலகை ஆடை இல்லாமல் படம் பிடிக்கும் "மொசாத்"

இஸ்ரேல் மொசாத் போன்ற உளவு அமைப்பு?

 

மும்பை : "இஸ்ரேல் நாட்டின் "மொசாத்' போன்ற வலுவான உளவுப்பிரிவை இந்தியா அமைக்க வேண்டும். அப்போது தான், பயங்கரவாதிகளை பூண்டோடு ஒழிக்க முடியும்!'மும்பை வந்த, இஸ்ரேல் உளவுத்துறை நிபுணர் ஜாகி ஷாலோம், இப்படி கருத்து வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேல் "மொசாத்' உளவு அமைப்பு, மிகவும் வலுவானது; உளவுத் தகவல்களை சேகரிப்பது மட்டுமின்றி, ரகசிய நடவடிக்கைகளிலும் இறங்கி, எதிரியை பூண்டோடு ஒழிக்கும் சக்தி வாய்ந்தது.ஷாலோம், சமீபத்தில் மும்பையில், மேற்காசிய நாடுகளின் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் பங்கேற்றார்.பேட்டியில் அவர் கூறியதாவது: இந்தியாவில் "ரா' உளவு அமைப்பு உள்ளது; லஷ்கர்இதொய்பா, ஹிஸ்புல் முஜாகிதின் போன்ற பயங்கரவாத அமைப்புகள் பற்றி தகவல்களை சேகரிக்கிறது. ஆனால், அத்துடன் தங்கள் பணிகளை முடித்துக் கொள்கின்றன.

அவர்களை ஒடுக்கும் செயல்களையும் அவை மேற்கொள்ள வேண்டும்.உடனுக்குடன் செயல்பட்டு, பயங்கரவாதிகளின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதிகளுடன் கலக்க வேண்டும்; அதற்கு அவர்களில் ஒருவராக உளவு அமைப்பை சேர்ந்தவர்கள் சேர்ந்து விட வேண்டும். அது மிகவும் கஷ்டமானது தான். ஆனால், அதை துல்லியமாக செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களின் ஒவ்வொரு நடமாட்டமும் தெரியும். அவர்களின் நடமாட்டத்தை அறிந்து, அவர்களை முழுமையாக ஒடுக்குவது தான் உளவுப் படையின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். அதில் தான் முழு கவனம் செலுத்த வேண்டும். பாகிஸ்தான் ஆதரவில்லாமல், காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டகாசம் செய்ய முடியாது. இந்த விஷயத்தை, முழு ஆதாரங்களுடன் அமெரிக்கா போன்ற நாடுகளிடம் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். பாக்., அரசு ஆதரவில்லாமல், காஷ்மீர் பயங்கரவாதிகள் தொடர்ந்து பல ஆண்டாக தாக்குதல் நடத்த முடியாது. பயங்கரவாதிகளை ஒடுக்க, இந்தியாவுக்கு "மொசாத்' போன்ற உளவுப்படை தேவை. அதன் உளவு முறைகளை பின்பற்றினால், பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்கலாம். அதற்காக, இஸ்ரேலுடன் கூட்டு சேரலாம்.இவ்வாறு ஷாலோம் கூறினார்..
http://www.dinamalar.com/

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இந்தியா, இஸ்ரேல், இஸ்லாம், உளவு படை, குரான், மொசாத்