கீழே ஒரு நபி மொழியும்,ஒரு குரான் வசனமும் கொடுக்கப்பட்டுள்ளது.
நபி மொழியில் சிறு வயதில் ஓரே பெண்ணிடம் பால் அருந்தியது தெரியாத இருவர் திருமணம் செய்துகொண்டனர்.அறிவு தெரியாத வயதில் பால் குடித்ததே சகோதர் உறவாகிவிட்டது என்று சொல்லி அந்த திருமணத்தம்பதிகளை நீங்கள் எப்படி உறவுகொள்ள முடியும் என்று முகமது சொன்னதாகவும்,உடனே அந்த அறிவாளி விவாகரத்து செய்துவிட்டதாகவும் உள்ளது.
இதற்கு நேர் மாறாக திருமண உறவில் இணைக்கப்பட்ட பின் அந்த பெண்ணை உதறி விட்டு அந்த பெண்ணின் மகளான தன்னுடைய மகளையே திருமணம் செய்யச் சொல்லும் அல்லாஹ்வின் குரான்.இந்த கண்றாவியை எங்கே போய் சொல்ல.
அநேக ஜிஹாதிகள் குரானில் ஆண்கள் என்று வருவது பெண்களையும் குறிக்கும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.இந்த இடத்தில் குரான் சொல்லுவதை பெண்களும் கடைபிடிக்கலாம் அல்லவா?
என்ன கேவலம்பா இது??
பாகம் 1, அத்தியாயம் 3, எண் 88
'நான் அபூ இஹாப் இப்னு அஜீஸ் என்பவரின் மகளை மணந்தேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து, 'நான் உக்பாவுக்கும் அவர் மணந்துள்ள பெண்ணுக்கும் (அவர்களின் குழந்தைப் பருவங்களில்) பாலூட்டியிருக்கிறேன்' என்றார். அதற்கு நான் 'நீங்கள் எனக்குப் பால் கொடுத்ததே எனக்குத் தெரியாது. மேலும் (இத்தகவலை) எனக்கு (இதற்குமுன்) நீங்கள் சொல்லவுமில்லையே' என்று கூறினேன். உடனே (மக்காவில் வாழ்ந்திருந்த நான்) மதீனாவிலிருந்த நபி(ஸல்) அவர்களை நோக்கிப் பயணமானேன். அங்கு சென்று அவர்களிடம் இந்தப் பிரச்சினை பற்றி விளக்கம் கேட்டேன். உடனே நபி(ஸல்) அவர்கள் '(நீர் அந்தப் பெண்ணுக்குச் சகோதரன் என்று) சொல்லப்பட்டுவிட்ட நிலையில் எப்படி (உறவு கொள்வீர்)?' என்று கேட்டார்கள். உடனே நான் அப்பெண்ணை விவாரத்ச் செய்துவிட்டேன். அந்தப் பெண்ணும் வேறொரு கணவனை மணந்தார்" என உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். |
|
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
4:23 உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்; உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது. ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது – இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்.. ஒரு விதவை பெண்ணையோ அல்லது கணவனை விவாகரத்து செய்த பெண்ணையோ திருமணம் செய்த பின் அன்றோ அல்லது அந்த திருமனம் செய்த பெண்ணோடு உறவு வைத்துக்கொள்ளும் முன்போ அந்த பெண்ணுடைய மகள் அழகாக இருந்தால் அவள் தாயாரை விவாகரத்து செய்துவிட்டு அவளுடைய மகளை திருமணம் செய்ய அனுமதிக்கும் இறைவன். http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=487&postdays=0&postorder=asc&start=15
|
Daily Archives: பிப்ரவரி 23, 2008
மகளை திருமணம் செய்ய சொல்லும் குரான்
Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், திராவிட கழகம், பெண்கள், முகமது, விவாகரத்து
பெண்ணுக்கு வரதட்சனை அந்த பெண்-என்ன கொடுமையடா இது?
1, அத்தியாயம் 8, எண் 371
நபி
(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்' என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள்.நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள்.
இந்த ஹதீஸை அறிவிக்கிற அனஸ்(ரலி) அவர்களிடம் ஸாபித் என்ற தோழர், 'அபூ ஹம்சாவே நபி(ஸல்) அப்பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தார்கள்?' என்று கேட்டதற்கு 'அவரையே மஹராகக் கொடுத்தார்கள்; அதாவது அவரை விடுதலை செய்து பின்னர் மணந்தார்கள்' எனக் கூறினார்.
நாங்கள்
(கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் 'ஸஃபிய்யா' அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து 'உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்' என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டுவந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் 'வலீமா' எனும் மணவிருந்தாக அமைந்தது" என அனஸ்(ரலி) அறிவித்தார்."அவளுடைய உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் ஒரே ஆடையை அணிந்தாலும் அது அவளுக்குப் போதுமானதாகும்" என இக்ரிமா கூறினார். //
இப்பொழுது நீங்கள் இந்த முழு ஹதீசையும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.நல்லது வாருங்கள் நாம் ஜிஹாதிகளின் முகமூடியை கிழிப்போம்.
நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள்.
'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்'
அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள்.
நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம்
மேலே உள்ள அனைத்தும் யாரோ முஸ்லீம் இன விரோதிகள் இஸ்லாமை பற்றி எழுதியதல்ல.அருமை நபியின் வரலாறை அழகாக தொகுத்த புகாரி அவர்கள் புத்தகத்தில் சரியான பின்தொடர்பாளர்கள் வரிசைபடி உள்ள ஹதீஸ்
இதில் கைபர் என்கிற ஊருக்குள் அந்த அப்பாவி மக்கள் போரை எதிர் பார்க்காத வேளையில் உள்ளே புகுந்து பலவந்தமாக கைப்பற்றி அங்குள்ள பொருட்களை கொள்ளை அடித்துவிட்டு,அங்கு எதிர்த்து போரிட்ட ஆண்களை கொன்றுவிட்டு பெண்களை அடிமைகளாக கொண்டு வந்து அவர்கள் துணிகடையில் துணி தேர்ந்தெடுப்பதைப்போல் கணவணையும்,தகப்பனையும் இழந்த பெண்களை தங்கள் போகப்பொருளாக்கிய கெவலமான காட்சியைத்தான் நீங்கள் படித்தீர்கள்.
இவ்வளவுக் கேவலமான ஒருவர் இறைவனின் நபி என்று ஏற்றுக்கொள்பவன் உண்மையாக நல்ல மனிதனாக இருக்க முடியுமா?இதன் விடையை உங்களிடமே விட்டு விடுகிறேன்